Followers

Monday, March 25, 2019

இந்து முஸ்லிம் பிரிவினையை தமிழர்களாகிய நாம் எதிர்க்க வேண்டும்!

இந்து முஸ்லிம் பிரிவினையை தமிழர்களாகிய நாம் எதிர்க்க வேண்டும்!

இலங்கையின் ஒரு பகுதியில் தமிழ் இந்துக்கள் வசிக்கும் ஊரில் தமிழ் முஸ்லிம் வியாபாரம் செய்யக் கூடாதாம். பேசும் மொழி ஒன்றுதான்: இனமும் ஒன்றுதான் கடவுளை வழிபடும் முறையில் அவர் இந்து: இவர் முஸ்லிம். ஆனாலும் வியாபாரம் செய்ய தடுக்கப்படுகிறார் ஒரு பாசிச வாதியால். இவ்வாறு ஒன்றிரண்டு பாசிச வாதிகள் ஒரு இனத்தில் இருந்தால் அதனால் ஒட்டு மொத்த இனமும் சங்கடத்தை அனுபவிக்கிறது.

தமிழகத்தில் எங்கள் கிராமத்தை எடுத்துக் கொண்டால் காய் கறி, பழங்கள், பசும் பால், உயிர் நாட்டுக் கோழிகள், என்று காலையிலேயே வியாபாரத்துக்காக கிராமத்துக்கு வந்து விடுவர் இந்துக்கள். மேலும் எட்டு மணிக்குப் பிறகு கொத்தனார், ஆசாரி, கம்பி .பிட்டர், பிளம்பர் , எலக்ட்ரீஷியன் என்று தொழிலாளர்கள் சுறுசுறுப்பாகி விடுவர். அனைவருமே இந்துக்கள்தான். எங்கள் கிராமத்தில் 95 சதவீதம் இஸ்லாமியர்கள். இங்கு யாரும் மத வித்தியாசம் பார்பதில்லை. இந்துக்களும் முஸ்லிம்களும் எவ்வித பிரச்னையுமில்லாமல் வாழ்க்கையை ஓட்டுகிறார்கள். எங்கள் கிராமம் மட்டுமல்ல ஒட்டு மோத்த தமிழக இஸ்லாமிய கிராமங்களின் நிலையும் இதுதான்.



ஆனால் சமீபகாலமாக இந்துத்வாக்களின் தாக்கத்தால் பல இந்து இளைஞர்கள் வழி தவறி செல்கின்றனர். இவ்வாறு செல்வதனால் அவர்கள் தங்களின் வளமான எதிர்காலத்தை தங்கள் கைகளாலேயே அழித்துக் கொள்கின்றனர். தங்களின் இஸ்லாமிய எதிர்ப்பு வேலை முடிந்தவுடன் இவர்களை கறி வேப்பிலை போல் தூர தூக்கிப் போட்டு விடுவர் ஆர்எஸ்எஸ் இயக்கத்தினர். இந்த உண்மையை வருங்காலத்தில் பிற்படுத்தப்பட்ட, தலித் இந்துக்கள் உணர்வார்கள்.


1 comment:

Dr.Anburaj said...

1000 ஆண்டுகள் முகலாளா்களுக்கும் ஆங்கிலேயனுக்கும் அடிமையாக இருந்ததன் விளைவுகளில் இருந்து இந்து சமூகம் தன்னை மாற்றி அமைக்க இந்து இயக்கங்கள் வழிகாட்டுகின்றது. சுவாமி விவேகானந்தா் வள்ளலாா் ஸ்ரீநாராயணகுரு ஆகியோரது வாழ்வும் வாக்கும் ஒவ்வொரு இந்துவை அடைய வேண்டும். அதற்கு இந்துஇயக்கங்கள் வழிகாட்டுகின்றன. இதில் சுவனப்பிரியன் வருத்தப்படுவது ஏன் ? மதம் மாற்ற முடியவில்லையே என்றா ? மதம் மாற எதிர்ப்பு வருகின்றதே என்றா ?
இந்தியாவில் சத்ரபதி சிவாஜி விரும்பிய இந்து சாம்ராஜ்ஜியத்தை அமைக்க விரும்பி உழைத்து வருகின்றோம். அல்லாவின் கருணையால் வெற்றி பெறுவோம்.