Followers

Thursday, March 22, 2018

முஸ்லீம் மதம் மாற முடிவு செய்து இன்று அறிவித்தனர் .



பறையர் ஜாதிவெறிக்கு எதிர்கொள்ள முடியாமல் சந்தையூர் அருந்ததியர் மக்கள் முஸ்லீம் மதம் மாற முடிவு செய்து இன்று அறிவித்தனர் .

தமிழகத்தில் உள்ள அனைத்து சேரிகளில் பறையர் ஜாதிவெறியை எதிர்கொள்ள முடியாமல் அருந்ததியர் மக்கள் போராடி வருகிறார்கள் .

இவைகளை பற்றி சிறிதும் கவலை கொள்ளாமல் ஜாதி ஒழிப்பு பேசும் அமைப்புகள் இருப்பது மிகவும் வெட்கக்கேடான அவமானம் ஆகும் .

சேரியில் உள்ள தீண்டாமைக்கு எதிராக போராடாமல் ஜாதி ஒழிப்பு என்பது நிறைவு ஆகாது என்பது பெரியாரிய இடதுசாரி அமைப்புகள் புரிந்துகொள்ளவேண்டும் .

சுமார் 55 நாளாக போராடிவரும் அருந்ததியர் மக்களுக்கு ஆதரவாக இல்லாமல் தொடர்ந்து கள்ள மௌனம் இருந்து வருவது மிகப்பெரிய வரலாற்று பிழையாகும் .

-கதிரேசன்










2 comments:

Dr.Anburaj said...

இராமனுக்கு தொண்டு செய்த பிரிட்டிஷ் மாவட்ட ஆட்சியா் கலோனெல் லையோனெல் ப்ளேஸ் (Colonel Lionel Blaze)
ராமபிரான் சீதையை மீட்க இலங்கை செல்லும் போது விபண்டக மஹரிஷியின் ஆசிரமத்தில் தங்கி அவரது உபசரிப்பை ஏற்றுக் கொண்டார். மஹரிஷியின் வேண்டுதல்படி அயோத்தி திரும்பும்போது சீதையுடன் கல்யாண கோலத்தில் காட்சி தந்தார். அந்த ஆலயமே ஏரிகாத்த ராமர் ஆலயமாக இன்று விளங்குகிறது.. அது வேறு எங்குமுள்ள, இன்றய மதுராந்தகம்.. சென்னை செங்கல்பட்டு போகும் வழியில் இன்றும் இருக்கும் ஏரி காத்த ராமர் கோவில்.. அவருக்கு ஏன் அந்த பெயர் வந்தது என்று பார்ப்போம்

கலோனெல் லையோனெல் ப்ளேஸ் (Colonel Lionel Blaze) என்னும் ஆங்கிலேய அதிகாரி 1795 – 1799 காலகட்டத்தில் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியராக இருந்தார். இந்துக்கள் என்றாலே முட்டாள்கள், படிக்காதவர்கள் என்பது அவர் எண்ணம். இந்துக்கள் சரியான காட்டுமிராண்டிகள், மூடர்கள், ஒழுங்கீனமாக நடந்து கொள்பவர்கள் என்று இந்தியர்களைப் பற்றி மிகவும் இளக்காரமாக அவர், தனது சக அதிகாரிகளிடம் கூறுவார். அது மட்டுமல்ல; சிலையை வணங்கும் இந்துக்கள் பைத்தியக்காரர்கள் என்பதும் அவர் எண்ணம்.
ஒருநாள்… அவரது ஆட்சிக்குட்பட்ட மதுராந்தகம் பகுதியில் பெரு மழை ஏற்பட்டது. மிகப் பெரிய வெள்ளம் சூழ்ந்தது. அங்குள்ள ஏரி உடைந்து விடும் சூழ்நிலை வந்தது. அதனால் அந்த ஊர்ப் பொதுமக்கள் அவரைச் சந்தித்து ஏதாவது செய்யும்படி வேண்டிக் கொண்டனர்.

அந்த அதிகாரி உடனே மக்களிடம், ”நீங்கள் கோயில் கட்டி வணங்குகிறீர்களே! ஒரு தெய்வம். அந்த தெய்வம் இந்த ஏரியின் கரையை உடைபடாமல் காக்க வேண்டியதுதானே?” என்று கேட்டார்.

உடனே அங்குள்ள பெரியவர் ஒருவர், “ஐயா, அதிலென்ன சந்தேகம்? நாங்கள் எப்போதும் வணங்கும் ஸ்ரீராமர் எங்களைக் கைவிட மாட்டார். நிச்சயம் எங்களையும், இந்த ஊரையும், ஏன் உங்களையும் கூட எல்லா துன்பங்களிலிருந்தும் காப்பார்” என்றார் நம்பிக்கையுடன்.

”ஓஹோ.. அப்படியா? ராமர் என்று ஒருவர் இருந்தால் அதை எல்லாம் செய்யட்டும் பார்ப்போம்” என்று கிண்டலாகச் சொல்லி விட்டு தனது இருப்பிடத்திற்குச் சென்று விட்டார் அந்த அதிகாரி. மக்களும் ஸ்ரீ ராம பிரானை நோக்கிப் பிரார்த்தனை செய்தவாறே கலைந்து சென்றனர்.நள்ளிரவு நேரம். மழை இன்னும் தீவிரமானது. நிச்சயம் ஏரி உடைந்து இருக்கும் என்று நினைத்தார் அதிகாரி. சரி, நிலைமை என்னவென்று பார்த்து, மேலதிகாரிக்குத் தகவல் கொடுப்போம் என்று நினைத்து, தனி ஆளாக, கையில் ஒரு குடையுடன் ஏரியை நோக்கிச் சென்றார்.

வீதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடிக் கொண்டிருந்தது. ” இந்த மழைக்கு நிச்சயம் இந்நேரம் ஏரி தூள் தூளாகி இருக்கும்” என்று நினைத்த அதிகாரி, மெல்ல சிரமப்பட்டு கரை மீது ஏறி நின்று பார்த்தார். கரு வானம் சூழ்ந்திருந்ததால் அந்த இருட்டில் அவருக்கு ஒன்றுமே தெரியவில்லை. சற்று நேரம் அப்படியே நின்று கொண்டிருந்தபோது திடீரென்று ஒரு மின்னல் வெட்டியது. பளீரென்ற அந்த மின்னல் வெளிச்சத்தில் அதிகாரி அந்த அற்புதக் காட்சியைக்கண்டார்.
.... 2

Dr.Anburaj said...

நள்ளிரவு நேரம். மழை இன்னும் தீவிரமானது. நிச்சயம் ஏரி உடைந்து இருக்கும் என்று நினைத்தார் அதிகாரி. சரி, நிலைமை என்னவென்று பார்த்து, மேலதிகாரிக்குத் தகவல் கொடுப்போம் என்று நினைத்து, தனி ஆளாக, கையில் ஒரு குடையுடன் ஏரியை நோக்கிச் சென்றார்.

வீதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடிக் கொண்டிருந்தது. ” இந்த மழைக்கு நிச்சயம் இந்நேரம் ஏரி தூள் தூளாகி இருக்கும்” என்று நினைத்த அதிகாரி, மெல்ல சிரமப்பட்டு கரை மீது ஏறி நின்று பார்த்தார். கரு வானம் சூழ்ந்திருந்ததால் அந்த இருட்டில் அவருக்கு ஒன்றுமே தெரியவில்லை. சற்று நேரம் அப்படியே நின்று கொண்டிருந்தபோது திடீரென்று ஒரு மின்னல் வெட்டியது. பளீரென்ற அந்த மின்னல் வெளிச்சத்தில் அதிகாரி அந்த அற்புதக் காட்சியைக்கண்டார்.

ஏரியின் கரை மீது உயரமான இரண்டு வாலிபர்கள் நின்று கொண்டிருந்தார்கள். அவர்கள் முகம் அந்த மின்னல் ஒளியில் மிக அழகாக ஒளிவீசிக் கொண்டிருந்தது. இருவர் கைகளிலும் வில், அம்பு வைத்திருந்தார்கள். ஏரியை உற்று நோக்கியவாறே, எதிரும் புதிருமாக அங்கும் இங்கும் நடந்து கொண்டிருந்தார்கள். ஒரு கணம், ஒரே கணம் தான் அந்தக் காட்சியைக் கண்டார். அடுத்த கணம் அவர்கள் மறைந்து விட்டார்கள்.

அவ்வளவுதான். அந்த அதிகாரியின் உடல் நடுங்கியது. உள்ளம் கலங்கியது. இந்துக்கள் மடையர்கள் இல்லை; அவர்கள் தெய்வமும் வெறும் கல் இல்லை என்று உணர்ந்து கொண்டார். அவர்கள் மத வழக்கப்படி அப்படியே கீழே விழுந்து மண்டியிட்டுப் பிரார்த்தனை செய்தார்.

மறுநாள் பொழுது புலர்ந்தது. வெள்ளம் வடிந்திருந்தது. பெருமழை பெய்த அறிகுறிகள் ஏதும் இல்லாமல் வழக்கம் போல் ஏரி அமைதியாக இருந்தது. ஏரிக்குச் சென்று அதைப் பார்த்துச் சிலிர்த்த அந்த அதிகாரி,

தான் கடவுளைக் கண்ட சம்பவத்தை மக்களுக்குச் சொன்னதுடன்

அன்று முதல் ஸ்ரீ ராமபிரானின் பக்தராகவும் ஆனார்.

ஸ்ரீ தாயார் சன்னதியை புதிதாகக் கட்டிக் கொடுத்ததுடன்,

பல திருப்பணிகளை அந்த ஆலயத்திற்குச் செய்தார்.

நடந்த சம்பவத்தை அந்த ஆலயக் கல்வேட்டிலும் பதிப்பித்தார்.

“இந்த தர்மம் கும்பினி ஜாகிர் கலெக்டர் லியோனெல் ப்ளேஸ் துரை அவர்களது” என்ற வாசகத்தை இன்றும் நாம் அந்தக் கல்வெட்டில் பார்க்க முடியும்.

ஏரி உடையாமல் காத்ததால் இவர் ’ஏரி காத்த ராமர்’ என்று அழைக்கப்படுகிறார்.

இந்த பூமியில் இருந்து, வாழ்ந்து, காட்சி தந்து, இன்றும் எங்கள் மக்களை காத்துக்கொண்டிருக்கிறாரடா இந்த தெய்வம்.. அதனால்தான் சங்க காலம் முதல் இன்று வரை தமிழர்களின் வாழ்க்கையில் அவர் ஒரு அங்கமாக இருக்கிறார் என் ராமர். மனதார ராமநாமத்தை ஜபித்துப்பார், தன்னால் உன் வாழ்க்கை மாறும்.. அவரை நிந்திக்கும் ஒவ்வொருவனும் அழிவான்.. இது சத்தியம்…

ஜெய் ஸ்ரீராம்ந