Followers

Monday, June 04, 2018

அல்லாஹ்_மென்மேலும்_அருள்புரியட்டும்




திருச்சி விமான நிலையத்திற்க்கு செல்பவர்கள் சஹர் உணவு தேவைக்கு அணுகவும் இப்படி ஒரு அறிவிப்பு வாட்சப் & முகநூலில் சில தினங்களுக்கு முன்பு பகிரப்பட்டது. இது எந்தளவு உண்மை என்று தெரியாது என்று நினைத்தேன்.

நேற்று 4:6:2018 சமூக வலைதளத்தில் பதியப்பட்ட அந்த எண்ணிற்க்கு தொடர்பு கொண்டேன். மயிலாடுதுறையிலிருந்து இன்று விமான நிலையம் வருகிறோம் பாய். சஹர் உணவு கிடைக்குமா?”.என்று கேட்டேன்.  “எத்தனை பேர் வருகிறீர்கள்?” என்று அவர் கேட்க “நான்கு நபர் பாய்” என்று சொன்னேன். ஒகே என்று சொல்லி “திருச்சி நெருக்கத்திற்கு வந்து போன் அடியுங்கள்” என்று சொன்னார். அதனடிப்படையில் நெருக்கத்திற்க்கு வந்து இரவு 12:00 மனியளவில் அடிக்கும் போது “பாய் ஹாஸ்பிடலுக்கு சாப்பாடு கொண்டு போகிறேன். நீங்கள் காத்திருக்கும் துபாய் பிளைட்டிலிருந்து பயணிகள் வெளிவர 01:00 மணி ஆகிவிடும் பாய் நான் 01:00 மணிக்கெல்லாம் வந்துவிடுகிறேன்” என்று சொன்னார்கள்.

 சொன்னதுபோல் இரண்டு சகோதரர்கள் மோட்டார் சைக்கிளில் வந்தார்கள். வந்து உனவை கொடுத்தார்கள். “பாய் யார் செய்கிறார்கள் எந்த அமைப்பு செய்கிறார்கள்?” என்று கேட்டபோது .”நன்மையை நாடி சில சகோதரர்கள் செய்கிறோம்” என்றார்கள். “பொருளாதாரம்” என்றேன். “கட்டாயம் இல்லை பாய். விரும்பி கொடுத்தால் இன்னும் கூடுதலாக செய்வோம்” என்றார்கள். அல்லாஹ் அவர்களுக்கு மென்மேலும் அருள்புரிய துஆ செய்வோம்.

ஒரு சிறிய கிராமத்தில் கூட இன்று அதிகமான நபர்கள் நோன்பில் வீண் அரட்டையும்.கேரம் என்றும் டீ கடை என்றும் பொழுதைக் கழிக்கும் காலத்தில்.திருச்சி மாநகரத்தில் பொழுதைக் கழிக்க சந்தர்ப்பங்கள் அதிகமிருந்தும்.நோன்பாளிக்கு தேடி போய் உணவு கொடுக்கும் அவர்களின் பணி மகத்தானது

அந்த சகோதரர்களின் அலைபேசி  எண் :9944974747, 9659990227

-முஹம்மது ஜூபைர்





No comments: