Followers

Monday, September 09, 2019

அன்பு ராஜூக்கு சுவனப்பிரியனின் பதில்....



//இந்து முன்னணி போன்ற அமைப்புகள் ”இந்து” என்ற கருத்தை முன் வைத்து மக்களை ஒருங்கினைக்க ஒற்றுமை படுத்த தொந்தரவு செய்ய வேண்டும்.
ஏதோ படுபாவமான காரியம் என்பதுபோல் கருத்துக்களை பதிவு செய்ய வேண்டும்.
தாங்கள் மட்டும் பாக்கிஸ்தான் நாட்டுக்காரனிடம் இசுலாம் என்ற கருத்தின் அடிப்படையில் உறவாட ஒன்றாய் விருந்து உண்ண வேண்டும். // - அன்பு ராஜ்
------------------------------------------------------
சுவனப்பிரியனின் பதில்:
மீண்டும் தவறான புரிதல்...
இந்து முண்ணனி, ஆர்எஸ்எஸ் போன்றவை எந்த வகையில் இந்துக்களை ஒன்றிணைக்கிறார்கள்? இஸ்லாமியர்களை ஒழிக்க வேண்டும்: இஸ்லாமியர்களின் சொத்தக்களை சூறையாட வேண்டும்: இஸ்லாமியர்களை கொல்ல வேண்டும் என்ற நோக்கத்திற்காக மட்டுமே இந்துக்களை ஒன்றிணைக்கிறார்கள்.
அதே ஆர்எஸ்எஸ் தலித்களையும் பார்பனர்களையும் ஒன்றாக ஒரே தட்டில் அமர்ந்து சாப்பிட சொல்ல முடியுமா? ஒரு தலித்துக்கு அக்ரஹாரத்தில் வீடு கொடுத்து விடுவார்களா? ஒரு பார்பனர் ஒரு தலித்துக்கு தனது மகனையோ மகளையோ மனமுவந்து திருமணம் முடித்துக் கொடுப்பாரா? இதற்கு ஆர்எஸ்எஸ் உதவ முன் வருமா? ஒற்றுமை என்பது இவ்வாறு வந்தால்தான் இந்து மதம் வளர்ச்சியுறும்.
கிருபானந்த வாரியாரும், குன்றக்குடி அடிகளாரும் உண்மையான ஈடுபாட்டோடு இந்து மதத்தை வளர்க்க பாடுபட்டார்கள். ஆனால் ராம கோபாலனோ, ஹெச்.ராஜாவோ தங்களின் பார்பன ஆதிக்கம் வெளிப்பட்டு; விடக் கூடாது என்பதற்காக இந்து முஸ்லிம் கலவரத்தை தூண்டப் பார்க்கிறார்கள். இரண்டுக்கும் நிறைய வித்தியாசம் உண்டு.
பிராமணனும், சூத்திரனும் ஒன்றுதான். பேதப்படுத்தும் மனு தர்மத்தை கொளுத்தி போடுவோம் என்று ஆர்எஸ்எஸ் சொல்லுமா? ஒருக்காலும் சொல்ல மாட்டார்கள். இவ்வாறு வேதங்களிலேயே பேதங்களை வைத்துக் கொண்டு இந்து ஒற்றுமை பற்றி பேசி என்ன பயன்?
இந்த வருடம் திருப்பூரில் சில நாட்களுக்கு முன் விநாயக சதுர்த்திக்கு ஒரு துணி ஆலையில் சென்று நன்கொடை 10000 கேட்டுள்ளனர். அதனை நிர்வாகம் தர மறுக்கவே மறு நாள் அந்த நிறுவனம் இந்து முண்ணனி அமைப்பினரால் தாக்கப்பட்டுள்ளது. பாதிப்படைந்தது ஒரு இந்து. உண்மையான ஆன்மீக வாதி நன்கொடை தரவில்லை என்பதற்காக தாக்குவானா? அவர்களின் குறிக்கோள் பக்தி அல்ல: அதை வைத்து பணம் சம்பாதிக்க வேண்டும். இந்நிலையில் இந்து மதம் எப்படி வளரும்?
இதெல்லாம் வாழ்நாள் பார்பன அடிமையான அன்பு ராஜூக்கு விளங்கப் போவதில்லை. ஆர்எஸ்எஸ் என்ன ஷாகாவில் என்ன சொல்லிக் கொடுத்ததோ அதை அப்படியே ஒப்புவிக்கும் பரிதாபத்திற்குரிய ஜீவன். அவரை அவர் போக்கிலேயே விட்டு விடுவோம். 


3 comments:

Dr.Anburaj said...

பார்பனர்களை ஒழித்து விட்டால் இந்துமதத்தை அழித்து இந்தியாவை பாக்கிஸ்தான் போல ஆப்கானிஸதான் போன்ற யேமன் போன்ற சிரியா போன்ற மனித மிருகங்கள் மனித இரத்தம் ஆறாய் ஓடும் நாடாய் மாற்றி விடலாம் அரேபிய மத அடிமைகள் மட்டும் வாழும் நாடாக்கி இந்து பெண்களை வைப்பாட்டிகளாக வைக்க சுவனப்பிரியனுக்கு ஆசை.எனவேதான இப்படிப்பட்ட பதிவுகளை செய்கின்றாா்.
இந்து முன்னணி போன்ற அமைப்புகள் ”இந்து” என்ற கருத்தை முன் வைத்து மக்களை ஒருங்கினைக்க ஒற்றுமை படுத்த தொந்தரவு செய்ய வேண்டும்.

தாங்கள் மட்டும் பாக்கிஸ்தான் நாட்டுக்காரனிடம் இசுலாம் என்ற கருத்தின் அடிப்படையில் உறவாட ஒன்றாய் விருந்து உண்ண வேண்டும். - அன்பு ராஜ்.
----------------------------------------------------------------------------
பார்பனர்கள் பிறசாதி மக்களை சுத்திரா் என்று கருதி தங்களை தனித்து உயா்ந்தவர்கள் என்று காட்டி ஆதிக்கம் செலுத்துகிறார்கள் .அதுபொல முஸ்லீம்களும் பிறசமூக மக்களை காபீர் என்று இழிவு படுத்தி கொல்ல துடிக்கின்றார்கள்.பார்பனன் தன்னை உயா்ந்தவன் என்று இறுமாந்து வாழ்வதாக கொண்டால் அரேபிய அடிமையான முஸ்லீம் பிற மக்களை அழிக்க கொல்ல துடிக்கின்றான். புல்வாமா வில் குண்டை கட்டி தன்உயிரை கொடுத்து காபீர்களை அழிக்கும் துணிச்சலை குரானும் ஹதீஸ்கள்தான் அளித்துள்ளது.
------------------------------------------------------------------------------
முஸ்லீம்கள் தங்கள் பெண்களை ஆதிதிராவிட சக்கிலிய இந்து ஆண்களுக்கு திருமணம் செய்து கொடுப்பார்களா ?
....நகைக்கடை உாிமையாளா் இறைச்சி கடை நடத்தும் ஒரு இளைஞனுக்கு தனது மகளை திருமணம் செய்து கொடுப்பாரா ? மாட்டாரே.
பார்பனர்களை ஒரு விரலால் குற்றம் சுமத்தும் போது 4 விரல்கள் தங்கள் மாா்பை காட்டுவதை மறைக்க வேண்டாம்.அரிசனங்கள் சக்கிலிய பெண்ணை திருமணம் செய்வாரகளா ?சாதி தீண்டாமை பேசும் தேவா் நாடாா் அரிசனங்கள் பள்ளா் போன்ற சாதிக்கார்களை கண்டித்து பதிவு போடாமல் பிறாமணர்களை மட்டும் கண்டி்த்து பதிவு போடுவது ஏன்.

-------------------------------------------------------------------------------
இந்து முன்னணி ஆா்எஸஎஸ ஆகிய அனைத்து இயக்கங்களும் பிற்பட்ட வகுப்பினர்கள் அதிகம் கொண்ட இயக்கங்கள் ஆகும். நிர்வாகிகள் அனைவரும் பார்பனர்கள் அல்ல.இந்து பண்பாடு போதிக்கப்படுகின்றது. இந்து பண்பாடு காக்கப்படுகின்றது. இந்தியா காக்ககப்படுகின்றது. சீன போரின் போது ஆாஎஸஎஸ தொண்டர்களை இந்திய ராணுவத்தோடு இணைந்து அரிய தொண்டுகள் செய்தார்கள். அதனால் (பெரும் மகிழ்ச்சி அடைந்த மாமா நேரு) குடியரசு தின அணிவகுப்பில் ராணுவத்தோடு ஆாஎஸஎஸ தொண்டர்களையும் அணிவகுத்து செல்ல மத்திய அரசு அனுமதி அளித்தது.அனைத்து சாதிமக்களின் நலனை காக்கும் பேரியக்கம் இந்து முன்னணி -ஆாஎஸஎஸ .
இந்தியாவின் ஜனாதிபதி ஆாஎஸஎஸ தொண்டர்.
இந்தியாவின் பிரதமா் ஆாஎஸஎஸ தொண்டர்.
இந்தியாவின் துணை ஜனாதிபதி ஆாஎஸஎஸ தொண்டர்.
இந்தியாவின் பல மூத்த அமைச்சா் பெருமக்கள் ஆாஎஸ்எஸ் தொண்டர்கள்.
-------------------------------------------------------------------------
ஒரு பானைக்கு ஒரு சோறு பதம்.நல்ல மாட்டுக்கு ஒரு சுடு.

Dr.Anburaj said...


இன்று பொதுவாக பார்த்தால் ஏராளமான குடும்பங்களில் மருமகள் வேறு சாதியைச் சோ்ந்தவளாக இருக்கின்றாள்.பணம் கல்வி போன்றவை சமநிலையில் வரும் போது சாதி கலப்பு இயல்பாக ஏற்பட்டு விடும்.அது இன்று முழு வீச்சில நடந்து கொண்டிருக்கின்றது. எனது தெருவில் ஒரு முஸ்லீம் பெண் இந்துவாக மாறி இந்து நாடாா் பையனை திருமணம் செய்து அருமையாகவாழ்ந்து வருகின்றாா்.
அருள்மிகு பத்ரகாளி அம்மன் வரலாறு என்ற புத்தகம் கிடைத்தால் படித்துபாருங்கள்.ஒரு நாடாா சாதி பெரியவருக்கு 7 ஆண்குழந்தைகள். பெரியவனானதும் 7 ஆண் மக்களும் 7 சாதி பெண்களைத்தான் திருமணம் செய்வார்கள். அதில் ஒருத்தி பிறாமணத்தி.

வரலாறு தெரியாமல் அரேபிய காட்டுமிராண்டிகளின் வரலாறு போல்தான் இந்துக்களின் வரலாறும் இருக்கும் என்ற ஊகத்தில் கதைக்கக் கூடாது.

வாசிப்பவர்களை ஏமாற்றாதீர.

Dr.Anburaj said...

நிர்வாண கோல ஆடை அணியும் பெண், அல்லாஹ்வின் கோபத்தின் அடையாளமாவாள்!!

Rochdi Amrane என்பவர் தனது முகநூலில் இவ்வாறு கூறுகின்றார்:-
மறைக்கப்பட வேண்டிய அங்க அவயவங்களை வெளிப்படுத்தும் வண்ணம் அமைந்திருக்கும் பெண்ணின் நிர்வாண கோல ஆடை, அவள் மீது அல்லாஹ்வின் கோபம் உண்டாகியிருக்கிறது என்பதற்கான ஆதாரமாகும். ஏனெனில், (சுவர்க்கத்தில் சுகபோகம் அனுபவித்துக்கொண்டிருந்து, ஷைத்தானின் தூண்டுதலினால் அல்லாஹ்வுக்கு மாறு செய்த) ஆதம், மற்றும் ஹவ்வா (அலைஹிமஸ்ஸலாம்) ஆகியோர் மீது அல்லாஹ் கோபம் கொண்ட வேளையில்தான் அவ்விருவருடைய ஆடைகளையும் அவர்களை விட்டும் கழட்டி, அவ்விருவருடைய வெட்கஸ்தலங்களையும் அவ்விருவருக்கும் அவன் காட்டினான்” என்ற அல்லாமா பின் பாஸ் (ரஹிமஹுல்லாஹ்) அவர்களின் இக்கூற்று என்னில் தாக்கம் செலுத்தி வேதனைப்படுத்தியது.

அல்லாஹ் மீது ஆணையாக! இக்கூற்று உள்ளங்களை உசுப்பி, கண்களை கண்ணீர் வடிக்கச் செய்கின்றது; அத்துடன் எமது நிலையையும் மீட்டிப் பார்க்க வைக்கின்றது. நிர்வாண கோலமும், அலங்காரங்களை வெளிக்காட்டித் திரியும் நிலையும் அதிகரித்துக் காணப்படும் வேதனையான நிகழ்வையே இன்று நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

கண்ணியத்திற்குரிய என் சகோதரனே!
சில ஆசாபாசங்கள், மனவிருப்பங்கள் இருக்கின்றன; அவற்றை இவ்வுலகில் அல்லாஹ் தடைசெய்து, பின்னர் அவற்றிற்கு ஒப்பானதை, அல்லது மதுபானம் போன்று பெயரில் அதற்கு ஒப்பாக இருப்பதை சுவர்க்கத்தில் அவன் ஆகுமாக்கியிருக்கின்றான். ஆனால், ஆடை களைந்து நிர்வாண கோலத்தில் இருக்கும் இந்த விடயத்தைத் தவிர! இதை இவ்வுலகிலும் அல்லாஹ் தடைசெய்து, சுவர்க்கத்திலும் தடுத்தே இருக்கின்றான். மாறாக, (ஆடை மூலம்) மறைத்திருப்பதை சுவன இன்பங்களில் ஒன்றாகவும் அவன் ஆக்கியிருக்கின்றான். அல்லாஹ் கூறுகிறான்: “நிச்சயமாக அதில் நீர் பசித்திருக்கமாட்டீர். மேலும், நீர் நிர்வாணமாகவும் இருக்கமாட்டீர்!” (அல்குர்ஆன், 20:118)

சகோதரனே! உன்னைநான் எச்சரிக்கின்றேன்…..
இந்த நிர்வாண கோல ஆடை பெருநாட்களிலும், திருமண வைபவங்களிலும், வேறு சந்தர்ப்பங்களிலும் கண்ணுக்குத் தெரியும் வகையில் அதிகமாகவே வெளிப்படத் தொடங்கிவிட்டன. எனவே, என் அன்புச் சகோதரர்களே! உங்கள் ஆண் பிள்ளைகளுக்கும், உங்கள் பெண் பிள்ளைகளுக்கும், உங்கள் குடும்பத்தினருக்கும் பெருநாள் ஆடைகளைத் தெரிவு செய்யும் விடயத்தில் நீங்கள் கவனம் செலுத்துங்கள்! ஏனெனில், அவர்கள் உங்கள் பொறுப்பின் கீழ் இருக்கின்றார்கள். அவர்கள் குறித்து அல்லாஹ்வின் முன்னிலையில் நீங்கள் விசாரிக்கப்படுவீர்கள்”!

قال الأخ Rochdi Amrane في فيس بوك:-
அல்லாஹ் கூறுகிறான்: “ஆதமே! நிரந்தர (வாழ்வைத் தரும்) மரத்தையும், அழிவில்லாத ஆட்சியைக் குறித்தும் உமக்கு நான் அறிவித்துத் தரட்டுமா? எனக்கூறி ஷைத்தான் அவரிடம் ஊசலாட்டத்தை உண்டுபண்ணினான். அவ்விருவரும் அதிலிருந்து உண்டதும் அவ்விருவரது வெட்கத்தலங்கள் அவ்விருவருக்கும் வெளிப்பட்டன. சுவனத்தின் இலைகளால் அவ்விருவரும் தம்மை மூடிக்கொள்ள முயன்றனர். ஆதம் தனது இரட்சகனுக்கு மாறு செய்தார். அதனால் அவர் வழி தவறினார். பின்னர் அவரது இரட்சகன் அவரைத் தேர்வு செய்து, அவரை மன்னித்து, நேர்வழியும் காட்டினான்”(அல்குர்ஆன், 20:120 – 123)