Followers

Wednesday, September 25, 2019

இது *பரங்கிப்பேட்டை* *முஸ்லீம் ஜனாஜா கூடம்*

இது *பரங்கிப்பேட்டை* *முஸ்லீம் ஜனாஜா கூடம்* சம்மந்தமான... காணொளி உங்கள் பார்வைக்கு...
*இன்ஷாஅல்லாஹ்* *இதுபோன்ற ஒரு வசதியை ஒவ்வொரு ஊரிலும் வல்ல இறைவன் ஏற்படுத்த வாய்ப்பு வசதிகளை உண்டாக்கி தருவானாக!
தற்போதய கால கட்டத்தில் இடப் பற்றாக்குறை எல்லா வீடுகளிலும் உள்ளது. முன்பு போல் வீட்டை விசாலமாக கட்ட பொருளாதார வசதி எல்லோருக்கும் வந்து விடுவதில்லை. சில வீடுகளில் இறந்த உடலை எப்படி குளிப்பாட்டுவது என்பது பெரும் பிரச்னையாக உள்ளது. இதனை நான் நேரிலேயே பார்த்துள்ளேன்.
எனவே வசதியுடையவர்கள் இரண்டு மூன்று பேர் சேர்ந்தாலே இறந்தவர்களை குளிப்பாட்டும் இடம் கட்டி விடலாம். உலக முடிவு நாள் வரை இதன் பலன் இதனை கட்டியவர்களை போய்ச் சேரும். இங்கு சவுதியில் குறிப்பிட்ட பள்ளிகளில் குளிப்பாட்டும் வசதி: பிறகு இறந்த உடலை உறவினர்களை பார்க்க தனி அறை என்று சகல வசதிகளும் செய்யப்பட்டிருக்கும். பள்ளி நிர்வாகிகள் இதற்கு ஒத்துழைப்பு தந்தால் அனைத்து ஊர்களிலும் இது சாத்தியப்படும்.




1 comment:

Dr.Anburaj said...

பதிய முயற்சி. வீடுகளின் அளவுகள் சுருங்கிவிட்டது.ஜனநெருக்கடி மிகுந்து விட்டது. எனவே இதுபோன்ற ஏற்பாடுகள் அவசியம்.
----------------------------------------------------------------------
இதற்கு பிறகு-- முஸ்லீம்கள் என்றால் பிரியாணி இறைச்சி மாட்டு இறைச்சி பள்ளிவாசல் மதரசா கபரஸ்தான் என்ற அடையாயத்தை தாண்டி இபபடி ஒரு பரிணாமத்திற்கு அரேபிய மத சமூகம் தயாராக வேண்டும்.
1.பள்ளிவாசல் தோறும் சக்தி வாய்ந்த தொலை நோக்கு கருவி ஒன்று அமைக்க வேண்டும். குழந்தைகள் வானத்தை ஆய்வு செய்து நல்லமுறையில் வானவியல் -Astronomy - (ஜோதிடம் அல்ல) - படிக்க உதவ வேண்டும்.பிறை தெரிந்தது-தெரியவில்லை என்று அடிக்கடி அரேபிய மத மக்கள் பெரும் சண்டை போடுகின்றார்கள்.இதை அது ஒரு முடிவுக்கு கொண்டு வரும்.
2.நீட் தோ்வு பயிற்சிக்கு தேவையான புத்தகங்கள் நிறைய கொண்ட ஒரு ”பொது நூலகம்” அமைக்க வேண்டும்.
3. பெண்கள் புப்பந்து விளையாட மைதானங்கள் அமைக்க வேண்டும். பெண்கள் விளையாட வேண்டும். உடல் ஆரோக்கியம் பேண இது மிக அவசியம்.யோகா கற்றுக் கொடுக்கப்பட வேண்டும். ஆண்களுக்கும் விளையாட தேவையான ஏற்பாடுகளைச் செய்யலாம்.தொளுகை எப்படி வலியுருத்தப்படுகின்றதோ உடல் ஆரோக்கியத்திற்கு விளையாட்டு வலியுருத்தப்பட வேண்டும்.
4.ஆர்மோனியம் வீணை மிருதங்கம் வயலின் கீ-போர்ட ......போன்ற இசைக்கருவிகள் மற்றும் தமிழ் இசை கற்றுக் கொடுக்க வேண்டும்.கொலைகாரா்கள் உருவாவதை இசை தடுக்கும். இசுலாமியப் பாடல்கள் ப ல எழுதி அதைச் சுரப்படுத்தி கற்றுக் கொடுக்கலாம்.


அரேபியனின் ஜெராக்ஸ் நகலாக இருப்பதுதான்
தீன் -ஈமான் என்ற நிலை மாற வேண்டும்.