Followers

Thursday, September 26, 2019

20,000 கோடியை இழந்த எல்‌.ஐ‌.சி... என்ன காரணம்?



2 ஆண்டுகளில் 20,000 கோடியை இழந்த எல்‌.ஐ‌.சி... என்ன காரணம்? - அம்பலமான அதிர்ச்சித் தகவல்!
கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் எல்‌ஐ‌சி நிறுவனத்திற்கு 20,000 கோடி வரை இழப்பு ஏற்பட்டிருப்பதாக புள்ளிவிவரங்கள் வெளியாகி இருக்கின்றன.
எல்.ஐ.சி நிறுவனம் நாட்டில் அதிகப்படியான வாடிக்கையாளர்களைக் கொண்டுள்ள இன்சூரன்ஸ் நிறுவனம். 1956ம் தொடங்கப்பட்ட இந்த நிறுவனந்தின் மொத்த மதிப்பு 31 லட்சம் கோடியாகும். மோடி ஆட்சிக் காலத்தில் மத்திய அரசின் பங்குகள் வீழ்ச்சி அடையும்போது அதைச் சரி செய்ய மத்திய அரசின் அழுத்தம் காரணமாக அந்த நிறுவனங்களில் பங்குகளை எல்‌ஐ‌சி வாங்க மத்திய அரசு தொடர்ந்து அழுத்தம் கொடுத்து விருக்கிறது.
இதன் ஒரு பகுதியாக ஐ‌டி‌பி‌ஐ வங்கியில் பெரும்பான்மை பங்குகளை (21,624 கோடி) 2018 ஜூன் மாதம் வாங்குவதாக எல்‌ஐ‌சி அறிவித்தது. 2017 அக்டோபர் மாதம் ஜெனரல் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷனில் 5,641 கோடியும், 2018 மார்ச் மாதம் ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்தில் 2,843 கோடியும் முதலீடு செய்தது. தேசிய தெர்மல் பவர் கார்ப்பரேஷனில் 2017ம் ஆண்டு 4,275 கோடியை முதலீடு செய்திருந்தது.
ஆனால் முதலீடு செய்யப்பட்ட நிறுவனங்களின் மதிப்பு தற்போதைய காலகட்டத்தில் மிகக் குறைந்து இருக்கிறது. ஐ‌டி‌பி‌ஐ வங்கியில் 21,624 கோடி முதலீடு செய்த நிலையில் அதன் தற்போதைய மதிப்பு 10,967 கோடியாக குறைந்து இருக்கிறது. ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் 5,641 கோடி முதலீடு செய்யப்பட்ட நிலையில் தற்போதைய மதிப்பு 2,979 கோடியாக குறைந்து இருக்கிறது.
இவற்றின் மூலம் கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் எல்‌ஐ‌சி நிறுவனத்திற்கு 20,000 கோடி வரை இழப்பு ஏற்பட்டிருப்பதாக புள்ளிவிவரங்கள் வெளியாகி இருக்கின்றன.
இதுகுறித்து இன்சூரன்ஸ் ஊழியர்கள் சங்கத்தின் ஆனந்திடம் கேட்டபோது "மத்திய பா.ஜ.க அரசு ரிசர்வ் வங்கியை மிரட்டி எப்படி 1 லட்சத்து 76 ஆயிரம் கோடி பெற்றதோ அதேபோல தான் எல்‌ஐ‌சியிடம் இருக்கக்கூடிய பணத்தை வைத்து நிறுவனங்களின் பங்குகள் வீழ்ச்சி அடையும்போது அந்தப் பங்குகளை வாங்கும்படி மிரட்டப்பட்டது.
அந்த பங்குகள் எல்ஐசி-யால் வாங்கப்படும்போது வீழ்ச்சி அடைந்த பங்குகளின் விலை அதிகரிக்கும்; அதன் காரணமாக முதலீட்டாளர்கள் முதலீடு செய்வார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. இதற்காக எல்‌,ஐ‌.சியின் பணம் வெளியில் சென்றது. மத்திய பா.ஜ.க அரசின் இந்த வற்புறுத்தல் காரணமாக இரண்டு ஆண்டுகளில் இத்தகைய கடும் இழப்பை எல்‌ஐ‌சி சந்தித்து இருக்கிறது.” எனத் தெரிவித்தார்.
- சி.ஜீவா பாரதி
தகவல் உதவி
கலைஞர் செய்திகள்
26-09-2019


4 comments:

Dr.Anburaj said...

தியானம் மூலம் கிடைக்கும்நன்மைகள்!

தியானம் என்பது கவனக் குவிப்பைக் கட்டுப்படுத்துவதன் மூலம் ஒரு தனி நபரின் பிரக்ஞையை உயர்த்தும் உத்தியே என அறிவியல் விளக்குகிறது. ஆனால் ஹிந்து தத்துவமோ ஒருவரின் ஆன்மாவை உணர்வதற்கான வழிமுறையே தியானம் என வரையறுக்கிறது. தியானத்தின் பலன்கள் சொல்ல முடியாத அளவு ஏராளம். சிலவற்றை மட்டும் இங்கே பார்க்கலாம்.

1)பல்வேறு காரணிகளின் அடிப்படையில் தியானமானது ஒருவருக்கு ஆக்கபூர்வமான தொடர் வரிசை விளைவுகளை ஏற்படுத்துகிறது.

2) நடத்தையைச் சீராக்கும் சிகிச்சையில் இது தன்னைத் தானே கட்டுப்படுத்தும் ஒரு சிறந்த வழிமுறையாக ஆகிறது

3) கவலையை விரட்டுகிறது.

4) ஒருவனின் உண்மையாக தற்போது இருக்கும் ஆன்ம அடையாளத்தை இலட்சியபூர்வமான ஆன்ம அடையாளத்துடன் சமப்படுத்துகிறது.

5) அனைத்தும் உள்ளடக்கிய மருந்தாக அமைகிறது.

6) அகங்காரத்தைப் போக்குகிறது.

7) தனிநபரை எப்போதும் நிகழ்காலத்தில் வாழ வைக்கிறது.

8) எண்ணங்களைத் தளர்த்தி வெளியேற்றும் உத்தியாக அமைகிறது.

9) ஆரோக்கியத்தின் அற்புதத் திறவுகோலாக அமைகிறது.

10) தியானம் மூலமாக உடல் ரீதியான அற்புத ஆற்றல்களைப் பெற முடிகிறது.

11) தியானம் மூலமாக தானியங்கி நரம்பு மண்டலத்தை நினைத்தபடி கட்டுப்படுத்த முடிகிறது.

12) மன அழுத்தம் மூலமாக வரும் அனைத்துச் சிக்கல்களையும் போக்குகிறது.

13) மனித ஆற்றலைப் பற்றிய விரிவான காட்சியைத் தருகிறது.

14) வேக யுகத்தின் தொழில்நுட்ப கலாசாரத்தின் கொடுமைகளை நீக்குகிறது.

15) வாழ்க்கையின் மதிப்புகளை அறிய வைக்கிறது.

Dr.Anburaj said...

16) கற்பதற்கு மிகவும் சுலபமானது.

17) பயிற்சி செய்ய மிகவும் சுலபமானது.

18) பணச் செலவில்லை.

19) வயது வரம்பில்லை.

20) ஆண், பெண் பாகுபாடு இல்லை.

21) எங்கு வேண்டுமானாலும் தியானம் செய்யலாம்.

22) எப்பொழுது வேண்டுமானாலும் தியானம் செய்யலாம்.

23) இனம், மதம், மொழி, நாடு என்று எந்த பேதமும் கிடையாது.

24) அந்தஸ்து ஒரு தடையில்லை.

25) உடல் ரீதியான முன்னேற்றம் தருகிறது.

26) மனரீதியான முன்னேற்றம் தருகிறது.

27) ஆன்மீக ரீதியான முன்னேற்றம் தருகிறது.

28) மனிதனின் பாரம்பரியத்துடன் தொடர்பு படுத்தும் அனைத்து நற்குணங்களையும் தியானம் உள்ளடக்கியுள்ளது.

29) தியானத்தின் போது இன்பமான, ஆச்சரியகரமான அனுபவங்கள் கிடைக்கிறது.

30) நீடித்த ஆரோக்கியமான வாழ்வு உறுதி செய்யப்படுகிறது.

31) கெட்ட கனவுகளை நீக்குகிறது.

32) இரவில் நன்கு தூங்க முடிவதை உறுதி செய்கிறது.

33) மன அழுத்தம் ஏற்படுகையில் உருவாகும் தாடை, முதுகு, தோள்கள் ஆகியவற்றில் ஏற்படும் இறுக்கம் வராது.

34) எப்போதும் சாந்தியுடன் இருக்க முடிகிறது.

35) தெளிவாக, தூய்மையாக, மலர்ச்சியுடன் எப்போதும் இருக்க முடிகிறது.

36) வெட்கப்படுவது போய் விடுகிறது.

தியானம் தரும் ஏராளமான நற்பயன்களில் சில மட்டுமே மேலே தரப்பட்டுள்ளது.

இன்று அறிவியல் அங்கீகரிக்கும் அற்புத வழிமுறையாக தியானம் அமைகிறது.

ஏற்றத்திற்கும், வளத்திற்கும், வளர்ச்சிக்கும், அமைதிக்கும், மலர்ச்சிக்கும் உற்ற துணை தியானமே!

Dr.Anburaj said...

பூமி கோளவடிவமானது.

என கண்டுபிடித்தவர்கள் அயல்நாட்டினர். நம் வரலாற்று புத்தகத்தில் நாம் படிப்பது இதுவே.

ஆனால்……

#பூகோல_சர்வதோ_விர்தா.

-எல்லா நிலையிலும் பூமி வட்டமாய் உள்ளது.

#ஆரியபட்டியம்_கோலபாத_சுலோகம் 9,
கிமு 6000 ஆண்டுகளுக்கு முன். நம் இந்திய அறிஞர்கள்.

ஆனா பூமி கோளவடிவமானது என முதலில் சொன்னது கெப்ளர், கோப்பர்னிகஸ், கலிலியோ. 17 ஆம் நூற்றாண்டில் கண்டுபிடித்தார்களாம்.

#பன்கா_மகாபூதா_மயா_சத்ரங்கானா_பஞ்சரே_மகிகோளா.

-கோளவடிவமான பூமி பஞ்சபூதங்களால் உருவாகி, நட்சத்திரங்களால் அழகுசெய்யப்பட்டு கூண்டுக்குள் தொங்கும் இரும்பு உருண்டையாக வானத்தில் தொங்குகிறது.
*கிமு 6000 வருடங்களுக்குலமுந்தைய வானவியல் அறிஞரான #வராகமிகிரர் தனது #பஞ்சசிந்தாதி என்ற வானவியல் சாத்திரத்தில் கூறியுள்ளார்.

#சக்ரநாஸ்ஹா_பரிணாம்_பிரித்வியா

-கோளவடிவமான பூமியின் மேற்பகுதியில் மக்கள் வசிக்கிறார்கள்.
*ரிக்வேதம்-1338

#மத்யி_சமன்தண்தாசியா_பூகோள_வியோமீனி_திஸ்தாதி.

-பிரபஞ்சத்தின் நடுவில் கோளவடிவமான பூமி உறுதியாக நிற்கிறது.

Dr.Anburaj said...

கிமு இருபதாயிரம் ஆண்டுகளுக்கு முன்பான #சூரியசித்தாந்த என்ற பண்டைய நூல்.

