Followers

Sunday, July 23, 2017

பிரகாஷ் முஸ்தாக்காக மாறிய விநோதம்.....

பிரகாஷ் முஸ்தாக்காக மாறிய விநோதம்.....

'உன் பேர் என்ன?'

'பிரகாஷ்'

'உனது ஊர்'

'ஜெய்ப்பூர்'

'தந்தை பெயர்?'

'ராம்'

'இங்கு எங்களிடம் என்ன பெயரைச் சொன்னாய்?'

'முஸ்தாக்'

இவன் முஸ்லிமாக மாறவில்லை. இவனது ஆதார் கார்டிலும் பிரகாஷ் என்ற பெயரே உள்ளது. முஸ்லிம் பெயரில் வந்து நாச வேலைகள் செய்ய இந்துத்வாவால் தயார்படுத்தப்பட்டவன் இந்த பிரகாஷ். இது போல் பல பிரகாஷ்களை ஆர்எஸ்எஸ் நாடு முழுக்க அனுப்பியுள்ளது. முஸ்லிம்கள் பெயரில் தீவிரவாத செயல்களை செய்து அதன் பிறகு இந்துக்களை தூண்டி விட்டு மதக் கலவரங்களை உண்டு பண்ணி பிஜேபிக்கு வாக்கு சேகரிப்பதே இதன் முக்கிய குறிக்கோள்.

 தேசபக்தி, நாட்டுப் பற்று என்று ஆர்எஸ்எஸ் புலம்புவதெல்லாம் வெறும் நடிப்பே. அவர்களுக்கு எப்பாடு பட்டாவது சனாதன தர்மத்தை மீண்டும் இந்தியாவில் புகுத்த வேண்டும். மனுவின் சட்டங்கள் ஆட்சி செய்ய வேண்டும். இதற்காக எந்த விலையையும் ஆர்எஸ்எஸ் கொடுக்கத் தயங்காது. முடிந்தால் தனது உறுப்பினர்களையே பலியிட்டு தனது கொள்ளையை நிலை நிறுத்த பாடுபடும்.

இதனை முஸ்லிம்கள் எப்படி எதிர் கொள்வது? குர்ஆனின் சட்டதிட்டத்தையும் நபிகளாரின் வாழ்வு முறையையும் முடிந்த வரை நமது வாழ்வில் கொண்டு வருவதன் மூலமே இந்த சதித் திட்டங்களை களைய முடியும். இறைவன் விரும்பும் உண்மை முஸ்லிம்களாக நாம் மாறி விட்டால் ஆர்எஸ்எஸின் திட்டங்களை இறைவனே தவிடு பொடியாக்கி விடுவான்.

ஆர்எஸ்எஸ் செயல்கள் முஸ்லிம்களை நோக்கித்தானே நமக்கு என்ன என்று இந்து பிற்படுத்தப்பட்ட மக்கள் கண்டு கொள்ளாமல் இருந்தால் பின்னாளில் பாதிப்பு அவர்களுக்குத்தான். அகோரிகள், பெண் அடிமை, உடன் கட்டை ஏறுதல், பெண்களை பொட்டு கட்டி விடுதல், தலித்களை மேலும் அடிமைபடுத்துதல், சாதி கலவரம் என்று இந்துத்வாவின் பட்டியல் நீண்டு கொண்டே போகும்.

இஸ்லாமியர்களைப் பொருத்த வரை உயிரை விட்டாலும் விடுவார்களே யொழிய இஸ்லாத்தை விட்டுத்தர மாட்டார்கள். உடமைகளையும், உயிரையும்தான் ஆர்எஸ்ஸால் எடுக்க முடியும். நம்பிக்கையை எக்காலத்திலும் எடுக்க முடியாது. இங்கும் முடிவில் தோல்வி இந்துத்வாவுக்குத்தானேயொழிய இஸ்லாமியர்களுக்கல்ல...  









2 comments:

Dr.Anburaj said...



ஏா்வாடியில் பாக்கிஸ்தானைச் சோ்ந்த வயதில் சற்று மூத்த பொியவா் ஒருவரை

காவல்துறை கைது செய்துள்ளது.

