Followers

Saturday, September 28, 2019

ரியாத்துக்கு மீண்டும் வருகை புரிந்த திருச்சி சிவா!

ரியாத்துக்கு மீண்டும் வருகை புரிந்த திருச்சி சிவா!
சென்ற வியாழக்கிழமை இரவு முப்பெரும் விழாவில் கலந்து கொள்ள திருச்சி சிவா எம்பி அவர்கள் ரியாத் மாநகரம் வந்திருந்தார். பணி முடிந்த கையோடு நண்பர் ராஜாவோடு விழா நடக்கும் அரங்கத்துக்கு சென்றோம். சென்ற 10 நிமிடத்தில் சிவா அவர்கள் உரையாற்றத் தொடங்கினார். அதிலிருந்து சில துளிகள்...
'ரியாத்துக்கு இரண்டாம் முறையாக வருகிறேன். பழகிய இடத்துக்கு வருவது போன்ற உணர்வு எனக்கு ஏற்பட்டது. பல நாடுகளில் இது போன்ற கூட்டங்களுக்கு 10 அல்லது 20 பேர்தான் வருவர். ஏனெனில் அவர்களின் வேலைகள் அப்படி. ஆனால் தமிழ் ஆர்வத்தால் தழிழை சுவைக்க வேண்டும் என்ற ஆவலால் இங்கு அரங்கம் நிறைந்து காணப்படுகிறீர்கள்.
திமுக மருத்துவர் அணியானது 400 பேருக்கு மேல் அவரவர் கேம்ப்களில் சென்று சிகிச்சை அளித்த விபரம் எனக்கு உற்சாகத்தை தந்தது. இது பற்றி தளபதியிடமும் பேசுகிறேன். திமுக என்ற பேரியக்கமானது அரசியல் கட்சி என்பதை விட சுய மரியாதை மற்றும் சமூக விழிப்புணர்விலும் முதன்மையாக செயல்படக் கூடியது என்பது இதிலிருந்து விளங்கும். சுய மரியாதை திருமணங்கள் முன்பு நடந்தாலும் அது சட்டமாக்கப்படாமல் இருந்தது. அண்ணா முதல்வராக பதவியேற்றவுடன் சுய மரியாதை திருமணங்கள் சட்டபூர்வமாக்கப்பட்டன. இது போன்று அரசியல் களம் மட்டுமல்ல சமூக சீர்திருத்தங்களிலும் திமுக முனைப்பாக செயல்பட்டு வந்துள்ளது.
நபிகள் நாயகம் பிறந்த நாட்டுக்கு செல்வது என்பதில் நான் பெருமிதம் கொள்கிறேன். பெண்களுக்கு சொத்துரிமையை உலகில் முதலில் பெற்றுத் தந்தவர் நபிகள் நாயகம் அவர்கள். பிறகு தமிழகத்திலும் தந்தை பெரியாரால் முன் எடுக்கப்பட்டு இன்று பலரும் பலனடைகின்றனர். இந்திய நாடும் சவுதி அரேபியாவும் தொழில் துறையிலும் நட்புடன் மிக நெருங்கி வருவது வரவேற்கத்தக்கது. இது தொடரவேண்டும்.
தேர்தல் வேலைகள், முப்பெரும் விழாக்கள், பாராளுமன்ற பணிகள் என்று பல பணிகள் காத்துக் கிடப்பதால் அதிக நாள் உங்களோடு செலவிட முடியாமைக்கு வருந்துகிறேன். அடுத்தடுத்து நமது தொடர்புகள் தொடரும்' என்று சுருக்கமாக முடித்துக் கொண்டார்.
---------------------------------------
'ஒன்றே குலம் ஒருவனே தேவன்: யாதும் ஊரே யாவரும் கேளீர்' என்று கணியன் பூங்குன்றனார் அன்றே கூறி விட்டு சென்றுள்ளார். எனவே தான் அந்த வழியில் வந்த சிவா அவர்களுக்கு நபிகள் நாயகத்தின் மேல் இந்த அளவு பற்று உள்ளது. நபிகள் நாயகமும் மொழி வெறி, இன வெறி, போன்றவற்றை தனது காலடியில் போட்டு மிதிப்பதாக சொன்னார்கள். இந்த பரந்த உலகத்தின் அனைத்து இடங்களும் எனக்கு இறைவனை தொழும் இடமாக ஆக்கப்பட்டுள்ளது என்றும் சொன்னார்கள். எனவே தான் எந்த நாட்டில் அநீதி இழைக்கப்பட்டாலும் முதல் குரல் முஸ்லிமுடைய குரலாக இருக்கிறது. பிறருக்கு உதவுவதில் அவர்களே முன் நிற்பதன் காரணம் உலக மக்கள் அனைவரும் ஒரு தாய் தந்தைக்கு பிறந்தவர்கள் என்ற எண்ணம் உள் மனதில் இருப்பதால்தான்.





1 comment:

Dr.Anburaj said...

ஒன்றே குலம் ஒருவனே தேவன்: யாதும் ஊரே யாவரும் கேளீர்' என்று கணியன் பூங்குன்றனார் அன்றே கூறி விட்டு சென்றுள்ளார்.

இதை எப்படியோ படித்து விட்டுதானமுஹம்மது தனது போதனைகளை துவக்கியிருப்பாரோ ?
----------------------------------------------------------------------------------

எனவே தான் அந்த வழியில் வந்த சிவா அவர்களுக்கு நபிகள் நாயகத்தின் மேல் இந்த அளவு பற்று உள்ளது.

ஒரு புண்ணாக்கும் கிடையாது.முஹம்மது பேரைச் சொல்னால் துலுக்கன் சுலபமாக ஏமாறுவான் என்பது திமுக காரன் கணக்கு.
---------------------------------------------------------------------------------

நபிகள் நாயகமும் மொழி வெறி, இன வெறி, போன்றவற்றை தனது காலடியில் போட்டு மிதிப்பதாக சொன்னார்கள். இந்த பரந்த உலகத்தின் அனைத்து இடங்களும் எனக்கு இறைவனை தொழும் இடமாக ஆக்கப்பட்டுள்ளது என்றும் சொன்னார்கள்.

பொய்.காபீர்களை கொல்லுங்கள்.அரேபியாவைவிட்டு துரத்துங்கள் என்றாா்.அபுதாவத் 3029--3039.மதவெறியை கற்றுக் கொடுத்தாா்.நாடுகளை பிடிக்கும் பேராசையை கிளறிவிட்டாா்
----------------------------------------------------------------

எனவே தான் எந்த நாட்டில் அநீதி இழைக்கப்பட்டாலும் முதல் குரல் முஸ்லிமுடைய குரலாக இருக்கிறது. பிறருக்கு உதவுவதில் அவர்களே முன் நிற்பதன் காரணம் உலக மக்கள் அனைவரும் ஒரு தாய் தந்தைக்கு பிறந்தவர்கள் என்ற எண்ணம் உள் மனதில் இருப்பதால்தான்.
பச்சை பொய் - உலகில் பயங்கரவாத தாக்குதல்கள் நடத்துவதில் முன்னிலை முஸ்லீம்கள்.ஆட்சி செய்வதில் வஞ்சகம் சன்னி ஆதரவு நிலை ஷியாக்களை ஒழிக்க வேண்டும் இந்து காபீர்களை ஒழிக்க வேண்டும் என்பது போன்ற நிலைகள் மனித இனத்தின் பகையாக இசுலாம் உள்ளது.