Followers

Monday, September 09, 2019

தமிழர்களைப் பார்த்து கோபப்படுகிறார் பழ கருப்பையா!

"நாங்கள் இந்துக்கள் இல்லை... எங்களை ஏன் இந்துவாக ஆக்கினீர்கள்? நாங்கள் சிந்து சமவெளி நாகரிகத்துக்கு சொந்தமானவர்கள்.
பாரதத்தாய் என்று பாரதி தவறாக பாடினான். நாங்கள் தமிழ்த்தாய்க்கு பிறந்தவர்கள். எங்களை பாரதத்தாயோடு தேவையில்லாமல் முடிச்சு போடாதீர்கள்.
இந்து அற நிலையத் துறை என்று ஏன் பெயர் வைக்க வேண்டும்? திராவிட சமயங்களின் அறநிலையத் துறை என்றல்லவா இருக்க வேண்டும்? இவ்வாறு இந்து என்று பெயர் வைத்துக் கொண்டு இந்துத்வாவை எப்படி எதிர் கொள்ளப் போகிறீர்கள்?
அமெரிக்கா சென்று விட்டு திரும்பிய விவேகானந்தர் திருவனந்தபுரத்தில் இந்து மத பெருமைகளைப் பற்றி பேசுகிறார். அப்போது ஒரு குரல் 'நாங்கள் இந்துக்கள் அல்ல' என்று ஒலிக்கிறது. 'யாரது?' என்று கேட்கிறார் விவேகானந்தர். 'ஆம் நாங்கள் இந்துக்கள் அல்ல. எங்கள் மதம் சைவ மதம். எங்களுக்கென்று தனி மதம் உண்டு' என்கிறது அந்த குரல். அந்த குரலுக்குரியவர் மனோன் மணியம் சுந்தரம் பிள்ளை. இதனால் அதிர்ச்சியடைந்த விவேகானந்தர் அதோடு கூட்டத்தை முடித்துக் கொண்டு திரும்பி சென்று விட்டார்."
இதைப் பற்றியெல்லாம் சிந்திக்காத தமிழர்களைப் பார்த்து கோபப்படுகிறார் பழ கருப்பையா!


1 comment:

Dr.Anburaj said...

விவேகானந்தர் திருவனந்தபுரத்தில் இந்து மத பெருமைகளைப் பற்றி பேசுகிறார். அப்போது ஒரு குரல் 'நாங்கள் இந்துக்கள் அல்ல' என்று ஒலிக்கிறது. 'யாரது?' என்று கேட்கிறார் விவேகானந்தர். 'ஆம் நாங்கள் இந்துக்கள் அல்ல. எங்கள் மதம் சைவ மதம். எங்களுக்கென்று தனி மதம் உண்டு' என்கிறது அந்த குரல். அந்த குரலுக்குரியவர் மனோன் மணியம் சுந்தரம் பிள்ளை. இதனால் அதிர்ச்சியடைந்த விவேகானந்தர் அதோடு கூட்டத்தை முடித்துக் கொண்டு திரும்பி சென்று விட்டார்."
------------------------------------------------------------------------
பச்சை பொய்.
சுந்தரனாா் ஆரிய திராவிட இனவாதத்தை விவேகானந்தா் முன் வைத்தாா்.விவேகானந்தா் மறுத்து ஆரிய திராவிட இனவாதம் ஒரு கட்டுக்கதை.இந்துக்களிடம் கோஷ்டி மோதலை உண்டாக்கி குளிா்காய நினைக்கும் விரோதிகளால் உருவாக்கப்பட்டது. வாருங்கள் 10000 பேர்கள் கூடியிருக்கும் ஒரு கூட்ட்த்திற்கு போவோம்.தங்கள் ஆரியர்களையும் திராவிடர்களையும் பிரித்துக் காட்ட முடியுமா ? என்று கேட்டாா். இந்து எழைகளுக்கு கல்வி சுகாதாரம் பண்பாடான வாழ்க்கை அமைய உதவுங்கள். மேலும் பிரிவினை வாதங்களை முன் வைத்து மக்கள் ஒருவருக்கொருவா் வெறுக்க புதிய புதிய காரணங்களை உருவாக்க வேண்டாம் என்று கூறி தனது உரையை முடித்துக் கொண்டாா்.
நிச்சயம் சுந்தரனாா் அவர்களால் பதில் அளிக்க இயலாது. ஆனால் சிலா் முரட்டுதனமாக வாதம் செய்வார்கள். சுந்தரனாரும் அப்படியிருந்திருக்கலாம். விவேகானந்தரின் தியாகம் தவம் ஒழுக்கம் ஆளுமை ஆகியவற்றில் மிகப்பெரியவா்.அவரோடு சுந்தரனாரை ஒப்பிட முடியாது. கருப்பாயா திமுக கட்சியில் இருக்கின்றாா்.சகவாசம் அவரை நிறையவே கெடுத்துள்ளது.துக்ளக் பத்திரிகையில் எழுதிய ஆண்டு விழாக்களில் முன்னிலை பெற்ற கருப்பையாவிற்கும் திமுக கருப்பையாவிற்கும் நிறைய வேறுபாடு.வடஇந்தியா ஹிந்தி ஹிந்து சைவம் இந்திமாழி தமழ் என்று பேதங்களை பற்றி அதிகம் பேசுகின்றாா். பண்பாடு இழந்தவா்.
-----------------------------------------------------------------
சுந்தரனாா் போற்றிய சைவ மதத்தை ஏற்று
சுவனப்பிரியன் சைவ மதத்திற்கு மாறத்தயாரா ?

----------------------------------------------------------------------------
ஆரிய திராவிட இனவாத கருத்துக்கள் இருக்க வேண்டிய
இடம் குப்பைதொட்டி- அண்ணல் அம்பேத்காா்.
-----------------------------------------------------------------------------
சைவம் வைணவம் என்ற பேதங்களை மறந்து சாதிகளை மறந்து மாநில வேறுபாடுகளை மறந்து மக்கள் அனைவரும் ஒரு கருத்தின் கீழ்வர வேண்டும் என்பது காலத்தின் சவால் தேவை.ஆகவேதான் விவேகானந்தா் இந்து என்றாா். இதை குறை கூறுகின்றவன் நீசன்.
----------------------------------------------------------------------------------
அரேபியர்கள் அரபி அல்லாதவர்கள் ..........இப்படி ஆயிரம் பேதங்களை மறந்து இசுலாத்தில் இணையுங்கள் என்றாா் முஹம்மது.
--------------------------------------------------------------------------
முஹம்மது பேதங்களை மறந்து இசுலாத்தில் இணையுங்கள் என்றால் சரி.
சுவாமி விவேகானந்தா் பேதங்களை மறந்து இந்துவாக பரிணாமம் பெறுங்கள் என்றால் வேம்பாக கசக்கின்றது ஏன் ?
இந்துக்களை முட்டாள்களாக்க எத்தனை பேர்கள் கிளம்பியிருக்கின்றார்கள் பாருங்கள்