Followers

Tuesday, March 17, 2015

எந்த சமய நெறி மனிதனுக்கு ஏற்றது? - ரகு ரகு நந்தன் ஐயர்



திரு ரகு நந்தன் ஐயர்!

//அதை விடுங்க உங்க இவ்வளவு கேள்விக்கு பதில் சொல்லியாச்சு நான் கேட்ட கேள்விக்கு பதில்?! சைவம் விட்டொழிச்சாச்சுனு வைங்க உங்க கூற்றுபடி எந்த சமய நெறி மனிதற்கு ஏற்றது?//

-Ragu Nandhan Iyer

விடை மிக எளிது நண்பரே!

யாருக்கும் பிரச்னையில்லாமல் கத்தியின்றி ரத்தமின்றி ஒரு தீர்வு உண்டு என்றால் அது இஸ்லாம் தான்.

திராவிடர் கழகம் சொல்வது போல் அனைத்து பார்பனர்களையும் ஒதுக்கி விட முடியாது. தலித்கள் இன்னும் 1000 வருடங்கள் ஆனாலும் இந்து மதத்திலிருந்து ஒரு தீர்வை அவர்களால் பெற முடியாது.

தேவர், நாடார், வன்னியர், செட்டியார் என்று மற்ற சாதிகளையும் துறக்க இன்று உள்ள ஒரே வழி அனைவரும் இஸ்லாத்தில் ஐக்கியமாவதுதான்.

இஸ்லாம் தமிழகத்துக்கு புதிய மார்க்கம் அல்ல. நமது முன்னோர்கள் 'ஒன்றே குலம் ஒருவனே தேவன்' என்றுதான் வாழ்ந்துள்ளார்கள். இஸ்லாத்தின் அடிநாதமே இந்த கொள்கைதான்.

கிறித்தவமும் பவுத்தமும் இருந்தாலும் அங்கும் சாதிகள் ஊடுருவி அந்த மதங்களையும் இந்து மதத்தின் ஒரு பிரிவாகவே மாற்றி விட்டது வர்ணாசிரம தர்மம். எனவே அங்கும் உங்களுக்கு ஒரு தீர்வை பெற முடியாது.

இஸ்லாத்தில் உள்ள சில தீவிரவாத குழுக்களை நீங்கள் காட்டி அதனை குறை கூறலாம். 90 சதமான தீவிரவாத குழுக்களை உருவாக்கியதே அமெரிக்காவும், ஐரோப்பாவும், இஸ்ரேலும். ஏனெனில் அந்த நாடுகளில் இஸ்லாம் வேகமாக பரவுவதால் தங்களின் ஆட்சிக்கு ஆபத்து வரும் என்று நினைக்கிறார்கள். எனவே குண்டு வெடிப்புகளை இஸ்லாத்தின் பெயரால் நிகழ்த்தி உலகம் முழுவதிலும் ஒரு தவறான பிம்பத்தை உண்டாக்க நினைக்கிறார்கள். பெரும்பாலும் அரபுலகில் நடக்கும் வன்முறைகள் பெட்ரோலை கொள்ளையடிக்க நடத்தப்படுபவை.

நம் நாட்டில் உங்களோடு அண்ணன் தம்பிகளாக பழகும் தமிழக முஸ்லிம்களை உதாரணத்திற்கு எடுத்துக் கொள்ளுங்கள். அவர்களிடம் இந்துக்களின் மீதோ கிறித்தவர்களின் மீதோ ஏதேனும் வன்மத்தைப் பார்த்துள்ளீர்களா? குர்ஆன் அவர்களை மிகவும் பண்பட்ட அனைத்து மதத்தினரையும் அனுசரித்து போகக் கூடிய மக்களாக மாற்றியிருக்கிறது.

தமிழக முஸ்லிம்களில் பார்பனரைப் பார்கலாம்: நாடாரைப் பார்கலாம்: தேவரைப் பார்கலாம்: தலித்தைப் பார்கலாம்: இவர்கள் அனவைரும் இந்து மதத்தின் ஏதாவது ஒரு சாதியிலிருந்து வந்திருந்தாலும் இன்று இவர்கள் முஸ்லிம்கள். அவர்களிடம் பழைய சாதியின் அடையாளங்கள் எதையாவது உங்களால் கண்டுபிடிக்க முடிகிறதா?

எனவே மதங்களை வெறுத்த பெரியாரையும் கவர்ந்த இந்த மண்ணுக்கேற்ற மார்கமான இஸ்லாத்தில் நுழைந்து சாதி வெறிகளை ஒழிக்க அன்போடு அழைக்கிறேன்.

No comments: