Followers

Wednesday, June 13, 2018

தபோல்கர் முதல் கவுரி லங்கேஷ் வரை : ஒரே காவிக் கும்பல்


தபோல்கர் முதல் கவுரி லங்கேஷ் வரை : ஒரே காவிக் கும்பல் ஒரே துப்பாக்கி !
ன்னட எழுத்தாளரும், ஆராய்ச்சியாளருமான எம்.எம். கல்புர்கி கடந்த 2015-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 30-ஆம் நாள் இந்து மத வெறியர்களால் படுகொலை செய்யப்பட்டார். அவரைக் கொலை செய்வதற்கு பயன்படுத்தப்பட்ட 7.65 மி.மீ. நாட்டு கைத்துப்பாக்கியைக் கொண்டே கடந்த ஆண்டு கன்னட எழுத்தாளர் கவுரி லங்கேஷ்-உம் கொலை செய்யப்பட்டுள்ளார் என கர்நாடக போலீசின் சிறப்புப் புலனாய்வுக் குழு, கடந்த மே 30 அன்று நீதிமன்றத்தில் சமர்ப்பித்த தடயவியல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிக்கைதான் இரண்டு கொலைகளுக்கு இடையிலான சம்பந்தத்தை வெளிப்படுத்தும் முதல் அறிக்கையாகும். இரண்டரை ஆண்டுகளுக்கு முன் கொலை செய்யப்பட்ட கல்புர்கியையும் கடந்த 2017-ஆம் ஆண்டு செப்டெம்பர்-இல் கொல்லப்பட்ட கவுரி லங்கேஷையும் ஒரு பொதுவான குழுவைச் சேர்ந்த கொலைகாரர்கள்தான் கொலை செய்திருக்கின்றனர் என்று போலீசு தரப்பு தெரிவித்திருக்கிறது.
கவுரி லங்கேஷ் சுட்டுக் கொல்லப்பட்ட இடத்தில் கைப்பற்றப்பட்ட ரவைகள் மற்றும் தோட்டாக்களையும், கல்புர்கி கொல்லப்பட்ட இடத்தில் கைப்பற்றப்பட்டவற்றையும் பரிசோதித்த பூர்வாங்க தடயவியல் சோதனை அறிக்கைகள் இரண்டு கொலையிலும் ஒரே கைத்துப்பாக்கிதான் பயன்படுத்தப்பட்டது என்பதை அம்பலப்படுத்தின. இத்தகவலை இந்தியன் எக்ஸ்பிரஸ் இணையதளம் கடந்த செப்-14, 2017 அன்று வெளியிட்டது.
கவுரி லங்கேஷ் கொலையில் குற்றம் சாட்டப்பட்ட நவீன்குமாரின் மீதான குற்றப் பத்திரிகையில் இணைக்கப்பட்ட தடயவியல் அறிக்கையில், ”இரண்டு கொலைகளிலும் பயன்படுத்தப்பட்ட ரவைகளும் தோட்டாக்களும், 7.65 மி.மீ. குழல்வட்டம் கொண்ட தோட்டாக்களுக்காக செய்யப்பட்ட ஒரே உள்ளூர் கைத்துப்பாக்கியினுடையதுதான் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
லங்கேஷ் படுகொலையைத் தொடர்ந்து அவரது உடலில் துளைத்த 3 ரவைகளையும், அவர் மீது படாமல் குறி தவறிய ஒரு ரவையையும், காலியான 4 தோட்டக்களையும் கைப்பற்றியது போலீசு. அதனை கல்புர்கியின் கொலையில் கைப்பற்றப்பட்ட 2 ரவைகள் மற்றும் அவற்றின் தோட்டாக்களோடு ஒப்பிட்டுப் பார்த்து, அதனடிப்படியிலேயே அறிக்கை தயாரித்து சமர்ப்பித்திருக்கிறது போலீசு.
இந்த அறிக்கை மாநில தடயவியல் துறையின் துப்பாக்கி ஆயுதங்கள் பிரிவின் துணை இயக்குனர் கிரண்குமாரால், சிறப்புப் புலனாய்வுக் குழுவின் தலைமை விசாரணை அதிகாரி அனுசெத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
அறிக்கையில், இரண்டு கொலைகளிலும், தோட்டாக் கூடுகளின் மேல் உள்ள, சுடுவிசையின் வகை குணாதிசய குறியீடுகள் மற்றும் தனிப்பட்ட குணாதிசய குறியீடுகளுக்கு இடையிலான ஒப்பீடுகள் ஒன்றோடு ஒன்று ஒத்துப் போகின்றன என்பது குறித்த விவரங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. தோட்டாக்களின் மேலுள்ள தனிப்பட்ட குறியீடுகளின் பரிசீலனையிலிருந்து, அவை ஒரே 7.65 மி.மீ. கைத்துப்பாக்கியிலிருந்து சுடப்பட்டவை என்பதை அந்த அறிக்கை உறுதி செய்கிறது
கைப்பற்றப்பட்ட தோட்டாக்களின் மேலுள்ள நுண்ணிய சிராய்ப்புகள், ஒன்றோடொன்று ஒத்துப் போகின்றன என்பதையும், கல்புர்கி வழக்கில் சமர்ப்பிக்கப்பட்ட நுண்ணிய சிராய்ப்புகள் குறித்த அறிக்கையோடும் அவை ஒத்துப் போகின்றன என்பதையும் அந்த அறிக்கை குறிப்பிடுகிறது.
இக்கொலை வழக்கில் இதுவரை சனாதன் சன்ஸ்தா, ஹிந்து ஜன்ஜாக்ருதி சமிதி, ஹிந்து யுவ சேனா ஆகிய அமைப்புகளைச் சேர்ந்த ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதுவரையில் கல்புர்கி கொலை வழக்கில் யாரும் கைது செய்யப்படவில்லை எனபது குறிப்பிடத்தக்கது. கடந்த 2015-ஆம் ஆண்டு பிப்ரவரி 16, அன்று சுட்டுக் கொல்லப்பட்ட கோவிந்த் பன்சாரேவையும் காயத்துடன் தப்பிய அவரது மனைவியையும் சுடுவதற்கு பயன்படுத்தப்பட்ட துப்பாக்கிகளில் ஒன்றுதான் கல்புர்கியை கொல்வதற்குப் பயன்படுத்தப்பட்டது என்பது தடயவியல் ஆய்வில் தெரியவந்துள்ளது. கவுரி லங்கேஷ் கொலையிலும் அதே துப்பாக்கிதான் பயன்படுத்தப்பட்டது என்பதற்கான சான்று தற்போது வெளிவந்துள்ளது.
பன்சாரே கொலையில் பயன்படுத்தப்பட்ட இரண்டாவது துப்பாக்கிதான் அதற்கு முன்னர் நரேந்திர தபோல்கரை கொல்ல பயன்படுத்தப்பட்டது என்பதும் தடயவியல் ஆய்வில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
முற்போக்காளர்களான நரேந்திர தபோல்கர், பன்சாரே, கல்புர்கி மற்றும் கவுரி லங்கேஷ் ஆகியோரின் கொலைகளில் ஒரே கும்பல்தான் ஈடுபட்டுள்ளது என்பது மிகத் தெளிவாக தற்போது நிரூபிக்கப்பட்டுள்ளது. படுகொலைகளை நிகழ்த்தியது, ஹிந்து ஜன் ஜக்ருதி சமிதியும் அதன் தாய் அமைப்புமான சனாதன் சன்ஸ்தாவும்தான் என்பது கைது செய்யப்பட்ட கிரிமினல்களின் வாக்குமூலங்களில் இருந்து தெரியவந்துள்ளது. ஏற்கனவே நரேந்திர தபோல்கர் கொலை வழக்கில் சனாதன் சன்ஸ்தாவின் தலைவனான விரேந்திர சிங் தவாடே கைது செய்யப்பட்டதன் மூலம் அது உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஆனால், சனாதன் சன்ஸ்தா கும்பல் இந்தியா முழுவதும் தடையேதுமின்றி சுதந்திரமாக உலா வருகின்றது. ஆர்.எஸ்.எஸ். தலைமையிலான காவிக் கும்பல் அரசு இயந்திரத்தின் அதிகாரத்தளங்களை எந்த அளவிற்கு ஆக்கிரமித்துள்ளது என்பதற்கான சான்று இது.
·         நன்றி: இந்தியன் எக்ஸ்பிரஸ்
மூலக்கட்டுரை:
Same gun used to kill Gauri Lankesh and MM Kalburgi: Forensic report


3 comments:

Dr.Anburaj said...

இசுலாம் உலக நாகரீகத்திற்கு கேடு ஊனம் விளைவிக்கும் காரணிகளில் முதலாவது.
குர்ரான் ( சர்வ வல்லமை படைத்த அல்லா என்ற கடவுள் இஸ்லாம் என்ற அமைதி மார்க்கத்தின் மூலம்……..)

அல்லாதான் ஒரே கடவுள் – இதை ஏற்காதவர் (சிலை வழிபாடு செய்கிறவர்கள்) அல்லாவை நம்பும் வரை விரோதிகள் – வெறுக்கத்தக்கவர்கள் (சுரா–60 ஆயத் – 4)
அப்படி நம்பிக்கை இல்லாதவர்களது மனத்தில் திகிலை ஏற்படுத்துவேன். தலையையும் மற்றும் கை கால்களைத் துண்டிப்பேன். (8 :12)
நீங்கள் கொலை செய்யவில்லை – அல்லாவிற்காக அதைச் செய்கிறீர்கள் – உண்மையான நம்பிக்கையுடன் இதைச் செய்பவரை அல்லா பரிசளித்து போற்றுவார் ( 8:15 -18 )
சிலை வழிபாட்டார்கள் அதை நிறுத்தும் வரை தொடர்ந்து போராடி அல்லாவின் புனித ராஜ்ஜியத்தை நிறுவுங்கள் (8 :39)
பார் ! எவர் எவர் அல்லாவின் போதனைகளை ஏற்க மறுக்கிறார்களோ அவர்களை தீயில் இடவேண்டும். அவர்களது சதை பகுதி எரிந்தபின் விடுவித்து அந்தச் சதை வளரும்வரை கொடுமைகளை அனுபவிக்கவேண்டும். பார் ! அல்லா உண்மையானவனே ! நேர்மையானவனே ! ( 4 :56 )
நெருப்பு குண்டங்கள் நம்பிக்கை இல்லாதவர்களைப் போடுவதற்காக என்றும் தயார் நிலையில் இருக்கவேண்டும். அவர்களை அதில்தூக்கி எறிந்து அவர்கள் தலையில் தண்ணீர் ஊற்றி வயிற்றில் எரிச்சலை எழுப்பவேண்டும். அவர்களைக் காய்ச்சிய இரும்பு தடி கொண்டு அடிக்கவேண்டும் ( 22 :19-21)
மேலே சொன்ன ஆறு ஆயத்துகள் ”ஒரு பானை சோற்றிற்கு ஒரு சோறு பதம்” இதைப் போல் 85 மனிதக்குலத்தையே அழிக்கவல்ல ஆயத்துகளை மேற்கோள் காட்டி 1985 இல் கல்கத்தா உயர்நீதிமன்றத்தில் குரானை தடை செய்ய சொல்லி ஒரு வழக்கு போடப்பட்டு சந்திசிரித்தது (கல்கத்தா குர்ரான் வழக்கு). ஸெக்யூலர் வியாதிகளின் எதிர்ப்பாலும், பல கலவரங்கள் நடந்ததாலும் இந்த வழக்கு பின்பு தள்ளி வைக்கப்பட்டது. இவை பொதுமக்களின் அமைதியையும், மத நம்பிக்கைகளையும், மத நல்லிணக்கத்தையும் கெடுக்கும் ஒரு தொற்றுநோய் கிருமி. ஆனால் இந்தப் புனித போர் அல்லாவின் கூற்றுப்படி நியாயமானதே என்று இஸ்லாமியர்கள் முழுமையாக நம்புகிறார்கள்.

இவ்வாறு குர்ரான் பல கொடூரமாகச் செயல்களை அப்பாவி மக்கள் மீது கட்டவிழ்த்துவிட தூண்டுதலாக இருக்கின்றது. இதனாலேயே இஸ்லாத்தை போதித்த முகமதுவின் குணநலங்களை ஹாதித் மூலம் நாம் பரிசோதனை செய்தே ஆகவேண்டும். உச்சிமுதல் உள்ளங்கால் வரை சிகரம் வைத்தாற்போல் எல்லா இஸ்லாமியர்களுமே அல்லாவை ஏற்க மறுப்பவர் கடவுளின் எதிரி, அவர்கள் தண்டிக்கப்பட வேண்டியவர்கள் என்பதைப் பரம்பரை பரபம்பரையாக உறுதியாக நம்புகிறார்கள். இந்தக் கீழ் தரமான நம்பிக்கை மனிதக்குல அழிவிற்கே இட்டுச்செல்லும்.janath

புனிதபோர் – பொற்கிழி (அல்லது போர் பரிசு)
மேலே சொன்ன இரண்டுமே பிரிக்கமுடியாதது. பொற்கிழி என்றால் போரில் கிடைத்த செல்வம் பிடித்த ஆண், பெண், குழந்தைகள் எல்லாம் போரில் ஈடுபடும் முஜாஹீதின்சை சாரும். இவர்கள் நாடோடி வழிப்போக்கர்களின் வண்டிகளையும் தாக்கி கொள்ளை அடிப்பார்கள். கிடைத்தவற்றில் 1/5 பாகம் கருணையுள்ளம் கொண்ட அல்லாவால் அவருடைய தூதுவரான முகமதுவிற்கு அளிக்கவேண்டும் மீதமுள்ள 4/5 பாகத்தைப் போரில் ஈடுபட்ட முஜாஹீதின்சை சாரும். இதைப்போல் பிடித்த பெண்களையும், அடிமைகளையும் பங்கு போடப்படட்டும். இதைத் தவிர அல்லா புனிதபோரில் இறந்தவர்களுக்குச் சிறிதும் தாமதிக்காமல் சொர்கத்தில் தயாராகப் பல இளம் கன்னிகா ஸ்தீரிகளையும், பச்சிளம் பாலகர்களையும், பலவிதத்தில் சுகபோகத்தில் திளைக்க என்னென்ன உண்டோ அத்தனையையும் வழங்குவார் (ஜனாத்)

Dr.Anburaj said...

இஸ்லாதை மறுப்பது என்பது உலகத்திலேயே நினைத்துக்கூடப் பார்க்கமுடியாத ஒரு கொடிய பாவமாகும் அப்படிப்பட்டவர்கள் கட்டாயம் தண்டனைப் பெறவேண்டும். தண்டனைகளை நிறைவேற்றப் போர் செய்தல், கொலைசெய்தல், கற்பழித்தல், அங்கஹீனம் செய்தல், கல்லால் அடித்துக் கொல்லுதல் போன்ற கொடூரங்களுக்கு அல்லா இசைந்துள்ளார். அல்லாவின் கனவை நிறைவேற்றுவதே புனிதபோர் (Ref: Islam – The Arab imperialism, Page 148)

Dr.Anburaj said...

26.3.2000 ஆண்டு வாட்டிகனால் வெளியிடப்பட்ட (Jesuit oath) ஜிசஸ் பிரமாணம் என்ன சொல்கிறது என்பதைப் பார்ப்போம்

கத்தோலிக்க ஜிசஸ் பிரமாணம்

(கிருஸ்துவத்தின் குறிக்கோள் உலக கிருஸ்துவ சாம்ராஜ்ஜியத்தை நிறுவுவது)

(நான் இதைச் சத்தியமாக அறிவிக்கிறேன்)

கத்தோலிக்க ஜிசஸ் பிரமாணம்

(கிருஸ்துவத்தின் குறிக்கோள் உலக கிருஸ்துவ சாம்ராஜ்ஜியத்தை நிறுவுவது)

(நான் இதைச் சத்தியமாக அறிவிக்கிறேன்)

நான் சந்தர்ப்பம் நேரும் பொழுதெல்லாம் கருணை பாராட்டாமல் மறைமுகமாகவோ அல்லது வெளிப்படையாகவோ வேறுமாற்ற கருத்து கொண்டவர்களை, புரோடெஸ்டன் மற்றும் பொதுவுடைமை பேசுபவர்களிடம் போர் குணம் கொண்டு அணுகுவேன். நான் அதற்காகவே தூண்டப்பட்டிருப்பதால் அவர்களை வேருடன் அழிக்கவும் அவர்களது வாடையே உலகில் இல்லாமல் செய்ய கடமைப்பட்டிருக்கிறேன்.
இந்தக் குறிக்கோளை அடைய நான் வயது, பால், இனம், சூழ்நிலை இவற்றைப் பற்றி எல்லாம் யோசிக்க மாட்டேன்.
மாற்று கறுத்துக்கொண்டவர்களை தூக்கில் இடவும், கொதிக்கும் தண்ணீரில் தோல் உரிக்கவும், கழுத்தைநெறித்து உயிரோடு புதைக்கவும், அவர்களது கற்பமான பெண்களின் வயிற்றைக் கிழித்து எடுத்து சிசுவை தலையைச் சுற்றி சுவரில் அரைவேன் அதனால் அவர்களது இனம் தொடர்ந்து வருவதை முற்றிலுமாக தடுப்பேன்.
இவற்றைச் செய்ய இயலாமல் நேரும் பொழுது அவர்கள் சமூகத்தின் உயர் பதவி, அந்தஸ்து, அதிகாரம் பெற்றவராக இருந்தாலும் மறைமுகமாக அவர்களுக்கு விஷம் கொடுப்பது, கயிற்றினால் தூக்கில் இடுவது, துப்பாக்கி முனையில் உள்ள கத்தியால் குத்திக் கொல்வது போன்ற காரியங்களில், சமயோசித புத்தியுடன் போப்பினால் ஆணையிடப்பட்டோ அல்லது அவரது மேல் அதிகாரிகளான ஜிசஸ் பிரமாணிகளான புனித நம்பிக்கை சகோதரர்களின் ஆணையின் பேரில் செய்து முடிப்பேன்.
சமீபத்தில் பாக்கிஸ்தானின் ஜமாத்-இ-இஸ்லாமி தலைவர் மௌலானா நவாப்சடா நபுல்லா காண் என்ன கூறியுள்ளார் என்பதைப் பார்ப்போம் (2008)

ஆண்களுக்கு, பெண்கள் நிகரானவர்கள், சமமானவர்கள் என்பது ஒரு முட்டாள்தனம்.
பெண்கள் வீட்டில் உள்ளேதான் எப்பொழுதும் இருக்கவேண்டும்.
ஷரியா சட்டப்படி பெண்களுக்கு ஓட்டுப் போடும் உரிமைகிடையாது.
முஸ்லீம் நாடுகளில் வாழும் முஸ்லீம் அல்லாதவர்கள் ஜிசாஸ் வரி செலுத்தவேண்டும்
எல்லா இந்திய இந்துக்களும் முஸ்லீம்களாக மாற்றப்படவேண்டும்.
நமது ஒரேகுறிக்கோள் இடைவிடாது ஜிகாத் செய்வதுதான்
இந்தியாவையும், இலங்கையையும், பர்மாவையும் 100 சதவிகித இஸ்லாமிய நாடாக மாற்றவேண்டும்.
தீவிரவாதம் ஒன்றுதான் இதற்கு உகந்த ஒரு நல்ல உபாயம்
தீவிரவாதத்தால்தான் பாகிஸ்தானில் பல இந்துக்கள் முஸ்லீம்களாக மாறினார்கள்.
முகமது தீவிரவாரத்தால்தான் இஸ்லாமைப் பரப்பினார் அதன்படியே நாமும் நடப்போம்.
எந்த முஸ்லீமாவது பல தெய்வங்களை வணங்குபவர்களுடன் உறவுகொண்டால், அவர்களும் காபீர்களாகதான் கருதப்படுவார்கள்.
அதைப்போல் முஸ்லீம்கள், முஸ்லீம்கள் அல்லாத நாடுகளில் குடியேறினால் அவர்களும் காபீர்களாகதான் கருதப் படவேண்டும்.
ஜமாத் மறுபடியும் அடிமைத்தனத்தை பாகிஸ்தானில் கொண்டுவரும்.
பிடிபட்ட எல்லா இந்துக்களும் அடிமைகளாக ஆக்கப்படுவார்கள்.
இந்து கோவில்களால் இஸ்லாமிய நிலங்கள் மாசுபடுகிறது.
இஸ்லாமிலிருந்து மதம் மாறுபவன் கொல்லப்படவேண்டும்.
உலகின் அனைத்து அறிவு பொக்க்ஷியங்களும் குரானிலும், ஹாதித்திலும் உள்ளது.
விஞ்ஞானமும், தொழில்முன்னேற்றமும் நாகரிகமான வாழ்வதற்கு எதிர் போக்கானது.
இஸ்லாத்தில் படிப்பது என்பது குரானில் உள்ளதைப் படிப்பதுதான்.
புகைப்படம் எடுப்பதை ஜமாத் தடைசெய்யும்.
அரேபிய மொழி பாகிஸ்தானின் தேசிய மொழியாக அறிவிக்கப்படும்.
செக்யூலரிசம் பேசுபவர்கள் காபீர்கள்.
எனவே இஸ்லாமும், கிருஸ்துவமும் மனிதநேய மதங்களே அல்ல இரண்டுமே அரசியல் நோக்கத்தோடு தங்களது சாம்ராஜ்ஜியத்தை உலகில் நிறுவ, போர் குணங்கள் கொண்ட ஒரு கொடூரமான மதங்கள். இவர்கள் மனித உரிமை என்ற நமது அரசியல் சாஸனத்தில் கூறியுள்ள முகவுரைக்கு எப்படி எதிர் மறையாக இருக்கிறார்கள் என்பதைப் பார்ப்போம்.