Followers

Wednesday, August 21, 2019

பாஜக எம்எல்ஏ ராஜா சிங்கின் மதவெறி பேச்சு!

பாஜக எம்எல்ஏ ராஜா சிங்கின் மதவெறி பேச்சு!
'ஒரு இந்து ஒரு ரூபாய் பொருள் வாங்க வேண்டும் என்றாலும் இந்துவின் கடையில் வாங்க வேண்டும். 100 கோடி இந்துக்கள் என் பேச்சைக் கேட்டீர்கள் என்றால் பாக்கி உள்ள 25 கோடி பேர் கை கூப்பி இந்து மதத்தை ஏற்றுக் கொள்வர்.... ஜெய் ஸ்ரீராம்'
அதாவது முஸ்லிம்களை வறுமையில் தள்ளினால் இந்து மதத்தை ஏற்றுக் கொள்வார்களாம். இந்த மடையனுக்கு நாம் சொல்வோம்... எந்த அளவு முஸ்லிம்கள் வறுமை கோட்டுக்கு கீழ் செல்கிறார்களோ அந்த அளவு அவர்களின் இஸ்லாமிய நம்பிக்கையானது மேலும் உறுதியாகும். கர்பிணி பெண்ணின் வயிற்றை கிழித்து சிசுவை நெருப்பில் இட்டீர்களே.... அதை விடவா ஒரு கொடுமை உலகில் நடந்து விடப் போகிறது? அந்த குஜராத்தில் ஒரு முஸ்லிமையாவது இந்துவாக மாற்ற முடிந்ததா? வறுமையில் இன்று முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளார்களே அவர்களில் ஒருவராவது இந்து மதத்தை ஏற்றார்களா? காரணம் இந்து மதத்தில் உள்ள பார்பனிய ஆதிக்கம். இன்று இஸ்லாத்தில் நாங்கள் சுய மரியாதையோடு வாழ்ந்து வருகிறோம். தீண்டாமை முற்றாக ஒழிக்கப்பட்ட இஸ்லாத்தில் உள்ளோம். எல்லோரும் ஆதமுடைய பிள்ளைகள் என்ற நம்பிக்கையில் அன்பு செலுத்தி வாழ்கிறோம். வர்ணாசிரம கொள்கையை காலடியில் போட்டு மிதித்து நெஞ்சை நிமிர்த்தி சுய மரியாதையுடன் வாழ்ந்து வருகிறோம். வறுமை வயப்பட்டு எங்களின் உயிரையும் விடுவோமேயொழிய எக்காலத்திலும் பார்பனிய அடிமை மதமான இந்து மதத்துக்குள் திரும்ப வரவே மாட்டோம். குறித்து வைத்துக் கொள்ளுங்கள் இந்துத்வாவாதிகளே!
அழிந்து வரும் இந்திய பொருளாதாரத்தை தூக்கி நிறுத்த சவுதி அரம்கோ இன்று நமது நாட்டில் காலடி எடுத்து வைத்துள்ளது. முடிந்தால் அவர்களை நோக்கி சொல்லிப் பாரேன். உன்னுடைய தெய்வம் என்று போற்றும் மாடுகளை அதிகம் வாங்குவது இஸ்லாமிய நாடுகள் தான். அந்த முதலாளிகளை நிறுத்தச் சொல்லேன். வளை குடா நாடுகளில் பெரும் சம்பளத்தில் வேலை பார்க்கும் கோடான கோடி இந்துக்களை அமீத்ஷாவிடம் சொல்லி திரும்ப பெற்றுக் கொள்ளேன் திராணி இருந்தால். எதையும் செய்ய மாட்டாய் என்பதும் தெரியும்.
ஆட்சி மாற்றத்தினால் ஒரு சில அசௌகரியங்களை நாங்கள் சுமந்தாலும் இறப்புக்கு பிறகு எங்களின் வாழ்க்கை சுகமாக இருக்கும் என்று நம்புகிறோம். பெரும்பான்மையாக இருப்பதால் எங்களை இம்சிக்கும் ஒவ்வொருவருக்கும் இறைவனின் தண்டனையானது கண்டிப்பாக கிடைக்கும் என்று உளமார நம்புகிறோம். 'தெய்வம் நின்று கொல்லும்' அதை பார்க்கத்தான் போகிறீர்கள் இந்துத்வ வெறியர்களே! ஹிட்லர், முசோலினி போன்ற நாசகார ஆட்சியாளர்களின் வரலாறு எப்படி முடிந்தது என்பதை அறியாதவர்கள் அல்ல நாங்கள். நீங்களும்தான்.
ஏற்கெனவே இந்திய பொருளாதாரம் நொடித்தக் கொண்டுள்ளது. இவனைப் போன்ற இந்துத்வ வெறியர்களின் பேச்சுக்களினால் சமூகத்தில் அமைதி குலைந்து கலவரம் வெடிக்கும். பெரும் முதலாளிகள் அமைதி தவழும் நாடுகளுக்கு படையெடுப்பார்கள். நமது நாடு மற்றொரு சோமாலியாக மாற வேண்டுமா? அதை நோக்கித்தான் நமது இந்தியா சென்று கொண்டிருக்கிறதா?
இறைவா! பன்முகத்தன்மை கொண்ட எனது தாய் நாட்டை அக்கிமக்காரர்களிடம் இருந்து காப்பாயாக!


1 comment:

Dr.Anburaj said...

முஸ்லீம்களுக்கும் இந்துக்களுக்கு எதிராக பல கருத்துக்கள் உள்ளது.

காபீர்கள ்என்று இந்துக்களை இழிவு செய்வது ஏன் ?

இந்துக்களை தாழ்த்து இசுலாமிய சாம்ராஜ்ஜியத்தை அமைக்க வேண்டும் என்று இன்றும் பத்திரிகைகளில் எழுதி பள்ளிவாசல்களில் சொற்பொழிவாற்றி வருகின்றாார்கள் அரேபிய காடையர்கள்.

இந்த பாஜக எம்எல்ஏ ராஜா சிங்கின் பேச்சு தவறானது. யாரும் தனித்து வாழ முடியாது.