Followers

Friday, July 21, 2017

சூரியக் குடும்பத்தில் பூமியைத் தவிர வேறு எங்கும் உயிர்கள் இல்லை!





பூமியிலேயே வாழ்வீர்கள்! பூமியிலேயே மரணிப்பீர்கள்! அதிலிருந்தே பிறகு வெளிப் படுத்தப் படுவீர்கள்'

- குர்ஆன் 7;175

பூமியில் உங்களை நாம் வாழச் செய்திருக்கிறோம். உங்களுக்கு வசதி வாய்ப்புகளையும் ஏற்படுத்தி இருக்கிறோம். ஆனால் குறைவாகவே நன்றி செலுத்துகிறீர்கள்.

- குர்ஆன் 7;10


இந்த இரண்டு குர்ஆன் வசனங்களையும் மெய்ப்பிக்கும் விதமாக இன்று தமிழ் இந்துவில் ஒரு கட்டுரை வந்துள்ளது. குர்ஆன் இறை வேதம்தான் என்பதற்கு இந்த கட்டுரையும் ஒரு அத்தாட்சியாக உள்ளது. கட்டுரையை அவசியம் படித்துப் பாருங்கள்.

-----------------------------------------

சூரியக் குடும்பத்தில் பூமியைத் தவிர வேறு எங்கும் உயிர்கள் இல்லை!

குளிர் காலத்தில் காட்டுப் பகுதியில் இரவில் குளிர் காய்வதற்காக சுள்ளிகளைப் போட்டு தீ மூட்டுவர். அதைச் சுற்றிலும் கும்பலாகப் பலர் உட்கார்ந்திருப்பர். மிக அருகில் உட்கார்ந்தால் சூடு அதிகம் தாக்கும் என்று அவர்களுக்குத் தெரியும். மிகவும் தள்ளி உட்கார்ந்தால் இதமான வெப்பம் கிடைக்காது. எனவே, இதமான வெப்பம் கிடைக்கின்ற அளவுக்கு உகந்த தூரத்தில் உட்கார்ந்திருப்பார்கள். பூமியும் சரி, ‘குளிர் காய்வதற்கு’ ஏற்ப சூரியனிலிருந்து உகந்த தூரத்தில் அமைந்திருக்கிறது. ஆனால், புதனும் வெள்ளியும் சூரியனுக்கு அருகில் உள்ளன. செவ்வாய் கிரகம் சற்றே தள்ளி அமைந்துள்ளது.

முதலில் நாம் சூரிய மண்டல அமைப்பு பற்றிக் கவனிப்பது நல்லது. ஒரு காகிதத்தில் ஒரு புள்ளி வையுங்கள். அதுதான் சூரியன். அந்த புள்ளியைச் சுற்றி நெருக்கமாக ஒரு சிறிய வட்டம் போடுங்கள். புதன் கிரகம் அந்த வட்டத்தில் அமைந்தபடியாக சூரியனைச் சுற்றுகிறது. முதல் வட்டத்தைச் சுற்றி இன்னொரு வட்டம் போடுங்கள். அதுதான் வெள்ளி கிரகத்தின் சுற்றுப்பாதை. அதைச் சுற்றி இன்னொரு வட்டம் போடுங்கள். அந்த வட்டத்தில்தான் பூமி அமைந்துள்ளது. நான்காவது வட்டத்தில் செவ்வாய் கிரகம்.

பனிக்கட்டி, பாறை: கோள்கள்

மேலும் வட்டங்களைப் போடலாம். ஐந்து முதல் ஒன்பது வரையிலான வட்டங்களில்தான் வியாழன், சனி, யுரேனஸ், நெப்டியூன், புளூட்டோ ஆகியவை அமைந்துள்ளன. இந்த ஐந்துமே பனிக்கட்டி உருண்டைகள். இவை எல்லாமே சூரியனிலிருந்து மிகத் தொலைவில் இருப்பவை. பூமியிலிருந்து பார்த்தால் சூரியன் 25 பைசா அளவில் தெரிவதாக வைத்துக்கொண்டால், வியாழன் கிரகத்திலிருந்து பார்க்கும்போது சூரியன் மிளகு அளவில்தான் தெரியும். வியாழனில் வெயில் சிறிதும் உறைக்காது. எனவேதான் வியாழனும் அதற்கு அப்பால் உள்ள கிரகங்களும் பனிக்கட்டி உருண்டைகளாக உள்ளன.

மாறாக புதன், வெள்ளி, பூமி, செவ்வாய் ஆகியவற்றைப் பாறைக் கோள்கள் என்று சொல்வர். அதாவது, இந்த நான்கிலும் தரை உண்டு. மண் உண்டு. மலைகள், பள்ளத்தாக்குகள் ஆகியனவும் உண்டு.

பூமியில் உயிரினம் தோன்றுவதற்கு உகந்த மற்ற சூழ்நிலைகளையும் கவனிப்போம். முதலாவதாக பூமியில் போதுமான அடர்த்தி கொண்ட காற்று மண்டலம் உள்ளது. இரண்டாவதாக இந்தக் காற்று மண்டலம்தான் சூரியனிலிருந்து வருகின்ற ஆபத்தான எக்ஸ் கதிர்களைத் தடுத்து உயிரினங்களைக் காப்பாற்றுகிறது. உயிரினத்துக்குத் தீங்கு விளைவிக்கக்கூடிய சில வகை புற ஊதாக் கதிர்களையும் காற்று மண்டலம் தடுக்கிறது. விண்வெளியிலிருந்து வருகின்ற கதிர்வீச்சிலிருந்தும் நம்மை இந்தக் காற்று மண்டலம் காக்கிறது.

நீர்சூழ் உலகு!

மூன்றாவதாக பூமியில் உயிரினத்துக்குத் தேவையான தண்ணீர் இருக்கிறது. பூமியின் மேற்பரப்பில் 71 சதவிகிதம் கடல்களால் ஆனது. தண்ணீரானது துருவப் பகுதிகளில் பனிக்கட்டி வடிவில் உள்ளது. காற்றில் ஆவி வடிவில் உள்ளது. பூமியின் நிலப் பகுதிகளில் ஆறுகளாக ஓடுகிறது. பூமி ஒன்றில்தான் நீர் வடிவிலும் பனிக்கட்டி வடிவிலும் ஆவி வடிவிலும் தண்ணீர் இருக்கிறது.

நான்காவது சாதக அம்சம் பூமியின் பருமன். பூமி தகுந்த பருமன் கொண்டதாக உள்ளதால், அதற்குச் சரியான ஈர்ப்பு சக்தி உள்ளது. அவ்விதம் ஈர்ப்பு சக்தி உள்ளதால்தான் பூமி தனது காற்று மண்டலத்தை இழக்காமல் கெட்டியாகப் பிடித்து வைத்துக்கொண்டுள்ளது.

ஐந்தாவது அம்சம், பூமியின் சுழற்சி வேகம். பூமி தனது அச்சில் உகந்த வேகத்தில் சுற்றுவதால்தான் பூமியில் பொதுவில் கடும் குளிரோ கடும் வெப்பமோ இல்லை. இல்லத்தரசிகள் நெருப்பில் அல்லது தணலில் அப்பளம் சுடும்போது அப்பளம் தீய்ந்து விடாமல் இருக்க அதைத் தக்கபடி திருப்பிப் போடுவார்கள். பூமியின் சுழற்சி வேகம் அந்த அளவில் உள்ளது. இத்துடன் ஒப்பிட்டால் சந்திரனில் 14 நாள் பகல். 14 நாள் இரவு.

ஆறாவது அம்சம், பூமியின் காந்தப் புலம். சூரியனிலிருந்து வரும் ஆபத்தான துகள்கள் பூமியைத் தாக்காதபடி இந்தக் காந்தப் புலம் தடுக்கிறது. மேலே கூறிய அம்சங்கள் அனைத்தும் சேர்ந்து பூமியில் உயிரினம் தோன்றித் தழைக்க உதவியுள்ளன.

வியாழன் உள்ளிட்ட ஐந்து பனிக்கட்டி உருண்டைகளும் உயிரினத்துக்கு உகந்த சூழல்களைக் கொண்டவை அல்ல. மீதியுள்ள புதன், வெள்ளி, செவ்வாய் ஆகிய கிரகங்களில் உள்ள நிலைமைகளைக் கவனிப்போம்.

சாத்தியமற்ற கிரகங்கள்

புதன் கிரகம் சூரியனுக்கு மிக அருகில் அமைந்துள்ளது. எனவே, பகல் வேளையில் அதிகபட்ச வெப்பம் 430 டிகிரி செல்சியஸ். இரவாக உள்ள பகுதியில் குளிர் மைனஸ் 170 டிகிரி செல்சியஸ். புதன் கிரகத்தில் உயிரினம் கிடையாது என்பதில் வியப்பில்லை. தவிர, புதன் கிரகத்தில் அனேகமாகக் காற்று மண்டலம் கிடையாது.

வெள்ளி கிரகத்துக்கு ஜோசிய சாஸ்திரத்தில் சுக்கிரன் என்று பெயர். சுக்கிரன் என்றாலே சுக்கிர தசைதான் நினைவுக்கு வரும். ஆனால், வெள்ளி கிரகத்துக்கு சுக்கிர தசை அடிக்கவில்லை. மாறாக, நிரந்தர ‘சனி தசை’தான். வெள்ளி கிரகத்துக்குக் கடந்த காலத்தில் ரஷ்யாவும் அமெரிக்காவும் அனுப்பிய ஆளில்லா விண்கலங்கள் ‘அமுக்குப் பிசாசு’ அழுத்தியதுபோல நொறுங்கின. வெள்ளி கிரகத்தில் நிலவும் பயங்கரக் காற்றழுத்தமே அதற்குக் காரணம். அது போதாதென வெள்ளியில் எந்த இடமானாலும் வெப்பம் 460 டிகிரி செல்சியஸ் அளவில் உள்ளது. வெள்ளி கிரகம் ஒரு அக்கினிக் குண்டம். இது போதாதென வானிலிருந்து அமில மழை பெய்கிறது.

செவ்வாய் தேறுமா?

சூரியனிலிருந்து தள்ளி நான்காவதாக அமைந்த செவ்வாயில் வெயில் தாக்கம் குறைவு. மெல்லிய காற்று மண்டலம் உள்ளது. தண்ணீர் கிடையாது. வடிவில் பூமியை விடச் சிறியது என்பதால், காற்று மண்டலத்தை இழுத்துப் பிடித்து வைத்துக்கொள்ள இயலவில்லை. இன்னமும் அது தனது காற்று மண்டலத்தைக் கொஞ்சம் கொஞ்சமாக இழந்துவருகிறது. செவ்வாயின் துருவப் பகுதியில் பனிக்கட்டிகள் உண்டு என்றாலும் காற்று மண்டல அடர்த்தி இன்மை காரணமாக செவ்வாயில் பனிக்கட்டிகள் உருகி நீராக மாறாமல் நேரடியாக ஆவியாக மாறுகின்றன. சூரிய மண்டலத்தில் பூமிக்கு வெளியே குறைந்தது நுண்ணுயிர்கள் இருக்க வாய்ப்பு கொண்ட ஒரே கிரகம் செவ்வாய்தான். ஆனால், இதுவரை தேடியதில் செவ்வாயில் நுண்ணுயிர்கள்கூட இல்லை.

ஆக, சூரிய மண்டலத்தில் உள்ள கிரகங்களில் பூமியைத் தவிர, வேறு எந்தக் கிரகத்திலும் உயிரினம் கிடையாது.

பூமி பெற்றுள்ள விசேஷ சாதகங்களால் பூமியில் உயிரினம் தோன்றியதாகக் கூறலாம். அப்படியானால் சூரிய மண்டலத்துக்கு அப்பால் எங்கோ இருக்கின்ற ஒரு நட்சத்திரத்தைச் சுற்றுகின்ற ஒரு கிரகம் பூமி போன்று அதே சாதக நிலைமைகளைப் பெற்றிருப்பதாக வைத்துக் கொள்வோம். அப்படியான கிரகத்தில் உயிரினம் இருக்குமா? அப்படியும் சொல்லிவிட முடியாது.

- என். ராமதுரை, மூத்த எழுத்தாளர்,.....

தகவல் உதவி
தமிழ் இந்து நாளிதழ்
19-11-2015...

10 comments:

Dr.Anburaj said...


சுாிய குடும்பத்தை தாண்டியும் கணக்கில் அடங்கார கிரகங்கள் நடசத்திரங்கள் உள்ளன. அவற்றை குறித்து மனிதனுக்கு எந்த அறிவும் கிடையாது.அங்கு உயாினங்கள் இல்லை என முடிவு செய்யப்படவில்லை. எனவே இந்த முடிவு அவசரமானது. காயிலே பழுத்த முடிவு. குறை பிரசவம். தவறு.
குரானை எழுதியவா்கள் சுாியகுடும்பகிரகங்கள் குறித்து எந்த அறிவும் இல்லாதவா்கள். மணணில் பிறந்த உயிா்கள் மண்ணில் அடக்கமாகின்றன என்ற கருத்து கூட இந்தியாவில் உண்டு.
சுவனப்பாியன் தங்களின் கருத்தும்,குரானின் கருத்தும் அறிவியல் அல்ல.

UNMAIKAL said...

1. சூரியன் புணருவான் பிள்ளையையும் பெற்றுத் தள்ளுவான்.
இந்துவாக இருந்தால் இதை ஏற்றுக்கொண்டே ஆக வேண்டும்.

CLICK >>> சூரியன் புணருவான் பிள்ளையையும் பெற்றுத் தள்ளுவான்.TO READ

2. சந்திரன் உருவான மகா அசிங்கமானப் புளுகு படியுங்களேன்.
.
இந்துவாக இருந்தால் இதை ஏற்றுக்கொண்டே ஆக வேண்டும்

CLICK >>> சந்திரன் உருவான மகா அசிங்கமானப் புளுகு <<< TO READ
.

Dr.Anburaj said...

அறிவியல் என்றால் என்ன என்பது தொியாத மடையன் நீ. பாமர முஸ்லீம்களை ஏமாற்றிக் ககொண்டிருக்கின்றாய் , முகம்மது அலி ஜின்னாவை காணவில்லையே மையமாகிபோய்விட்டானா ? தாய் நாட்டை கேவலப்படுத்த எப்படியெல்லாம் துடிகிக்றீா்கள் வஹாபி வல் அரக்கா்களே ?

ASHAK SJ said...

#குரானை எழுதியவா்கள் சுாியகுடும்பகிரகங்கள் குறித்து எந்த அறிவும் இல்லாதவா்கள்# சிவலிங்கம் கதையை கொஞ்சம் விளக்கவும்

Dr.Anburaj said...


ஆ சீக்கு உனக்கு மனதிற்கும் ஏற்கனவே சீக்கு .குச்சி மிட்டாய் வாங்கிச் சாப்பிட்டு விட்டு தொடடீலில் படுத்து தூங்கு. புராணக்கதைகள் பின்னுக்கு போய்க் கொண்டிருக்கின்றன. நீ ஏன் அதை தூக்கிப் பிடிக்கின்றாய் ?

இந்துக்களைள காபீா்கள் என்று இழிவாய் பேசும் சாதித்திமிா் உன்னை வாட்டி வதைக்கின்றது?ஆதாம் ஏவாள் அம்மணகுண்டியாக அல்லா எனடா படைத்தான் ? பதில்சொல்ல வக்கத்த அறிவாளி நீ.
.

Dr.Anburaj said...


சிவலிங்கம் குறித்து அறிந்து கொள்ள திருமந்திரம் என்ற அற்புதமான தத்துவ ஞான தமிழ களஞசியத்தைப்படி.

அதுதான் உண்மை.

அரேபிய அடிமைகளுக்கு திருமந்திரம் படிக்க மனம் வருமா ? படித்துபாா். குரான் ஒரு வெத்து வேட்டு என்பதை அறிந்து கொள்வாய்.

Dr.Anburaj said...

யூதர்கள் மீது குரானுக்கு அல்லது அல்லாவுக்கு அல்லது முகம்மதுவுக்கு ஏன் இந்த வெறுப்பு?

பலஸ்தீனியர்கள் மீது தொடுக்கப்படும் பயங்கரவாத தாக்குதல்களையும், அவர்களின் நாட்டை ரவுடித்தனமாக பறித்துக் கொண்டதையும் அறிந்தவர்கள் அனைவரும் இஸ்ரேல் மீது, யூதர்கள் மீது கொடும் வெறுப்பு கொண்டிருப்பார்கள். இது 70 ஆண்டு கால வரலாறு. ஹிட்லர் யுதர்களை விரட்டி விரட்டி கொன்றொழித்த கதையை மட்டும் அறிந்தவர்கள் யூதர்கள் மீது பரிதாபம் கொண்டிருப்பார்கள். இது நூற்றாண்டு கால வரலாறு. ஆனால் குரான் 1400 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே யூதர்கள் மீது மிகக் கடுமையான வெறுப்பை உமிழ்கிறதே இதன் காரணம் என்ன? அவர்கள் நபிமார்களை கொலை செய்தார்கள், அல்லாவின் கட்டளைக்கு மாறு செய்தார்கள் என்பதான பதில்கள் கூறப்படுவது உண்மையானால், யூதர்களைத் தவிர பிற மக்கள் அனைவரும் நபிமார்களை ஏற்றுக் கொண்டார்களா? ஒவ்வொரு நபியும் எதிர்க்கப்பட்டே இருக்கிறார் எனும் போது, பிற மக்கள் மீது இல்லாமல், யூதர்கள் மீது மட்டும் ஏன் இவ்வளவு வெறுப்பு ஏன் உமிழப்படுகிறது? சுருக்கமாகப் பார்க்கலாம்.
யூதம், கிருஸ்தவம், இஸ்லாம் ஆகிய மூன்று மதங்களும் அப்ரஹாமிய மதங்கள் என்று அழைக்கப்படுகின்றன. இதில் கிருஸ்தவம் யூத மதத்தின் வழி வந்தது. அப்ரஹாம் என்றழைக்கப்படும் இப்ராஹிமுக்கு இரண்டு மகன்கள். இஸ்மாயில், இஸ்ஹாக் (இஸ்மவேல், ஈசாக்) இப்ராஹிமுக்கும் அவர் மனைவி சாரா வுக்கும் பிறந்தவர் இஸ்ஹாக். இப்ராஹிமுக்கும் சாராளின் வேலைக்காரி ஆகார் க்கும் பிறந்தவர் இஸ்மாயில். இஸ்ஹாக்கின் வழிவந்தவர்கள் யூதர்கள் என்றும், இஸ்மாயிலின் வழி வந்தவர்கள் முஸ்லீம்கள் என்றும் கூறப்படுகிறார்கள். இந்த இரண்டு மகன்களில் அல்லாவினால் சிறப்புக்குறியவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் யார் என்பது தான் இஸ்லாமியர்களுக்கும் யூதர்களுக்கும் உள்ள முரண்பாடு. இதில் பெரும் குழப்பமும் முரண்பாடுகளும் இருக்கின்றன.

யூதமதமும், கிருஸ்தவ மதமும் இஸ்ஹாக் தான் அந்த சிறப்புக்குறியவர் என்கின்றன.

இஸ்லாமோ இஸ்மாயில் தான் அந்த சிறப்புக்குறியவர் என்கின்றது. இந்த பங்காளிச் சண்டை

தான், தெளிவாகச் சொன்னால்

மனைவிக்குப் பிறந்த மகனா?

வேலைக்காரிக்குப் பிறந்த மகனா?

எனும் கேள்வியில் இருக்கும் கோபம் தான் முகம்மதின் குரானில் யூத வெறுப்பாக வழிகிறது.

குரானில், இஸ்லாத்தில் இருக்கும் யூத வெறுப்பு என்பது அறிவியல் வழியிலோ, சமூக

உணர்விலோ வந்தது அல்ல என்பது சரியான திசையில் சிந்திப்போருக்கு புரியும்.

Dr.Anburaj said...

முதல் உலகப் போருக்கு முந்திய காலங்களில் பலஸ்தீனம் ஒட்டாமன் பேரரசின் அதாவது உஸ்மானிய பேரரசின் கீழ் இருந்தது. அன்றைய பலஸ்தீனம் என்பது இன்றைய இஸ்ரேல், பலஸ்தீனம், சிரியா, ஜோர்டான் ஆகிய பகுதிகளை உள்ளடக்கியது. அன்றைய பலஸ்தீன மக்கட் தொகையில் 4 விழுக்காடு யூதர்கள். உணர்வு கும்பல் பிம்பமாக்குவது போல் யூதர்கள் இருந்திராத இடத்தில் புதிதாக குடியேறியவர்களல்லர். அவர்கள் அந்தப் பகுதியின் வாழ்ந்த குடிகள் என்பதற்கு, முகம்மதின் காலகட்டத்திற்கு முன்பிருந்தே வாழ்ந்து வருபவர்கள் என்பதற்கு குரான், ஹதீஸ்களில் ஆதாரம் இருக்கிறது. தவிரவும், பலஸ்தீனப் பகுதி என்பது யூத கிருஸ்தவ இஸ்லாமிய மதங்கள் தங்கள் புனித பூமியாக சொந்தம் கொண்டாடும் இடமாகவும் இருந்து வந்திருக்கிறது.

யூதர்கள் ஒரே இனமல்ல, ஒரே மதத்தவர்கள் அவ்வளவு தான். இன்றும் கூட இஸ்ரேலில் ஐரோப்பிய யூதர்களுக்கும், அமெரிக்க யூதர்களுக்கும் இடையே முரண்பாடுகள் நிலவி வருகின்றன. சகோதர மதங்கள், அப்ரஹாமிய மதங்கள் என அழைக்கப்பட்டாலும் கிருஸ்தவ, இஸ்லாமிய வேதங்கள் யூதர்களை கடுமையாகச் சாடுகின்றன. விரோதிகள் என்கின்றன. இதனால் உலகம் முழுவதும் யூதர்கள் ஒடுக்குதல்களைச் சந்தித்தார்கள். இது தான் யூதநாடு எனும் கருத்தோட்டத்தை ஏற்படுத்தியது. 1897 ஆகஸ்ட் 29ம் தேதி சுவிட்சர்லாந்தின் பாஸில் எனும் நகரத்தில் முதல் சியோனிச மாநாட்டை ஹெர்செல் என்பவர் கூட்டியிருந்தார். (சியோனிசம் என்றால் ஜெருசலத்திலுள்ள புனித சியோன் மலைக்கு செல்ல விரும்புபவர்கள் என்று பொருள்) இந்த மாநாட்டில் தான் யூதர்களுக்கென்று பலஸ்தீனப் பகுதியில் ஒரு நாடு வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

முதல் நடவடிக்கையாக ஹெர்செல் உலகெங்குமுள்ள யூதர்களிடமிருந்து நிதியை திரட்டத் தொடங்கினார். ஆனால் இது எதிர்பார்த்த அளவுக்கு வெற்றியைத் தரவில்லை. எனவே, 1901 மே 17ம் தேதி உஸ்மானியப் பேரரசின் மன்னரான இரண்டாம் அப்துல் ஹமீதைச் சந்திக்கிறார். உலகெங்கிலுமுள்ள அரசுகளில் செல்வாக்காக இருக்கும் யூதர்களின் உதவியால் உஸ்மானியப் பேரரசின் பொருளாதார நெருக்கடிகளை தீர்க்க உதவமுடியும் என்றும், அதற்குப் பகரமாக பலஸ்தீனப் பகுதியில் யூதர்களை குடியேற்ற உதவ வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கிறார். இதை ஏற்றுக் கொள்ளும் அப்துல் ஹமீது இரண்டு நிபந்தனைகளை வைக்கிறார்.

1. அவ்வாறு குடியேறும் யூதர்கள் துருக்கிய குடிமக்களாக இருக்க வேண்டும் என்றும் (உஸ்மானியப் பேரரசு துருக்கியர்களால் தான் இன்றைய இஸ்தான்புல் பகுதியிலிருந்து ஆளப்பட்டுக் கொண்டிருந்தது)
2. ஒரே இடத்தில் குவியலாக குடியேறாமல் வெவ்வேறு இடங்களில் பரவலாக குடியேற வேண்டும்.

என்பது தான் அந்த இரண்டு நிபந்தனைகள். இதே போன்று குடியேற்றம் குறித்த ஒப்பந்தம் ஒன்று சிரியப் பகுதியின் ஆளுனருடனும் செய்து கொள்ளப்படுகிறது. இந்த அடிப்படையில் துருக்கியிடமிருந்து பெறப்பட்ட நிலத்திலிருந்து 1910ல் டெல்அவிவ் நகரம் உருவாக்கப்படுகிறது. தொடர்ந்து பல நாடுகளுடன் ஒப்பந்தம் போடப்படுகிறது. முக்கியமாக பிரிட்டனுடனும், ரஷ்யாவுடனும். அனைத்து யூதர்களையும் அழைத்துக் கொள்வதாக பிரிட்டனுடனும், திரண்டு வரும் கம்யூனிசப் புரட்சியில் இருந்து யூதர்களை விலக்கி வைக்கிறேன் என்று ஜார் மன்னரிடமும் பேசி ஆதரவு திரட்டப்படுகிறது. இதன் பிறகு தான், உணர்வு கும்பல் குறிப்பிடும் யூத தேசிய நிறுவனம் தொடங்கப்பட்டு தோராயமாக ஒரு லட்சத்து இருபதாயிரம் யூதர்கள் பலஸ்தீனப் பகுதியில் குடியேற்றப்படுகிறார்கள். இதன் பிறகு அரேபியர்கள் யூதக் குடியேற்றத்தை எதிர்த்து அரசியல் நடவடிக்கைகளை தொடங்குகிறார்கள். இதனால் 1914ல் உஸ்மானியப் பேரரசு யூதக் குடியேற்றத்திற்கு தடை விதிக்கிறது.

