Followers

Thursday, July 20, 2017

*Manickam Palaniyapan* அவர்களின் மிக அருமையான பதிவு

*Manickam Palaniyapan* அவர்களின் மிக அருமையான பதிவு////////////////

*எந்த விஷயத்திலும் முஸ்லிம்கள் உங்களோடு ஒட்டாமல் தனித்து நிற்பதேன்?*

என்பது முஸ்லிம் அல்லாத பலரின் கேள்வி.

இதோ என் பதில்!!

*அவர்களின் முன்னோர்கள் நம் இந்தியதேச விடுதலைக்கு அவர்களின் சதவீதத்திற்கும் அதிகமாக உழைத்தவர்கள். அதற்காக பட்டம், பதவி, கல்வி, செல்வம் போன்றவற்றைத் துறந்த முஸ்லிம்கள்,அவர்களுக்காக உருவாக்கப்பட்ட இஸ்லாமிய தேசம் பாகிஸ்தானுக்கு வாருங்கள் என அழைத்த போதும்கூட அவர்கள் இந்த மண்ணைவிட்டு வரமாட்டோம்! எங்கள் இந்துச் சகோதரர்களோடு வாழ்வோம்! என்று உறுதியாக நின்றவர்கள் அவர்கள்! ஆனால் இன்றைய மதவெறி அரசியல் அவர்களை பிரிக்க நினைக்கும் இக்காலகட்டத்தில் சில விஷயங்களை நீங்கள் சிந்திக்க வேண்டும்!*

*அவர்கள் முஸ்லிம்கள்; அவர்கள் மார்க்கம் "உண்ணுங்கள் பருகுங்கள் வீண் விரயம் செய்யாதீர்; கரத்தாலும் நாவாலும் பிறருக்கு தீவினை செய்யாதீர்"* என்பதால்

*காசைக் கரியாக்கி காற்றை மாசாக்கி, காதை செவிடாக்கி வீதியை குப்பையாக்கி,  நோயாளிகள் பதற,குழந்தைகள் துடிக்க ,குடிசைகள் எரிய காரணமாவதால் தீபாவளியை,அவர்கள்கொண்டாடுவதில்லை. 
இதனால் இந்த தேசத்திற்கு நன்மையா தீமையா ?இதனால் யாருக்கு என்ன நட்டம் ? 

மாறாக இந்த நாட்டுக்கு நன்மையே !*

*வீதிகளை அடைத்து,நீர் நிலைகளை மாசுபடுத்தும்,பக்திக்காக அல்லாமல் மதவாத சக்தியைக் காட்டும் அரசியலாக மட்டுமே இருப்பதால் இந்துதுவா விநாயகர் சதுர்த்தியில் அவர்கள் பங்கெடுப்பதில்லை !*

*இதனால் இந்த தேசத்திற்கு நன்மையா தீமையா ?*

*சுற்றுச் சூழலை மாசுபடுத்தக் கூடாது என்பதால் பழையனவற்றை எரிக்கும் போகியில் கலந்து கொள்வதில்லை ! போகியின் பெயரால் தமிழர்களின் பல அரிய பொக்கிஷங்களை, ஒலைச்சுவடிகளை எரிக்கச் சொல்லி அவர்களை வரலாற்று அனாதையாக்கிய இந்துதுவா நஞ்சையும் அவர்கள் வெறுக்குகிறார்கள்.*

*படைத்தவன் மட்டுமே வணக்கத்திற்கு உரியவன் என்பதால்,ஆயுதங்களை வணங்கும் ஆயுத பூஜையிலும் காகிதங்களை வணங்கும் சரஸ்வதி பூஜையிலும் அவர்களால் கலந்து கொள்ள முடியவில்லை !இது உங்களைப் புறக்கணிக்க வேண்டும் என்பதால் அல்ல !*

*தீமைகளின் தாய்* *மது* *என அவர்களின் மார்க்கம் தடுப்பதால் அவர்கள் மது அருந்துவதில்லை! ஆகையால் அவர்களால் மதுவால் ஏற்படும் விபத்துகள் இல்லை, குடும்ப சமூக பிரச்னைகள் இல்லை கலவரம் இல்லை, வழக்குகள் இல்லை ! இதனால் யாருக்கு என்ன நட்டம் ? மாறாக இந்த நாட்டுக்கு நன்மையே !*

*வட்டி என்பது ஒருவரின் உழைப்பை உறிஞ்சும் கொடுஞ்செயல் என்பதால் அவர்களின் இஸ்லாம் அதைத் தடுக்கிறது ! அவர்களால் வட்டியினால் ஏற்படும் அடிதடி, கற்பிழப்பு, தற்கொலை, கொலை போன்ற உயிரிழப்புகள் இல்லை ! அவர்களால் யாருக்கு என்ன நட்டம் ? மாறாக அவர்கள் வங்கிகளில் இதுவரை வாங்காமல் விட்டு வைத்துள்ள வட்டித்தொகை 67,500 கோடிகளால் இந்த நாட்டுக்கு நன்மையே !*

*மேலும் பெண்ணின் அழகு என்பது அவர்களை மணம் முடிக்கும் கணவனுக்காக மட்டுமே என்பதால் அவர்களின் பெண்கள் பர்தா அணிகிறார்கள் ! இதனால் பாலியல் குற்றங்களில் இருந்தும் காமப்பார்வைகளில் இருந்தும் அவர்களையும் பாதுகாத்து சமூகத்தையும் தீமையில் இருந்து காக்கிறார்கள்! இதனால் யாருக்கு என்ன நட்டம் ?*

*குடிப்பதும் வெடிப்பதும் பண்டிகை அல்ல !
இல்லாதவர்க்கு வழங்குதலும் இறைவனை வணங்குதலும் தான் இஸ்லாமியப் பண்டிகை என்பதால் அவர்கள் ஆடு, மாடு, ஒட்டகங்களை அறுத்து அவர்களும் உண்டு, நண்பர்களுக்கும் வழங்கி ஏழைகளுக்கும் கொடுக்கிறார்கள் !*

*அவர்களது மார்க்க சட்டப்படி அரசியல் சட்டம் தந்த அனுமதியின்படி 
அவர்களது சொத்துக்களை பிரிக்கிறார்கள் !
அவர்களது திருமணத்தை செய்கிறார்கள் !
அவர்களது விவாகரத்தை செய்கிறார்கள் !
இந்திய நீதிமன்றங்களில் ஏற்கனவே கோடிகணக்கான வழக்குகள் தேங்கிக் கிடக்கையில் அவர்களின் வழக்குகளை அவர்களே தீர்த்து கொள்கிறார்கள் !
இதனால் யாருக்கு என்ன நட்டம் ?*

*ஒன்றே குலம்! ஒருவனே இறைவன்!! என சாந்தி சமாதானத்தை போதிக்கும் மார்க்கம் இஸ்லாம்! இதில் பயங்கரவாதத்திற்கு இடமில்லை !ஆனால் எல்லா சமூகங்களிலும் உணர்ச்சியால் உந்தப்பட்டு வன்முறையை கையில் எடுக்கும் சிலர் இருப்பது போல் இங்கும் இருக்கின்றனர் ! எப்படி குஜராத்தில் நடந்த கொலைகளுக்கு இங்குள்ள இந்துச் சகோதரர்கள் காரணமில்லையோ அது போன்று பயங்கரவாதத்திற்கும் பெரும்பாலான முஸ்லிம்களுக்கும் சம்மந்தமில்லை!மற்றவர்கள் குற்றம் இழைக்கும் போது மதத்தை அடையாளப்படுத்தாத மீடியாக்கள் முஸ்லிம்கள் குற்றம் இழைக்கும் போது மதத்தை அடையாளப்படுத்துகின்றனர்* .

*ஆகையால் அவர்களின் போக்குகளில் தலையிட்டு அவர்களை வம்புக்கு இழுப்பது அரசியல் சட்டத்திற்கு எதிரானது என்ற அடிப்படையையாவது உணர்ந்து செயல்படுங்கள். இல்லையேல் சமூக அமைதி சீரழிந்து நாடு நாசமாகும்.*....


12 comments:

Dr.Anburaj said...

மாணிக்கம் பழனியப்பன் வழக்கம் போல் ஒரு ஏமாளி வெகுளி உலகம் அனுபவம் இல்லாத அப்பாவியாக இருக்க வேண்டும்.அல்லது ரம்சான் விருந்தில் போடப்படும் அறுசுவை உணவிற்காக கொஞ்சம் தன்மானத்தை விட்டு பிதற்றும் ஒரு சோற்று மாடனாக இருக்க வேண்டும்.
பொதுவாக மாணிக்கம் பேசியதில் பொிய குறைபாடு ஏதும் யில்லை.எடுப்பாா்கைபிள்ளையாக வாழும் நபா்கள் இப்படித்தான் தன்னை மறந்து சால்ரா தட்டுவாா்கள்.இந்துக்களை காபீா்கள் என்றும் முா்ஷிக் என்று இழிவு படுத்துவதுஏன் இசுலாம் மட்டுமே உண்மையான மாா்க்கம் என்று பொய் சொல்வதை எதிா்த்து சில வாா்த்தை முழங்கியிருந்தால் பழனியப்பன்ன வீரன்.

Dr.Anburaj said...

சுவாமி விவேகானந்தரின் எழுச்சியூட்டும் சிந்தனைகள்
செயலுக்கான திட்டம்

“தானமே இந்தக் கலியுகத்தில் ஒரே நல்லபணி; ஆத்மீக வாழ்வு அளிப்பது தானங்களிலெல்லாம் தலை சிறந்த தானமாகும்; அடுத்த தரத்திலுள்ள தானம் உலகியல் ஞானத்தை அளிப்பதாகும்; அதற்கு அடுத்த படியில் உள்ளது ஒரு மனிதனின் உயிரைக் காப்பாற்றுவது என்ற தானம்; கடைசியாக உள்ளது பசித்தவர்களுக்கு உணவு அளிக்கும் தானமாகும்.” என்று வியாசர் கூறுகிறார்.

நாம் போதுமான உணவு அளித்து வந்துள்ளோம். நம்மை விட அதிகமான ஈகைக்குணம் வாய்ந்த தேசம் எதுவும் இல்லை. பிச்சைக்காரன் கூடத் தனது வீட்டில் சிறு துண்டு ரொட்டி இருக்கிற வரையில் அதில் பாதியை தானம் செய்துவிடுவான். இத்தகைய அதிசயத்தை பாரத தேசத்தில் மட்டுமே காணமுடியும். உணவை தானம் செய்தது போதும். மற்றுமுள்ள இரண்டு தானங்களாகிய ஆத்மீக ஞானத்தையும் உலகியல் ஞானத்தையும் அளிக்க முற்படுவோம்.

நம்மிடம் வீரமிருந்து நமது உள்ள உறுதி குலையாததாக இருக்குமாயின் பரிபூரண உண்மை உள்ளத்துடன் நாம் இந்த வேலையாகிற சக்கரத்தில் நமது தோள்களைப் பதிய வைத்து தள்ளுவோமாயின் இருபத்தைந்து ஆண்டுகளில் பிரச்சனை தீர்ந்துவிடும். போராடுவதற்கு எதுவும் எஞ்சி இராது. பாரத தேசம் முழுவதும் மீண்டும் ஒருமுறை ஆரியபூமியாகிவிடும்.

நான்கு கொடைகள்

வியாசரை நான் போற்றி வணங்குகிறேன். மகாபாரதத்தை இயற்றியவரான வேத வியாசர் கூறுகிறார். இந்த கலியுகத்தில் அரிய சாதனை ஒன்று இருக்கிறது. மற்ற யுகங்களில் அனுஷ்டிக்கப்பட்டுவந்த தபோமுறைகளும் கடினமான யோக அனுஷ்டானங்களும் இக்காலத்தில் அனுஷ்டிக்கக் கூடியனவாக இல்லை. இக்காலத்தில் நாம் செய்யக் கூடிய உயர்ந்த சாதனை தானதர்மம்தான். தானங்களிலெல்லாம் தலையாயது ஆத்மீக ஞானம் புகட்டுவதுதான். அதற்கடுத்து உலகியல் ஞானம் கற்பித்தல்; அதற்கு அடுத்து ஒருவனது உயிரைக் காப்பாற்றுதல்; கடைசியாக உணவும் நீரும் அளித்தல்.

ஆத்மீக ஞானம் அளிப்பவன் ஒரு ஆத்மாவை பல பிறவிகளிலும் பிறந்து உழலாமல் காப்பாற்றுகிறான். உலகியல் அறிவு புகட்டுபவன் ஆத்மீக ஞானத்தை அடைவதற்காக மனிதர்களின் கண்களைத் திறந்துவிடுகிறான். மற்ற தானங்களெல்லாம் -உயிரைக் காப்பாற்றுதல் கூட- இந்த இரு தானங்களைக் காட்டிலும் மிகத் தாழ்ந்த படிகளில்தான் உள்ளன. ஆதலால் ஆத்மீக அறிவைப் புகட்டுதலே அனைத்திலும் சிறந்த பணி. நாம் செய்யக் கூடிய மற்றவிதமான தொண்டுகளெல்லாம் தாழ்ந்தவை என்பதை நீங்கள் அறிந்துணர வேண்டியது அவசியம்.

Dr.Anburaj said...

மனிதனுக்கு ஆத்மீகஞானம் அளிக்கிறவன்தான் மனித குலத்துக்குப் பேருபகாரம் செய்தவனாவான். ஆத்மீக முறையே நமது வாழ்க்கையின் எல்லா நடவடிக்கைகளுக்கும் உண்மையான அஸ்திவாரமாகும். ஆகவேதான் மனிதனின் ஆத்மீகத் தேவைகளில் உதவி செய்தவர்கள் மிகுந்த சக்தியும் செல்வாக்கும் பெற்று விளங்கினார்கள். ஆத்மீகத் துறையில் பலத்துடனும் அசைக்கமுடியாமலும் விளங்குகின்ற மனிதன், தான் விரும்பினால், மற்றெல்லா துறைகளிலும் கூட வலிமையுடன் விளங்க முடியும். மனிதனுக்கு ஆத்மீக பலம் ஏற்படுத்துகிறவரை அவனால் தனது வாழ்க்கையின் உலகியல் தேவைகளைக் கூட நன்கு பூர்த்தி செய்து கொள்ளமுடியாது.

சமயத்தைப் பரப்புதல் அல்லது ஆத்ம ஞானத்தைப் பரப்புதல்:

முதலாவது தான தர்மம்.

இது தான தர்ம பூமி. இந்நாட்டில் ஆத்மீக ஞானத்தைப் பரப்புகிற முதல் தானப் பணியை ஊக்கமுடன் ஏற்றெடுப்போம். ஆத்ம ஞானத்தைப் பரப்பும் பணியை இந்நாட்டு எல்லைக்குள் மாத்திரம் கட்டுப் படுத்தி வைக்கக் கூடாது. அது உலகமெங்க்கும் பரவ வேண்டும். அது தான் நமது மரபு, பழக்கம்.

பாரதத்தின் உயர்ந்த சிந்தனைகள் ஒரு காலத்திலும் பாரதத்தை விட்டு வெளிச்செல்லவில்லை என்றும், அன்னிய நாடுகளுக்கு உபதேசம் செய்வதற்காக முதன்முதலில் வெளியேறிச் சென்ற சன்னியாசி நான் தான் என்றும் யாராவது உங்களிடம் சொன்னால், அவர்கள் தமது இனத்தின் வரலாற்றை அறியாதவர்களேயாவர். இந்த அறுபுத நிகழ்ச்சி பல தடவை நிகழ்ந்துள்ளது. எவ்வெப்பொழுதெல்லாம் உலகம் இத்தகைய உதவியைக் கோரிற்றோ அவ்வப்பொழுதெல்லாம் இந்நாட்டினின்றும் என்றும் அழியாத வெள்ளமான ஆத்மீக சக்தி பொங்கி வழிந்து உலக முழுவதையும் வெள்ளக் காடாக்கியிருக்கிறது.

சமயம் வீடுதோறும் தடையின்றி வழங்கப் படவேண்டும்:

நெடுங்காலமாக நம் நாட்டில் சமயம் முன்னேற்றமில்லாத ஒரு தேக்க நிலையில்; இருந்து வந்துள்ளது. நாம் அதனை மிகுந்த சக்தித் துடிப்புள்ளதாக ஆக்க விரும்புகிறோம். ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும் சமய உணர்ச்சி புகுந்து வேலை செய்ய வேண்டுமென நான் விரும்புகிறேன். முற்காலத்தில் இருந்தது போல இக்காலத்திலும் அது மன்னர்களின் அரண்மனையிலும் பாமர ஏழைகளான குடியானவர்களின் குடிசையிலும் நுழைந்து வேலை செய்ய வேண்டும்.

சமயமானது நமது மக்களினத்தின் பொதுச் சொத்து ஆகும். அவர்களது பொதுவான பிறப்புரிமையாகும். அதனை ஒவ்வொரு வீடுதோறும் எவ்வித தடையுமின்றிக் கொண்டு செல்லல் வேண்டும். கடவுள் அளித்துள்ள காற்றைப் போல சமயத்தை எல்லோருக்கும் எளிதில், தடையின்றிக் கிடைக்கச் செய்ய வேண்டும். பாரதத்தில் நாம் இத்தகைய பணியையே நடத்திவர வேண்டும். நமது சமயத்துக்குள் சிறு உட்பிரிவுகளை உண்டாக்குவதன் மூலமோ, வேறுபாடுகளைப் பற்றிச் சண்டையிடுவதன் மூலமோ அதனைச் செய்ய முடியாது. நம் அனைவருக்கும் பொதுவாக உள்ள கொள்கைகளையே நாம் மையமாகப் பிரசாரம் செய்ய வேண்டும்.

Dr.Anburaj said...

பல நூற்றாண்டுகளாக இருள்: அடைந்த ஒரு அறைக்குள் சென்று, “இருட்டாக இருக்கிறதே” என்று எவ்வளவு தான் கூக்குரலிட்டாலும் அவ்விருள் நீங்கி விடுமா? ஒரு விளக்கைக் கொண்டு வாருங்கள். உடனே இருள் நீங்கும். மனிதர்களைச் சீர்திருத்தும் ரகசியம் இது தான்.

vivekananda

முதலில் மனிதனிடம் நம்பிக்கை வையுங்கள். அவனிடம் குற்றங்குறைகள் இருக்குமானால், அவன் தவறுகள் செய்தால், அவன் காட்டுமிராண்டித் தனமான அல்லது மிகக் குரூரமான கொள்கைகளைத் தழுவி வாழ்ந்தால், அவனது உண்மையான சுபாவத்திலிருந்து அவை தோன்றவில்லை என்றும், உயர்ந்த லட்சியங்கள் அவனுக்கு உணர்த்தப் படாமையால் தான் இந்த இழிநிலை வந்தது என்றும் நம்புங்கள்.

அவனுக்கு சத்தியத்தைப் புகட்டுங்கள். அத்துடன் உங்கள் வேலை முடிந்தது. தன்னிடம் முன்னரே உள்ள கருத்துக்களுடன் அவன் இதனை ஒப்பிட்டுப் பார்க்க விட்டுவிடுங்கள். நான் சொல்வதைக் கவனித்துக் கொள்ளுங்கள். நீங்கள் உண்மையிலேயே அவனுக்கு சத்தியத்தைப் புகட்டியிருப்பீர்கள் ஆயின், பொய் மறைந்தே தீரும். சத்தியம் நல்லனவற்றை நிச்சயமாக வெளிக் கொணர்ந்து விடும்.

நாட்டை ஆத்மீகத் துறையில் சீர்திருத்த நீங்கள் விரும்பினால் இதுவே வழி. சண்டையிடுவதோ, நீங்கள் செய்வது தவறு என்று மக்களிடம் சொல்வதோ பரிகாரமாகாது. நல்லனவற்றை அவர்கள் முன்பு வையுங்கள். எவ்வளவு ஆவலுடன் அவர்கள் அவற்றை ஏற்கிறார்கள் என்று பாருங்கள். மனித உள்ளத்தில் எப்பொழுதும் ஆவலுடன் அவர்கள் அவற்றை ஏற்கிறார்கள் என்று பாருங்கள். மனித உள்ளத்தில் எப்பொழுதும் அழியாமல் வாழ்ந்து வரும் தெய்வீக சக்தி விழித்து எழுந்து தனது கைகளை நீட்டி, நல்லன அனைத்தையும் உயர்ந்தன அனைத்தையும் பெற்றூக் கொள்ள முன்வருவதைக் காண்பீர்கள்.

புத்தகங்களில் மறைந்துள்ள ஆத்மீக மணிமொழிகள் – அவற்றை வெளிப்படுத்த வேண்டும்:

என்னுடைய முதல் எண்ணம் இதுதான். ஆத்மீக வாழ்க்கைக்குத் தேவையான ஞானத்தைக் கற்பிக்கும் மணிமொழிகள் பல நமது சமய நூல்களில் நிறைந்திருக்கின்றன. இப்பொழுது அவை சாதாரண மக்களுக்கு எட்டாத இடங்களில் மடாலயங்களிலும் காடுகளிலும் – ஒரு சிலரது கைவசமே உள்ளன. இந்த ஞான மணிகள் வெளிக் கொணரப்பட வேண்டும். அவற்றிலுள்ள ஞானம் வெளிவர வேண்டும். மறைந்திருக்கிற இடத்திலிருந்து மட்டுமல்ல; நமக்கெட்டாத பெட்டியான ஒரு மொழியில் அந்த ஞானம் பாதுகாக்கப் பட்டு வந்துள்ளது. அந்த ஞானமணி பல நூற்றாண்டுகளாக சம்ஸ்கிருதச் சொற்களால் அலங்காரம் பண்ணப் பட்டு மூடிவைக்கப் பட்டிருக்கிறது. ஒரே சொல்லில் குறிப்பிட்டால், அந்த ஞானமணீயை எல்லோருக்கும் கிடைக்கும்படி நாம் செய்ய வேண்டும்.

Dr.Anburaj said...

நமது மானிட இனத்தைப் படைத்து, நிலைக்கச் செய்து, காத்து வருபவராகவும், நம் முன்னோர்களின் தெய்வமாகவும் விளங்கிய அந்தப் பரம்பொருள், அவரை விஷ்ணு, சிவன் , சக்தி என்றோ கணபதி என்றோ எப்படி அழைத்தாலும், உருவ ( சகுண )மாக அல்லது உருவமற்ற (நிர்குணமான) தாக எப்படி வழிபட்டாலும், “ஏகம் சத் விப்ரா பஹுதா வதந்தி” – “பரம்பொருள் ஒன்றே, மகான்கள் அவரைப் பல பெயர்களால் அழைக்கின்றனர்” என்று நம் முன்னோர்கள் தெளிந்து கூறிய அந்தப் பரம்பொருள் எல்லையில்லாப் பெருங்கருணையுடன் நம் முன்னே நீக்கமற நிறைந்து, நம் மீது பேரருளைப் பொழியட்டும்! நாம் ஒருவரை ஒருவர் சரிவர அறிந்துணரவும், ஒருவருக்காக ஒருவர் உண்மை அன்போடு தொண்டு செய்யவும், உண்மையிடத்தே பேரன்பு கொள்ளவும் செய்யட்டும்! பாரதத்தின் புனர் நிர்மாணம் என்கிற இந்த மகத்தான பணியில் நம்மில் யாருக்குச் சொந்தப் புகழையோ சொந்த கௌரவத்தையோ சொந்த அனுகூலத்தையோ சிறிதும் சிந்திக்காதிருக்க அருள்பாலிக்கட்டும்.

நம் நிலையை உலக நாடுகளுடன் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும்:

மிகப் பழங்காலத்தில் நம்நாடு ஆத்மீகத்துறையில் அபாரமாக முன்னேறிற்று. அந்தப் பண்டைய வரலாற்றை இன்று நம் மனக்கண் முன் கொண்டு வருவோம். ஆனால் நெடுநாட்களுக்கு முன்னர் இருந்த உயர்நிலையைப் பற்றித் தியானம் செய்வதில் பெரும் அபாயமும் உள்ளது. அதாவது நாம் புதியன பெறுவதற்கு உழைத்துக் கஷ்டப்படாமலிருந்து விடக்க்கூடும். மூதாதையர்களின் கழிந்து போன புகழ், பெருமையைப் பற்றி நினைத்துச் சோம்பிக் கிடந்து திருப்தியடைந்து விடலாம்; பெருமையடித்துக் கொண்டிருந்து விடலாம். அதிலிருந்து நம்மைத் தற்காத்துக் கொள்ளவேண்டும்.

பாரதத்தினிடம் எனக்கு எவ்வளவுதான் அன்பிருந்தாலும், எவ்வளவுதான் தேசபக்தியிருந்தாலும், முந்தையர்களிடம் எவ்வளவுதான் மதிப்பு இருந்தாலும் கூட, நாம் மற்ற நாடுகளிடமிருந்து பல விஷயங்களைக் கற்கவே வேண்டும் என்பதை என்னால் எண்ணாமலிருக்க முடியாது. எல்லோருடைய காலின் கீழும் அமர்ந்து கற்க நாம் ஆயத்தமாக இருக்கவேண்டும். ஏனெனில் கவனித்துக் கொள்ளுங்கள். ஒவ்வொருவரும் நமக்குப் பெரும் பாடங்களைக் கற்பிக்க முடியும். அதே சமயத்தில் உலகத்துக்கு நாமும் மகத்தான ஒரு பாடத்தைக் கற்பிக்க வேண்டுமென்பதையும் நாம் மறக்கக் கூடாது.

பாரதத்துக்கு வெளியே உள்ள உலகத்தின் தொடர்பு இன்றி நாம் எதுவும் செய்ய முடியாது; செய்ய முடியும் என நினைத்து நமது பேதைமை. அதற்குத் தண்டனையாக ஆயிரமாண்டுகள் அடிமையாகக் கிடந்தோம். நாம் நமது நாட்டுக்கு வெளியே சென்று உலக நாடுகளுடன் நமது நிலையை ஒப்பிட்டுப் பார்க்கவில்லை. நம்மைச் சுற்றி உலகெங்கும் நடக்கும் பலவிதமான வேலைகளை நாம் கவனிக்கவில்லை. பாரதத்தின் உள்ளம் தாழ்வுற்றதற்கு இது முக்கியமான ஒரு காரணம். இதற்கான தண்டனையை அனுபவித்து விட்டோம். இனிமேலாவது அவ்வாறு செய்யாமலிருப்போம்.

Dr.Anburaj said...

பாரதீயர்கள் நாட்டை விட்டு வெளியே போகக்கூடாது என்பது போன்ற அறிவீனமான கருத்துக்கள் எல்லாம் சிறுபிள்ளைத்தனமான எண்ணங்கள். “ நீ அதிகமாக வெளியில் சென்று உலக நாடுகளிடையே பிரயாணம் செய்து வந்தால் அது உனக்கும் உனது நாட்டுக்கும் நல்லது” என்ற விஷயத்தை மூளையிற் பதிய வைக்க வேண்டும். இதனைக் கடந்த பல நூற்றாண்டுகளில் செய்திருந்தால் நாம் இன்றுபோல், பாரதத்தை ஆள விரும்புகிற ஒவ்வொரு நாட்டின் காலின் கீழும் கிடந்திருக்க மாட்டோம்.

வாழவேண்டுமாயின் விரிவு கொள்ள வேண்டும்:

உயிருள்ள பொருள் வளர்ந்து பெருகும். உயிர் இருப்பதற்கு முதல் அறிகுறி அது. நீ விரிவடைவதை நிறுத்தினால், அந்தக் கணமே மரணம் உன்னைத் தாக்கும். அபாயம் உன்னைத் தாக்க விருக்கிறது. நான் அமெரிக்காவுக்கும் ஐரோப்பாவுக்கும் போயிருந்தேன்; நான் போக வேண்டியிருந்தது; ஏனெனில் விரிவு பெறுவது தேசீய வாழ்க்கையினுடைய மறுமலர்ச்சிக்கு முதற் சின்னமாகும். இவ்வாறு மறுமலர்ச்சியடந்துவரும் தெசீய வாழ்க்கை, உள்ளே வளர்ந்து பெருகி, என்னை வெளியே போகச் செய்தது. ஆயிரக்கணக்கானவர்களை அது போலவே வெளியே போகச் செய்ய வேண்டும். நான் கூறுவதைக் கவனியுங்கள். இந்த நாட்டில் உயிர் இருக்கின்றதென்றால் நான் கூறுவது போல நடந்தே தீர வேண்டும். ஆதலால் இந்தப் பிரச்னை தேசீய வாழ்க்கையின் மறுமலர்ச்சிக்கு மிகப் பெரியதோர் அறிகுறியாகும். இந்த விஸ்தரிப்பின் மூலம் உலக ஞானமென்னும் பொது நிதிக்கு நமது பங்கினை, உலகப் பொது உயர்வுக்கு நமது பங்கினைச் சேர்த்துவிட முடியும். வெளிநாடுகளுக்குச் செல்லத்தான் வேண்டும்.

அன்றியும் இது புது விஷயமல்ல; ஹிந்துக்கள் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக எப்பொழுதும் வீட்டின் நான்கு சுவர்களுக்குள்ளேயே அடைபட்டுத்தான் கிடந்தார்கள் என்று நினைத்தால், அது தவறு. பழைய நூல்களை ஆராயவில்லை. இந்த மக்களினத்தின் வரலாற்றைச் சரியாக அறியவில்லை.

நீங்கள் உங்கள் வாழ்வை வழங்கினால், நீங்கள் வாழ்வு பெறலாம்:

ஒவ்வொரு தேசமும் உயிர்வாழ வேண்டுமாயின் கொடுக்கவேண்டும். நீங்கள் உங்களது உயிரைக் கொடுத்தால் உங்களுக்கு உயிர் கிடைக்கும். உங்களுக்கு ஏதாவது ஒன்று கிடைத்தால் மற்ற அனைவருக்கும் கொடுப்பதன் முலம். நீங்கள் அதற்கான விலையைக் கொடுக்க வேண்டும். நாம் இத்தனை ஆயிரம் ஆண்டுகளாக உயிர் வாழ்கிறோம் என்ற உண்மை நம் எதிரில் நிற்கிறது. அதற்குக் காரணம், அறிவீனர்கள் எப்படிச் சொன்னாலும், சரியான காரணம் – நாம் எப்பொழுதும் உலகுக்கு வாரிவழங்கிக் கொண்டிருப்பதுதான். ஆனால் பாரதம் அளித்த பரிசு சமயம், தத்துவஞானம், தெய்வீக அறிவு, ஆத்மீக ஞானம், இவைதான். ஆகவே நாம் வெளியே செல்ல வேண்டும். நமது ஆத்மீகத்துக்குப் பண்டமாற்றாக அவர்கள் நமக்குத் தரக்கூடியவற்றைப் பெற்றுவர வேண்டும். ஆத்மீகத்துறையிலுள்ள அதிசயங்களை அவர்களுக்குக் கொடுத்து, பௌதிகத்துறையிலுள்ள அதிசயங்களைப் பெற்று வருவோம். எப்பொழுதுமே நாம் மாணவர்களாக இருப்போம். சமத்துவம் இல்லையேல் நட்பு இராது. ஒரு சாரார் எப்பொழுதுமே ஆசிரியர்களாக இருந்து கொண்டு, மறுதரப்பினர் எப்பொழுதும் அவர்களது காலடியின் கீழ் உட்கார்ந்திருந்தால் சமத்துவம் ஏற்பட முடியாது. ஆங்கிலேயருக்கோ, அமெரிக்கருக்கோ சமமாக ஆக நீங்கள் விரும்பினால் நீங்கள் அவர்களுக்குக் கற்பிக்கவும், அவர்களிடமிருந்து கற்கவும் வேண்டும். வரப்போகிற பல நூற்றாண்டுகளுக்கு அவர்களுக்குக் கற்பிப்பதற்கு உங்களிடம் ஏராளமான விஷயங்கள் உள்ளன.

மேலைநாடுகளிடலிருந்து பல விஷயங்கள் கற்க வேண்டும்:

நாம் உயர வேண்டுமானால் மேலை நாடுகளிலிருந்தும் பல விஷயங்களைக் கற்க வேண்டுமென்ற நினைவு நமக்கு இருக்க வேண்டும். மேலைநாடுகளின் கலைகளையும், விஞ்ஞானங்களையும் கற்க வேண்டும்.

உலகுக்குக் கற்பிக்க வேண்டியது இந்த ஆத்மீகத் தத்துவம்தான். ஓரளவுக்கு நாம் உலகாயத, பௌதிக அறிவில் சிறிது மேம்பட வேண்டும். மக்களை ஒன்றுபடுத்தி இணைக்கும் திறமை, சக்திகளைக் கையாளும் திறமை, சக்திகளை ஒழுங்குற அமைத்துக் கோப்பது, சிறு விஷயங்களைக் கொண்டு மகத்தான லாபங்களை அடைவது இவற்றை இன்னும் கொஞ்சம் கற்க வேண்டும்.

Dr.Anburaj said...

பிறரைப் போல நடிப்பது நாகரிகமாகாது:

மற்றவர்களைப் பின்பற்றி நடிப்பது நாகரிகப் பண்பு ஆகாது. நாம் நினைவிற்கொள்ள வேண்டிய மற்றொரு பெரிய பாடம் இது. நான் ஓர் அரசனைப்போல உடையுடுத்தி என்னை அலங்கரித்துக் கொள்ளலாம். அதனால் அரசனாகி விடுவேனா? சிங்கத்தின் தோல் போர்த்த கழுதை சிங்கமாகிவிடாது. கோழைத்தனமாகப் பிறர் போல் நடிப்பது அவர்களைப் பின்பற்றுவது, ஒருநாளும் முன்னேற்றத்தைத் தராது. ஒரு மனிதனின் பயங்கரத்தாழ்வுக்கு அது கண்கூடான அறிகுறியாகும். ஒரு மனிதன் தன்னையே வெறுக்கத் தொடங்கி விட்டான் என்றால் அவன் ஒழிந்து போனான் என்று கொள்க.

ஹிந்து என்பதில் பெருமிதம் கொள்க:

ஒருவன் தனது முன்னோர்களைப் பற்றி அவமானப்படுவானாயின் அவனுக்கு முடிவு காலம் வந்துவிட்டது. ஹிந்து இனத்தில் நான் மிகச் சார்ஹாரண மனிதந்தான். ஆனாலும் நான் எனது இனத்தைப் பற்றிப் பெருமைப்படுகின்றேன். (என்னை ஹிந்து என அழைத்துக் கொள்வதில் பெருமைப்படுகிறேன்). உங்களுடைய தகுதியற்ற தாழ்ந்த ஊழியர்களில் ஒருவன் என்று நான் பெருமைப்படுகிறேன். முனிவர்களின் பரம்பரையினரான, உலகம் கண்ட மகரிஷிகளிடையே மிக கீர்த்தி வாய்ந்த ரிஷிகளின் சந்ததியினரான உங்களுடன் கூட இந்த நாட்டில் பிறந்திருக்கிரேன் என்று பெருமையடைகிறேன்.

பிறரிடமிருந்து நாம் கற்கலாம்: ஆனால் நமது முறைக்குத் தகுந்தவாறு அதனை மாற்றியமைத்துக் கொள்ள வேண்டும்:

ஆகவே உங்களுக்குத் தன்னம்பிக்கை இருக்கட்டும். உங்களது முன்னோர்களைப் பற்றி அவமானமடைவதற்கு மாறாகப் பெருமையடையுங்கள். பிறரைப் பின்பற்றி ஒரு போதும் நடிக்காதீர்கள். நீங்கள் பிறருடைய ஆதிக்கத்தின் கீழ் இருக்கும்போதெல்லாம் உங்களது சுதந்திரத்தை இழந்து விடுகிறீர்கள். ஆத்மீக விஷயங்களில் கூட மற்றவர்களின் உத்தரவை எதிர்பார்த்து அதற்கு உட்பட்டு நடப்பீர்களானால் மெல்ல மெல்ல எல்லாத் திறமைகளையும் சுயசிந்தனைச் சக்தியையும் கூட இழந்து விடுவீர்கள். உங்களுக்குள்ளே மறைந்து கிடக்கும் ஆற்றல்களை உங்களது சொந்த முயற்சியால் வெளிக்கொணர முயலுங்கள். ஆனால் எவரையும் பார்த்து நடிக்காமல் அவர்களிடம் உள்ள நல்லதை மாத்திரம் அவசியம் ஏற்றுக் கொள்ளுங்கள். மற்றவர்களிடமிருந்து கற்க வேண்டியவை நிறைய உள்ளன.


ஒரு விதையை நிலத்தில் விதைக்கிறோம். அதற்கு உணவாக ஏராளமான தண்ணீரும், மண்ணும், காற்றும் ஏற்பாடு செய்கிறோம். விதை செடியாகி, பெரிய மரமென ஆகும்பொழுது அது மண்ணாக ஆகிறதா? இப்படி எந்த ஒன்றாகவும் அது ஆவதில்லை. தன்னுடைய இயல்பின்படி அது வளர்ந்து தனக்குத் தரப்பட்ட எல்லாவற்றிலிருந்தும் சத்துப் பொருளாக உள்ளதை ஏற்றுப் பிரம்மாண்டமான மரமாகத்தான் ஆகிறது. நீங்களும் அதுபோலவே ஆகுங்கள்.

Dr.Anburaj said...

யாரிடமேனும் நல்ல விஷயங்களைக் கற்கலாம்:

பிறரிடமிருந்து பல விஷயங்களை நாம் கற்க வேண்டும். ஆம்: கற்க மறுப்பவன் செத்தவனாகி விட்டான் எனக் கொள்க.

“அததீத பராம் வித்யாம் ப்ரயத்னாதவராதபி

அந்த்யாதபி பரம் தர்மம் ஸ்த்ரீரத்னம் துஷ்குலாதபி “ (மனு 2.238)


”மாணிக்கத்தை நிகர்த்த பெண்மணி தாழ்ந்த ஜாதியில் தோன்றினாலும் அவளை உன் மனைவியாகக் கொள்வாயாக:

( சாதி கலப்பு திருமணத்தை சுவாமிஜி ஆதாிக்கின்றாா் பாருங்கள் )

தாழ்குடிப் பிறந்த ஞானியிடமிருந்தாவது, உயர்ந்த ஞானத்தை, அவரது திருவடிகளில் சேவை செய்து பெறுவாயாக;

சண்டாளனிடமிருந்தேனும், முக்திக்கு மார்க்கத்தை அவருக்குத் தொண்டு செய்து பெறுவாயாக” என்று நமது மனு கூறியுள்ளார்.

பிறரிடமிருந்து நல்லன அனைத்தயும் கற்போம். ஆனால் உங்களது சொந்த இயல்புக்குத் தகுந்தபடி அவற்றைக் கிரகித்துச் சேர்த்துக் கொள்ளுங்கள். அவர்களைப் போல் மாறிவிடாதீர்கள். இந்தப் பாரதீய வாழ்க்கையின் இயல்பு முறையிலிருந்து வெளியே இழுக்கப்படாமலிருங்கள்; பாரதீயர்கள் அனைவரும் வேற்று இனத்தவரைப் போல உண்டு, உடுத்து, நடந்தால், அது பாரத் நாட்டுக்கு நன்மை செய்யுமென்று ஒரு கணமும் நினைக்காதீர்கள்.

வாழ்க்கை அருவி தங்கு தடையின்றி ஓடிப் பெருகட்டும்:

சமீப வருடங்களில் ஏற்பட்ட பழக்கமாயினும் அதை விட்டு விடுவது எவ்வளவு கடினம் என்பது உங்களுக்குத் தெரியும். உங்களது உதிரத்தில் இந்தச் சிறப்பான, குறிப்பான, தேசீய வாழ்க்கை முறை எத்தனை ஆயிரம் ஆண்டுகளாக ஓடிக்கொண்டிருக்கிறது என்பதைக் கடவுள்தான் அறிவார். பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக நம்முடைய தேசீய வாழ்க்கை ஒரு குறிப்பிட்ட ரீதியில் போய்க்கொண்டிருக்கிறது. இம்மாபெரும் நதி அனேகமாகக் கடலுடன் கலக்குமிடத்திற்கு அருகில் உள்ளது. இந்தப் பெரு நதி தனது உற்பத்தி ஸ்தானமான இமயத்தின் பனி மூடிய சிகரங்களுக்கே திரும்பிப் போக வேண்டுமென்று நீங்கள் நினைக்கிறீர்களா? அது நடவாது. அவ்வாறு நடக்க வேண்டும் என்று முயன்றால் அது குலைந்து தான் போகும்.

ஆதலால் நமது தேசத்தின் ஜீவசக்தியை அதன் போக்கில் போகும்படி விடுங்கள். அந்தப் பெருநதியின் பெருக்கைத் தடுக்கும் தடைகளை அகற்றி விடுங்கள். அதன் படுகைகளையும், வழிமடைகளையும் அடைத்துக் கொண்டிருக்கும் அசுத்தங்களை நீக்கித் தூய்மைப் படுத்துங்கள். அதற்கு மேல் அந்த ஆறு தனக்கே உரியதான இயற்கை வீறுடன் குதித்துப் பாய்ந்து ஓடும். நாடு செழித்தோங்கித் தழைக்கும்.

பாரதீயர்களாகிய நம்மீது ஏராளமான அந்நியக் கருத்துக்கள் படையெடுத்துப் புகுந்துள்ளன. அவை நமது தேசீய சமயத்தின் ஜீவ நாடியையே அரித்துத் தின்று வருகின்றன. இன்று நாம் ஏன் இவ்வளவு பிற்போக்கானவர்களாக இருக்கிறோம்? நம்மில் நூற்றுக்குத் தொண்ணூற்றொன்பது பேர்கள் வெளிநாட்டுக் கருத்துக்களாலும், சக்திகளாலும் உருவாக்கப்பட்டிருப்பது ஏன்? உலகநாடுகளின் மதிப்பில் நாம் உயர வேண்டும் என்றால் இந்த இழிநிலையைத் தூர விரட்டி ஓட்ட வேண்டும்.

Dr.Anburaj said...

ஆசிக்கு இதையெல்லாம் படிக்க வேண்டும் என்பதற்கு பதிவு செய்தேன்.வெளியிட்டமைக்கு நன்றி.

Dr.Anburaj said...

சமயம் வீடுதோறும் தடையின்றி வழங்கப் படவேண்டும்:

சமயமானது நமது மக்களினத்தின் பொதுச் சொத்து ஆகும். அவர்களது பொதுவான பிறப்புரிமையாகும். அதனை ஒவ்வொரு வீடுதோறும் எவ்வித தடையுமின்றிக் கொண்டு செல்லல் வேண்டும். கடவுள் அளித்துள்ள காற்றைப் போல சமயத்தை எல்லோருக்கும் எளிதில், தடையின்றிக் கிடைக்கச் செய்ய வேண்டும். பாரதத்தில் நாம் இத்தகைய பணியையே நடத்திவர வேண்டும். நமது சமயத்துக்குள் சிறு உட்பிரிவுகளை உண்டாக்குவதன் மூலமோ, வேறுபாடுகளைப் பற்றிச் சண்டையிடுவதன் மூலமோ அதனைச் செய்ய முடியாது. நம் அனைவருக்கும் பொதுவாக உள்ள கொள்கைகளையே நாம் மையமாகப் பிரசாரம் செய்ய வேண்டும்.
-------------------------------------------------------------------
ஒரு விதையை நிலத்தில் விதைக்கிறோம். அதற்கு உணவாக ஏராளமான தண்ணீரும், மண்ணும், காற்றும் ஏற்பாடு செய்கிறோம். விதை செடியாகி, பெரிய மரமென ஆகும்பொழுது அது மண்ணாக ஆகிறதா? இப்படி எந்த ஒன்றாகவும் அது ஆவதில்லை. தன்னுடைய இயல்பின்படி அது வளர்ந்து தனக்குத் தரப்பட்ட எல்லாவற்றிலிருந்தும் சத்துப் பொருளாக உள்ளதை ஏற்றுப் பிரம்மாண்டமான மரமாகத்தான் ஆகிறது. நீங்களும் அதுபோலவே ஆகுங்கள்.


1:30 AM Delete

Dr.Anburaj said...


திருமணத்திற்கு சாதி தடையாகக் கொள்ள மனு தடை செய்கின்றாா்.

பிறரிடமிருந்து பல விஷயங்களை நாம் கற்க வேண்டும். ஆம்: கற்க மறுப்பவன் செத்தவனாகி விட்டான் எனக் கொள்க.

“அததீத பராம் வித்யாம் ப்ரயத்னாதவராதபி

அந்த்யாதபி பரம் தர்மம் ஸ்த்ரீரத்னம் துஷ்குலாதபி “ (மனு 2.238)




”மாணிக்கத்தை நிகர்த்த பெண்மணி தாழ்ந்த ஜாதியில் தோன்றினாலும் அவளை உன் மனைவியாகக் கொள்வாயாக:

( சாதி கலப்பு திருமணத்தை சுவாமிஜி ஆதாிக்கின்றாா் பாருங்கள் )



தாழ்குடிப் பிறந்த ஞானியிடமிருந்தாவது, உயர்ந்த ஞானத்தை, அவரது திருவடிகளில் சேவை செய்து பெறுவாயாக;

சண்டாளனிடமிருந்தேனும், முக்திக்கு மார்க்கத்தை அவருக்குத் தொண்டு செய்து பெறுவாயாக” என்று நமது மனு கூறியுள்ளார்.

பிறரிடமிருந்து நல்லன அனைத்தயும் கற்போம். ஆனால் உங்களது சொந்த இயல்புக்குத் தகுந்தபடி அவற்றைக் கிரகித்துச் சேர்த்துக் கொள்ளுங்கள். அவர்களைப் போல் மாறிவிடாதீர்கள். இந்தப் பாரதீய வாழ்க்கையின் இயல்பு முறையிலிருந்து வெளியே இழுக்கப்படாமலிருங்கள்; பாரதீயர்கள் அனைவரும் வேற்று இனத்தவரைப் போல உண்டு, உடுத்து, நடந்தால், அது பாரத் நாட்டுக்கு நன்மை செய்யுமென்று ஒரு கணமும் நினைக்காதீர்கள்.

Dr.Anburaj said...

அவர்களது மார்க்க சட்டப்படி அரசியல் சட்டம் தந்த அனுமதியின்படி
அவர்களது சொத்துக்களை பிரிக்கிறார்கள் !
அவர்களது திருமணத்தை செய்கிறார்கள் !
அவர்களது விவாகரத்தை செய்கிறார்கள் !
இந்திய நீதிமன்றங்களில் ஏற்கனவே கோடிகணக்கான வழக்குகள் தேங்கிக் கிடக்கையில் அவர்களின் வழக்குகளை அவர்களே தீர்த்து கொள்கிறார்கள் !
இதனால் யாருக்கு என்ன நட்டம் ?*
-----------------------------------------------
நியாயம் கிடைக்கவில்லை என்று எந்த முஸ்லீம் பெண்ணும் நீதிமன்றத்தின் கதவுகளைத் தட்டாதது வரைக்கும் இது சாி.ஆனால் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தால் நீதிமன்றம் நியாயமான உத்தரவை வழங்கித்தான் ஆக வேண்டும்.
சௌதா என்று முஹம்மது (நபி) யின் மனைவி கிழவி ஆகி விட்டதால் அவாின் வீட்டிற்கு முஹம்மது செல்வதில்லை.மேலும் தன்னை விவாகரத்து செய்ய திட்டமிட்டுள்ளதாக கேள்விபட்ட சௌதா அம்மையாா் முஹம்மது விடம் ” நான் தங்களின் மனைவியாக நியாய தீா்ப்பு நாளில் எழுப்பப்பட வேண்டும்.எனவே என்னை விவாகரத்து செய்ய வேண்டும்.என் வீட்டிற்கு வரும் நாளை ஆயிசாவின் வீட்டிற்கு சென்று தங்கிக் கொள்ளுங்கள் ” என்று கூறினாா்.முஹம்மதுவும் ஒர கிழவியோடு ஒரு இரவை கழிக்கும் தொல்லை தீா்ந்தது குறித்து மகிழ்ந்து சம்மதித்தாா். சாகும் வரை சௌதாவை ஏறிட்டும் பாா்க்கவில்லை.
இதுபொல் இன்று நடந்தால் நீதிமன்றம் தலையிட்டுதானே ஆக வேண்டும்.