Followers

Saturday, September 28, 2019

இந்தி சமஸ்கிருதத்தை எங்கள் மீது திணிக்க வேண்டாம்!"



"தமிழ்நாட்டில் 50 லட்சத்துக்கும் மேல் முஸ்லிம்கள் உள்ளனர். அதில் 12 லட்சம் பேரே உருது பேசும் மக்கள். பெரும்பான்மையினர் தமிழை தாய் மொழியாகக் கொண்டவர்கள்.
கன்னியாகுமரி மாவட்டம் ஆளூர் எனது ஊர். திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் இருந்து போராடி, தாய் தமிழகத்துடன் இணைந்த தமிழர்கள் நாங்கள். குமரி மாவட்டத்தில் உள்ள முஸ்லிமல்லாத மக்களுக்கு எப்படி உருது தெரியாதோ அப்படியே முஸ்லிம்களுக்கும் தெரியாது.
தமிழ்நாட்டில் உருதுவை தாய்மொழியாகக் கொண்டோரின் தமிழ்ப் பங்களிப்பும் சிறப்பானது. கவிக்கோ அப்துல் ரகுமான் அதற்குச் சான்றாக வரலாற்றில் வாழ்கிறார். தமிழ் இலக்கியத்திற்கு புதிய வடிவங்களைத் தந்த ஆளுமை அவர். அவர்போல் எண்ணற்றவர்கள் உண்டு. அவரது தந்தை கவிஞர் மஹதி உட்பட.
அரபு என்பது உலக முஸ்லிம்களுக்கு வேதம் அருளப்பட்ட மொழி. எனவே அதில் ஓதுகின்றனர். ஆனாலும், திருக்குர்ஆன் தமிழாக்கம் செய்யப்பட்டுள்ளது. பெரியாரின் நண்பர் அப்துல் ஹமீது பாக்கவி அவர்களே திருக்குர்ஆனை முதன்முதலில் தமிழாக்கம் செய்தார். குர்ஆனை அரபியில் ஓதுவார்களே தவிர, அதில் சொல்லப்பட்டுள்ள அனைத்தையும் தமிழில் படித்தே இங்குள்ள முஸ்லிம்கள் அறிந்து கொள்கின்றனர். மேலும், பள்ளிவாசல்களில் சொற்பொழிவும் வேண்டுதலும் தமிழிலேயே நடக்கிறது.
தமிழில் இலட்சக்கணக்கான கலைச் சொற்களை தொகுத்தளித்த தமிழறிஞர் மணவை முஸ்தபா, திருக்குறளை போற்றிப் பரப்பிய முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் ஆகியோரின் பெயர்கள் அரபுப் பெயர்களே. அதற்காக அவர்களின் தமிழ்ப்பற்று கேலிக்குரியதோ கேள்விக்குரியதோ அல்ல. அவர்கள் போலவே தான் நாங்களும்.
வேணுகோபாலன் அவர்களே!
அரபியையும் உருதுவையும் உங்கள் மீது யாரும் திணிக்கவில்லை. அதுபோல் இந்தி சமஸ்கிருதத்தை எங்கள் மீது திணிக்க வேண்டாம்!"
(ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி கல்லூரி சமஸ்கிருதப் பேராசிரியர் வேணுகோபாலன் அவர்களுக்கு Twitter-இல் நான் அளித்த பதில்) Aloor Sha Navas


1 comment:

Dr.Anburaj said...


இந்தியாவின் மொழி அனைத்தும் இந்தி சமஸ்கிருதம் தமிழ் உருது ...தெலுங்கு மலையாளம்
அனைத்தும் நமதுமொழிதான்.

முஸ்லீம்கள் இந்தி எதிர்ப்பு களத்தில் இல்லை.

வாழ்க்கையில் முன்னேற பல மொழிகள் தேவை என்பதை அவர்கள் அறிவாரகள்.சிங்கப்புா் மலேசியா இலங்கை சீனா மியான்மா் அரபு நாடுகள் என்று பல நாடுகளிலும் இந்திய முஸ்லீம்கள் வாழ்ந்து வருகின்றனா்.தொழில் செய்து வருகின்றார்கள்.

ஆனால் தமிழகத்தில் திமுக காரர்கள் சில குறைக்குடஙகள் இந்தி எதிர்ப்பு போராட்டத்தை நடத்தி தமிழன் முன்னேற தடையாக உள்ளார்கள்.
திமுக தலைவா் ஸ்டாலனின் தங்கை கனிமொழி ஒரு விருது பெற்ற ஹிந்தி மொழி புத்தகத்தை தமிழில் மொழிபெயா்த்துள்ளாா்.சரளமாக ஹிந்து பேசுவார்.
அதுபோல் தயாநிதி கலாநிதி மாறன் மற்றும் குடும்பத்தினா் துரை முருகன் மற்றும் அவரது மனைவி மருமகள் போன்றவர்குளம் ஹிந்தி சரளமாக பேசுவார்கள்.
ஸ்டாலின் குடும்பத்தினா் நடத்தும் சன்சைன் பள்ளிகளில் ஹிந்தி கற்றுக் கொடுக்கப்படுகிறது.
சன்டிவி ஒளிபரப்பு தமிழ் தெலுங்கு கன்னடம் ஹிந்தி உட்பட பல மொழிகளில் நடத்தப்படுகிறது.
இந்த திமுக கூட்டம் தங்களுக்கு ஆதாயம் என்றால் ஹிந்தி உடபட அனைத்து மொழிகளையும் கற்றுக் கொள்ளும்.ஆனால் பாமர தமிழனுக்கு அரசு பள்ளியில் கற்றுக் கொடுத்தால்தான் கற்றுக் கொள்ள முடியும்.

பள்ளிகளில் 6-8 வகுப்புகளில் மிகக்குறைந்த அளவு ஹிந்தி படிக்க உதவலாம்.
தோ்ச்சிக்கு இதில் பெறும் மதிப்பெண் கணக்கில்எடுக்க வேண்டாம்.
அண்ணா சொன்னாா் என்று சொல்லி முட்டாள்தனமானவாதத்தை பேசுவது சரியல்ல.அதிமுக அரசம் திமுக வின் சத்தமான பிரச்சாரத்திற்கு முன் அடி பணிந்து விட்டது.
ஹிந்தி படிக்க அனைத்து குடும்பங்களும் ஆர்வத்துடன் உள்ளார்கள்.

இந்தி எதிர்ப்பு போராட்டத்திற்கு ஆதரவு கிடைக்காது. கிடைக்காது.