Followers

Saturday, June 02, 2018

பாபநாசம் சுன்னத்வல் ஜமாஅத் முன்மாதிரி பள்ளிவாசல்



என் இறைவனின் அருளால்

இன்று (ஜூன்-2-2018) காலை 11 மணியளவில் பெரிய பள்ளிவாசலில் நம்முடைய T.N.T.J சகோதரர்களும், அங்குள்ள பெரிய பள்ளிவாசல் நிர்வாகிகளும் கலந்து பேசி சுமூகமான தீர்வு எடுக்கப்பட்டது. இதில் நம்முடைய ஜனாசாவை அங்கு எப்போதும் நடைபெறக்கூடிய இடத்திலேயே ஜனாசா தொழுகையை மையத்திற்கு உரியவர் வைத்துக் கொள்ள சம்மதித்து முடிவெடுக்கப்பட்டுள்ளது.

அங்குள்ள தர்காவில் அனைத்து செயல்களும் நிறுத்தப்பட்டு, பூட்டிவிட்டோம். அதேபோல் தாயத்து கயிறு முடிச்சு போடுவது பெரிய ஹஜ்ரத்திடம் சொல்லி பள்ளிவாசலில் செய்யக்கூடாது என தடுக்கப்பட்டுள்ளது. இதேபோல் மற்றதையும் எங்களுக்கு சுட்டிக்காட்டுங்கள் கொஞ்சம் கொஞ்சமாக நாங்கள் மாற்றிக் கொள்கிறோம் என்று சொல்லியுள்ளார்கள்.


நம்முடைய பாபநாசம் டிஎன்டிஜே மற்றும் சுன்னத் வல் ஜமாத் இருவரும் அனைத்து பள்ளிவாசல்களுக்கும் முன்மாதிரியாகவே திகழும் என்பதில் ஐயமில்லை.

தொடரட்டும் மார்க்கப்பணிகள்...

#
ஆக்கம் கொள்கை உறவு


https://www.facebook.com/nazeersuvanappiriyan/posts/950386571808951




No comments: