Followers

Tuesday, March 20, 2018

வெறும் ரத யாத்திரை தானே அதை ஏன்? தடுக்க வேண்டும்?


வெறும் ரத யாத்திரை தானே அதை ஏன்? தடுக்க வேண்டும்? அவர்கள் வந்துவிட்டு போகட்டுமே!

நாகூர் தர்ஹாவில் கந்தூரி எடுப்பதையும் வேளாங்கண்ணியில் தேர் இழுப்பதையும் எந்த இந்துக்கள் தடுத்து இருக்கிறார்கள் என்றும்.

ஜல்லிக்கட்டு போராட்டத்தில் இஸ்லாமியர்கள் தொழுகை நடத்த இந்துக்கள் நாங்கள் வழிவிட வில்லையா? என சங்பரிவார கும்பல் அழகாக இஸ்லாமியர்களுக்கு எதிராக இந்துக்களை திசை திருப்பும் முயற்சியில்  முயற்சி செய்கிறார்கள்.

முதலில் உத்திரபிரத்தில் இருந்து மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, கர்நாடக, கேரள வழியாக தமிழகத்தில் வந்து சேர்ந்து இருக்கிறது இந்த யாத்திரையின் நோக்கம் என்ன அதன் கோரிக்கைகள் என்ன என்பதை விளங்கி கொள்ள வேண்டும்.

1) அயோத்தியில்  பாபர் மசூதி இடிக்கப்பட்ட இடத்தில் ராமர் கோவில் கட்டப்பட வேண்டும்

2) ராமர்  இராஜியத்தை மதசார்பற்ற நாட்டில் அமைக்கப்பட வேண்டும்

3) இராமாயணத்தை பள்ளி பாட திட்டத்தில் இணைக்கப்பட வேண்டும்

4) அரசு விடுமுறையான ஞாயிறுகிழமைக்கு பதிலாக வியாழகிழமை விடுமுறை அளிக்கப்பட வேண்டும்

போன்ற கோரிக்கைகள்

இது போன்ற கோரிக்கைகள் எந்த இஸ்லாமிய கிறிஸ்தவ ஊர்வலங்களில் வைக்கப்பட்டு இருக்கிறது....

நபிகள் நாயகம் ஆட்சியை நடைமுறை படுத்த வேண்டும் என்றோ அல்லது ஏசு  அவர்களின் ஆட்சியை நடைமுறை படுத்த வேண்டும் என்றோ ஞாயிறுக்கு பதிலாக வெள்ளிக்கிழமை அன்று விடுமுறை அளிக்கப்பட வேண்டும் என்று எந்த கிறிஸ்தவ இஸ்லாமிய அமைப்புகள்  ரத யாத்திரை நடத்தி இருக்கிறது,.

பாபர் மசூதி இடிப்பு சம்பந்தப்பட்ட வழக்கு உச்சநீதிமன்றத்தில் இருக்கும்போது  தற்போது இந்த ரத யாத்திரை இந்துத்துவ அமைப்பால் நடத்தப்பட காரணம் என்ன?

பெரும்பாலான அரசு அலுவலகத்தில் இந்து சாமி படங்கள் இருக்கிறது அதை எதிர்த்து இதுவரை எந்த இஸ்லாமிய கிறிஸ்தவ அமைப்புகள் போராட்டம் செய்து இருக்கிறார்கள்?

எங்களுக்கு எதிரி இந்து சகோதரர்கள் அல்ல இந்துத்துவ பயங்கரவாதிகள் மட்டுமே

தமிழ்நாட்டில் எத்தனையோ சாமி ஊர்வலங்கள் தேர்கள் இழுக்கப்பட்டு வருகிறது அதற்கு பல இஸ்லாமியர்கள் நன் கொடை செய்கிறார்களே தவிர எதிர்ப்பு தெரிவிப்பது அல்ல.!

காரணம்  சாமி ஊர்வலங்கள் கொண்டு செல்வது இந்து சகோதரர்கள் இந்துத்துவ பயங்கரவாதிகள் அல்ல.!

ஜல்லிக்கட்டு போராட்டத்தில் இஸ்லாமியர்களுக்கு தொழுகை நடத்த வழிவிட்டது என் இந்து சகோதரர்கள் அது வழிபாடு இறைவனுக்கு வணக்கம் செலுத்துவதால்.

அதே போராட்டத்தில் இந்து சகோதரர்கள் சாமி கும்பிட்டால் அங்கு இஸ்லாமிய சகோதரர்கள் வழிவிட்டு இருப்பார்கள் காரணம் அது தான் எங்கள் தமிழ்நாட்டின் ஒற்றுமை.

முதலில் வழிபாட்டிற்கும் கலவர நோக்கத்திற்கு நடத்தப்படும் ஊர்வலத்திற்கும் வித்தியாசம் தெரிந்து கொள்ளுங்கள்...
 
A.சபியுல்லா



3 comments:

Dr.Anburaj said...


அரேபிய கடும் காடையர்கள் ஆட்சியில் முஹம்மது காபாவில்உள்ள சிலைகளை உடைத்ததுபோல் இங்குள்ள லட்சக்கணக்கான கோவில்களை அழித்து நாசம் செய்தார்கள்.பல கோவில்கள் அப்படியே பள்ளிவாசல்கள் ஆக்கப்பட்டது.உண்மை. ரணசமுத்திரம் பள்ளி வாசல் சுவனப்பிரினில் வெளியாகியிருந்தது ஒரு உதாரணம்.
அவற்றெயெல்லாம் யாரும் கேட்கவில்லை. சில வரலாற்று முக்கியத்துவம் பெற்ற இந்துகோவில்களை மீட்க முஸ்லீம் ஆட்சிக்காலத்தில் இருந்தே இயக்கங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.அதில் ஒன்றுதான் அயோத்தியில் உள்ள ஸ்ரீராமர் ஆலயம். இதை மீட்க 400 வருடங்களாக இந்துக்கள் போராடி வருகின்றார்கள்.மேற்படி ஆலயத்தை மீட்க 1947 ல் கூட போலி இந்தியன் நேருவிடம் கோரிக்கை வைத்தார்கள் .கோமாளி நேரு மறுத்து விட்டான்.சென்னை மௌண்ட ரோடு அண்ணா சாலை என பெயர் மாற்றம் செய்ததைப் போல்தான் அயோத்தியில் இந்துகோவிலை மீட்டு ஸ்ரீராமனுக்கு ஆலயம் அமைக்க வேண்டும் என்பது.முஸ்லீம்களில் பலா் இதற்கு ஆதரவு அளித்து வருகின்றார்கள்.அந்த நல்உள்ளங்களில் நல் ஆதரவோடு விரைவில் அயோத்தியில் அரேபிய அசிங்கத்தை முற்றிலும் துடைத்து விட்டு இந்து ஆலயம் எழுப்புவோம். கும்பாபிஷேகத்திற்கு அழைப்பு அனுப்புகின்றேன்.சைவ சாப்பாடு சாப்பட அவசியம் வாருங்கள்.

Dr.Anburaj said...


ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும் ஆதவன் மறைவதில்லை
ஆணைகள்யிட்டே யார் தடுத்தாலும் அலைகடல் ஒய்வதில்லை
முயல் கூட்டம் சிங்கத்தின் எதிர் நிற்பதோ அதன் முறையற்ற செயலை நாம் வரவேற்பதோ
உயிருக்கு நிகா் இந்த நாடல்லவோ அதன் உாிமைக்கு உரியவர்கள் இந்துக்கள் அல்லவோ
புயலுக்கும் நெருப்புக்கும் திரை போடவோ
மக்கள் தீா்ப்புக்கு எதிராக அரசாளவோ ?இந்துக்களின் தீர்ப்பு அயோத்தியில் ஸ்ரீராமருக்கு ஆலயம் அமைப்பது.

அரேபிய கடும் காடையர்கள் ஆட்சியில் முஹம்மது காபாவில்உள்ள சிலைகளை உடைத்ததுபோல் இங்குள்ள லட்சக்கணக்கான கோவில்களை அழித்து நாசம் செய்தார்கள்.பல கோவில்கள் அப்படியே பள்ளிவாசல்கள் ஆக்கப்பட்டது.உண்மை. ரணசமுத்திரம் பள்ளி வாசல் சுவனப்பிரினில் வெளியாகியிருந்தது ஒரு உதாரணம்.
அவற்றெயெல்லாம் யாரும் கேட்கவில்லை. சில வரலாற்று முக்கியத்துவம் பெற்ற இந்துகோவில்களை மீட்க முஸ்லீம் ஆட்சிக்காலத்தில் இருந்தே இயக்கங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.அதில் ஒன்றுதான் அயோத்தியில் உள்ள ஸ்ரீராமர் ஆலயம். இதை மீட்க 400 வருடங்களாக இந்துக்கள் போராடி வருகின்றார்கள்.மேற்படி ஆலயத்தை மீட்க 1947 ல் கூட போலி இந்தியன் நேருவிடம் கோரிக்கை வைத்தார்கள் .கோமாளி நேரு மறுத்து விட்டான்.சென்னை மௌண்ட ரோடு அண்ணா சாலை என பெயர் மாற்றம் செய்ததைப் போல்தான் அயோத்தியில் இந்துகோவிலை மீட்டு ஸ்ரீராமனுக்கு ஆலயம் அமைக்க வேண்டும் என்பது.முஸ்லீம்களில் பலா் இதற்கு ஆதரவு அளித்து வருகின்றார்கள்.அந்த நல்உள்ளங்களில் நல் ஆதரவோடு விரைவில் அயோத்தியில் அரேபிய அசிங்கத்தை முற்றிலும் துடைத்து விட்டு இந்து ஆலயம் எழுப்புவோம். கும்பாபிஷேகத்திற்கு அழைப்பு அனுப்புகின்றேன்.சைவ சாப்பாடு சாப்பட அவசியம் வாருங்கள்.

Dr.Anburaj said...

எங்களுக்கு எதிரி இந்து சகோதரர்கள் அல்ல இந்துத்துவ பயங்கரவாதிகள் மட்டுமே
---------
சுடான பனிக்கட்டி கிடையாது.எம்மதமும் சம்மதம் பேசம் இந்துமதத்தில் பயங்கரவாம் கிடையாது
---------------
குரான் ஒரு பயங்கரவாதம் போதிக்கும் ஒரு காட்டுமிராண்டித்தனமான அரேபிய புத்தகம்.
அது இருக்கும் வரை பயங்கரவாம் இருந்தே தீரும்.