கிமு பதினோறாம் நூற்றாண்டைச் சார்ந்த #பாஸ்கர_ஆச்சார்யா தனது #லீலாமத் என்ற புத்தகத்தில் லீலாவதி என்கிற தன் மாணவி கேட்ட கேள்விக்கு கீரயழ்கண்டவாறு பதிலளிக்கிறார்………

உனது கண்கள் என்ன பார்க்கிறதோ அது உண்மையானதல்ல, நீ பார்ப்பதுபோல் பூமி தட்டையானதல்ல. அது கோளவடிவமானது.
ஒரு பெரிய வட்டத்தை வரைந்துவிட்டு அதன் சுற்றளவில் நான்கில் ஒரு பங்கு தூரத்தில் நின்றுகொண்டு பார்த்தால் அது நீண்ட கோடாகவே தெரியும். ஆனால் உண்மையில் அது ஒரு வட்டம். அதைப்போலவே பூமியும் வட்ட வடிவம் கொண்டது. எனக் கூறினார்.

11 ஆம் நூற்றாண்டில் நம் தேசத்தின் வானியலில் மிகச்சிறந்த விஞ்ஞாணி ஆரியபட்டரின் ஆரியபட்டியம் என்ற வானியல் சாஸ்திர நூல் லத்தீன் மொழியில் மொழி பெயர்க்கப்பட்டது. அயல்நாட்டு விஞ்ஞாணிகள் இந்நூலை அதகளவில் விரும்பிக்கற்று அவர்கள் மொழிகளில் வெளியிட்டனர் அதுவே காலப்போக்கில் அந்நாட்டு அறிஞர்கள் பெயரிலேயே அறியப்பட்டு நம்தேசத்திற்கும் வந்திருக்கிறது.

ஆரியபட்டர் தன் நூலில் சூரிய சந்திர கிரணத்துக்கான காரணத்தையும் கூறியுள்ளார்.

#சடையாட்டி_சசி_சூர்யம்_சகினாம்_மகதி_க_பூச்சயா

-ஆரியபட்டியம் கோல் பாதம் சுலோகம்37

*சூரியனை சந்நிரன் மறைக்கும்போது சூரிய கிரகணம் தோன்றுகிறது.
பூமி சந்திரனை மறைக்கும்போது சந்திர கிரகணம் தோன்றுகிறது.

மேலும் அவர் கிரகணங்கள் எப்போதெல்லாம் உருவாகும் என மிகத்துல்லியமாக கணித்துள்ளார்.

பூமி சூரியனை சுற்றிவர 365 நாட்கள், 12 ஆரியபட்டர் நிமிடம், 30 விநாடிகள் எடுத்துக்கொள்வதாகவும்,
பூமி தன்னைத்தானே சுற்றிக்கொள்ள 23 மணி, 56 நிமிடம், 4.1 விநாடி எடுத்துக்கொள்வதாகவும் விளக்கியுள்ளார்.

இந்திய மொழியில் ஜாக்ரபி என்ற சொல் பூகோள சாஸ்திரத்தையே குறிக்கிறது. 'பூகோளம்' என்ற சொல்லிற்கு 'கோள வடிவமான பூமி' என்பதே பொருள். இதன்மூலம் அயல் நாட்டவன் கல்வியை இன்னதென்றே அறிவதற்கு முன்பே நாம் வானியல் புள்ளியல் கணிதம் என அனைத்திலும் கோலோச்சினோம் என்பதை மறந்துவிட்டு சாதியின் பெயராலும் மதத்தின் பெயராலும் நம் வரலாறுகளை நம் சாதனைகளை நம் கண்டுபிடிப்புகளை நாம் நம் சந்ததிகளுக்கு சொல்ல மறந்ததால் மறுத்ததால் வந்த விணை இன்று நாம் பெற்ற பிள்ளைகளுக்கு அயலவனின் இனிசியலை போட்டுக்கொண்டு நாமே வளர்த்துவரும் அவலநிலை ஏற்பட்டுள்ளதை மறுக்கமுடியாது.

இனியும் அந்த அவலம் நீடிக்காமல் கற்றரிந்த பெருமக்களே அறிவள்ள மாணவ இளைஞர்களே நம்வரலாறை முதலில் ஆதிமுதல் அந்தம்வரை தெளிவாய் கற்போம், பின்பு அவற்றை நம் சந்ததிகளுக்கு கற்பிப்போம்.