Followers

Wednesday, March 13, 2019

பெண் பிள்ளைகள் பிறந்தால் உயிரோடு புதைத்த காலத்தில்...

*பெண் பிள்ளைகள் பிறந்தால் உயிரோடு புதைத்த காலத்தில் பெண் குழந்தை பிறந்தால் ஒரு ஆட்டை அறுத்து விருந்து கொடுக்கச் சொன்ன மார்க்கம்.*
👉 *மூன்று பெண் குழந்தைகளை பெற்று அவர்களை கண்ணியமாக வளர்த்து, நல்ல முறையில் திருமணம் முடித்துத்தரும் பெற்றோர்கள், சொர்க்கத்தில் என்னோடு இருப்பார்கள் என்று நன்மராயம் கூறியவர் இறைத்தூதர் முஹம்மத் ( ஸல் ).*
👉 *வாழும் உரிமையே மறுக்கப்பட்ட காலத்தில் பெண்களுக்கு சொத்தில் உரிமை தந்த மார்க்கம் இஸ்லாம்.*
👉 *பெண்களின் சம்மதம் இல்லாமல் திருமணம் நடத்தக்கூடாது என்று தடை விதித்த இறைத்தூதர் முஹம்மத் ( ஸல் ).*
👉 *திருமணம் என்பது ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே ஏற்படுத்தப்படும் ஒரு ஒப்பந்தமே அன்றி மனைவி என்பவள் கணவனின் அடிமையல்ல என்று சட்டம் இயற்றிய மார்க்கம் இஸ்லாம்.*
👉 *வரதட்சணை எனும் பகல் கொள்ளையைத் தடுத்து பெண்ணுக்கு மஹர் எனும் திருமண நன்கொடையை மாப்பிள்ளை தர வேண்டும் என்று கட்டளையிட்ட மார்க்கம் இஸ்லாம்.*
👉 *தாயின் காலடியில் சொர்க்கம் உள்ளது என்று தாய்மைக்கு பெருமை சேர்த்தவர் இறைத்தூதர் முஹம்மத் ( ஸல் ).*
👉 *உங்கள் மனைவியிடத்தில் யார் சிறந்தவரோ அவரே உங்களில் சிறந்தவர் என்று உபதேசித்தவர் இறைத்தூதர் முஹம்மத் ( ஸல் ).*
👉 *மனைவியின் மீது கணவனுக்கு உள்ள உரிமைகள் அனைத்தும் கணவன் மீது மனைவிக்கும் உள்ளது என்று பெண்களின் உரிமையை நிலைநாட்டியது இஸ்லாம்.*
👉 *கணவனை இழந்த பெண்கள் சிதைக்கப்படுவதை தடுத்து நிறுத்தி விதவைகளுக்கு மறுதிருமணம் செய்ய வலியுறுத்தியவர் இறைத்தூதர் முஹம்மத் (ஸல் ).*
👉 *வெறும் காட்சி பொருளாக பார்த்து ரசிக்கும் கயவர்களுக்கு மத்தியில், கண்ணியமான ஆடை (பர்தா) அணிய கற்றுத்தந்ந மார்க்கம் இஸ்லாம்.*
🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾
*இங்கு மகளிர்க்கு என்று ஒரு நாள் இல்லை.*
🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾
*ஒவ்வொரு நாளிலும் அவர்கள் மதிக்கப்பட வேண்டும்.*


3 comments:

ஆனந்தி வேல் said...

01.பெண்களை அடிமைப் பெண்களாக வைப்பாட்டிகளாக எத்தனை பேர்களை வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளலாம் எனறு அனுமதி அளிக்கும் மதம்
02.அடிமைப் பெண்களை விற்பனை செய்து பணம் சம்பாதிக்க அனுமதி அளிக்கும் மதம் அரேபிய மதம்.
03.தன் மகளை திருமணம் செய்த உதுமான் என்ற மருமகன் முஸ்லீம் மதத்திற்கு மதம் மாற மறுத்ததால் 8 ஆண்டுகள் மகளை பிரித்து வைத்த கொடூர மதம்.மதம் மாறியபின் மீண்டும் மகளை மருமகனோடு சோ்ந்து வாழ வைத்த மதம்.
04.பல நாடுகளைப் போர் தொடுத்து பாழாக்கிய மதம்
05.அரேபிய கலாச்சாரத்தை உலகம் பின்பற்ற வேண்டும் என்ற குருட்டு நம்பிக்கையை முன்வைத்து பிற கலாச்சாரங்களை அழிக்க துடிக்கும் மதம்
06.53 வயது கிழவன்கூட 9 வயது சிறுமியை திருமணம் செய்யலாம் என்று அனுமதி அளிக்கும் மதம்
07.போரில் கைபற்றிய ஆண்களை வரிசையாக நிற்க வைத்து கைகைளை பின்னால் கட்டி முட்டு போட்டு நிற்க வைத்து வரிசையாக வெட்டிக் கொன்று ஒரே குழியில்அடக்கம் செய்த மதம்.
08.இன்றும உலகம் எங்கும் படுகொலைகள் நடக்கக் காரணமாக இருக்கும் மதம்.

Dr.Anburaj said...

ஆனந்திவேல் அவர்களின் வருகைக்கு நன்றி. இசுலாம் பற்றி நிறைய கற்றுள்ளீர்கள்.
எனக்கு ஆதவாக பதிவு செய்தமைக்கு நன்றி. உண்மையை உலகிற்கு அறிவியுங்கள்.

Dr.Anburaj said...

எங்கு ஆ்ண் மக்கள்ஒழுக்கநெறி தவறி வாழ்கின்றார்களோ அங்கு பெண்ணின் வாழ்க்கையில் கண்ணீர்்தான் மிஞ்சும்.
கற்பொழுக்கம் கெட்டு மது புகை இலாகிரி பொருட்கள் புகையிலை குட்கா கஞ்சா அபின் ----இத்தகைய பொருட்களின் அணிவகுப்பு மிகவும் நீளமானது----என்று ஆண்களைப் பாழாக்க இத்தனை பொருட்கள் உள்ளதே. இந்த சங்கதிகளில் ஒன்றுக்கோ ஒன்றுக்கு மேற்பட்ட வஸ்துகளுக்கோ ஒரு ஆண்மகன் அடிமையானால் அவனது பொருளாதாரம் குடும்ப நிா்வாகம் ஆண்மை சக்தி குழந்தைகள் பாராமரிப்பு வறுமை என்று அவனது குடும்பம் பெரும் சங்கடங்களைச் சந்திக்கும். அடிதடி வழக்கு என்று போலீஸ நிலையம் நீதிமன்றம் என்ற அலைந்து தன்னையும் தனது உறுவுகளையும் பாழாக்கி வாழ்கின்றனா் பலா்.
-------------------------------------------------------------------------------
அந்த கூட்டங்களில் பிறக்கும் பெண்களின் கதி ????? அதனால்தான் ஆண்களின் கலாச்சார வாழ்வு கீழ்நிலையில் பாழானநிலையில் இருந்த கூட்டத்தாரில் பெண்கள் பிறந்தால் அதற்காக வேதைனைப்பட்டாா்கள். காரணம் அந்த பெண்குழந்தைக்கு கண்ணீரதான் நிச்சயம்.கள்ளிப்பால் ஊற்றிக்கொல்வது சிறந்தது என்ற முடிவுக்கு அதுதான் காரணம். வாழ்நாள் முழுவதும் கண்ணீரில் வாழ்வதை விட கள்ளிப்பால் குடித்து சிலநிமிட அவஸ்தையில் கதை முடிந்து விட்டுப் போகட்டுமே என்ற பெற்றோர்கள் தவறான சிந்தித்து விட்டாா்கள்.
பெண்குழந்தைக்கும் ஏதோ ஒரு வாழ்க்கையை அமைத்துக் கொடுக்க முடியும் என்ற நம்பிக்கை பெற்றோர்களுக்கு எங்கு இருக்கின்றதோ அங்கே பெண்பிள்ளை பிறப்பை இயல்பாக ஏற்றுக் கொள்கின்றார்கள். பிறாமணம் நாடாா்கள் பிள்ளை முதலியாா் செட்டியாா் அரிஜனங்கள் முஸ்லீம்கள் போன்ற எந்த பிரிவிலும் பெண்பிறப்பை சமையாக கருத மாட்டாா்கள். மதுரை மாவட்டத்தில் உள்ள ஒரு குறிப்பிட்ட சாதியில்தான் இந்த பிரச்சனை இருந்தது. ஏன் ? ஆண்களின் கலாச்சாரம். மது போதைப் பொருட்கள் திருடு கூலிக்கு கொலை செய்வது பின் அடிதடி போட்டு அல்ப விசயத்திற்கும் வீம்பு அகம்பாவம் கொண்டு கொலை செய்வது என்ற நிலையில் ஆண்கள் இருந்ததால் “பெண் குழந்தை பிறப்பு“ சங்கடமான நிகழ்வாக பார்க்கப்பட்டது. இன்று நிலைமை மாறிவிட்டது. குறைகள் திருத்தப்பட்டு விட்டது.
---------------------------------------------------------------------------------
எங்கு ஆண்கள் கற்பு நெறி தவறாமல் வாழ்கின்றார்களோ அங்குதான் பெண்களுக்கு முழு பாதுகாப்பு சாத்தியப்படும்.