Followers

Tuesday, June 26, 2018

ஷவ்வாலில் 6 நோன்பு நோற்கின்றாரோ அவர்.....

யார் ரமலானில் நோன்பு நோற்று, பிறகு அதைத் தொடர்ந்து ஷவ்வாலில் 6 நோன்பு நோற்கின்றாரோ அவர் (ஆண்டு) காலம் முழுவதும் நோன்பு நோற்றவரைப் போலாவார்.
அறிவிப்பவர் : அபூ அய்யூப் அல் அன்சாரி (ரலி)
நூல் : முஸ்லிம்
இந்த ஹதீஸில் ரமளானில் நோன்பு நோற்று, பிறகு அதைத் தொடர்ந்து ஷவ்வால் நோன்பு நோற்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
முப்பது நோன்பும், ஆறு நோன்பும் சேர்த்து முப்பத்து ஆறு நோன்புகளாகின்றன. நன்மைகள் ஒன்றுக்குப் பத்து என்ற கணக்குப்படி தினமும் நோன்பு நோற்ற நன்மை கிடைக்கும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இதற்குக் காரணம் கூறியுள்ளனர்.
இதன்படி ஷவ்வால் மாதம் முழுவதும் இந்த ஆறு நோன்பை பூர்த்தியாக்கலாம். தற்பொது பலரும் இந்த ஆறு நோன்பை வைப்பது பார்க்க மகிழ்ச்சியாக உள்ளது.
நானும் மூன்று நோன்பை வைத்து விட்டேன். இன்னும் பாக்கி மூன்று நோன்பு உள்ளது. வாய்ப்புள்ளவர்கள் ஆறு நோன்பை அவசியம் வைத்து வருடம் முழுவதும் நோன்பு நோற்ற நன்மையை பெறுவார்களாக!

No comments: