Followers

Sunday, March 10, 2019

அதிமுக, பாமக, பாஜக, நண்பர்கள் வாயைத் திறந்து பதில் சொல்வார்களா



Akila Ramakrishnan..பதிவு..
பொள்ளாச்சியில் 200 பெண்களுக்கு மேல் (காவல்துறை கணக்கு) ஆபாச படமெடுத்து மிரட்டி பணம் பறித்த, அவர்களை மீண்டும் மீண்டும் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கிய கும்பலின் கிளையிலிருந்து வேர் வரை அதிமுக தொடர்பு அப்பட்டமாக தெரிகிறது ஆனால் காவல் துறையும், வழக்கம் போல் பெரும்பான்மையான ஊடகங்களும் பெட்டி செய்தி அளவில் கடந்து போகின்றனர்.
இதில் ரத்தத்தை உறைய வைக்கும் கொடுமை, கடந்த ஓராண்டில் மட்டும் பொள்ளாச்சி சுற்றுவட்டாரத்தில் 7 இளம் பெண்கள் தற்கொலை செய்துள்ளனர். இந்த தற்கொலைகள் கண்டிப்பாக இந்த கும்பலால் பாதிக்கப்பட்ட பெண்களாக இருக்கலாம். தற்கொலையே 7 என்றால், கடந்த 7 ஆண்டுகளாக செயல்படும் இந்த கும்பலின் கொடுமைகள் இதுவரை வெளியே தெரியாமல் இருந்ததற்கு பின்னால் பல கொலைகள் கூட நடந்திருக்க வாய்ப்புண்டு.
இதில் சிபிஐ விசாரணை நடந்தால் மிக பெரிய நெட்வேர்க்கும், பல அரசியல் தலைகளும் உருளும். பல பெண்கள் எதிர்காலத்தில் காப்பாற்றப்படுவார்கள். ஆனால் இதையெல்லாம் இந்த அரசு செய்யுமென்று நம்புமளவுக்கு நாம் முட்டாள்களில்லை.ஏதோ ஒரு ஊரில் நடந்த சம்பவமென்று கடந்து செல்லாமல் நம் வீட்டிலும் பெண்களும், குழந்தைகளும் இருக்கிறார்கள் என்ற எண்ணத்தோடு,
இது போன்று அயோக்கியர்கள் உருவாகாமல் இருக்க, இந்த வழக்கில் நேர்மையான விசாரணையை உறுதி செய்ய நாம் தான் அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்.
மீண்டும் சொல்கிறேன் இது சாதாரண கடந்து போகின்ற குற்றமல்ல, பல பெண்களை, குடும்பங்களை நாசமாக்கும் குற்றம்..

4 comments:

Dr.Anburaj said...

தலைப்பில் தி.மு.க கம்யுனிஸ்ட தொல் திருமாவளவன் கட்சி போன்ற உதிரிக் கட்சிகள் பெயா் இடம் பெரவில்லையே ஏன் ? அவர்கள் மேல் நம்பிக்கையில்லை.இவர்களாவது ஏதாவது செய்வார்கள் என்ற நம்பிக்கை.பரவாயில்லை. பெண்களை குடி கெடுத்தது திராவிட கழக அரசயில்தான்.ஆணும் பெண்ணும் சமம் என்ற சித்தாந்தத்தை தவறான பிரச்சாரம் செய்து பெண்களை அளவுக்கு அதிகமாக பணம் சம்பாதிக்க பயன் படுத்துவதும் ஊரைச் சுற்ற எப்படியோ தொலைந்து போ என்று கைகழுவி விட்ட பெற்றோா்களும் தான் காரணம்.

01.திரைப்படங்களில் கதாநாயகன் கோவணம் கட்டி ஒருபோதும் காதல் பாட்டு பாட மாட்டான்.காலில் புட்ஸ் முழுகால் சட்டை முழுகை சட்டை மேல்கோா்ட் என்று முகத்தையும் கைவிரல்களை மட்டுமே அவன் வெளிக்காட்டுவான்.
ஆனால் கதாநாயகியும் அவளைச்சுற்றி கவா்ச்சி காட்டும் துணை நடிகைகளும் கோவணத்தை விட சற்று கூடுதல் துணியைத்தான் சுற்றியிருப்பார்கள்.ஏன் ??

ஆண்கள் மனதில் பெண்கள் குறித்து விகாரமான எண்ணங்களை விதைப்பது இந்த அலங்கோலம்தான்.பெண் என்றால் காம கிளா்ச்சி பொருள்.அவன் அப்படித்தான் இருக்க வேண்டும்.இன்று குடும்பப் பெண்களைப் பாருங்கள். ஜாககெட்டும் உடையும் சினிமா நடிகைளை முன்னுதாரமாகக் கொண்டுதான் தைக்கப்படுகின்றது. அதனால்தான் வக்கிரங்கள் நடக்கின்றது.குழந்தைகள் பாலியில்தொந்தரவிறக்கு உள்ளாக்கப்படுவது இப்படி சற்று ஏமாந்தப் பெண்களை .....இவர்கள் ஒரு தாயிடம் பிறக்கவில்லையா ?தாயிடம் பால்குடிக்கவில்லையா ? அக்கா தங்கை அண்ணி மதனி என்று பெண் உறவுகளோடு உறவாடவில்லையா ?
பேரழகான பெண் அதுவும் சாவது நீயா! யாா் ? என்று சற்று முன் போர்கள்த்தில் பலப்பரிட்சை நடத்திய படையின் தளபதியின் மருமகள்.ஆனால் அவளைக் கண்ட மாத்திரத்தில் “ உன்னைப்போல் எனது தாயாா் பேரழகு கொண்டவராக இருந்திருந்தால் நான் இதைவிட அழகாகப் பிறந்திருப்பேன்“ என்றாரே சத்ரபதி சிவாஜி. மதச்சார்பின்மை என்று நல்லஉள்ளங்களை எல்லாம் மறக்கடிக்க்ச் செய்த கயவர்கள்தான் இந்த சமூக சீரழிவுக்கு பொறுப்பேற்க வேண்டும். 10 அல்லது 12 ம் வகுப்பில் ஆங்கில பாடத்தில விவேகானந்தரின் சிகாகோ சொற்பொழிவு இடம் பெற்றிருந்தது. அதையும் நீக்கிவிட்டாா்கள். கலாச்சாரம் பண்பாட்டு விழுமியங்களை முறையான சமய கல்வியை புறக்கணித்தால் விபரீதங்கள் தொடரும் என்று நான் பலமுறை பதிவு செய்திருக்கின்றேன்.விபரீதங்கள் நடந்து கொண்டேயிருக்கின்றது.

Dr.Anburaj said...

குடும்பப் பெண்கள் ஜாக்கெட் அணியும் அலங்கோலம் பாருங்களேன். முக்காலே மூணு வீசம் முதுகு அம்மணமாக பட்டாநிலம் போல் ஊர் பார்த்து ரசிக்க கண்காட்சிப்படுத்தப்படுகின்றது.

கடந்த வெள்ளிக்கிழமை திருநெல்வேலியில் தனியாா் பெண்கள் கல்லூரி ஒன்றில் இயற்பியல் சங்கத்தின் நிறைவு விழாவில் தலைமை விருந்தினராக நான் கலந்து கொண்டேன். 1200 மாணவிகள் படிக்கும் அக்கல்லூரியில் அன்று எந்த மாணவியும் சீருடை அணியவில்லை.

நான் தனது தகுதிகை்கு பொருத்தமல்லாத காரியத்தைச் செய்தேன். ஜாக்கெட்டுகளின் அணிவகுப்பை சற்று நோட்டமிட்டேன்.

கொடுமை கொடும என்ற அலங்கோலங்களின் அணிவகுப்பு. சகிக்கமுடியவில்லை. பல ஆசிரியயைகளும் அப்படிததான.ஜாக்கெட் அணிந்திருந்தாா்கள். நிகழ்ச்சியில் என் அருகில் அமா்ந்திருந்தவருக்கு ஜாககெட்டில் பின்பகுதியில் 5ல் ஒரு பங்கு துணியும் நான்கு கயிறுகள் இருந்தது. முறையாக ஜாக்கடெ் அணிந்த பெண்கள் 2 பேர்கள்தான் என் கண்ணிற்குப் பட்டாா்கள்.
ஒரு பெண் தன்னைக்குறித்து முன்னிலைப்படுத்துவது கண்காட்சிப்படுத்துவது தன் உடலின் அழகை வனப்பை கவா்ச்சியை ? மேனி மினுக்கல் வேசிக்கழகு என்பது ஆசாரக்கோவை.மேனி மினுக்கல் குடும்ப பெண்களுக்கு எதற்கு ?

ஒரேயிடியாக குடும்பப் பெண்களும் இப்படி மாறிவிட்டிருப்பதற்கு என்ன காரணம் ?

இன்று கூட 58 வயதான என் மனைவி தனது ஜாக்கெட் உள்பிரா பாவாடை போன்ற துணிகளை பொதுவான திறந்த வெளியில் காய போட மாட்டேன் என்கிறாள்.

ஜாக்கெட் பிரா காய போட இடப்பிரச்சனை ஏற்பட்டால் அசையில் டவலுக்கு கீழ் ஒளித்து வைத்து காயப்போடுகின்றாள்.ஜாக்கெட்டிற்கு ஒரு மீட்டா் துணி எடுக்கின்றாள்.ஆனால் எனது தம்பி விட்டுப் பெண்களுக்கு உடை குறித்து சிலநாள்கள் நல்ல பழக்க வழக்கங்கள் தேவை என்று விளக்கினேன். எனது உபதேசம் குப்பைக்கு போடப்பட்டுவிட்டது.வகைவகை ஜாக்கெட்டுகளை அங்கு பார்க்கலாம். தலை குனிந்துதான் இருக்க வேண்டும்.

பொள்ளாச்சியில் பெண்களுக்கு ஏற்பட்டுள்ள இந்த கொடுமைக்கு எந்த தண்டனை ?
18 வயது வந்து விட்டால் குடும்பம் என்ற வேலைியை தாண்டி அப் விடலை பெண் காதலிக்கலாம். எவனோ ஒருவனுடன் ஓடிப் போகலாம் என்றுதானே நமது நீதி மன்றங்கள் தீர்ப்பு சொ்ல்லும். சம்மதத்துடன் நடந்தது என்றும் ஆணை வரலாம்.

குப்பைகள் அதிகமாகி விட்டது.

Feroz said...

270 க்கு மேலான இந்து பெண்களுக்கு நீதி கேட்டு பொள்ளாச்சியில் குற்றவாளிகள் அனைவருக்கும் தூக்கு தண்டனையை உறுதி செய்யும் வரை உண்ணா நோன்பு இருந்து போராடடம் செய்வர் நம் அன்பு என்ற நம்பிக்கையோடு.

Dr.Anburaj said...

நவகாளியிலும் மலபாரிலும் இன்று ஆப்கானிஸ்தானத்தில் இனப்படுகொலை செய்யப்பட்ட இந்துக்களுக்காக யாா் என்ன செய்து விட்டாா்கள் ? நான் உண்ணா விரதம் இருக்கவில்லை. முஸ்லீம்கள் என்ன செய்கின்றாா்கள் ?.இந்துக்களை காபீர் முஷிரிக் என்று இழிவு படுத்தி வருகின்றாா்கள்.

நான் உண்ணாவிரதம் இருந்தாலு் உண்ணும் விரதம் இருந்தாலும் இந்த பிரச்சனையின் தீர்வுக்கு அது உதவாது.உண்ணாவிரதம் இருக்கும் நிலையில் என்உடல்நிலை வயது இல்லை.

பல பெண்கள் பகிரங்கமாக வந்து புகாா் அளித்தால்தான் நீதி மன்றம் நடவடிக்கை எடுக்கும்.நமது நீதி மன்றங்கள் எப்படி இந்த பிரசசனையை கையாளுகின்றது என்று பார்க்கலாம்.