ரொம்பவும் கதை கட்ட வேண்டாம். SS யில் உள்ளவா்களும் அல்லா வால்

படைக்கப்பட்டவா்கள்தாம்.உயா்ந்த லட்சியத்தை வலியுருத்தும் இயக்கம் RSS.

சென்னை வெள்ளத்தின் போது செய்த தொண்டுகளை இருட்டடைப்பு செய்தீா்கள்.


இன்று ஜனாதிபதி யாக இருப்பவா் RSS இயக்கத்தைச் சோ்ந்தவா்
பிரதமராக இருப்பவா் RSS இயக்கத்தைச் சோ்ந்தவா்
துணைஜனாதிபதியாக பதவியேற்கப் போகின்றவா் RSS இயக்கத்தைச் சோ்ந்தவா்
பல மத்திய அரசின் மூத்த அமைச்சா்கள் அநேகம் போ்கள் RSS இயக்கத்தைச் சோ்ந்தவா்


சமூகத்திறகு நல்ல கனிகளைக் கொடுத்து் கொண்டிருக்கும் அற்புதமான மரத்தை வெட்ட

நினைப்பவா் சுவனப்பிாியன் என்ற கோணல்புத்திக்காரன்.

Dr.Anburaj said...

ஆர்எஸ்எஸ் செயல்கள் முஸ்லிம்களை நோக்கித்தானே நமக்கு என்ன என்று இந்து பிற்படுத்தப்பட்ட மக்கள் கண்டு கொள்ளாமல் இருந்தால் பின்னாளில் பாதிப்பு அவர்களுக்குத்தான். அகோரிகள், பெண் அடிமை, உடன் கட்டை ஏறுதல், பெண்களை பொட்டு கட்டி விடுதல், தலித்களை மேலும் அடிமைபடுத்துதல், சாதி கலவரம் என்று இந்துத்வாவின் பட்டியல் நீண்டு கொண்டே போகும்.

(இந்துத்துவா என்பது இது அல்ல. இந்தியாவின் சமூக கலாச்சார வீழ்ச்சியின் அடையாளமே மேற்படி காாியங்கள்.இது எப்படி இந்துத்துவா ஆகும்.)

இஸ்லாமியர்களைப் பொருத்த வரை உயிரை விட்டாலும் விடுவார்களே யொழிய இஸ்லாத்தை விட்டுத்தர மாட்டார்கள். உடமைகளையும், உயிரையும்தான் ஆர்எஸ்ஸால் எடுக்க முடியும். நம்பிக்கையை எக்காலத்திலும் எடுக்க முடியாது. இங்கும் முடிவில் தோல்வி இந்துத்வாவுக்குத்தானேயொழிய இஸ்லாமியர்களுக்கல்ல...
--------------------------------------------------------------------m------
அண்டப்புளுகும் ஆகாயப்புளுகம் புளுகு திலகம் என்று எல்லாம் அடைமொழிகள் உண்டு..இனி மேல் சுவனப்பிாியன் புளுகு என்பது அனைத்திற்கும் மிஞ்சிய புளுகு.
RSS கொள்கைகள் எதையும் சுவனப்பிாியன் சொல்லவில்லை.RSS சம்பந்தம் இல்லாத ஒழிக்க நினைப்பதை அதன் கொள்கையாக சொல்கின்றாா் சுவனப்பிாியன்.இந்து இளைஞா்களின் மனித வளம் விரயம் ஆகாமல் ஆக்க புா்வமான வழியில் அவா்களின் கவனத்தை மடை மாற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ள அருமையாக தியாக மூா்த்திகள் பலரை இந்தியாவிற்கு அளித்துள்ள தேசிய இயக்கம் ஆா்எஸ்எஸ்.மத மாற்றத்தை அது ஏற்கவில்லை. நானும் ஏற்கவில்லை.ஒரு இசுலாமியன் மதம் மாறியதை தங்களால் ஏற்கமுடியாது.என்னாலும் ஒரு இந்து மதம் மாறி போவதை ஏற்க இயலாது.