Followers

Tuesday, November 06, 2018

திரும்ப கொடுத்து விடு என் இந்தியாவை?

திரும்ப கொடுத்து விடு என் இந்தியாவை?
(எழுதியவரின் (?) மனம் உடைந்த நிலையே நமக்கும்)
புதிய இந்தியா பிறந்தது என்றாய்?
அரைகிலோ இறைச்சி வைத்திருந்தவனை அடித்தே கொன்றுவிட்டு ஆயிரமாயிரம் கோமாதாக்களை கொலை செய்து தேசம் முழுவதும் விற்றாய்.
புதிய இந்தியா பிறந்தது என்றாய்?
அம்பானிகளும் அதானிகளும் பதுக்கல் நோட்டுக்களை முன்கூட்டியே மாற்றிக்கொள்ள,
அய்யாசாமியும் அந்தோணியும் ஆண்டாண்டு காலம் சேமித்து வைத்ததை செல்லாது என்றாய்?
புதிய இந்தியா பிறந்தது என்றாய்?
பீட்ஷாவும் பர்க்கரும் 5% வரியோடு ஒதுங்கிக் கொள்ள,
கடலை மிட்டாயும் ஊறுகாய் பொட்டலமும் 28% வரியைச் சுமந்து கொண்டன.
புதிய இந்தியா பிறந்தது என்றாய்?
தலித் மக்களை நிர்வாணமாக்கி ஒருவரை ஒருவர் சுமக்க வைத்து
நிர்வாணமான நிராயுதபாணி பெண்ணின் மார்பை பிடித்துக் கொண்டே பாரத் மாத்தாக்கீ ஜே என்கிறான்.
புதிய இந்தியா பிறந்தது என்றாய்?
சத்துணவிற்கு ஆதார்கார்டு, ரேசனுக்கு கார்டே இல்லை,
மல்லையாவின் கடனை சரி செய்ய எரிவாயு மானியத்தை ரத்து என்றாய்.
புதிய இந்தியா பிறந்தது என்றாய்?
நடந்தே போன கர்ப்பிணிக்கு நடு ரோட்டில் பிரசவம்.
புதிய இந்தியாவைப் பார்க்காமலேயே சாலையில் செத்துப் போனது சிசு.
மாடுகளுக்கு ஆம்புலன்ஸ் கொடுத்து
மக்களுக்கு மரணத்தை கொடுக்கும்
மரணவியாபாரியின் புதிய இந்தியாவில் இனி மனிதர்கள் வாழ முடியாது.
உலகமே காரித் துப்பும் கேடுகெட்ட புதிய இந்தியா எங்களுக்கு வேண்டாம்.
பழைய இந்தியாவை நீ திருப்பிக் கொடுத்து விடு...
படித்ததில் பிடித்தது!

4 comments:

Dr.Anburaj said...

அய்யாசாமியும் அந்தோணியும் ஆண்டாண்டு காலம் சேமித்து வைத்ததை செல்லாது என்றாய்?
புதிய இந்தியா பிறந்தது என்றாய்?
---------------------------------------------
வங்கியில் கொடுத்து புதிய நோட்டு பெற்றுக்கொள்ளத்தான் சொன்னாா் திரு.மோடி அவர்கள்.
யாரும் பணம் பெறமுடியாமல் போகவில்லை.அனைவரும் கொடுத்து மாற்றிக்கொண்டாா்கள். இழந்தவன் கதை வேறு.அதற்கு திரு.மோடி அவர்கள் பொறுப்பல்ல
அம்பானியும் அதானியும் கள்ள பணம் வைத்திருக்கவில்லை.எனவே அவர்கள் அரசின் விதிகளுக்குட்பட்டு ரொக்கப்பணத்தை மாற்றிக்கொண்டாா்கள்.கருப்பு பணம் இருந்திருந்தால் அதற்கான வரி மற்றும் அபராதம் செலுத்தியிருப்பாா்கள்.
---------------------------------------------
பீட்ஷாவும் பர்க்கரும் 5% வரியோடு ஒதுங்கிக் கொள்ள, கடலை மிட்டாயும் ஊறுகாய் பொட்டலமும் 28% வரியைச் சுமந்து கொண்டன.
அண்ட புளுகு. ஆரம்பநிலை அதுதான். மாநில நிதியமைச்சா்கள் அனைவரும் ஜிஎஸடி வரி குழுமத்தின் உறுப்பினா்கள். அவர்கள் மாற்ற வேண்டும் என்றால் மத்திய அரசு மாற்றியே தீர வேண்டும். மாநில நிதி யமைச்சரைக் கேட்க வேண்டும் .இன்று கடைலைமிட்டாயக்கு வரி வசுல் உண்டா.எத்தனை சதம் என்று.
கடலை மிட்டாய் உற்பத்தியும் குறைந்து விடவில்லை.விலையும் எட்டாஉயரத்திற்கு சென்றுவிடவில்லை.ஒரு மயிரையும் தெரிந்து கொள்ளாமல் திரு.மோடி அவர்களை நல்ல பக்தி உள்ள சமூக அக்கரையுள்ள இந்து என்பதற்காகவே இழிவு படுத்தும் தாங்கள் திட்டம் தோற்கும்.
-----------------------------------------------------------------

தலித் மக்களை நிர்வாணமாக்கி ஒருவரை ஒருவர் சுமக்க வைத்து நிர்வாணமான நிராயுதபாணி பெண்ணின் மார்பை பிடித்துக் கொண்டே பாரத் மாத்தாக்கீ ஜே என்கிறான்.
120 கோடி மக்கள் வாழும் நாட்டில் தனிமனித ஒழுக்க் கேட்டிற்கு மத்திய அரசு பொறுப்பல்ல.மதசார்பு என்று தவறான 1000 ஆண்டுகளாக அடிமைவாழ்வு வாழ்ந்த இந்து சமய மக்களுக்கு முறையான சமய கல்வியை அளிக்காமல் ஏமாற்றி வரும் காங்கிரஸ் அரசுதான் காரணம். மதசார்பற்றத்தன்மை என்பது இந்துக்களுக்கு கால்கட்டு.முஸ்லீம்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் வானளாவிய சுதந்திரம் என்று சட்டம் இயற்றி இந்துக்களை நாசம் செய்த இந்து துரோகி நேருவிற்கே அனைத்து பாவமும் சேரும்.நியாயதீா்பன்று பாவிகள் தண்டனை பெறுவார்கள்.
--------------------------------------------------------------------------
சத்துணவிற்கு ஆதார்கார்டு, ரேசனுக்கு கார்டே இல்லை,
ஆதாா்காா்டு கொண்டு வந்தவன் காங்கிரஸ் காரன். முக்கால் பங்கு வேலையை பல நூறு கோடி செலவிட்டு முடித்து விட்டான். அதை வீணாக்க வேண்டாம் என்று அதை பயன் படுத்திக்கொண்டது திரு.மோடி அரசு.ஆதார் எண் மூலம் லட்சக்கணக்கான கள்ள ரேசன் கார்டு ஒழிக்கப்பட்டது.
சர்க்கார் பணம் திட்டத்திற்கு அப்பால் நாசமாக அணுமதிக்க கூடாது.
இது திரு.மோடி அரசின் பிரமாண்டமான மகத்தான சாதனை.
ரேசன் கார்டு யாருக்கு இல்லையோ அவர்களை வருவாய் வட்டாச்சியாளரை உடனே அணுகச் சொல்லுங்கள். கிடைக்கும்.மேலும் வட்ட சட்ட பணிகள் குழு என்ற அமைப்பு தலுகா நீதிமன்றத்தில் உள்ளது. அதில் முறையிட்டால் இலவசமாக உதவி செய்வார்கள்.
--------------------------------------------------------

Dr.Anburaj said...

மல்லையாவின் கடனை சரி செய்ய எரிவாயு மானியத்தை ரத்து என்றாய்.
---------------------------------------------------------
மல்லையா உட்பட பெரும் தொகையை வங்கிகளில் கடனாகப் பெற்று தவணை கட்டாமல் பிரச்சனைக்கு ஆளாகி யிருக்கும் அனைவருக்கும் கடன் அனுமதித்தது ஊழல் எச்சிலை நாய்களான ராகுல் சோனியா காங்கிரஸ் காரன்கள்தாம். கடன் பாக்கி உள்ள நிறுவனங்களை திவாலா என்ற அறிவித்து விடுவோம் என்ற மோடியின் சட்டத்திற்கு பயந்து இவர்கள் வெளிநாட்டில் பதுங்கி வாழ்கின்றார்கள். ராகுல் காங்கிரஸ் ஆட்சி என்றால் மேலும் பல கோடி கடன் பெற்று தவணை கட்டாமல் கார்களையும் பங்களாக்களையும் பல வைப்பாட்டிகளையும் வைத்துக்கொண்டு சுகபோகமாக வாழ்ந்து வந்து இருப்பார்கள். திரு.மோடி அவர்களின் கண்டிப்பு- வங்கித்தவணைகளை முறையாக கட்ட வேண்டும் என்ற உத்தரவு- கடுமையான பதிலடி நடவடிக்கை காரணமாக செத்தோம் பிழைத்தோம் என்று நாடுநாடாய் ஒடி ஒளிந்து கொண்டு அலைகின்றார்கள்.அனைவரும் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள். கடன் தொகை வசுல் செய்யப்படும்.தவறினால் கோமணம் தவிர அனைத்து அசையும் அசையா சொத்துக்கள் அனைத்தும் பறிமுதல் செய்யப்பட்டு கடன் தொகைக்கு வரவு வைக்கப்படும். திரு.மோடி அரசு அதில் உறுதியாக உள்ளது.
-------------------------------------------------------------------------
கடன் வாங்கி ஒரு நாட்டை குடும்பத்தை நடத்த முடியாது. வரவு எட்டணா செலவு பத்தணா அதிகம் ரெண்டணா .கடைசியில் துந்தணா ( பிச்சை எடுத்தல் ) ஈரான் நாட்டில் கடனுக்கு எண்ணெய் வாங்கி மலிவு விலையில் விற்று நல்ல பேர் எடுத்துள்ளது ராகுல்காங்கிரஸ்.ஆனால் அந்த தொகைவட்டியுடன் இரண்டு லட்சம் கோடியாக உயா்ந்துள்ளது. திரு.மோடி அரசு அதை ஒரே தவணையில் கட்டியுள்ளது.மேலும் இந்திய பணம் கொடுத்துதான் எண்ணெய் வாங்க ஈரான் சம்மதித்துள்ளது. அற்புதமான இந்த சாதணையை பாராட்ட மனம் இல்லையா.
கடன் வாங்கி நாட்டை நடத்துவது நாடே அடிமைப்பட்டோ அல்லது பெரும் பொருளாதாரவீழ்ச்சி ஏற்பட்டு திவாலாஆகிவிடும் ஆபத்து உள்ளது. ஆக மானியங்களை படிப்படியாக குறைத்து கடனை அடைத்து விட்டுதவறான செலவுகளை சரி செய்து ஒட்டைகளை அடைத்து ஊழலை ஒழித்து உபரி வருவாய் வரும் போது மானியங்கள் மிக அத்தியாவசியமான பணிகளுக்கு திரு.மோடி அரசு அளிக்கும்.அதுவரை ”பத்தியம்” காத்துதான் தீர வேண்டும்.
---3

Dr.Anburaj said...

3
நடந்தே போன கர்ப்பிணிக்கு நடு ரோட்டில் பிரசவம். புதிய இந்தியாவைப் பார்க்காமலேயே சாலையில் செத்துப் போனது சிசு. மாடுகளுக்கு ஆம்புலன்ஸ் கொடுத்து
மக்களுக்கு மரணத்தை
---------------------------------------------------------------------------------------
இது போன்ற செய்திகள் அடிக்கடி வருகின்றதே. இதற்கு யாா் காரணம் ? பிரவசவலி முன்அறிவிப்ப கொடுத்து வருவதில்லை. தாய்மார்கள் மருத்துவா் குறிப்பிட்ட நாள் வந்தவுடன் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். மலை சிகரங்களுக்க போக்குவரத்து வசதிகள் போதிய அளவில் இல்லை. இதற்கு ராகுல் சோனியா காங்கிரஸ் ஊழல் ஆட்சிதான் காரணம். திரு.மோடி அவர்கள் அனைத்து கிராமங்களுக்கும் மின் இணைப்பு அளித்து மகத்தான சாதனை செய்துள்ளாா்.பாராட்ட நாதியில்லை.திரு.மோடி அவர்களின் நல்லாட்சி தொடா்ந்தால் சாதனைகள் தொடரும்..
-------------------------------------------------------------------------------
இனி மனிதர்கள் வாழ முடியாது. உலகமே காரித் துப்பும் கேடுகெட்ட புதிய இந்தியா எங்களுக்கு வேண்டாம்.
ரொம்ப ரொம்ப நல்லது. இன்றே இக்கருத்துக்குச் சொந்தக்கார்கள் அனைவரும் இந்தியாவைவிட்டு வெளியேறி தங்களுக்க பிடித்தமான யேமன் சிரியா சவுதி பாக்கிஸ்தான் நாட்டிற்கு சென்று தொலைந்து விட்டால் இந்தியாவில் குண்டு வெடிக்காது. கலகங்கள் நடக்காது. இந்தியா சுபிட்சமாக வாழும். உடனே வெளியேறுங்கள்.தேசத்துரோகிகளே.கண்ணிருந்தும் ஃகுருடா்களாய் காதிருந்தும் செவிடா்களாய் அரேபிய அடிமைகளாக வாழும் நீயும் உன் கூட்டமும் யேமனுக்கு செல்லுங்கள்.அங்கே பாலும் தேனும் ஆறாய் ஒடுகின்றது. அனைத்தும் இலவசமாம். சுகமான வாழ்வுக்கு உத்திரவாதம். அரேபிய அடிமைக் கூட்டத்தினருக்கு மட்டும்தான் அனுமதி.எங்களைப் போன்ற காபீா்களுக்க அனுமதி கிடையாது. உடனே ஒடுங்கள்.

ASHAK SJ said...

நம்ம நாட்டுல காரி காரி துப்புறாங்க , எமனுக்கு போயிட்டாப்புடி