Followers

Thursday, September 12, 2019

வேதையில் ஒரு நெகிழ்ச்சி சம்பவம்

வேதையில் ஒரு நெகிழ்ச்சி சம்பவம்
வேதாரண்யம் பக்கம் அகஸ்தியன் பள்ளியை சேர்ந்த செந்தில் என்பவர் 11/09/2019அன்று படுகொலை செய்யப்பட்டார்.
இவருக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர்.இவரின் மனைவி மற்றும் தாயாரும் படுகாயமடைந்து திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் உள்ளனர்.
இந்நிலையில் சம்பவம் நடந்த பகுதிக்கு வந்த வேதாரண்யம் *DSP திரு.A.சபியுல்லா* அவர்கள் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு ஆறுதல் கூறி அவரின் மூன்று குழந்தைகளுக்கும் கல்விச் செலவை ஏற்றுக் கொள்வதாக கூறினார்.
மேலும் இறந்த செந்தில் அவர்களின் இறுதி சடங்கிற்கு தனது மணிபர்சை எடுத்து அதில் உள்ள மொத்த பணத்தையும் கொடுத்தார்.
அந்த நிகழ்வை பார்த்த அவ்வூர் மக்கள் நெகிழ்ச்சியுடன் கண்ணீர் மல்க DSP சபியுல்லா அவர்களுக்கு நன்றி கூறினார்கள்.


No comments: