Followers

Tuesday, June 19, 2018

யாரோ? எவரோ? உதவிகள் எங்கிருந்தெல்லாம் வருகின்றன!

வடகரை சகோதரர் அலி அவர்கள் நீங்கள் மட்டும் பொதுசேவை செய்கிறீர்கள் என்னையும் அழையுங்கள் நானும் வருகிறேன் என்று கேட்டு கொண்டதிற்கு இணங்க...
இன்று முத்தாய்ப்பாக இன்று மாலை கடலை மிட்டாய் விற்கும் பன்னிர் என்ற சகோதரன்
மயிலாடுதுறை புதிய பேருந்து நிலையத்தில் நடக்க முடியாமல் வெயிலின் கொடுமையால் தவித்து கொண்டு இருப்பதை பார்த்த 
இந்து சகோதர்கள் என்னிடம் உதவ சொல்ல 
நான் வடகரை சகோதரர் அலி அவர்களை அழைத்தேன் அவரும் உடனடியாக வந்து அவரை மூத்திர சந்திலிருந்து வெளியே தூங்கிகொண்டு வந்து அவரை விசாரிக்க அவர் மதுரையை சேர்ந்தவர் என்றும் இருபது வருடங்களுக்கு முன்னரோ மயிலாடுதுறையில் கடலை மிட்டாய் வியாபாரம் செய்து வருவதாக சொன்னார் அவரை நிறைய பேர் அறிந்து இருந்ததை அறிய முடிந்தது.
வடகரை சகோதரர் அலி அவர்கள் அவர் சார்ந்த தமிழநாடு தவ்ஹித் அமைப்பின் அவசர ஊர்திக்கு போன் செய்ய சில நிமிடங்களில் வந்தது அவசர ஊர்தி.  இதற்க்கு இடையில்
எலந்தங்குடி சகோதரர் sf alfaa ரெடிமேட் உரிமையாளர்.கைலியும் சட்டையும் புதியதாக கொடுத்தார்.

பின்னர் வந்த அவசர ஊர்தியில் அவரை ஏற்றி தானும் ஏறி கொண்டார், அருமை இல்லம் கொண்டு சேர்க்க எண்ணினோம் அவர்கள் மறுத்து விட உடனடியாக அரசு மருத்துவ மனையில் சேர்த்து விட்டு வந்தோம்.
அவருடைய சகோதரி அன்னக்கிளி என்றும் சந்தை பேட்டை முகவரி என்றும் சொன்னார்.  அவர் எங்களிடம் ஆலிமா பள்ளிவாசலில் கொண்டு விடுங்கள் என்று கெஞ்சியது என்னமோ என் மனதை விட்டு அகலவில்லை என்பதுதான் உண்மை.
நாளை காலை அவருக்கு டெஸ்ட் எடுக்க சொல்லி இருக்கிறார் டாகடர்.  நாளைக்கு என்னையும் அழைத்து செல்லுங்கள் என்று சகோதரர் அலி சொன்னது என்னை ஆச்சர்ய பட வைத்தது என்னமோ உண்மை ......
சகோதரர் அலி அவர்கள் வடகரை -அரங்கை தமிழ்நாடு தவ்கித் ஜமாத்தின் கிளைத்தலைவர் என்பது குறிப்பிட்டே ஆகவேண்டும் .......







No comments: