Followers

Monday, August 07, 2017

பெற்ற தாயை எலும்புக் கூடாக பார்த்த மகன்!

பெற்ற தாயை எலும்புக் கூடாக பார்த்த மகன்!

மும்பை : மும்பையின் புறநகர் பகுதியான அந்தேரியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் 63 வயது பெண் ஒருவரின் உடல் முழுவதும் மக்கிப் போன நிலையில், எலும்புக் கூடாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். அமெரிக்கா சென்று திரும்பிய மகன், தாயை எலும்புக் கூடாக மட்டுமே பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

ஆஷா சகானி என்ற 63 வயது பெண், கணவர் இறந்த பிறகு அதாரியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தனியாக வசித்து வந்துள்ளார். இவரின் ஒரே மகனான ரிதுராஜ் அமெரிக்காவில் சாப்ட்வேர் இன்ஜினியராக பணியாற்றி வருகிறார். இவர் நேற்று (ஆக.,06) தான் மும்பை திரும்பி உள்ளார்.

வீட்டிற்கு வந்த ரிதுராஜ், பலமுறை அழைத்தும் கதவு திறக்கப்பவில்லை. இதனால் பூட்டு சரி செய்பவரை அழைத்து வந்து பல மணி நேர போராட்டத்திற்கு பிறகு மாலை 4.30 மணிக்கே கதவை திறந்துள்ளார். வீட்டிற்குள் தனது தாய் எலும்புக் கூடாக கிடப்பதை கண்ட ரிதுராஜ் அதிர்ச்சி அடைந்துள்ளார். முற்றிலும் மக்கிப் போகி எலும்புக் கூடாக இருந்த ஆஷாவின் உடலை கைப்பற்றிய போலீசார், அதனை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.
தனியாக வசித்து வந்த ஆஷா, எப்போது, எப்படி இறந்தார் என தெரியவில்லை. இது இயற்கை மரணமா, தற்கொலையா, கொலையா என்பதும் தெரியவில்லை. தனது தாய் என்றைக்கு, எப்படி இறந்தார் என்பது கூட தெரியாததால் ரிதுராஜ் கதறி அழுதார். ஆஷாவின் இந்த மரணம் அப்பகுதியில் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

தின மலர்
07-08-2017

இந்த தாய் எத்தனை கனவுகளோடு தனது மகனை அமெரிக்காவுக்கு அனுப்பி வைத்திருப்பாள். தாய் தந்தையரை பேணுவதில் நாம் கவனமாக இருப்போம்.


நபி (ஸல்) அவர்களிடம் பெரும்பாவங்கள் பற்றி கேட்கப்பட்டது. நபி (ஸல்) அவர்கள், "அல்லாஹ்வுக்கு இணை வைப்பது, பெற்றோருக்கு துன்பம் கொடுப்பதுமாகும்” என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அனஸ்(ரலி) நுால்: புகாரி(2653)


5 comments:

Dr.Anburaj said...


காபீா் தமிழ் இந்துக்களின் அனுபவ, அறிவுமொழி

கூத்தாடி கிழக்கே பார்த்தானாம், கூலிக்காரன் மேற்கே பார்த்தானாம்.

விளக்கம் :

மேடையில் இரவு இரவாக நடிப்பவனுக்கு விடியக்காலையில் தான் ( சூரிய உதயத்தில் ) சம்பளம் கொடுப்பார்கள் . அதேபோல் கூலி வேலை செய்பவர்களுக்கு மாலை வேளையிலேயே ( சூரியன் மறையும் பொழுது ) சம்பளம் கொடுப்பார்கள்
----------------------------------
பாம்பாடிக்குப் பாம்பிலே சாவாம் , கள்ளனுக்கு களவிலே சாவாம்.
விளக்கம் :
ஒருவர் ஒரு வேலையை எடுத்துச் செய்யும்பொழுது அவரால் அதிலிருந்து மீளமுடியாது . அந்த வேலையில் அவருக்குள்ள பலவீனங்களே , அவரின் வேலைக்கான முடிவுகளையும் தீர்மானிக்கின்றன .
-------------------------------------------------
கொள்ளும் வரைக்கும் கொண்டாட்டம் , கொண்ட பிறகு திண்டாட்டம்

விளக்கம் :ஒன்றை அடையும் வரைதான் அதில் சுவாரசியம் இருக்கும் . அதன்பின் அதனால் ஏற்படுகின்ற நடைமுறைப் பிரைச்சனைகளால் அவதியுறுவர் .
-------------------------------------------------------------------------
திருவாக்குக்கு எதிர்வாக்குக்கு உண்டா?
விளக்கம் :நேர்மையான நல்வர்கள் சொல்கின்ற சொற்களுக்கு எதிர்கருத்துகள் இருக்க மாட்டாது.
----------------------------------------------------------------------
ஓட்டை பானையிலும் சர்க்கரை இருக்குமாம்.
விளக்கம் :
மனிதவாழ்வில் எதுவும் பிரையோசனமற்றது என்று இல்லை . ஒரு விடையம் பிரையோசனமில்லை என்று தோன்றினாலும் ,அதிலும் ஏதாவது நன்மையளிக்கும் விடையம் உண்டு
--------------------------------------------------------------------------------
அறுப்புக்காலத்திலையும் எலிக்கு ஐந்து பெண்சாதி வேணுமாம் .

விளக்கம் :

ஒருவருக்கு அதிக அளவில் பணம் கிடைக்கும் பொழுது அதை ஆடம்பரமாக ஊதாரித்தனமாக செலவளித்தல் .

கைய பிடித்து கள்ளை வார்த்து , மயிரை பிடித்து பணம் வாங்குறதா ?

விளக்கம்:

தப்பானவழியில வாற காசுகள் ( நட்புகளால் கூட ) எப்பவுமே ஆபத்தானது .

புருசன் செத்து அவதி படும் போது, அடுத்த வீட்டுக்காரன் கமக்கட்டில இடிக்கிறானாம்!

விளக்கம்:

பாதுகாப்பில்லாத பெண்களிடம் , ஆண்கள் பாதுகாப்பில்லாத நிலையை அனுகூலமாக்கிப் பழகுவதைக் குறிக்கும் .

ஆனான பூனைக்கெல்லாம் ஓட்டங்காட்டிய எலியார்,

வீணான தேங்காய்ச்சொட்டில பொறியுண்டாராம்!


விளக்கம்:

பல பூனைகளிடம் இருந்து தப்பிய எலி, பொறியில் வைக்கப்பட்ட தேங்காய்ச்சொட்டை கடிக்க ஆசைப்பட்டு மாட்டுற மாதிரி...

எவ்வளவு பேருக்கோ போக்குக்காட்டின முதுபெரும் வித்துவான்கள் எல்லாரும் சின்ன வித்துக்களினை நோண்டப்போய் தங்களையே நொந்துகொள்ளுவினம்!

உடையவன் இல்லாட்டி முழங் கட்டையாம்.

விளக்கம் :

உரிமையாளர் இல்லாத இடத்தில் அங்கு நடைபெறும் செயல்பாடுகள் யாவும் ஏனோதானோ என்று நடைபெறுவதைக் குறிக்கும் .

எல்லாமாடும் ஓடுது எண்டு பாத்தால் சுப்பற்ரை பட்டியிலை நிண்ட பேத்தை மாடும் ஓடீச்சிதாம்.

விளக்கம் :

திறமையானவர்களுடன் சேர்ந்து திறமையில்லாதவர்களும் தாங்கள் திறமையானவர்கள் என்று காட்டிக் கொள்வதைக் குறிக்கும்

பழம் பழுத்தால் , கொம்பிலே தங்காது.

விளக்கம்:

திரைமறைவு வேலைகள் எப்பொழுதோ ஓரிடத்தில் அம்பலத்திற்கு வருவதைக் குறிக்கும் .

அம்மணத்தேசத்தில் கோமணம் கட்டினவன் பைத்தியக்காரனாம் .

விளக்கம்:

அறிவிலிகள் உள்ள இடத்தில் அறிவுள்ளவனின் பேச்சுக்கள் சபையேறாததைக் குறிக்கச் சொல்லப்படுவது .

தாய் முகம் காணாத பிள்ளையும் , மழை முகம் காணாத பயிரும் உருபடாதாம்.

விளக்கம் :

சரியான பராமரிப்பில்லாத எந்தச்செயலும் வெற்றியளிக்காது என்பதைச் சொல்லக் குறிக்கும்

அரைக்கிறவன் ஒன்று நினைத்து அரைக்கிறானாம், குடிகிறவன் ஒன்று நினைத்துக் குடிக்கிறானாம் .

விளக்கம் :

சொல்லாடல்களில் தப்பான மொழிபெயர்ப்புகளை எடுப்பதிற்குக் குறிக்கச் சொல்லப் படும்

அகப்பைக்கு உருவம் கொடுத்தது ஆசாரியாம் சோறு அள்ளிப் போட்டுக் குழம்பு ஊற்றியது பூசாரியாம் .

விளக்கம் :

ஒரு செயலை செய்தவர் இருக்க அந்தச் செயலுக்கு வேறு ஒருவர் உரிமை கொண்டாடிப் புகழ் பெறுவதைக் குறிக்கச் சொல்வது.

Dr.Anburaj said...

அகன்று இருந்தால் நீண்ட உறவாம் கிட்ட இருந்தால் முட்டப் பகையாம் .

விளக்கம் :

உறவுகளின் பாசப்பிணைப்பைத் தீர்மானிக்கக் குறிக்கச் சொல்வது .

அங்கே பார்த்தால் ஆடம்பரமாம் இங்கே பார்த்தால் கஞ்சிக்குச் சாவாம் .

விளக்கம் :

மனித வாழ்வில் உள்ள ஏற்றத் தாள்வினைசொல்லச் சொல்லப்படும்.


அச்சாணி இல்லாத தேர் முச்சாணும் ஓடாதாம் .

விளக்கம் :

கொள்கைகள் திட்டங்கள் இல்லாத எந்த வேலையும் பயன் தராது என்பதைச் சொல்லப் பயன்படும் .

அஞ்சு அடிச்சால் சோருமாம் ஆறு அடித்தால் பாயுமாம்.

விளக்கம் :

ஒன்று சேர்ந்த செயல்களின் பயனைச் சொல்லும்பொழுது பாவிக்கலாம்

அடிக்க அடிக்கப் படுகிறவனும் முட்டாள் படப்பட அடிக்கிறவனும் முட்டாள் .

விளக்கம் :

ஒருவரின் நல்லகுணங்களைத் தமக்குச் சாதகமாக்கி காரியங்களைச் செய்பவர்களைச்சொல்லக் குறிக்கும்

அடித்து வளர்க்காத பிள்ளையும் முறுக்கி வளர்க்காத மீசையும் வாய்க்கு முன் ஏய்க்குமாம் .

விளக்கம்:

ஒருவர் வாழ்க்கையில் உள்ள ஒழுக்கத்தை அளப்பதற்குச் சொல்ல இதனைப் பாவிக்கலாம் .

அதிர்ந்து வராத புருசனும் மிதந்து வராத அரிசியும் பிரையோசனமில்லையாம் .

விளக்கம்:

ஒருவரின் இயல்பான குணாம்சங்கள் குறைந்து வழமைக்கு மாறாக நடக்கும்பொழுது இதனைப் பாவிக்கலாம் .

அறுகங் காட்டை விட்டானும் கெட்டானாம் ஆன மாட்டை வித்தவனும் கெட்டானாம்.

விளக்கம் :

தன்னிடம் உள்ள பலன் தரத்தக்க பொருட்களை விற்றால் இறுதியில் ஏழ்மையே மிஞ்சும் என்பதைச் சொல்லச் சொல்லலாம் .

அறுபது அடிக் கம்பம் ஏறினாலும் கீழே வந்துதன் பிச்சை எடுக்கவேணும் .

விளக்கம் :

ஒருத்தர் எவ்வளவுதான் போனாலும் அடக்கமாய் இருக்கவேணும் என்பதைச் சொல்ல சொல்லபடும் .

மேலை போற சனியனை ஏணிவைத்து இறக்கின மாதிரி .

விளக்கம் :

தேள்வையில்லாத விடையங்களைத் தலையில் போட்டு அதனால் அவதிப்படுபவர்களைக் குறிக்க சொல்லலாம் .

ஆகிறவன் ஐஞ்சு சதத்திலையும் ஆவான் , ஆகாதவனுக்கு ஆயிரம் குடுத்தாலும் ஆகமாட்டான் .

விளக்கம் :

முயற்சியும் கடின உளைப்பாளிகளும் ஒருபோதும் தோற்க மாட்டார்கள் .

ஆட்டுக்குட்டியை தோளிலை வைச்சுக்கொண்டு ஊரல்லாம் தேடினானாம் .

விளக்கம் :

பிரைச்சனைகளுக்கு தீர்வுகளைக் கையில் வைத்துக்கொண்டு அதற்கான ஆலோசனைகளப் பலரிடம் கேட்பது .

ஆட்டைத் தூக்கி மாட்டில் போட்டு , மாட்டைத் தூக்கி மந்தையில போட்டானாம் .

விளக்கம் :

பிரச்சனைகளை திரித்துக் கூறி விகாரப்படுத்தி இன்பமடைவதைச் சொல்லச் சொல்லப்படும் .

ஆளை ஏய்க்குமாம் நரி அதனை ஏய்க்குமாம் ஒற்றைக்கால் நண்டு .

விளக்கம் :

ஒருவருடைய திறமையை மற்றவர் மதிக்கவேண்டும் . மதிக்காதவர்களை சொல்லப் பயன்படும் .

ஆத்திலை போனாலும் போவனே ஒழிய தெப்பக்காறனுக்கு காசு குடுக்கமாட்டன் எண்டானாம் .

விளக்கம் :

இலகுவாக காசு கொடுத்து செய்யவேண்டிய வேலையை இலவசமாக செய்ய எதிர்பார்ப்பவர்களை சொல்லச் சொல்லப்டும் .

யானைக்கு கோபம் வந்தால் வீட்டைப் பிளக்குமாம் , பூனைக்கு கோபம் வந்தால் புல்லுப் பாயை விறாண்டுமாம் .

விளக்கம் :

ஆத்திரத்தின் விளைவு வலியவருக்கும் மெலியவருக்கும் ஒன்றானது .
யானைக்குட்டி கொழுக்கவில்லையே எண்டு உட்கார்ந்து அழுதிதாம் சிங்கக்குட்டி .

விளக்கம் :

போலிக்கு ஒருவரின் வீழ்ச்சியை பார்த்து கவலைப்படுகிறவரைக் குறிக்கும் .

யானை கலக்கின குட்டையில கொக்கு மீன் பிடிக்கப் போச்சுதாம் .

விளக்கம் :

திறமையானவர்களின் வெற்றியில் திமையற்றவர்கள் பலன் அடைவதைக் குறிக்கும் .
யானை தம்பட்டம் அடிக்க ஓனாய் ஒத்து ஊதீச்சுதாம் .

Dr.Anburaj said...


யானை தம்பட்டம் அடிக்க ஓனாய் ஒத்து ஊதீச்சுதாம் .

விளக்கம் :

தமது திறமை மேல் சந்தேகம் கொள்ளம் ஒரு சிலர் திறமையானவர்களுடன் சேர்ந்து குரல் கொடுப்பதைக் குறிக்கும் .

இறைக்கிறவன் இளிச்சவாயனாக இருந்தால் மாடு மச்சான் முறை கொண்டாடுமாம் .

விளக்கம் :

இரக்க குணமும் இளகியமனமும் உள்ளவர்களிடம் பலர் பலன்களை எதிர்பார்பதைக் குறிக்கும் .

உள்ளங்கை பால்சோறைவிட்டுப் புறங்கையை நக்கினது போலையாம் .

விளக்கம் :

எது முக்கியமோ அதைச் செய்யாமல் விட்டு முக்கியமில்லாததைச் செய்வதைக் குறிக்கும் .

யானையும் யானையும் தேய்க்க கொசுவுக்குப் பிடிச்சிதாம் சனி .

விளக்கம் :

வலிமையானவர்கள் மோதிக்கொள்ளும் பொழுது இடையில் இருக்கும்மெலியவர்கள் பாதிக்கப்படுவதைக் குறிக்கும் .

உழுகிற காலத்திலை ஊர் சுத்திப்போட்டு அறுக்குற நேரத்திலை அரிவாளோடை போனானாம் .

விளக்கம் :

செய்யவேண்டிய நேரத்தில் வேலைகளைச் செய்யாது பின்பு ஒப்புக்காக நடிப்பதைக் குறிக்கும்.

இடுப்பில ரெண்டு காசு இருந்தால் சுருக்கெண்டு ரெண்டு கதை வருமாம் .

விளக்கம் :

பணம் தருகின்ற ஆணவத்தால் தாறுமாறாக கதைப்பவர்களைக் குறிக்கும் .
எச்சில் இலைக்கு மண்ணாங்கட்டி ஆதரவாம் மண்ணாங்கட்டிக்கு எச்சில் இலை ஆதரவாம் .

விளக்கம் :

ஏழைக்கு ஏழையே துணையிருப்பான் என்பதைக் குறிக்கும் .

இருக்கிறவன் செவ்வையாய் இருந்தால் சிரைக்கிறவனும் செவ்வாயாய்ச் சிரைப்பானாம் .

விளக்கம் :

ஒருவர் ஒழுக்கம் கடமை தவறாது இருந்தால் தவறுகள் ஏற்பட வழி இல்லை .
உயிரோடை இருக்கேக்கை ஒரு முத்தத்துக்கு வக்கில்லை செத்தாப்பிறகு கட்டிக்கட்டி முத்தம் கொடுத்தாளாம் .

விளக்கம் :

ஒருவரின் அருமை தெரியாது தூற்றி விட்டு இல்லாதபோது ஒப்புக்குப் புகழ்பாடுபவர்களைக் குறிக்கும் .

இரும்பு பிடிச்ச கையும் சிரங்கு பிடிச்ச கையும் சும்மா இருக்காதாம்.

விளக்கம் :

ஒரு சில பழக்கங்களை மனதில் கொண்டவர்கள் வாழ்நாள் முழுக்க அதை மறக்கமாட்டார்கள் .

உடையார் புக்கைக்கு அழுகிறாராம் லிங்கம் பஞ்சாமிர்தம் கேக்கிதாம் .

விளக்கம் :

முக்கியமான தேவைகள் இருக்கும்பொழுது முக்கியமில்லாத தேவைகளை முன்னிலைப் படுத்துவதைக் குறிக்கும் .

இலை அசைஞ்சாலும் இலைக்கு கேடாம் முள்ளு அசைஞ்சாலும் இலைக்கு கேடாம் .

விளக்கம் :

ஒரு விடையத்தில் பலவீனமானவர் எச்சரிக்கையாக நடக்கவேண்டும் என்பதைச் சொல்லக் குறிக்கும் .

உழுகிற மாடு எங்கை போனாலும் ஏரும் கலப்பையும் முன்னுக்கு வருமாம் .

விளக்கம் :


முயற்சியும் திறமையும் ஆர்வமும் உடையவர்கள் எந்த இடத்திலும் எங்கு போனாலும் முன்னேறுவார்கள் .

ஒண்ட வந்த எலி எழும்பி நிண்டுதாம் அண்டியிருந்த பூனை அவதியாப் பறந்திதாம் .

விளக்கம்:


இரக்கம் காட்டி உதவி செய்ய வெளிக்கிட்டால் , உதவி செய்தவரையே தூக்கிச் சாப்பிடுபவர்களைக் குறிக்கும் .

கஞ்சி வாக்க ஆள் இல்லாட்டிலும் கச்சை கட்ட ஆள் இருக்கு .

விளக்கம் :

உருப்படியாக உதவி எதுவும் செய்யாமல் , உதவி செய்பவர்களிடையே கலகத்தை உருவாக்குபவர்களைச் சொல்லக் குறிக்கும்.

வயிலிலை உழுது பருத்தி போடப்போறன் எண்டானாம் அப்பன் அதக்குள்ளை பெடி அந்த நூலிலை தனக்கு வேட்டி நெய்து தா எண்டானாம் .

விளக்கம் :

ஒரு முயற்சியின் பலனை அடைய முன்பு அந்தப் பலனைப் பற்றி கற்பனைகளில் மிதப்பதைக் குறிக்கும் .

ஒரு குருவி தீனி தேடுமாம் ஒன்பது குருவி வாய் திறக்குமாம் .

விளக்கம் :

ஒருவரின் வருமானத்தில் பலர் பயனடைவதைக் குறிக்கும் .

Dr.Anburaj said...

இறைக்கிறவன் இளிச்சவாயனாக இருந்தால் மாடு மச்சான் முறை கொண்டாடுமாம் .

விளக்கம் :

இரக்க குணமும் இளகியமனமும் உள்ளவர்களிடம் பலர் பலன்களை எதிர்பார்பதைக் குறிக்கும் .

உள்ளங்கை பால்சோறைவிட்டுப் புறங்கையை நக்கினது போலையாம் .

விளக்கம் :

எது முக்கியமோ அதைச் செய்யாமல் விட்டு முக்கியமில்லாததைச் செய்வதைக் குறிக்கும் .

யானையும் யானையும் தேய்க்க கொசுவுக்குப் பிடிச்சிதாம் சனி .

விளக்கம் :

வலிமையானவர்கள் மோதிக்கொள்ளும் பொழுது இடையில் இருக்கும்மெலியவர்கள் பாதிக்கப்படுவதைக் குறிக்கும் .

உழுகிற காலத்திலை ஊர் சுத்திப்போட்டு அறுக்குற நேரத்திலை அரிவாளோடை போனானாம் .

விளக்கம் :

செய்யவேண்டிய நேரத்தில் வேலைகளைச் செய்யாது பின்பு ஒப்புக்காக நடிப்பதைக் குறிக்கும்.

இடுப்பில ரெண்டு காசு இருந்தால் சுருக்கெண்டு ரெண்டு கதை வருமாம் .

விளக்கம் :

பணம் தருகின்ற ஆணவத்தால் தாறுமாறாக கதைப்பவர்களைக் குறிக்கும் .
எச்சில் இலைக்கு மண்ணாங்கட்டி ஆதரவாம் மண்ணாங்கட்டிக்கு எச்சில் இலை ஆதரவாம் .

விளக்கம் :

ஏழைக்கு ஏழையே துணையிருப்பான் என்பதைக் குறிக்கும் .

இருக்கிறவன் செவ்வையாய் இருந்தால் சிரைக்கிறவனும் செவ்வாயாய்ச் சிரைப்பானாம் .

விளக்கம் :

ஒருவர் ஒழுக்கம் கடமை தவறாது இருந்தால் தவறுகள் ஏற்பட வழி இல்லை .
உயிரோடை இருக்கேக்கை ஒரு முத்தத்துக்கு வக்கில்லை செத்தாப்பிறகு கட்டிக்கட்டி முத்தம் கொடுத்தாளாம் .

விளக்கம் :

ஒருவரின் அருமை தெரியாது தூற்றி விட்டு இல்லாதபோது ஒப்புக்குப் புகழ்பாடுபவர்களைக் குறிக்கும் .

இரும்பு பிடிச்ச கையும் சிரங்கு பிடிச்ச கையும் சும்மா இருக்காதாம்.

விளக்கம் :

ஒரு சில பழக்கங்களை மனதில் கொண்டவர்கள் வாழ்நாள் முழுக்க அதை மறக்கமாட்டார்கள் .

உடையார் புக்கைக்கு அழுகிறாராம் லிங்கம் பஞ்சாமிர்தம் கேக்கிதாம் .

விளக்கம் :

முக்கியமான தேவைகள் இருக்கும்பொழுது முக்கியமில்லாத தேவைகளை முன்னிலைப் படுத்துவதைக் குறிக்கும் .

இலை அசைஞ்சாலும் இலைக்கு கேடாம் முள்ளு அசைஞ்சாலும் இலைக்கு கேடாம் .

விளக்கம் :

ஒரு விடையத்தில் பலவீனமானவர் எச்சரிக்கையாக நடக்கவேண்டும் என்பதைச் சொல்லக் குறிக்கும் .

உழுகிற மாடு எங்கை போனாலும் ஏரும் கலப்பையும் முன்னுக்கு வருமாம் .

விளக்கம் :


முயற்சியும் திறமையும் ஆர்வமும் உடையவர்கள் எந்த இடத்திலும் எங்கு போனாலும் முன்னேறுவார்கள் .

ஒண்ட வந்த எலி எழும்பி நிண்டுதாம் அண்டியிருந்த பூனை அவதியாப் பறந்திதாம் .

விளக்கம்:


இரக்கம் காட்டி உதவி செய்ய வெளிக்கிட்டால் , உதவி செய்தவரையே தூக்கிச் சாப்பிடுபவர்களைக் குறிக்கும் .

கஞ்சி வாக்க ஆள் இல்லாட்டிலும் கச்சை கட்ட ஆள் இருக்கு .

விளக்கம் :

உருப்படியாக உதவி எதுவும் செய்யாமல் , உதவி செய்பவர்களிடையே கலகத்தை உருவாக்குபவர்களைச் சொல்லக் குறிக்கும்.

வயிலிலை உழுது பருத்தி போடப்போறன் எண்டானாம் அப்பன் அதக்குள்ளை பெடி அந்த நூலிலை தனக்கு வேட்டி நெய்து தா எண்டானாம் .

விளக்கம் :

ஒரு முயற்சியின் பலனை அடைய முன்பு அந்தப் பலனைப் பற்றி கற்பனைகளில் மிதப்பதைக் குறிக்கும் .

ஒரு குருவி தீனி தேடுமாம் ஒன்பது குருவி வாய் திறக்குமாம் .

விளக்கம் :

ஒருவரின் வருமானத்தில் பலர் பயனடைவதைக் குறிக்கும் .

சனிபிடிச்ச நாரை கெளுத்தி மீனைப் பிடிச்சு விழுங்கீச்சுதாம் .

விளக்கம் :

பிரச்சனைகளில் இருப்பவர் மேலும் பிரச்சனைகளில் தானாக விழுவதைக் குறிக்கும்

Dr.Anburaj said...

கொதி தண்ணியில விழுந்த பூனை பச்சைத் தண்ணியைக்கண்டாலும் பயப்பிடுமாம் .

விளக்கம்:


ஒருபிரச்சனையில் பிழையான அனுபவத்தை எடுத்தவர் எல்லா பிரச்சனைகளுக்குமே அதே பார்வையைப் பார்ப்பார்

செத்துப்போன மாடு உயிரோடு இருந்திது எண்டால் , ஓட்டைச் செம்பாலை ஒம்பது செம்பு பால் கறப்பன் எண்டானாம் .

விளக்கம் :

பிரையோசனம் இல்லாத வீண் வெட்டிப் பேச்சுகள் கதைப்பவர்களைக் குறிக்கும்.

சோத்திலை கிடக்கிற கல்லைப் பொறுக்காதவன் , சொக்கநாதர் கோயில் அத்திவாரக்கல்லை பேர்ப்பன் எண்டானாம் .

விளக்கம் :

முயற்சியே இல்லாமல் சோம்பேறியாக இருந்துகொண்டு பெரும் எடுப்பில் கதைப்பவர்களைக் குறிக்கும் .

சோற்றுக்கே திண்டாடும் நாய் சிங்கத்துக்கு சிம்மாசனம் போட்டிச்சிதாம் .

விளக்கம்:


கஸ்ரமான நிலையில் இருந்துகொண்டு வெறும் பட்டிற்காக தகுதிக்கு மீறி மற்றவர்களுக்கு உதவிசெய்ய முயலுவதைக் குறிக்கும்

தடவிப் பிடிக்க மயிர் இல்லையாம் அவள்பேர் கூந்தல் அழகியாம் .

விளக்கம்:

திறமைகள் இல்லது புலுடா விட்டப் பெயர் எடுப்பதைக் குறிக்கும்.

தென்னை மரத்தில ஏன்ரா ஏறினாய் என்றால் ,கண்டுக்குட்டிக்கு புல்லு புடுங்க எண்டானாம் . தென்ன மரத்திலை எங்கை புல்லு எண்டால் ,j அதுதான் கீழை இறங்கிறன் எண்டானாம் .

விளக்கம் :

அத்தியாவசிமான விடையங்களில் தேவையற்ற நேரவிரையங்களிச் செய்வதைக்குறிக்கும் .

தொடாத தொழிலை தொட்டவனும் கெட்டானாம் தொட்ட தொழிலை விட்டவனும் கெட்டானாம் .

விளக்கம் :


எதுவித அனுபவமும் இல்லாத வேலையும் , முயற்சியும் இல்லாமல் பேருக்கு செய்கின்ற வேலையும் , தோல்வியிலேயே முடிவதைக் குறிக்கும் .