Followers

Sunday, March 15, 2015

இஸ்லாமிய பெண்கள் தலையில் ஸ்கார்ஃப் அணியலாம் - ஜெர்மனி!



இஸ்லாமிய பெண்கள் ஆசிரிய பணிக்கு வரும் போது தலையில் முக்காடு அணிந்து வர முன்பு ஜெர்மனியில் தடை இருந்தது. இந்த தடையானது 2003 ஆம் ஆண்டு அமுலுக்கு வந்தது. ஜெர்மனியின் சுறுஹியில் உள்ள நீதி மன்றம் இதற்கான தடையை விதித்திருந்தது. விதிக்கப்பட்ட தடையை அந்த நீதிமன்றமே தற்போது விலக்கிக் கொண்டுள்ளது. ஜெர்மனிய முஸ்லிம்கள் இதனால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இனி தலையில் முக்காடு இட்டு பள்ளிக்கு வரலாம் பாடங்களும் நடத்தலாம்.

எதிர்க் கட்சியினர் வழக்கம் போல் 'ஜெர்மன் இஸ்லாத்தை நோக்கி செல்கிறதா' என்று கேட்டு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். நாட்டை ஆள்பவர் ஒரு பெண்மணி என்பதால் பெண்மைக்கு கண்ணியம் கொடுக்க நினைக்கிறார். சார்ளி ஹெப்டோ துப்பாக்கிச் சூட்டில் முழு உலகமும் இஸ்லாத்துக்கு எதிராக நின்றபோது 'இஸ்லாம் ஜெர்மனியின் அங்கீகரிக்கப்பட்ட ஒரு மார்க்கம்' என்று லட்சக்கணக்கான மக்களுக்கு முன்பு ஜெர்மன் அதிபர் கூறியதை நாம் மறந்து விடவில்லை. இதனால் யூதர்கள் அவரின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தையும் நாம் அறிவோம். சிறந்த நாடு: சிறந்த தலைவர்.

தகவல் உதவி
சவுதி கெஜட்

No comments: