Followers

Wednesday, August 02, 2017

மலையாள சேச்சிக்கு ஒரு 'ஓ' போடுவோம்!

மலையாள சேச்சிக்கு ஒரு '' போடுவோம்!

'கேரள முஸலிம் பெண்களின் மேல் ஆர்எஸ்எஸ் கை வைத்தால் அதற்கு எதிராக திரும்புவது முஸ்லிம்களாக இருக்காது. இந்து பெண்களே அவர்களை ஒரு கை பார்த்துக் கொள்வர். அதில் எந்த சந்தேகமும் வேண்டாம். நான் இந்து மதத்தையும் அதன் கோட்பாடுகளையும் சரி வர பின்பற்றுபவள்.

சனாதன தர்மம் நமக்கு சொல்வதென்ன? 'எல்லோரையும் சகோதரர்களாக பார்க்க வேண்டும்: எல்லா மதங்களையும் நேசிக்க வேண்டும்' என்பதல்லவா? இந்து மதத்துக்காக பாடுபடுவதாக சொல்லும் ஆர்எஸ்எஸ் 'முஸ்லிம் பெண்கள் மேல் கை வைப்போம்' என்று சொல்வது கேரளத்துக்கே மானக்கேடல்லவா?

3000 அப்பாவி முஸ்லிம்களை கொன்று முஸ்லிம் கர்ப்பிணி பெண்ணின் வயிற்றில் சூலாயுதத்தை செலுத்தி அந்த குழந்தையை எடுத்து நெருப்பில் எரிந்த மாபாதகர்களை நாம் மறக்க முடியுமா? அதற்கு பாதுகாவலாக நின்ற நரேந்திர மோடியை மன்னிக்க முடியுமா? எதையும் மறக்கக் கூடாது மக்களே! தற்போது என்னதான் அரிதாரம் பூசிக் கொண்டு நம்முன் நரேந்திர மோடி வந்தாலும் அவர் கையில் உள்ள ரத்தக் கறைகள் என்றுமே மாறப் போவதில்லை.

ஆர்எஸ்எஸ், பாஜகவுக்கு எதிராக பேசினால் தேச விரோத முத்திரை குத்தி பாகிஸ்தான் போகச் சொல்வீர்கள். அல்லது கொன்று விடுவீர்கள். சங் பரிவார துரோகிகளே..... மாட்டுக்கறி வைத்திருந்தார் என்று சொல்லி அக்லாக் என்ற முதியவரை கொன்றது நீங்கள் தானே!

பெருநாளுக்கு துணி வாங்கச் சென்ற இளைஞன் ஜூனைதை மாட்டுக் கறி வைத்திருந்ததாக கூறி அடித்தே கொன்றது நீங்கள்தானே!

இறந்த முஸ்லிம் பெண்களின் சவக் குழியை தோண்டி அந்த பெண்களை கற்பழியுங்கள் என்று சொன்ன யோகி ஆதித்யநாத்தின் வாரிசுகள்தானே நீங்கள்?

அதானிக்கும் அம்பானிக்கும் காவடி தூக்கி இந்த நாட்டையே சுரண்டி கொழுக்கும் நீங்களா எங்ளை பார்த்து தேசத் துரோகிகள் என்பது?

பிரிட்டிஷ் காரனுக்கு மன்னிப்பு கடிதம் எழுதிக் கொடுத்து ராஜ துரோகிகளான உங்களிடமிருந்து எங்களுக்கு எந்த சர்டிபிகேட்டும் தேவையில்லை.

தேசத் தந்தை மஹாத்மா காந்தியை கொன்று அதோடு கொன்ற அந்த கொடியவன் கோட்சேக்கு சிலை வைக்கத் துணியும் நீங்களா எங்களை பார்த்து தேசத் துரோகிகள் என்பது?'




1 comment:

Dr.Anburaj said...

சனாதன தா்மம் எல்லோரும் சகோதரா்கள் என்று சொல்லிக் கொடுக்கின்றது.அரேபிய இசுலாம் இந்துக்களை காபீா் என்கின்றது. இந்த பெட்டை நாய்க்கு அது விளங்குமா ? விளங்கிவிட்டு கொடுக்கும் காசுக்கு இப்படி கூச்சல் போடுகின்றாளா ?