Followers

Saturday, March 16, 2019

தொழுது கொண்டிருந்த அப்பாவி முஸ்லிம்கள் 50 பேர் கொலை!

தொழுது கொண்டிருந்த அப்பாவி முஸ்லிம்கள் 50 பேர் கொலை!
வெள்ளை இனத்தை சேர்ந்த ஆஸ்திரேலியன் ப்ரண்டன் மற்றும் ஓரிருவர் இணைந்து நடத்திய கோழைத்தனமான தாக்குதலில் தொழுது கொண்டிருந்த 50 முஸ்லிம்கள் 50 பேர் இறந்துள்ளர்.
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன் - இறைவனிடமிருந்தே வந்தோம: அவனிடமே திரும்பிச் செல்ல வேண்டியவர்கள் நாம்
அந்த கோழை இதனால் இஸ்லாத்தின் வளர்ச்சியை தடுத்து விடலாம் என்று நினைக்கிறான். ஆனால் இனிமேல்தான் அந்த மக்கள் குர்ஆனில் அப்படி என்ன இருக்கிறது என்று தேட ஆரம்பிப்பார்கள். செப்டம்பர் 11 தாக்குதலிலும் இதைத்தான் நாம் அமெரிக்காவில் கண்டோம்.
இஸ்லாத்தின் மேல் அப்படி என்ன வெறுப்பு இவனுக்கு? ஆதிக்க வெறி ஒன்றுதான். இந்த உலகத்தில் வெள்ளை இன மக்களான நாங்கள் தான் ஆளப் பிறந்தவர்கள். மற்றவர்கள் எங்களுக்கு அடிமையாக படைக்கப்பட்டவர்கள் என்ற சிந்தாத்தத்தை உண்மை என்று நம்பிய பல கிருக்கன்களில் இவனும் ஒருவன். வெள்ளைத் தோலுக்கு சொந்தக்காரர்களாகிய வெள்ளையர்கள், நம் ஊர் பார்பனர்கள், நபிகள் நாயகம் காலத்தில் வாழ்ந்த குரைஷிகள் அனைவரும் இவ்வாறு ஒரே நேர்கோட்டில் சிந்திப்பவர்கள். ஆனால் இவர்களின் செயல்பாடுகளில் ஒரு சில மாற்றங்கள் இருககும்.
நபிகள் நாயகத்திடம் அன்றைய மேல் சாதியனரான குரைஷிகள் ஒரு கோரிக்கையை வைத்தனர். 'நீ சொல்லும் கடவுள் கொள்ளை நல்லதாக உள்ளது: ஐந்து வேளை தொழச் சொல்கிறாய்.. அதையும் தொழுது கொள்கிறோம். ஆனால் நாங்கள் கீழ் சாதி என்று ஒதுக்கி வைத்துள்ளவர்களோடு நாங்கள் சரிசமமாக அமர மாட்டோம். அவர்களுக்கு ஒரு நாள் எங்களுக்கு ஒரு நாள் என்று பிரித்து உபதேசம செய்தால் நாங்களும் உன்னோடு வருகிறோம்' என்று கூறினர். அந்த அளவு சாதி வெறி அவர்கள் மனதில் குடி கொண்டிருந்தது.
ஐந்து வேளை தொழுகை இந்த இன வேற்றுமையை நிற வேற்றுமையை உடைத்தெறிந்தது. அனைவரும் ஒரே வரிசையில் ஒரு நாளைக்கு ஐந்து வேளை நின்றான் என்றால் அவன் மனதில் குடி கொண்டிருக்கும் தான் என்ற அகம்பாவம் குறைய ஆரம்பிக்கும். இதை நாங்கள் அனுபவபூர்வமாக உணர்ந்துள்ளோம். எனவே தான் அந்த கிருக்கனின் கோபம் தொழுகையாளிகள் மேல் சென்றது. இந்த சம்பவம் நியூசிலாந்தில் இஸ்லாம் இன்னும் அதி வேகமாக பரவும் ஒரு காரணியாக அமையும் இறைவன் நாடினால்.
-------------------------------------------------------
தொழுது கொண்டிருந்தவர்களை சுட்ட தீவிரவாதி ப்ரெண்டன் டர்ரானின் குண்டுகள் தொழுகையாளிகள் மீது படாமல் தன்னை அரணாக அமைத்து உயிர் நீத்த 71 வயதான தாவூத் !
தாவூத் நியூசிலாந்தில் பன்னெடுங் காலமாக வசித்து வரும் ஆஃப்கானியப் பெரியவர். இவர் நீயூசிலாந்து மசூதித் தீவிரவாதத் தாக்குதலில் தொழுகையாளிகளை சுட்டு விடாமல் இருக்க குறுக்கே பாய்ந்து தன்னுயிர் நீத்துள்ளார்.
தீவிரவாதத் தாக்குதல் அறிந்து ஓடி வந்த இவர் மகன் உமர் தனது தந்தைக்கு அலைபேசியில் அழைப்பு விடுக்கையில் எடுக்கவில்லை என்றவுடன் தேடிப் பார்த்ததில் இறந்திருக்கிறார் என அறிந்துள்ளார்.

Nazeer Suvanappiriyan பதிவிலிருந்து.


3 comments:

Dr.Anburaj said...

மனித உயிா்களை மதித்து நடப்பதுதான் மனிதப்பண்பு. அப்பாவி மக்களை கொல்பவன் காடையன். இதுபோன்ற சம்பவங்கள் நடக்காது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று பிரதமா் அறிவித்துள்ளாா். நமது தாய் நாட்டின் பிரதமா் திரு.நரேந்திர மோடி அவர்களும் இந்த போக்கிரிதனத்திற்கு தனது கண்டனத்தை தெரிவித்துள்ளாா்.

பிறப்பால் பணத்தால் அறிவால் உடல் பலத்தால் சார்திருக்கும் கூட்டம் உறவுகள் இப்படி பல விஷயங்களின் அடிப்படையில் மனிதனுக்க ஆணவம் தலை தூக்குகின்றது. அதிக ஆவேசம் ஏற்படும் போது இப்படிபபட்ட காடைத்தனங்கள் அரங்கேறுகின்றது.
-----------------------------------------------------------------------------------
முஸ்லீம்கள் அனைவரும் புரண யோக்கியர்கள் போல் சுவனப்பிரியன் பதிவு செய்துள்ளாா்.ஷியா முஸ்லீம்கள் பள்ளிவாசலில் சன்னி பிரிவு-வாகாபி பிரிவினா் இதுவரை நடத்திய பயங்கரவாத தாக்குதல் கள் எண்ணிக்கை மிக அதிகம். ஈரான் ஈராக்யில் சவுதியில் இன்றும் குரான் கொண்டாடப்படும் இடங்கள் அனைத்தும் பயங்கரவாத தாக்குதல்கள் வாடிக்கையாக உள்ளது.

முஸ்லீம்களின் நடவடிக்கையை முன்உதாரணமாகக் கொண்ட நபர்கள்தான் இத்தகைய தாக்குதல்களை நடத்தியிருக்கின்றாார்கள்.

indian said...

டாக்டரே கிரிஸ்தவ போர் வெறி யூதர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் எதிரானது இதை இக்கானொளியில் காண்க 13 : 30 ஆவது நிமிடத்தில்
https://www.youtube.com/watch?v=nIHX2k8xFNg
ஆனால் அமைதியை விரும்புவோர் எல்லா மதத்திலும் உள்ளனர்

Dr.Anburaj said...

டாக்டரே கிரிஸ்தவ போர் வெறி யூதர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் எதிரானது

என்ற பதிவு எனது கடிதத்திற்கு பொருத்தமானது அலல.
-------------------------------------------------------------------
முஸ்லீம்கள் அனைவரும் புரண யோக்கியர்கள் போல் சுவனப்பிரியன் பதிவு செய்துள்ளாா்.ஷியா முஸ்லீம்கள் பள்ளிவாசலில் சன்னி பிரிவு-வாகாபி பிரிவினா் இதுவரை நடத்திய பயங்கரவாத தாக்குதல் கள் எண்ணிக்கை மிக அதிகம். ஈரான் ஈராக்யில் சவுதியில் இன்றும் குரான் கொண்டாடப்படும் இடங்கள் அனைத்தும் பயங்கரவாத தாக்குதல்கள் வாடிக்கையாக உள்ளது.

முஸ்லீம்களின் நடவடிக்கையை முன்உதாரணமாகக் கொண்ட நபர்கள்தான் இத்தகைய தாக்குதல்களை நடத்தியிருக்கின்றாார்கள்.
-----------------------------------------------------------------------------
எனது கருத்து சத்தியமான உண்மை.தாங்கள் மறுக்கவில்லை.