Followers

Saturday, March 09, 2019

1000 கிலோ வெடி பொருட்களுடன்இருவர் கைது!

1000 கிலோ வெடி பொருட்களுடன்இருவர் கைது!
பொட்டாஷியம் நைட்ரேட் என்ற வெடி பொருள் 27 பைகளில் ஒரிஸ்ஸா மாநிலத்திலிருந்து கல்கத்தாவுக்கு கடத்தி வரப்பட்டுள்ளது. பிடிபட்ட வெடி பொருள் 1000 கிலோ உள்ளதாக மேற்கு வங்க காவல் துறை கூறுகிறது. மம்தா பானர்ஜிக்கு குடைச்சல் கொடுத்து அரசுக்கு கெட்ட பெயர் ஏற்படுத்தி வாக்குகளை அள்ள இந்துத்வா திட்டமிட்டுள்ளதா? என்பதை நடைபெறும் விசாரணையில் தெரிய வரும்.
கடத்தி வந்த இருவரும் ஒரிஸ்ஸா மாநிலத்தை சேர்ந்தவர்கள். பெயர்கள் முறையே இந்திரஜித்(25), பத்மோல்சன்(31). இதே முஸ்லிமாக இருந்திருந்தால் ஐஎஸ், ஹிஸ்புல் முஜாஹிதீன், பாகிஸ்தான் என்று ஊடகங்கள் திரைக் கதை எழுதியிருக்கும். பெரும்பாலான ஊடகங்கள் இந்த செய்தியையும் வெளியிடவில்லை.
தேர்தல் நெருங்க நெருங்க அமீத்ஷாவின் மொட்டை மண்டையில் இன்னும் என்னென்ன நாசகார எண்ணங்கள் உதிக்கப் போகிறதோ? தற்போதெல்லாம் தேர்தல் என்றாலே பயமாக உள்ளது. அப்படி ஒரு சூழலை மோடியும், அமீத்ஷாவும் ஏற்படுத்தி விட்டார்கள்.
தகவல் உதவி
Out Look India
09-03-2019



No comments: