Followers

Wednesday, August 21, 2019

ப.சிதம்பரத்தை பாசிஸ்டுகள் குறி வைப்பதற்கு இதுவும் ஒரு காரணம்.

ப.சிதம்பரத்தை பாசிஸ்டுகள் குறி வைப்பதற்கு இதுவும் ஒரு காரணம்.
மதிப்பிற்குரிய ப.சிதம்பரம் அவர்களை ஆர்எஸ்எஸ்/பாஜக பாசிஸ்டுகள் வேட்டையாட துடிப்பதின் உண்மையான பின்னனி ;
2006 முதல் 2008 வரை மாலேகான்,அஜ்மீர் தர்கா,மக்கா மசூதி, சம்ஜோத்தா எக்ஸ்பிரஸ், என்று நடந்த தொடர்குண்டு வெடித்தது இதனை நடத்தியது, முஸ்லிம்கள் அல்ல என்ற உண்மையை மாவீரன் ஹேமந்த் கார்கரே வெளிகொண்டு வந்து சனாதன சங்கபரிவார தீவிரவாதிகளான பிரக்யா சிங் தாக்கூர் (தற்போது போபால் எம்பி) சுவாமி அப்ரூவர் அசிமானந்தா, மாடாதிபதி தயானந்த பாண்டே,ராணுவ கர்னல் ஸ்ரீகாந்த் புரோஹித் உள்ளிட்டவர்களை கைது செய்த நிலையில்,
#தீவிரவாதத்தின்உண்மைமுகத்தை வெளிச்சத்திற்கு கொண்டுவந்து அதுவரை நிற்காத குண்டு வெடிப்புகளை நிற்க வைத்து #காவி_பயங்கரவாதம் என்ற சொல்லாடலை முன் வைத்து நாடாளுமன்றத்தில் அன்று விவாதமாக்கியது உள்துறை அமைச்சராக இருந்த ப.சிதம்பரம் அவர்கள்தான்.
இது சனாதன பாஸிஸ்டுகளை கடுங்கோபம் கொள்ளச் செய்தது,
ஏனெனில் தொடர்குண்டுகளை வைத்து முஸ்லிம்களை கொன்று அதற்கு பலி ஆடுகளாக முஸ்லிம் இளைஞர்களையே கைது செய்து கொடும் இரத்த சகதியில் இந்துராஷ்டிரம் என்ற பெயரில் பிராமண ராஜ்ஜியத்தை அமைத்திட வேண்டும் என்று போட்ட திட்டம் ப.சிதம்பரத்தால் பெரும் பின்னடைவை சந்தித்தது.
தேசத்தந்தை மகாத்மா காந்தியை படுகொலை செய்து கோட்சே கும்பல் சிக்கியது,அதன்பிறகு சங்பரிவார சனாதன பாஸிஸ்டுகள் கையும்களவுமாக சிக்கியது இந்த வழக்கில்தான்
அதனால் ஏற்பட்ட கடும்கோபம் முக்கிய பின்னனி.
ஹேமந்த் கர்கரே வெளி கொண்டு வந்த இந்து தீவிரவாதிகளை அன்றே சரியான முறையில் மக்கள் மன்றத்தில் கொண்டு சென்று இருந்தால் இன்று சிதம்பரம் இது போன்ற சிக்கல்களை சந்திக்க அவசியம் இருந்திருக்காது. சில நேரங்களில் காங்கிரஸ் பாஸிஸ்டுகளிடம் சமரசம் செய்து கொள்வதாலேயே பல குளறுபடிகள் நடந்து விடுகிறது.


1 comment:

Dr.Anburaj said...

பதவியை பயன்படுத்தி கொள்ளைபணம் சம்பாதித்து வெளிநாடுகளில்

500-1200 கோடி அளவிற்கு சொத்துக்களை வாங்கி குவித்துள்ளாா்கள் சிதம்பரமும் அவரது புத்திரனும். ஏன் ஜாமின் கேட்டு உச்ச நீதி மன்றத்தை நாடுகின்றாா் ?

இதுவரை எத்தனை ஜாமீன் மனுக்களை தாக்கல் செய்துள்ளாா் ?

எத்தனை முறை ஜாமீன் பெற்றுள்ளாா் என்ற விபரங்களை மறைப்பது ஏன் ?

உப்பைத்தின்றவன் தண்ணீா்குடிககிறான்.குடிக்கட்டும்.