Followers

Saturday, March 07, 2015

சென்னை உயர்நீதி மன்றத்தில் மாட்டுக்கறி உண்ணும் போராட்டம்!



06-03-2015 அன்று சென்னை உயர் நீதி மன்ற வளாகத்தில் தமிழ்நாடு முற்போக்கு வழக்கறிஞர்கள் மன்றம் சார்பில் 'மாட்டுக் கறி உண்ணும் போராட்டம்' மிக விமரிசையாக நடந்தது. வழக்கறிஞர்கள் ஆர்.சி.பாலகனகராஜ், மனோகரன், பாரி, தமிழினியன் போன்ற ஏராளமானோர் கலந்து கொண்டு மாட்டுக் கறியை இன்பமோடு தின்று மகாராஷ்டிர அரசின் மக்கள் விரோத போக்கைக் கண்டித்தனர்.

தமிழகத்தில் பசுவதை தடுப்பு சட்டமோ அல்லது மாட்டிறைச்சிக்கு தடையோ விதிக்கப்படவில்லை என்றபோதிலும், மகாராஷ்ட்ராவில் பசுவதை தடுப்பு சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளதோடு, பசு மற்றும் மாடுகளை கொல்லவும், அவற்றின் இறைச்சிகளை விற்கவோ, கொண்டு செல்லவோ, வைத்திருக்கவோ கூடாது என அரசு தடை விதித்துள்ளது. இதற்கு நாடு முழுவதும் பரவலாக எதிர்ப்பு கிளம்பி உள்ளது. முன்னதாக மகாராஷ்ட்ரா அரசின் மேற்கூறிய தடை உத்தரவை பின்பற்றி தமிழக அரசும் அதேப்போன்ற தடை உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என இந்து முன்னணி தலைவர் ராமகோபாலன் அறிக்கை விடுத்திருந்தார். போராட்டக் குழுவினர் ராம கோபாலனுக்கு எதிராக கோஷங்களையும் எழுப்பினர்.

முஸ்லிம்களுக்கு எதிராக காய்களை நகர்த்துவதாக எண்ணிக் கொண்டு இந்துத்வாவாதிகள் இந்த சட்டத்தைக் கொண்டு வந்துள்ளனர். இந்த சட்டத்தால் நேரிடையாக பாதிக்கப்படுவது இந்து பிற்படுத்தப்பட்ட மக்கள் என்பதனை ஏனோ இந்துத்வாவாதியினர் மறந்து விட்டனர். 'தேன் கூட்டில் கை வைத்து விட்டோம்' என்று இந்துத்வாவாதிகள் இனி உணர்ந்து கொள்வார்கள்.




1 comment:

UNMAIKAL said...

காமராஜரைக் கொலை செய்தாவது பசு மாடுகளைப் பாதுகாத்துவிட வேண்டும்.

19ஆம் நூற்றாண்டு இறுதியில், வட மாநிலங்களில் பெருவெள்ளம் ஏற்பட்டு மனிதர்கள், கால்நடைகள் என எல்லோரும் மாண்ட நேரத்தில், இந்துத்வவாதிகள் சிலர் 'கோ ரக்ஷன் சமிதி' என ஒன்றைத் தொடங்கினர்.

மனிதர்களைக் காப்பாற்றுவதை விட்டுவிட்டு, மாடுகளைக் காப்பாற்றக் கோரும் அந்த அமைப்பு குறித்து விவேகானந்தர் மிகக் கடுமையான சொற்களால் விமர்சனம் செய்தார்.

காங்கிரஸ் கட்சிக்குள் பசு வதைத் தடைச் சட்டம் குறித்து இரண்டு வகையான கருத்துகள் காலம்தோறும் இருந்துகொண்டே இருந்தன. (காங்கிரஸ் கட்சியில் ஒரே ஒரு கருத்து இருந்தால்தான் அது வியப்புக்குரியது!).

நேரு அச்சட்டத்தை எதிர்த்த போதும், அவர் பிரதமராக இருந்தபோதுதான், உ.பி.யில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் முதலமைச்சராக இருந்த சம்பூர்ணானந் 1955இல் அச்சட்டத்தைக் கொண்டு வந்தார். அது மாநில அரசின் உரிமை என்பதால்தான் தலையிட விரும்பவில்லை என்று நேரு கூறிவிட்டார்.

பிறகு, பீகார், ம.பி., ராஜஸ்தான் காங்கிரஸ் அரசுகளும் அப்போதே அச்சட்டத்தைக் கொண்டுவந்தன.

இந்திரா காந்தி அரசில் உள்துறை அமைச்சராக இருந்த நந்தா, இந்தியா முழுவதும் பசு வதைத் தடைச் சட்டத்தைக் கொண்டுவர வேண்டும் என்ற 'சாதுக்களின்' கோரிக்கையை அரசு ஏற்க வேண்டும் என்றார்.

அதனைப் பிரதமர் இந்திரா காந்தியும், காங்கிரஸ் தலைவராக இருந்த காமராஜரும் ஏற்கவில்லை.

1966 நவம்பர் 2 அன்று தில்லியில் நடைபெற்ற அகில இந்திய காங்கிரஸ் கட்சிக் கூட்டத்தில் காமராஜர் அதனைக் கடுமையாக எதிர்த்தார்.

நாடு, மக்களைப் பற்றிக் கவலைப்பட வேண்டிய நேரம் இது, மாடுகளைப் பற்றி அல்ல என்றார்.

அவர் கூற்று இந்து மதத் தீவிரவாதிகளிடம் பெரும் கோபத்தை உண்டாக்கிற்று. அதனால்தான், நவம்பர் 7 ஆம் நாள் தில்லியில் நடைபெற்ற சாதுக்களின் ஊர்வலம், காமராஜர் தங்கியிருந்த வீட்டை நெருப்பு வைத்துக் கொளுத்தியது.

நல்வாய்ப்பாக, காமராஜர் உயிர் பிழைத்தார். அவருடைய உதவியாளர்கள் நிரஞ்சன், அம்பி ஆகியோரும், பாதுகாவலர் பகதூர் சிங்கும் படுகாயமடைந்தனர்.

காமராஜரைக் கொலை செய்தாவது, பசு மாடுகளைப் பாதுகாத்துவிட வேண்டும் என்று கருதிய 'அஹிம்சாவாதிகளின்' அரியதோர் கூடாரம்தான் ஆர்.எஸ்.எஸ்.

மாடு புனிதமான விலங்காம். அதுவும் உண்மையில்லை.

வேத காலத்தில் மாட்டுக் கறியை விரும்பி உண்டவர்கள் பார்ப்பனர்கள்தாம்.

நெய்யில் வறுத்து மாட்டுக்கறி உண்பது குறித்து வேத, உபநிடதங்களில் கூறப்பட்டுள்ளது.

இராமாயணத்தில், ஆரண்ய காண்டத்தில், இராமனும், சீதையும் மாட்டுக்கறி உண்ணும் காட்சியை வால்மீகி காட்டுகின்றார்.

மகாபாரதத்தில் மாட்டுக்கறிக்குப் பஞ்சமே இல்லை.

தொடக்கத்தில், பார்ப்பனர்கள் வளர்த்த யாகங்களில் மாடு, குதிரை என எல்லா விலங்குகளையும் வெட்டிப் பலி போட்டுள்ளனர். அவற்றை அவர்கள் உண்டும் இருக்கின்றனர். அதனை சங்கராச்சாரியார் (ஓடிப்போகாத பெரியவாள்), தெய்வத்தின் குரல் (இரண்டாம் தொகுதி) என்னும் தன் நூலில் நியாயப் படுத்துகின்றார்.

இதோ அவருடைய வரிகள்: "தர்மத்துக்காகச் செய்யவேண்டியது எப்படியிருந்தாலும் பண்ண வேண்டும். ஹிம்சை என்றும் பார்க்கக் கூடாது. யுத்தத்தில் சத்ரு வதம் பண்ணுவதை சஹல ராஜ நீதிப் புத்தகங்களும் ஒப்புக் கொள்ளவில்லையா?.......அப்படி பசு ஹோமம் பண்ணுவதிலும் தப்பே இல்லை." "பிராமணர்கள் செய்வதில் மிகவும் உயர்ந்ததான வாஜ பேயத்துக்கும் 23 பசுக்களே கொல்லப்படுகின்றன.

சக்கரவர்த்திகளே செய்கிற மிகப் பெரிய அச்வ மேதத்துக்குக் கூட 100 பசுக்கள்தான் சொல்லியிருக்கிறது."

ஆக, அவர்கள் கொன்றால் அது யாகம்.

நாம் கொன்றால், அது மிகப் பெரிய குற்றம். 10000 ரூ தண்டம், 5 ஆண்டுகள் சிறை. இன்னும் வாழ்கிறது மனுநீதி என்பதுதானே இதன் பொருள் - சுபவீ