Followers

Sunday, March 04, 2018

பாகிஸ்தானில் தலித் பெண் எம்பியாக தேர்வு!


பாகிஸ்தானில் தலித் பெண் எம்பியாக தேர்வு!

முஸ்லிம் நாடான பாகிஸ்தானில் வரலாற்றில் முதன்முறையாக இந்து தலித் பெண் கிருஷ்ண குமாரி கோல்ஹி நாடாளுமன்ற எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டார்.

சிந்து மாநிலத்தில் நடந்த எம்.பி தேர்தலில் பெண்களுக்கான பிரிவில் பிலாவல் புட்டோ ஜர்தாரி தலைமையிலான பாகிஸ்தான் மக்கள் கட்சி சார்பில் கிருஷ்ண குமாரி கோல்ஹி (வயது39) எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் பாகிஸ்தானில் சிறுபான்மையாக இருக்கும் இந்து மதத்தினர் சார்பில் ஒரு பெண் எம்.பி.யாக தேர்வு செய்யப்படுவது மிகப் பெரிய மைல்கல்லாகும்.

சிந்து மாநிலம், நாகர்பாரிக்கர் மாவட்டத்தில் தார் கிராமத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணகுமாரி 1979-ம் ஆண்டு பிறந்தவர். உமர்கோட் மாவட்டத்தில் குன்ரி கிராமத்தில் ஒரு நிலச்சுவான்தாரிடம் 3 ஆண்டுகள் அடிமைகளாக கிருஷ்ணகுமாரியின் பெற்றோர்களும், இவரும் பணியாற்றினர். அடிமையாக வேலை செய்து கிருண்ஷகுமாரி 9-ம் வகுப்பு வரை படித்தார்.

16-வது வயதில் லால்சந்த் என்பவரை திருமணம் செய்து கொண்டு அதன்பின், மேற்கொண்டு படிப்பை கிருஷ்ணகுமாரி தொடர்ந்து, சிந்து பல்கலைகழகத்தில் சேர்ந்து, சோஷியாலஜி பிரிவில் பட்டம் பெற்றார்.

அதன்பின் மறைந்த அதிபர் பேநசீர் பூட்டோவின் பாகிஸ்தான் மக்கள் கட்சியில் சேர்ந்து, கிருஷ்ணகுமாரி மக்கள் பணியாற்றினார். அதன்பின், முதல் முறையாக பெரானா நகரத்தின் யூனியன் கவுன்சில் தலைவராக தேர்வானார்.

தார் பகுதி அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் சமூகத்தில் நலிந்த பிரிவினருக்காகவும், தாழ்த்தப்பட்ட மக்களின் உரிமைக்காகவும் கிருஷ்ணகுமாரி பணியாற்றி வந்தார்.

அதன்பின் சமீபத்தில் நாடாளுமன்ற செனட் அவைக்கான உறுப்பினர் தேர்வில் பாகிஸ்தான் மக்கள் கட்சி சார்பில் தேர்வாகி, இப்போது நடந்த தேர்தலிலும் கிருஷ்ணகுமாரி வெற்ற பெற்றுள்ளார்.

கிருஷ்ணகுமாரியின் குடும்பம் சுதந்திரப் போராட்டத்தில் பங்கெடுத்த குடும்பமாகும். கடந்த 1857-ம் ஆண்டு சிந்து மாநிலத்தில் நாகர்பாரிக்கர் பகுதியில் கிருஷ்ணகுமாரியின் தாத்தா ரூப்லோ கோல்ஹி ஆங்கிலேயர்களுக்காகு எதிராக கடுமையாக போராட்டம் நடத்தியவர். அதன் 1858-ம் ஆண்டு ஆகஸ்ட் 22-ம் தேதி கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

பாகிஸ்தானின் செனட் அவையில் 52 உறுப்பினர்களுக்கான இடம் காலியாக உள்ளதால், அதற்கான தேர்வு நடந்தது. இதில் பஞ்சாப், சிந்து மாநிலத்தில் 12 பேர், கைபர்,பக்துன்கவா, பலுசிஸ்தான் மாநிலத்தில் 11 பேர், பழங்குடிப் பகுதியில் 4 பேர், தலைநகரில் 4பேர் என மொத்தம் 52 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். அந்த வகையில், சிந்து மாநிலத்தில் இருந்து கிருஷ்ணகுமாரி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.


தகவல் உதவி
தமிழ் இந்து நாளிதழ்
5-3-2018

நமது நாட்டில் இன்னும் இரட்டை குவளை முறை: மேல் சாதியினர் குடியிருப்புகளில் தலித்கள் செருப்பை கைகளில் தூக்கிச் செல்வது: சாமி தரிசனம் பண்ண மறுப்பது: சாதி மாறி திருமணம் செய்தால் கவுரவக் கொலை செய்வது என்று கொடுமைகள் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. பிஜேபி ஆட்சியில் இவை  இன்னும் அதிகரித்துள்ளது.

அதே நேரம் ஒரு இஸ்லாமிய நாட்டில், இஸ்லாமியர் அதிகம் உள்ள தொகுதியில் ஒரு தலித் பெண் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். வாழ்த்தி வரவேற்போம்.



1 comment:

Dr.Anburaj said...


இது உண்மையான தகவல்கள் அல்ல.இந்துக்களின் நிலை பரிதாபமானது.

ஒரு பெண்ணின் வாழ்க்கையை மட்டும் மேற்கோள் காட்டுவது நியாயமில்லை.

இந்து இளம் பெண்கள் கடத்திச் செல்லப்பட்டு கட்டாய மணம் செய்ய மதம் மாற கட்டாயப்படுத்தப்டும் சம்பவங்கள் , மற்றும் காபீர்களாக அவமாியாதை செய்யப்பட்டு குமுஸ் பெண்ணாக வாழ கட்டாயப்படுத்தப்பட்டு நாசமாகி வருகின்றார்கள்.
இந்த பெண்ணின் குடும்பம் ஒரு நிலக்கிழாரிடம் அடிமையாக இருந்தது என்று சொல்லும் தாங்கள் இந்தியாவில் தீா்வு காணப்பட்டு வரும் தீண்டாமை பழக்க வழக்கங்களை முன்உதாரணமாகக் காட்டி பாக்கிஸ்தானை புகழ்ந்து இந்தியாவை குறை சொல்லியிருப்பது பச்சை ஏமாற்று வேலை. அரேபிய அடிமைகளுக்கு பாக்கிஸ்தான்தான் மிக முக்கியம் என்பது அனைவருக்கும் தொியும்.