Followers

Tuesday, September 17, 2019

‘#தலித்மக்கள் கிராமத்துக்குள் அனுமதிக்கப்படுவதில்லை’

பா.ஜ.கவின் மூத்த தலைவரும் சித்ராதுர்கா தொகுதியின் எம்.பியுமாக உள்ளார் #நாரயணசாமி. நேற்று அவர், பெருநிறுவன சமூகப் பொறுப்பு(Corporate Social Responsibility) திட்டத்தின் கீழ் வீடற்றவர்களுக்கு வீடு கட்டித் தருவதற்காக தும்கூர் மாவட்டத்திலுள்ள பாவாகடா தாலுகாவில் #யாதவர்கள் அதிகம் வசிக்கும் கோலாரஹட்டி கிராமத்துக்குச் சென்றுள்ளார்.
அவருடன் இணைந்து, பைகான் மருந்து நிறுவன ஊழியர்களும் சென்றுள்ளனர். எம்.பி நாரயணசாமி கிராமத்துக்குச் சென்றபோது, கிராம மக்கள் அவரை கிராமத்துக்குள் அனுமதிக்க மறுத்துள்ளனர்.
அதற்கு விளக்கமளித்த கிராம மக்கள், ‘#தலித்மக்கள் கிராமத்துக்குள் அனுமதிக்கப்படுவதில்லை’ என்று விளக்கமளித்துள்ளனர்.

என்னதான் இந்துத்வாவுக்கு மாடாக நீ உழைத்தாலும் உனது சாதியை காட்டி தூரமாக்கும் வர்ணாசிரமம். இதை இந்த மக்கள் உணரும் நாள் எந்நாளோ?


No comments: