Followers

Sunday, September 08, 2019

ஷாஹில் என்ற இளைஞனை அடித்தே கொன்றனர் இந்துத்வாவாதிகள்

சில நாட்களுக்கு முன்பு டெல்லியில் ஷாஹில் என்ற இளைஞனை அடித்தே கொன்றனர் இந்துத்வாவாதிகள். அதனை ஊடகங்களில் படித்திருப்போம். அந்த இளைஞன் வைத்திருந்த பெயர் ஷாஹில் . ஆனால் அவன் இந்து பிற்படுத்தப்பட்ட சாதியை சேர்ந்தவன்.
ஷாஹில் தனது நண்பர்களோடு வீதியில் சென்றுள்ளான். அப்போது அங்கு வந்த ஆர்எஸ்எஸ் குண்டர்கள் 'இது பார்பனர்கள் வாழும் தெரு. இங்கு எப்படி நீங்கள் வரலாம்' என்று கேட்டுள்ளனர். ஆர்எஸ்எஸ் குண்டர்கள் நிறைய மது அருந்தியிருந்தனர். கன்னத்தில் அறைந்தும் உள்ளனர். 'இனி வர மாட்டோம். நாங்கள் செல்கிறோம்' என்று சொல்லியுள்ளனர் ஷாஹிலின் நண்பர்கள்.
'ஷாஹில்... வா போகலாம்' என்று அவனது நண்பர்கள் அழைத்துள்ளனர். ஷாஹில் என்ற பெயரைக் கேட்டவுடன் அவன் முஸ்லிம் என்று நினைத்து இரும்பு கம்பி கொண்டு கடுமையாக தாக்கியுள்ளனர். ரத்த வெள்ளத்தில் தனது வீட்டுக்கு ஓடி வந்த ஷாஹில் தனது தாயின் மடியில் உயிரை விட்டுள்ளான்.
ஷாஹிலின் தாயும் தங்கையும் கூறுகிறார்கள் 'முஸ்லிம் இளைஞனாகவே இருக்கட்டுமே. அதற்காக மிருகத்தை போலவா ஒரு மனிதனை அடிப்பார்கள்? அவர்கள் மனிதர்களா? மிருகங்களா? அந்த முஸ்லிம் இளைஞனுக்கும் என்னைப் போன்ற தாயும் தங்கையும் இருக்க மாட்டார்களா? அவர்களும் என்னைப் போல் மகனின் பிரிவால் கதறி அழ மாட்டார்களா?' என்கின்றனர்.
முன்பெல்லாம் 'பார்பனர்கள் வசிக்கும் அக்ரஹாரத்துக்குள் ஏன் நுழைகிறீர்கள்?' என்ற கேள்வி வராது. பெரியார் அம்பேத்கார் போன்ற சீர் திருத்தவாதிகள் அவர்களை கொஞ்சம் அடக்கியே வைத்திருந்தனர். தற்போது பிஜேபி ஆட்சிக் கட்டிலில் உள்ளதால் தைரியமாக வர்ணாசிரமத்தை கையில் எடுக்க ஆரம்பித்துள்ளனர். தமிழகத்திலும் ஆங்காங்கே தைரியமாக சாதி பேதங்களை பகிரங்கமாக பேச ஆரம்பித்துள்ளனர்.சமீபத்தில் ஒரு பார்பனர் நாய்களுக்கு சாதி இல்லையா? மனிதர்களுக்குள் இருந்தால் என்ன? என்ற ரீதியில் பேசியதையும் பார்தோம். இதனால் பாதிப்படைவது இந்து பிற்படுததப்பட்ட மக்களே. ஆனால் இந்துத்வாவின் உண்மை முகம் அறியாது அதனை தூபம் போட்டு வளர்ப்பதும் பிற்படுத்த மற்றும் தலித் இந்துக்களே! 
ஆக்கம்: சுவனப்பிரியன்


No comments: