Followers

Saturday, March 09, 2019

வரலாற்றில் போற்றப்பட வேண்டிய நாயகன் - முகுல் சின்ஹா!

வரலாற்றில் போற்றப்பட வேண்டிய நாயகன் - முகுல் சின்ஹா!
குஜராத் 2002 முஸ்லிம் மக்கள் படுகொலையில் பாதிக்கப்பட்ட மக்களின் நீதிக்காக இந்திய நீதிமன்றங்களில் போராடியவரும், இறுதி மூச்சு வரை மதச்சார்பின்மை கருத்தியலை நெஞ்சில் ஏந்தியவரும், மோடியின் போலிமோதல் (என்கவுண்டர்) கொலைகளை அம்பலப்படுத்தியவரும், மோடியின் குஜராத் வளர்ச்சி போலி பிம்பத்தை உடைத்தவர்களில் ஒருவரும், குஜராத்தின் ஒடுக்கப்பட்ட இஸ்லாமிய மக்களின் நண்பருமான வழக்கறிஞர் முகுல் சின்காவைப் பற்றி இப்பதிவில் பார்போம்.
முகுல் சின்கா
மத்திய பிரதேச மாநிலத்தில் பிறந்த முகுல் சின்கா ஐ.ஐ.டி கான்பூரில் உயர்கல்வி பயின்றார். குஜராத் பல்கலைக் கழகத்தில் உயிர்ம இயற்பியலில் ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றார். குஜராத்தின் உடலியல் ஆய்வகத்தில் சிறிது காலம் சிறப்பு விஞ்ஞானியாக பணிபுரிந்தார். அப்போது அங்கு கீழ்நிலை ஊழியர்கள் நடத்தப்பட்ட விதத்தை எதிர்த்து குரல் கொடுத்தார். விஞ்ஞான ஆய்வகங்களிலிருந்து வெளியேறும் நச்சுக்கழிவு உருவாக்கும் பணிபுரிபவர்களுக்கு பாதுகாப்பற்ற நிலை காரணமாக அவை தொழிற்சாலைகள் போன்றே கருதப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் ஒரு வழக்கில் தீர்ப்பு வழங்கியது. உடனே குஜராத் உடலியல் ஆய்வக ஊழியர்களின் நலனை பேண தொழிற்சங்கத்தை கட்டினார், முகுல் சின்கா. அடுத்த சில நாட்களிலே ஆய்வகத்திலிருந்து வெளியேற்றப்பட்டார். பிறகு வக்கீலுக்கு படித்து மக்கள் பிரச்சினைகளுக்கு முன்நின்றார்.
குஜராத்தில் மோடி முன்நின்று நடத்திய இனப்படுகொலையின் ரத்த சாட்சியங்களை ஜனநாயக சக்திகளுடன் ஒருங்கிணைந்து வெளிக் கொணர்ந்தார். (முகுல் சின்காவின் பங்களிப்பில் நடத்தப்பட்டு வரும் http://www.truthofgujarat.com/இணையதளம்). 97 முஸ்லிம்கள் கொடூரமாக கொல்லப்பட்ட நரோடா பாட்டியா வழக்கில் கொலையாளிகளை வழி நடத்திய மாயா கோட்னானிக்கு 28 வருட சிறை தண்டனையும், பாபு பஜ்ரங்கி தனது மிச்சமிருக்கும் வாழ்நாளை சிறையில் கழிக்கவும், குற்றம்சாட்டப்பட்டவர் ஒருவர் கூட தப்பிக்க இயலாத வண்ணம் மேலும் 30 பேருக்கு 24 வருடங்கள் சிறை என கடுமையான பிரிவுகளில் தண்டனை வாங்கித் தந்தவர் முகுல் சின்கா.
குஜராத் படுகொலைகளுக்கு பிறகு இந்துத்துவத்தின் புதிய விளம்பர முகமாக மாறியிருந்த மோடியின் பிம்பத்தை உப்ப வைக்க, போலி மோதல் கொலைககளில் முஸ்லிம் இளைஞர்கள் பலர் கொல்லப்பட்டார்கள். அதில் முக்கியமான ஒன்று, இஷ்ரத் ஜகான் போலிமோதல் வழக்கு. மும்பையின் மும்ப்ரா பகுதியை சேர்ந்த கணினியியல் இளங்கலை இரண்டாம் ஆண்டு பட்டப்படிப்பு படித்து வந்த இளம்பெண் இஷ்ரத், மே மாத விடுமுறையில் விற்பனையாளர் பணிக்கு குஜராத் வந்த போது கைது செய்யப்பட்டார். அவருடைய நண்பர் ஜாவேத் அக்தர் மற்றும் பாகிஸ்தானைச் சேர்ந்த அம்ஜத் அலி ராணா, ஜீஷன் ஜோகர் ஆகியோரை தனித்தனியாக கைது செய்தது குஜராத் காவல்துறை. பிறகு மூவரையும் ஒரு டாடா இண்டிகா காரில் அமர வைத்து கொலை செய்தனர். இந்த போலிமோதல் கொலையை அம்பலப்படுத்தியதோடு, நீதிமன்றங்களில் அவர்களுக்காக வாதாடிய வழக்கறிஞர் முகுல் சின்கா.
இஷ்ரத் ஜகான் நடத்தை கெட்டவள், லஷ்கர் தீவிரவாதிகளுடன் தொடர்புடையவர் என்று இந்து மதவெறியர்கள் அவதூறுகளை உமிழ்ந்தனர். அவர்களுடைய அத்தனை வகையான அவதூறுகளையும் நீதிமன்றங்களிலும், மக்கள் அரங்குகளிலும், தொலைக்காட்சி விவாதங்களிலும் அஞ்சாமல், தளராமல் முறியடித்து வந்தார், முகுல் சின்கா. முகுல் சின்கா விட்டுச் சென்ற பணியை குஜராத்தில் இருக்கும் அவருடைய நண்பர்கள் நிச்சயம் தொடர்வார்கள். மோடியும், அமித் ஷாவும் இன்னபிற கொலையாளிகளும் தண்டிக்கப்படும் காலமும் கனியும்.
பாசிசம் கோலோச்சிய மண்ணிலேயே மோடியையும், இந்து மதவெறியையும் தளராமல் எதிர்த்து நின்ற நெஞ்சுறுதியை முகுல் சின்காவிடமிருந்து பெறுவோம்!


2 comments:

C.Sugumar said...

ஏன் இந்துக்கள் பாக்கிஸ்தானை விட்டு இந்தியாவிற்கு வருகின்றார்கள்.

இந்தியாவுக்கு புலம்பெயர்ந்து கடந்த பல ஆண்டுகளாக மும்பையில் வசித்துவரும் 45 பாகிஸ்தானியர்களுக்கு மகராஷ்டிரா மாநில அரசு இந்திய குடியுரிமை வழங்கியுள்ளது.

இதற்கான உத்தரவை நேற்று (வியாழக்கிழமை) புனே மாவட்ட நிர்வாகம் வழங்கியது.

தங்கள் சொந்த நாட்டில் வன்முறைச் சம்பவங்கள் அதிகரித்து வருவதால் சிறுபான்மையாக உள்ள இந்துக்கள், பாகிஸ்தானிலிருந்து இந்தியாவுக்கு குடிபெயர்ந்து வந்ததாக அவர்கள் தெரிவித்தனர்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் நேவல் கிஷோர் ராம் தெரிவித்தாவது:

புனே, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் 45 பேருக்கும் ஒரு சான்றிதழை வழங்கியுள்ளது. இவர்களின் விண்ணப்பங்கள் அனைத்தும் வெளியுறவு துறை அலுவலகம் உள்ளிட்ட அலுவலகங்களில், பல்வேறு மட்டங்களில் பல ஆண்டுகளாக தாமதமாகிவந்தன.

இவர்களுக்கு குடியுரிமை வழங்குவதற்கான கடினமான செயல்முறை பல மாதங்கள் மற்றும் பல ஆண்டுகளை எடுத்துக்கொண்டது. தற்போது எந்த இடையூறும் இல்லை. நல்லவேளையாக அந்த முயற்சிகள் நிறைவடைந்துவிட்டன.

குடியுரிமைச் சட்டத்தில் திருத்தங்கள் உருவான பிறகு, மாவட்ட கலெக்டர் சிறுபான்மையினர் விண்ணப்பதாரர்களுக்கு குடியுரிமை கொடுக்க அதிகாரம் ஏற்பட்டது.

சட்டத்திருத்தத்தின்படி உளவுத்துறையின் அனுமதி வந்தபிறகு இவர்களுக்கு நான் குடியுரிமையை வழங்கினேன். அனைத்து விண்ணப்பதாரர்களையும் ஒரே நாளில் கையெழுத்திட அழைத்தேன்.

அவர்கள் அனைவரது வாக்குமூலங்களும் பெறப்பட்டு விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. தற்போது அவர்கள் இந்திய குடியுரிமை பெற்றுள்ளனர்.

குடியுரிமை பெற்றுள்ளது குறித்து கருத்து தெரிவித்த புலம்பெயர்ந்த ஜெய்காஷ் நெப்வானி தெரிவிக்கையில், நாங்கள் பாகிஸ்தானில் ஏராளமான தொல்லைகளை அனுபவித்தோம். இங்கு வந்த பின்னர் இந்தியக் குடியுரிமை பெறவும் நிறைய போராட்டங்களைச் சந்தித்தோம். இறுதியில் நாங்கள் குடியுரிமை பெற்றுவிட்டோம்'' என்றார்.

இன்னொரு புலம்பெயர்ந்தோர் லாஜ் விர்வானி தெரிவிக்கையில், இது 20 ஆண்டுகளுக்கு முன் ஒரு திருமணத்திற்காக இங்கே வந்தோம். அப்போது நான் எனது கணவரிடம் தெரிவித்தேன். நாம் இனிமேல் இங்கேயே இருந்துவிடலாம். என்று. ஏனென்றால் பாகிஸ்தானில் கடத்தல் மற்றும் பிற விஷயங்களுக்காக அங்கே எங்கள் வீடுகளுக்கு வெளியே வருவதற்குக் கூட நாங்கள் பயந்தோம்.

ரக்ஷி அஸ்வானி கூறுகையில், நான் 2008ல் இங்கே வந்தேன். அதற்குக் காரணம் என் பாகிஸ்தானிய பாஸ்போர்ட்தான். இந்தியாவிலிருந்து மீண்டும் வெளியேறுவதற்கு இந்த பாஸ்போர்ட் மிகவும் தொந்தரவாக இருந்தது. பிலிப்பைன்ஸில் எனது குடும்பத்தைச் சந்திப்பதற்குகூட நான் அரசாங்கத்திடம் சிறப்பு அனுமதி பெற வேண்டும். ஆனால் இப்போது நான் இந்திய குடியுரிமை பெற்றுள்ளேன், எங்கும் செல்ல முடியும்.'' என்றார்.

ஓம் பிரகாஷ் என்பவர் தெரிவிக்கையில், ''பாகிஸ்தான் 'பாதுகாப்பற்ற' இடம் என்று வலியுறுத்தினார். அங்கு, பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை வெளியே விடுவதற்குக் கூட பயப்படுகிறார்கள். காரணம் அங்கு கடத்தலும் இன்னும் பல குற்றங்களுமே காரணம்'' என்றார்.
-தமிழ்ஹிந்து பத்திரிகை

Dr.Anburaj said...

பாக்கிஸ்தானை சதா புகழ்ந்து பதிவுகளைப் போடுகின்றவா்கள் ஊருக்கு ஒதுக்குபுறமிருக்கும் புளிய மரத்தில் தூக்கு போட்டு சாகலாம். இப்படியும நீச ஜென்மங்கள் இந்ததியாவில் இருந்தால் இந்தியாவை அழிக்க பாக்கிஸ்தான் தேவையில்லை.சுவனப்பிரியன் மட்டும் போதும்.ஆனால் இந்துக்கள் விழித்துக்கொண்டார்கள்.