Dr.Anburaj said...

இந்த நிலையில் தான் முதல் உலகப் போர் வருகிறது. முதல் உலகப் போரில் உஸ்மானியப் பேரரசு ஜெர்மனியுடன் சேர்ந்து பிரிட்டனை எதிர்க்கிறது. யூதர்கள் பிரிட்டனுக்கு ஆதரவளிக்கிறார்கள். அரசுக்கு எதிராக குழப்பத்தை ஏற்படுத்த உஸ்மானியப் பேரரசுக்குள் லாரன்ஸ் என்பவரை அனுப்பி வைக்கிறார் பிரிட்டனின் இராணுவ அமைச்சராக இருந்த வின்ஸ்டன் சர்ச்சில். (இந்தக் கதை தான் சிலபல திரித்தல்களுடன் லாரன்ஸ் ஆப் தி அரேபியா எனும் பெயரில் திரைப்படமாக வெளிவந்தது) யூதர்களிடமும், அரசுக்கு எதிராக கலகம் செய்த அராபியர்களிடமும் முதல் உலகப் போரில் வெற்றி பெற்றால் தனித்தனி நாடுகளாக யூதர்களுக்கும் அராபியர்களுக்கும் தருவதாக இருவரிடமும் இரகசியமாக வாக்குறுதி வழங்குகிறது பிரிட்டன். முதல் உலகப் போரில் வெற்றி பெறவுடன் உஸ்மானியப் பேரரசின் கீழ் இருந்த அரேபியப் பகுதிகளை இணைந்து போரிட்ட பிரிட்டனும் பிரான்ஸும் பங்கு வைத்துக் கொண்டன. அதன்படி சிரியப் பகுதி பிரன்சிடமும், பலஸ்தீனப் பகுதி பிரிட்டனிடமும் வருகின்றன. ஆனால் வாக்குறுதி அளித்திருந்தபடி யூதர்களுக்கும், அராபியர்களுக்கும் தனித்தனியே நாடு பிரித்துக் கொடுக்காமல் டிமிக்கி கொடுத்தது பிரிட்டன். மறுபக்கம் நின்று போயிருந்த குடியேற்றங்களை யூதர்கள் மீண்டும் தொடங்கினார்கள். இதனால் யூதர்களுக்கும் அராபியர்களுக்கும் இடையே கலகங்கள் மூண்டன. இது 1936ல் பெரிய அளவில் வெடித்தது. அராபியர்களை கடுமையாக ஒடுக்கி கலவரங்களை அடக்கிய பிரிட்டன். நிலமையை சமாளிக்க பீல் கமிட்டியை உருவாக்கியது. 1937 ல் பீல் கமிட்டி பிரிட்டன் வசமிருந்த பலஸ்தீனப் பகுதியை மூன்றாகப் பிரித்து அராபியப் பகுதி அராபியர்கள் கட்டுப்பாட்டிலும், யூதப் பகுதி யூதர்கள் கட்டுப்பாட்டிலும், இரண்டும் அல்லாத ஜெருசலம் பகுதி சர்வதேச கட்டுப்பாட்டிலும் இருக்கும் எனப் பரிந்துரைத்தது. இந்தத் தீர்வை யாரும் ஏற்கவில்லை என்பதால் பீல் கமிட்டியின் பரிந்துரைகள் கைவிடப்பட்டன.

Dr.Anburaj said...

1939 ல் பிரிட்டனுக்கும் ஜெர்மனிக்கும் ஏற்பட்ட போரில் சூயஸ் கால்வாயின் பயன்பாடு தனக்கு வேண்டும் எனக் கருதிய பிரிட்டன். அதற்காக அராபியர்களிடம் சமாதானம் பேசியது. யூதக் குடியேற்றம் படிப்படியாகக் குறைக்கப்பட்டு ஐந்து ஆண்டுகளுக்குள் முற்றிலும் நிறுத்தப்படும் என வாக்குறுதி அளித்தது. இதனால் இரண்டாம் உலகப் போரில் அராபியர்கள் பிரிட்டனுக்கு ஆதரவாகவும், யூதர்கள் எதிராகவும் ஆனார்கள். யூதநாடு அடைந்தே தீர்வது எனும் முடிவில் ஸ்டெர்ண், இர்குன் எனும் இரண்டு பயங்கரவாதக் குழுக்கள் ஏற்படுத்தப்பட்டன. இவை குண்டு வைப்பது உள்ளிட்ட பல பயங்கரவாத செயல்களை பிரிட்டனுக்கு எதிராக செய்தன. 1945 ல் இரண்டாம் உலகப் போர் முடிவுக்கு வந்ததைத் தொடர்ந்து பிரிட்டன் பல நெருக்கடிகளைச் சந்தித்தது. அவைகளைத் தீர்க்க தன்னுடைய காலனி நாடுகளில் விடுதலை என்ற பெயரில் தனக்கு சாதகமான ஆட்சி மாற்றங்களை ஏற்படுத்தியது. 1946 ஜூலை 22 ம் தேதி யூத பயங்கரவாதக் குழுக்கள் ஜெருசலத்திலிருந்த பிரிட்டன் இராணுவ தலைமையகமான கிங் டேவிட் முகாமை தாக்கி அழித்தன. இதனால் வேறு வழியின்றி 1947 பிப்ரவரி 17ம் தேதி தன்னிடமிருந்த பலஸ்தீனப் பகுதியை ஐ.நா வின் மேற்பார்வையில் விட்டு விட்டு வெளியேறுவதாக அறிவித்தது.

ஐ.நா இந்தப் பிரச்சனையைச் சமாளிக்க ஒரு குழுவை அமைத்தது. இதை அராபியர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை, யூதர்கள் ஏற்றுக் கொண்டார்கள். 1947 ஆகஸ்ட் 31ம் தேதி ஐ.நா குழு தன் தீர்ப்பை வெளியிட்டது. அதன்படி பலஸ்தீனப் பகுதி இரண்டாகப் பிரிக்கப்பட்டு அராபியர்களுக்கு ஒரு நாடாகவும், யூதர்களுக்கு ஒரு நாடாகவும் அளிக்கப்படும். புனிதத்தலங்களான பெத்லஹேமும், ஜெருசலமும் ஐ.நா வின் கட்டுப்பாட்டில் இருக்கும். அராபியர்கள் இதனை நிராகரித்தார்கள். சூழ இருக்கும் இஸ்லாமிய நாடுகள் தங்களுக்கு உதவி செய்யும், யூதர்களை விரட்டி மொத்த நாட்டையும் தம்மிடம் அளிக்கும் என அராபியர்கள் நம்பி ஏமாந்து போனார்கள். 1948 மே14ம் தேதி இஸ்ரேலை சுதந்திர நாடாக யூத பயங்கரவாதக் குழு ஒன்றின் தலைவராக இருந்த பென் குரியன் அறிவித்தார்.

சுற்றி இருந்த அரபிய நாடுகள் சக அரபிகளான பலஸ்தீனியர்களுக்கு உதவினவா? அல்லது அவைகளுக்கென்று தனி நோக்கங்கள் இருந்தனவா? இஸ்ரேல் தனி நாடாக அறிவித்துக் கொண்ட உடனேயே சுற்றி இருந்த அரேபிய நாடுகள் இஸ்ரேல் மீது போர் தொடுத்தன. ஒரு மாதம் நடந்த போரில் இஸ்ரேல் தோற்று வீழும் நிலை வந்தவுடன் ஐ.நா தலையிட்டு போர் நிறுத்தத்துக்கு ஏற்பாடு செய்தது. போர் நிறுத்தம் ஏற்பட்டது இஸ்ரேல் பாதுகாக்கப்பட்டது.

ஆனால் பரிதாபம்! பலஸ்தீனர்களைச் சொல்லிக் கொண்டு போரில் குதித்த நாடுகள் போரில் பிடித்த பகுதிகளை தங்கள் நாட்டுடன் இணைத்துக் கொண்டனவே தவிர

அவைகளை இணைத்து பலஸ்தீனம் எனும் தனி நாடு அமைக்க எந்த முயற்சியையும் எடுக்கவில்லை.

போர் நிறுத்ததத்தை பயன்படுத்திக் கொண்டு இஸ்ரேல் தன்னை நிலைப்படுத்திக் கொண்டது. அமெரிக்கா இஸ்ரேலுக்கு நிதி உதவிகளையும் இராணுவ தளவாடங்களையும் கொண்டு வந்து குவித்தது. விளைவு, இழந்த இடங்களை இஸ்ரேல் படிப்படியாக மீட்டுக் கொண்டதோடு மட்டுமல்லாமல் நாடில்லாத பகுதியாக இருந்த பலஸ்தீனத்தையும் கபளீகரம் செய்து கொண்டது.