Followers

Thursday, March 14, 2019

மாற்று மத நண்பரோடு முன்பு நான் செய்த விவாதம்.

மாற்று மத நண்பரோடு முன்பு நான் செய்த விவாதம்.
//அவர் அரபி மொழி அல்லாத நபராக இருந்தால் அரபி மொழியில் எழுத படிக்க தெரியாக முகமது தொடர்ந்து சந்திப்பதில் என்ன பயன்? வாதம் பொய்த்து போகிறதே//
எப்படி பொய்க்கும்? அரபி மொழி எழுதப் படிக்கத் தெரியா விட்டாலும் அந்த மொழியை சரளமாக பேசக் கூடியவர். அவரது மனைவி குடும்பத்து உறவினர்.
நமது தமிழகத்தில் வெளி மாநில ஆட்கள் நிறைய வேலை செய்கின்றனர். அவர்களுக்கு தமிழ் மொழி எழுதவோ படிக்கவோ தெரியாது. ஆனால் தமிழில் சரளமாக பேசுவர். மும்பையில் பல ஆண்டுகளாக வசிக்கும் நமது தமிழர்களுக்கு ஹிந்தி எழுதவோ படிக்கவோ தெரியாது. ஆனால் ஹிந்தியில் சரளமாக பேசுவர். இது எப்படி சாத்தியப் படுகிறதோ அதே போல்தான் முகமது நபியை சந்தித்த அந்த மத குருவின் சந்திப்பும். மேலும் அந்த மத குரு நம்பிக்கை கொண்டிருந்த கிறித்தவ நூலான பைபிளுக்கும் முகமது நபி பெற்றுத் தந்த குர்ஆனுக்கும் அடிப்படையிலேயே பெருத்த வித்தியாசம் உண்டு. இரண்டு வேதங்களையும் படித்தவர்கள் இந்த வித்தியாசத்தை நன்கு உணர்வர்.
//பின் எதற்காக அரபி குரான் தமிழர்களுக்கு? ”அவரது மொழி வேற்று மொழியாகும்” என்பதுபோல் இந்த ”குரானும் வேற்று மொழி குரானே” இதை தமிழர்கள் பின்பற்ற தக்கதல்ல.//
'இந்த குர்ஆன் மனிதர்களுக்கு நேர் வழி காட்டும். நேர் வழியைத் தெளிவாகக் கூறும். பொய்யை விட்டு உண்மையை பிரித்துக் காட்டும்'
-குர்ஆன் 2:185
இங்கு இறைவன் முஸ்லிம்களை பார்த்து பேசவில்லை. தருமி, வவ்வால், ஆண்ட், யுவன் சங்கர் ராஜா, ஏ ஆர் ரஹ்மான், பெரியார் தாசன் என்று உலக மக்கள் அனைவரையும் நோக்கி பேசுகிறான். எனவேதான் யுவன் ஹாலிக்காக மாறியது. திலீபனை ஏ ஆர் ரஹ்மானாக மாற்றியது.
//இவ்வளவு (99) பெயரையும் கடவுள் தனக்குத்தானே வைத்துக்கொண்டாரா? இல்லை, அவரது துதி பாடிகள் (உங்களைப்போல) வைத்த பெயரா?//
இவை அனைத்தும் அந்த இறைவனுக்கு இருக்கக் கூடிய ஆற்றல்கள்: தன்மைகள். இந்த ஆற்றல்கள் அனைத்தையும் கொண்டவனே இறைவனாக இருக்க முடியும். உலகில் உள்ள அனைத்து வேதங்களும் இதனை ஒத்துக் கொள்கின்றன.

2 comments:

Dr.Anburaj said...

முஹம்மது மட்டும் அல்ல இயெசு உடபட எந்த ஒரு தனி நபரும் உலகிற்கு வழிகாட்ட முடியாது.இயலாமல்தான் முடிந்து விட்டது. 1500 வருடங்களுக்கு முன்பு பிறந்த 40 வயது வரை வாழ்ந்த பின் நான் இறைவனின் தூதர் என்று அறிவித்து சி்றியதும் பெரியதுமாக 64 போர்களை நடத்தி 10-12 பெண்களை திருமணம் செய்து 20 பெண்களுககு மேல் குமுஸ் வைப்பாட்டிகளை வைத்து மனம் உவந்து ஒரு நாள் என்று தங்கள் உடலை நபி க்கு அளிக்க முன்வந்த பெண்களையும் விட்டு விடாமல் புணா்ந்து ஒரே நேரத்தில் 400-700 பேர்களைக் கொன்று ஒரே குழியில்அடக்கமும் செய்த ஒரு புண்ணியவான் எப்படி உலகதை்தை ரட்சிக்க முடியும். அவர் பிறந்ததையோ இறந்ததையோ அறியாமல் இறந்த மக்கள் லட்சம் கோடியிருப்பார்களே! அவர்களுக்கு இந்த நபி என்ற நியாயம் வைத்துள்ளாா் ? அந்தமானில் சில தீவுகளில் இன்றும் உடையை அறியாத மக்கள் வாழ்கின்றார்களே!! அவர்கள் வாழ்விற்கு என்ன அரத்தம் ? நியாய தீர்ப்ப நாளில் மேற்படி மக்களுக்கு நல் வழிகாட்டாத பாவத்திற்கு ““““அல்லாவிற்கு““““““ என்ன தண்டனை ?

Dr.Anburaj said...

இந்த கருத்தை பலமுறை பதிவு செய்திருக்கின்றேன்.பதிலடிக்க கொடுக்கும் விவேகம் அறிவு வளம் குரானில் இருக்கின்றதா ? இல்லை.இல்லவேயில்லை.குரான் ஒரு அரைவேக்காடு புத்தகம். காலத்திற்கு ஒவ்வாதது.தள்ளுபடி செய்தால் உலகம் உருப்படும்.