Followers

Thursday, November 01, 2018

பட்டேல் முகம் வேறு முகவரி வேறு !!?

#மௌலானா_அபுல்_கலாம்_ஆஸாத் எழுதிய '#இந்திய_விடுதலை_வெற்றி' என்கிற பிரபலமான புத்தகத்தில் உள்ள சுதந்திரம், பிரிவினைக்கு பிறகு நடந்த நிகழ்வுகளில் பட்டேலின் உண்மை முகம் காட்டும் வரலாற்றுத்துளிகள்.....
***********
"சர்தார்_பட்டேல் உள்துறை மந்திரி எனவே டெல்லி நிர்வாகம் நேரடியாக அவரது பார்வையில் இருந்தது. கொலை, தீயிடல் பட்டியல் நீண்டு கொண்டே போனது. காந்திஜி பட்டேலுக்குச் சொல்லியனுப்பி, இந்தக் கொலை வெறியைத் தடுத்து நிறுத்த அவர் செய்து கொண்டிருப்பது என்னவென்று கேட்டார், காந்திஜிக்கு கிடைக்கும் தகவல்கள் மிகைப்பானவை என்று சொல்லி, அவருக்கு நம்பிக்கையை உண்டு பண்ண சர்தார் பட்டேல் முயன்றார்.
உண்மையில் முஸ்லிம்கள் குறை கூறவோ பயப்படவோ காரணமே இல்லையென்று சர்தார் பட்டேல் கூறினார். காந்திஜியுடன் நாங்கள் மூவரும் உட்கார்ந்திருந்த ஒரு சந்தர்ப்பம்; எனக்குத் தெளிவாக நினைவுக்கு வருகிறது.
"டெல்லியிலுள்ள நிலைமையைத் தம்மால் சகித்துக் கொண்டிருக்க முடியவில்லை" என்று ஜவஹர்லால் ஆழ்ந்த வருத்தத்துடன் கூறினார்.
#பூனைகள்_நாய்களைப் போல டெல்லியில் முஸ்லிம் குடிமக்கள் கொல்லப்படுவதாகச் சொன்னார். தாம் அவர்களைக் காப்பாற்ற முடியாத நிராதரவான நிலையில் இருப்பதாகச் சொன்னார். மனசாட்சி அவரை உறுத்தியது. பயங்கரமான நிகழ்ச்சிகளைப் பற்றி முறையிட்டவர்களுக்குத் தாம் என்ன பதில் சொல்ல வேண்டுமென்று கேட்டார். நிலைமை சகிக்க முடியாததாக இருக்கிறது என்று அவர் பலதடவை சொன்னார். மனசாட்சி தம்மைச் சும்மாயிருக்க விடவில்லை என்றார்.
இவ்விஷயமாக சர்தார் பட்டேலின் பதில் எங்களுக்குப் பெரிதும் ஆச்சரியத்தை விளைவித்தது. பட்டப்பகலில் டெல்லியில் முஸ்லிம்கள் கொலை செய்யப்பட்டு வந்த அந்தக் காலத்தில் ஜவஹர்லாலின் குற்றச்சாட்டுகள் அடியோடு புரிந்து கொள்ள முடியாதவையாக இருக்கின்றன என்று அவர் அமைதியாக காந்திஜியிடம் தெரிவித்தார். இங்குமங்கும் தனித்தனியாக ஒரு சில நிகழ்ச்சிகள் இருந்திருக்கலாம், ஆனால் முஸ்லிம்களின் உயிர்களையும் சொத்துக்களையும் காப்பதற்காகச் சாத்தியமான எல்லா முயற்சிகளையும் அரசு எடுத்து வருகிறது என்றும், மேலும் செய்யக் கூடியது ஒன்றுமில்லையென்றும் தெரிவித்தார்.
தமது அரசு செய்து வருவதை பிரதமர் என்ற வகையில் ஜவஹர்லால் அங்கீகரிக்காது பேசுவது தமக்கு அதிர்ச்சியை அளிப்பதாக அவர் தெரிவித்தார்.
சில கணங்கள் ஜவஹர்லால் மெளனமாக இருந்தார். பின்னர் ஆயாசத்துடன் காந்திஜியை நோக்கினார். இவைதாம் சர்தார் பட்டேலின் கருத்துகளாயின் தாம் சொல்லக் கூடியது ஒன்றுமில்லை என்றார்.
இந்தச் சமயத்தில் நடந்த மற்றொரு நிகழ்ச்சி #சர்தார்_பட்டேலின் #மனப்போக்கைக்_காட்டுகிறது. ஒவ்வொரு நாளும் முஸ்லிம்கள் மீது நடந்து கொண்டிருந்த தாக்குதலுக்கு ஏதாவது சமாதானம் சொல்வது அவசியமென அவர் நினைத்திருக்கலாம்,
"நகரிலுள்ள முஸ்லிம் விடுதிகளிலிருந்து பயங்கரமான ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன என்ற கூற்றை அவர் கிளப்பினார். இந்துக்களையும் சீக்கியர்களையும் தாக்குவதற்காக டெல்லி முஸ்லிம்கள் ஆயுதங்களைச் சேகரித்து வைத்திருந்தனர் என்பது அவரது தகவலில் தோன்றுகிறது. இந்துகளும் சீக்கியர்களும் முதலில் தாக்கியிராவிடில் முஸ்லிம்கள் அவர்களை அழித்து விட்டிருப்பார்கள் என்றும் அதில் தொனிக்கிறது. கரோல்பாக்கிலும், சப்ஜி மண்டியிலும் இருந்து சில ஆயுதங்களைப் போலீஸார் கைப்பற்றினர். சர்தார் பட்டேலின் கட்டளைப்படி அவை அரசின் மாளிகைக்குக் கொண்டு வரப்பட்டன.
மந்திரி சபையின் அறைக்கு எதிரேயுள்ள அறையில் எங்கள் பார்வைக்கு வைக்கப்பட்டன.. நாங்கள் எங்கள் தினசரி கூட்டத்திற்கு வந்தபோது முதலில் எதிரில் இருக்கும் அறைக்குச் சென்று கைப்பற்றப்பட்ட ஆயுதங்களைப் பார்வையிடலாமென சர்தார் பட்டேல் கூறினார்.
அங்கு மேஜை மீது #துருப்பிடித்த கத்திகள், சமையலறைக் கத்திகள், பேனாக் கத்திகள், பிடியுடனும் பிடியில்லா மலும் இருந்தன. பழைய வீடுகளின் வேலிகளிலிருந்து எடுத்த இரும்புக் கம்பிகளும் இரும்பு ஈட்டிகளும் வைக்கப்பட்டிருந்தன. சில இரும்புத் தண்ணீர்க் குழாய்களும் இருந்தன. இந்துக்களையும் சீக்கியர்களையும் அழித்து விடுவதற்காக இந்த ஆயுதங்களைத்தான் டெல்லியில் முஸ்லிம்கள் சேகரித்து வைத்திருந்தனர் என்பது சர்தார் பட்டேலின் கூற்று.
கத்திகளில் ஒன்றிரண்டை லார்ட் மவுண்ட் பாட்டன் எடுத்துப் பார்த்து புன்சிரிப்புடன், "இவற்றைக் கொண்டு டெல்லி நகரைக் கைப்பற்ற முடியுமென்று எவராவது நினைத்திருந்தால் அவர் இராணுவத் தந்திரங்களைப் பற்றி அற்புதமான கருத்துகளையுடையவர்!" என்று சொன்னார்"
***********
இப்புத்தகம் காந்தியின் படுகொலை வரை சர்தார் பட்டேலின் பங்கையும், ஆர்எஸ்எஸ் சனாதன பயங்கரவாத சக்திகள் அவருக்கு உலகில்லில்லாத சிலையை நிருவி கொண்டாடும் காரணத்தையும் புரியவைக்கிறது.
இன்றைய சூழ்நிலையில் அனைவரும் அவசியம் படிக்கவேண்டிய புத்தகம்.

8 comments:

Dr.Anburaj said...

இந்துக்களும் முஸ்லீம்களும் கலவரம் செய்தாா்கள்.

அனைவருக்கும் காயம்பட்ட முஸ்லீம்கள் பற்றிதான் அக்கறை.
இந்துக்கள் குறித்து யாரும் விவாதிக்க வேண்டியதில்லை.
ஏன்.
கொசுக்கள் ஈக்கள் செத்தால் யாராவது அது குறித்து பேசுவார்களா ?

Dr.Anburaj said...

மதவெறியா்களுக்கு அவர் ஒரு சுனாமி. நினைவில் கொள்ளுங்கள்.

Dr.Anburaj said...

டெல்லியிலுள்ள நிலைமையைத் தம்மால் சகித்துக் கொண்டிருக்க முடியவில்லை" என்று ஜவஹர்லால் ஆழ்ந்த வருத்தத்துடன் கூறினார்.
-----------------------------------------------------------
கராச்சி ராவல்பிணடியில் இந்துக்கள் மீது நடக்கும் காடைத்தனங்கள் குறித்து நேரு என்பவவோ காந்தி என்பவனோ என்ன சொன்னாா்கள். பதிவு இருக்காது. கோழைகள்.
------------------------------------------------------------------------------
நேருவிற்கும் பட்டேலுக்கும் உள்ள அதிகார போட்டியை தாங்கள் பதிவு தெளிவாக காட்டுகின்றது.இந்தியா பிளக்கப்படுகின்றது. பிரவினை என்றால் என்ன தெரியாத மக்கள் ஏன் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று திகைத்தாா்கள். வன்முறை கொளுந்துவெிட்டு எரிந்தது.பெண்களும் தங்கமும் எதிரிகளின்முக்கிய குறிக்கோள். பாக்கிஸ்தானில் இந்துக்களுக்கு எதிராக நடந்த கலவரத்தில் இந்துக்களுக்கு ஆதரவாக அந்நாட்டு காவல்துறையோ ராணுவமோ முஸ்லீம் மக்களோ யாரும் இல்லை.குதறி எடுக்கப்பட்ட ஆண்களும் பெண்களும் அநாதைகளாக பராரிகளாக இந்தியா வந்தாா்கள்.பாக்கிஸ்தானில் இருந்து இந்தியா வரும் அனைத்து ரயில் பெட்டிகளிலும் இந்துக்களின் பிணங்கள் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும்.
டெல்லியிலும் முஸ்லீம்களுக்க எதிரான கலவரங்கள் நடந்தது.பட்டேல் கையில் ஒன்றும் மந்திரக்கோல் இல்லை. ஆனால் முஸ்லீம்களுக்கு போதிய பாதுகாப்பு நடவடிக்கையை அரசு எடுத்தது. ராணுவம் போலீஸ் காங்கிரஸ் தொண“டா்கள் ஆகியோர் அளித்த பாதுகாப்பை மீறி முஸ்லீம்கள் தாக்கப்பட்டாா்கள். இது இந்துக்கள் பாக்கிஸ்தானில் பட்டுக்கொண்டிருக்கும் கொடுமையோடு ஒப்பிடும்போது முஸ்லீம்கள் பட்ட துன்பம் சிறியதுதான். ஆனால் நேருவிற்கோ காந்தி கோ பாக்கிஸ்தானில் அல்லல்படும் இந்துக்கள் குறித்து எதாவது அக்கறை இருந்தது என்பதற்கு நான் படித்த அளவில் எந்த பதிவும் எனக்க கிடைக்கவில்லை. தங்கள் கண்ணில் பட்டிருந்தால் பதிவு செய்யுங்களேன். இரண்டு தலைவா்களின் யோக்கியதையை சற்று கணிப்போம்.

ASHAK SJ said...

படேல் என்ற காங்கிரஸ் பாசிஸ்டு எப்படிப்பட்டவர் என்று ஆர் எஸ் எஸ் தடையை நீக்கிய விவரம், காஸ்மீர் மற்றும் ஜுனாகத் & திருவாங்கூர் மற்றும் ஹைட்ரபாத் விஷயங்களை படித்தால் தெரியும். எப்படி இருந்தாலும் ஹைதராபாத்தை இந்தியாவோடு இணைக்க சுமார் இரண்டு லட்சம் மக்களை கொன்றுகுவித்த பாவிதான் படேல்.

Dr.Anburaj said...

படேல் என்ற காங்கிரஸ் பாசிஸ்டு எப்படிப்பட்டவர் என்று ஆர் எஸ் எஸ் தடையை நீக்கிய விவரம், காஸ்மீர் மற்றும் ஜுனாகத் & திருவாங்கூர் மற்றும் ஹைட்ரபாத் விஷயங்களை படித்தால் தெரியும். எப்படி இருந்தாலும் ஹைதராபாத்தை இந்தியாவோடு இணைக்க சுமார் இரண்டு லட்சம் மக்களை கொன்றுகுவித்த பாவிதான் படேல்
------------------------------------------------------------------------------------
எப்படி இருந்தாலும் ஹைதராபாத்தை இந்தியாவோடு இணைக்க சுமார் இரண்டு லட்சம் மக்களை கொன்றுகுவித்த பாவிதான் படேல்.
பொய்யான தகவல்.ஆதாரம் தெரிவிக்க வேண்டும். ரசாக்கர்கள் இந்துக்களை தாக்கவில்லையா ? இந்துக்களை வெளியேற்ற வேண்டும் என்று கலவரம் செய்யவில்லையா ?

ASHAK SJ said...

சமீபத்தில் நான் கண்டா புதுப்புது அர்த்தங்கள் நிகழ்சியில் சுபவீயும், பானு கோம்ஸ் என்ற பெண் ஆர் எஸ் எஸ் அடிமையும் கலந்துகொண்டார்கள், அதில் சுபவீ ஆதாரப்பூர்வமாக சொல்கிறார், படேல் என்ற பாசிஸ்டு ஆபரேஷன் போலோ வை நடத்தி ஹைதராபாத்தை இந்தியாவோடு இணைத்தார், அதில் அரசாங்க கணக்குப்படி பெரும், வரலாற்று ஆசிரியன் நூறாணி கணக்குப்படி இரண்டு லட்சம் பெரும் கொல்லப்பட்டனர், ஆனால் திருவாங்கூர் சமஸ்தானத்தின் சி.பி. இராமசாமி அய்யர் இந்தியாவோடு இணைய மறுத்தார் , ஆனால் அவருக்கு பனாரஸ் பல்கலைக்கழகத்தில் Vice Chancellor பதவி கிடைத்தது, ஆனால் ஹைதராபாத் நிசாமுக்கும் அவரின் மக்களும் கொல்லப்பட்டனர்,

The operation led to massive violence on communal lines. The Indian prime minister Jawaharlal Nehru appointed a commission known as the Sunderlal Committee. Its report, which was not released until 2013, concluded that "as a very reasonable & modest estimate...the total number of deaths in the state...somewhere between 30,000 & 40,000."[3] Other responsible observers estimated the number of deaths to be 200,000 or higher.[4]

https://en.wikipedia.org/wiki/Indian_annexation_of_Hyderabad

Read above to know more. i am not liar like you, we never do.

Dr.Anburaj said...

செத்தவா்களின் எண்ணிக்கை 20000-30000 என்றுள்ளது. இந்துக்களும் முஸ்லீம்களும் சோ்ந்தா ? முஸ“லீம்கள் மட்டுமா ? என்ற விபரம் இல்லையே.ரசாக்கர்கள் இந்துக்களுக்கு எதிராக கலவரம் செய்தார்கள்.எனவேதான் சிறந்த ஆட்சியாளரான திரு.பட்டேல் இந்திய ராணுவவீரா்களை போலீஸ் சீருடை அணிய வைத்து நிஜாமின் நாட்டிற்குள் அனுப்பி நிஜாமை பணிய வைத்தாா். ஹதராபாத் என்ற நகரம் மட்டும் தனி நாடாகவோ பாக்கிஸ்தானை சோ்ந்தோ இருக்க அனுமதிப்பது பைத்தியக்காரத்தனம் என்பதை திரு.பட்டேல் நன்கு அறிந்தவா். எனக்கு காலில் ஒரு முறை கட்டி எறபட்டது.உள்ளுரில் வைத்தியம் செய்தும் கட்டியில் இருந்து நீா் வழிந்துகொண்டுதான் இருந்தே தவிர சுகம் கிடைக்கவில்லை.நாகரகோவில் ஜெயசேகரன் மருத்துவமனைக்குச் சென்றேன். கட்டி சீழ்வைத்து விட்டது. சுகா் காரணமாக சீழை வெளியேற்ற உடலுக்கு இயலவில்லை.எனவே கட்டியை வெட்டி எடுத்து விடுவதுதான் சரியானது என்றாா்கள். நானும் சம்மதித்து காலை நீட்டினேன். மின்னல் அடிப்பதுபோல் கட்டியை அப்படியே வெட்டி எடுத்து விட்டாா்கள். துடைத்து புண்ணுக்கு கட்டு போட்டாா்கள்.காலில் இருந்த வீக்கம் போய் வலிபோய் மிகவம் நார்மலாகிவிட்டேன்.
திரு.பட்டேல் செய்தது சரியான மருத்துவம்.

ASHAK SJ said...

கட்டியை வெட்டி எடுப்பது தவறில்லை, ஆனால் ஒரு கட்டிக்கு அறுவை சிகிச்சை, மறு கட்டிக்கு ஆரத்தி , ராமசாமி அய்யர் என்பதால் பதவி பட்டம், நிஜாம் முஸ்லீம் என்பதால் ஆபரேஷன் போலோ இதுதான் பாசிஸ்டு படேலின் முகம்