Followers

Monday, August 19, 2019

#துப்புரவு_தொழிலாளர்களுக்கான TNTJ நடத்திய விருந்து உபசரிப்பு நிகழ்ச்சி..

#பெருநாள்_விருந்து_நிகழ்ச்சி.!!#துப்புரவு_தொழிலாளர்களுக்கான TNTJ நடத்திய விருந்து உபசரிப்பு நிகழ்ச்சி..
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,
செங்குன்றம் வண்டிமேடு கிளை சார்பாக...
நேற்று ( 18 - 8 -19 ) செங்குன்றம் வண்டி மேடு கிளை மர்க்கஸ் வளாகத்தில் முஸ்லிம்களின் பண்டிகையான ஹஜ்ஜூப்பெருநாளை முன்னிட்டு அப்பகுதி துப்புறவு தொழிலாளர்களுக்கான மத நல்லிணக்க விருந்து உபசரிப்பு நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.
இதில் மாநில செயலாளர் சகோ. யாஸிர் அவர்கள் கலந்து கொண்டு இஸ்லாம் ஓர் அறிமுகம் என்ற தலைப்பில் உரையாற்றினார்.
மனித குல வழிகாட்டி திருக்குர்ஆன் மற்றும் மனிதநேய மார்க்கம் இஸ்லாம் ஆகிய தலைப்புகளில் தலா 100 புத்தகம் விநியோகம் செய்யப்பட்டது
சொந்த இந்து மதத்தைச் சேர்ந்த ஹெச்.ராஜா போன்றவர்கள் துப்புறவு தொழிலாளர்களை 'தோட்டிகள்' என்று இழிவு படுத்தி தொட்டுப் பேசவோ ஒன்றாக அமர்ந்து சாப்பிடவோ தயக்கம் காட்டும் நிலையில் அவர்களை சமமாக அமர வைத்து அழகு பார்க்கின்றனர் முஸ்லிம்கள்.
எல்லா புகழும் இறைவனுக்கே!


1 comment:

Dr.Anburaj said...

இதை விட சென்னை மாநகராட்சி துப்புறவு தொழிலாளா் வேலைக்கு முஸ்லீம்கள்

விண்ணப்பித்து பணியில் சோ்ந்து கடமையாற்ற வேண்டும்.அதுதான் ஒரு தொழிலுக்கு

அளிக்கும் சரியான மரியாதை.

நான் ஒரு வேளை சோறு போட்டதனால் அதவும் ஊா் உலகம் மெச்ச வேண்டும் என்ற விளம்பர

எண்ணத்துடன் சோறு போடுவது ஏமாற்று வேலை.