Followers

Tuesday, March 05, 2019

இந்துக்களை அவமதித்ததால் பதவியை இழந்த பாகிஸ்தான் மந்திரி!

இந்துக்களை அவமதித்ததால் பதவியை இழந்த பாகிஸ்தான் மந்திரி!
பாகிஸ்தான் பஞ்சாப் மாநிலத்தின் தகவல் ஒளிபரப்பு மந்திரியாக பதவி வகிப்பவர் ஃபயாஸ் உல் ஹஸன். இவர் இந்து மதத்தையும் இந்துக்களையும் பற்றி ஆட்சேபகரமான சில செய்திகளை வெளியிட்டுள்ளார். இந்த விஷயம் பிரதமர் இம்ரான் கான் வசம் எடுத்துச் செல்லப்பட்டது.
உடன் இம்ரான்கான் 'இஸ்லாம் சிறுபான்மை மக்களுக்கு நம்பிக்கையையும், பாதுகாப்பையும் தர வலியுறுத்துகிறது. அதற்கு மாற்றமாக நடந்த நீங்கள் பதவி விலகி விடுங்கள்' என்று உத்தரவிட்டார். அதன்படி ஃபயாஸ் உல் ஹஸன் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இம்ரான் கானின் மதிப்பு இன்னும் மேலே செல்கிறது.
முஸ்லிம்களை நாய்க் குட்டிகளோடு ஒப்பிட்டு பேசிய மோடியை இங்கு நினைத்துப் பார்க்கிறேன்.


1 comment:

Dr.Anburaj said...

ஏதோ புது கதையாக உள்ளது. இந்திய முஸ்லீம்கள் சுவனப்பிரியன் உட்பட அனைவரும் இந்துக்களை அவமரியாதை செய்யும் வண்ணம் காபீர்கள் என்றுதான் அழைக்கின்றாா்கள்.காபீர் என்பது அரேபிய மொழியில்மரியாதையான கண்ணியமானச் சொல் அல்ல.

மருமகன் முன்றாம் கலிபா உதுமானை சின்ன மாமியாா் ஆயிசா “காபீர்“ என்று திட்டினாா்.உதுமான் கொல்லப்பட்டாா்.காபீர்எ ன்ற சொல்லின் புகழ்வலிமை அத்தகையது.