Followers

Sunday, March 08, 2015

புதிய தலைமுறை பேட்டியில் சீமான்!

புதிய தலைமுறை பேட்டியில் சீமான்!

கேள்வி:

மோடி இலங்கை சென்று அந்த நாட்டு ஜனாதிபதியோடு பேசினால் அங்குள்ள தமிழர்களுக்கு நீதி கிடைக்காதா? இதை ஏன் தடுக்கிறீர்கள்?

சீமான்:

என்ன பேசிடப் பொறாரு இவரு? ரொம்ப பேசுனாருன்னா 'நீ குஜராத்துல முஸ்லிம்களுக்கு என்ன செஞ்சீயோ அதத்தான் நானும் செஞ்சேன்' என்று பதில் குடுத்தான்னா இவர் மூஞ்சிய எங்க கொண்டு போய் வச்சுக்குவாரு! அதனால் உபயோகமா எதையும் பேச மாட்டார். அது எங்களுக்கும் தெரியும்.

கேள்வி:

“தமிழர் மதம்” என்று ஏற்படுத்துவது புதிதாக ஒரு குழப்பத்தை உண்டாக்குகிறீர்களா?

சீமான்:

'ராவணன் என் முப்பாட்டன். அவனை வில்லனாக்கி அவனுக்கு 10 தலையை கோத்து விட்டு, பற்களை அகோரமாக்கி ஜண்டு பாம் விளம்பரத்தில் 'ஹா... ஹா....' என்று பயமுறுத்துவது கிண்டலா இல்லையா? ராமனுக்கும் எனக்கும் என்ன சம்பந்தம்? சத்ரபதி சிவாஜிக்கும் எனக்கும் என்ன சம்பந்தம்? இதை எல்லாம் என் இனத்துக்கு சொல்லக் கூடாதா?'

No comments: