Followers

Tuesday, May 05, 2015

பிஜி தீவு தமிழருக்காக பாரதியார் வடித்த கண்ணீர்....

பாரதியார் பிஜி தீவுகளில் கொடுமைகளுக்கான தமிழருக்காக கண்ணீர் வடித்தார். கூட்டம் கூட்டமாக மூட்டை முடிச்சுகளோடு குடும்பம குடும்பமாக குழந்தை குட்டிகளோடு ஆசை வார்த்தை காட்டி வெள்ளைக்காரன் கப்பலில் அடைத்துக் கொண்டு எங்கோ அழைத்துப்போய், கரும்புத் தோட்டத்திலே வைத்து சவுக்கால் அடித்து வேலை வாங்கினான். பெண்டிர் மானபங்கப்படுத்தப்பட்டு கடலில் தூக்கியெறியப்பட்டதாக செய்திகள் வந்தன: இதனை படித்த பாரதியார் துடிக்கிறார்: தமிழன் துன்புறுவதை நினைத்து அதனை கவிதையாக்கினார் பாரதியார்.

நெஞ்சங் குமுறுகிறார் – கற்பு
நீங்கிடச் செய்யுங் கொடுமையிலே யந்தப்
பஞ்சை மகளிரெல்லாம் – துன்பப்
பட்டு மடிந்து மடிந்து மடிந்தொரு
தஞ்சமு மில்லாதே – அவர்
சாகும் வழக்கத்தை இந்தக்கணத்தில்
மிஞ்ச விடலாமோ!
கரும்புத்தோட்டத்தினிலே – ஆ
கரும்புத்தோட்டத்தினிலே.....

1 comment:

Dr.Anburaj said...

சுவனப்பாியனுக்க மனக்குழப்பம்.பாரதியின் ஆாிய பற்று என்று அவரை இழித்து கட்டுரை எழுதிவிட்டு ..... இப்படி அவரைஉயா்த்தி பிடிப்பானேன்.