Followers

Monday, August 26, 2019

சிலையை உடைக்கும் இவனுக்கு அம்பேத்காரின் வரலாறு தெரியுமா?

சிலையை உடைக்கும் இவனுக்கு அம்பேத்காரின் வரலாறு தெரியுமா?
1938 பிப்ரவரியில் மன்மத் நகரில் ரயில்வேயில் பணியாற்றும் ஒடுக்கப்பட்ட வகுப்பினரின் மாநாட்டுக்கு தலைமை வகித்து அவர் ஆற்றிய உரை இன்றைக்கும் பல்வேறு அம்சங்களில் பொருத்தப்பாடு கொண்டது. 'என்னைப் பொறுத்தவரை இந்நாட்டுத் தொழிலாளர்கள் இரண்டு பகைவர்களோடு போராட வேண்டியுள்ளது. ஒன்று - பார்பனியம், இரண்டு- முதலாளித்துவம்' என்று அறிவித்தோடு 'சுதந்திரம் சமத்துவம் சகோதரத்துவம் என்பதன் எதிர்மறைதான்பார்பனியம்' என்று முழங்கினார்...
ஆனால் இன்றோ வேதாரணியத்தில் ஒடுக்கப்பட்ட மக்கள் அம்பேத்காரின் சிலையை உடைக்கும் கொடுமையை பார்க்கிறோம். தலித்களையும், ஒடுக்கப்பட்ட மக்களையும் மோதவிட்டு வேடிக்கை பார்த்து மேலே அதிகாரத்தில் அமர்ந்து கொண்டு எள்ளி நகையாடுகிறது பார்பனியம். எந்த மக்களின் முன்னேற்றத்துக்காக அம்பேத்கார் உழைத்தாரோ அந்த மக்களை கொண்டே அம்பேத்கார் சிலையை உடைக்க வைக்கிறதே அங்குதான் வெற்றி பெறுகிறது பார்பனியம்.
சூத்திர பெண்கள் மார்பில் சேலை கட்டக் கூடாது, காலில் செருப்பணியக் கூடாது, குளத்தில் தண்ணீர் அருந்தக் கூடாது, பள்ளி சென்று கல்வி பயிலக் கூடாது, அக்ரஹாரத்துக்குள் நுழையக் கூடாது, இந்து மத வேதங்களை படித்தால் ஈயத்தை காய்ச்சி ஊற்ற வேண்டும், உணவகங்களில் தனி குவளை என்றெல்லாம் தலித் மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களை மிருகங்களை விட கேவலமாக நடத்தியது பார்பனியம். அம்பேத்காரும் பெரியாரும் தங்கள் உயிரை பணயம் வைத்து சீர்திருத்தங்களை கொண்டு வந்தனர். அந்த வரலாறுகளை எல்லாம் படித்திருந்தால் இந்த இளைஞர்கள் அம்பேத்காருக்கு எதிராக கிளம்புவார்களா? இன்னும் எத்தனை காலத்துக்குத்தான் பார்பன அடிமைகளாகவே வாழ்வை ஓட்ட உத்தேசம்?


3 comments:

Dr.Anburaj said...


காவல்துறை தக்க நடவடிக்கை எடுத்து விட்டது.

முஸ்லீம் மதத்தை பின்பற்றி பிற மதத்தவர்களை அழித்து நாசம் செய்து தங்களை இசுலாமிய அரசுகள் என்று அறிவித்த பெரும்பான்மையான நாடுகள் மனித இரத்தத்தில் குளித்துக்கொண்டிருக்கின்றது.யேமன் சிரியா ஆப்கானிஸ்தான் ..........

ஒரு முறை காஞ்சி பெரியவா் என்ற காஞ்சி சங்கரமடதிபதியிடம்

ஒருவா் ” அணுகுண்டை ஒழித்து விட்டால் உலகில் சமாதானம் வந்து விடுமா” என்று கேட்டாா்.”மனிதில் வெறுப்பு இருக்கும் போது கம்பு, கை, வைத்து அடிதடி போட்டு மண்டையை உடைத்துக் கொள்வான்.மனிதில் வெறுப்பை போக்க வேண்டும்.அதுதான் சரியான தீர்வு ” என்றார் துறவியானவா்.

மனதில் வெறுப்பை விதைப்பது சிறந்த தொழில் என்று கருதுகின்றான் அரேபிய நஞ்சை பரப்பும் விஷ பாம்பு சுவனப்பிரியன்.

வேதாரணயம் சம்பவத்தில் பிறாமணா்கள் சம்பந்தப்படவேயில்லை. ஏன் அவர்களை வம்புக்கு இழுக்க வேண்டும்.சண்டையிட்டுக்கொண்ட சாதியினரின் பெயரை பதிவு செய்ய உனக்கு முதுகில் பலம் இல்லையே? ஏன் பதிவு செய்யுங்கள்.

Dr.Anburaj said...

இது போன்ற சிக்கல்களிலிருந்தெல்லாம் எங்களை விடுவித்து இஸ்லாமிய மார்க்கத்தை சில நூற்றாண்டுகளுக்கு முன்பு தேர்ந்தெடுத்த எனது முன்னோர்களை இந்நேரம் நன்றியோடு நினைத்துப் பார்க்கிறேன்.
-------------------------------
கஜனி முஹம்மது கோரி முகம்மது .....ஹெக்மத்யாா் மாலிக்காபுா் போன்ற காடையர்கள் படையெடுப்பால் நீங்கள் முஸ்லீம் ஆக மாறி கோவையில் குண்டு வெடிப்பு மும்பையில் குண்டு வெடிப்பு இந்துக்களின் இரத்த ஆறில் பாக்கிஸ்தான் பிளவு, பின் கிழக்கு பாக்கிஸ்தான் முஸ்லீம் இந்துக்களை கொன்று குவித்து வெறியாட்டம் போட்டு 1 கோடி அகதிகளை இந்துஸ்தானத்திற்கு அனுப்பியது காஷ்மீரைவிட்டு இந்துக்களை விரட்ட திட்டமிட்டு அங்குமண்ணின் மைந்தர்களாக உள்ள 4 லட்சம் இந்துக்களை பயங்கரமாக தாக்குதல் நடத்தி விரட்டியது போன்ற அற்புதமான சாதனைகளை இசுலாம் செய்துள்ளது.

suvanappiriyan said...

//சண்டையிட்டுக்கொண்ட சாதியினரின் பெயரை பதிவு செய்ய உனக்கு முதுகில் பலம் இல்லையே?//

பார்பன அடிமையிடமிருந்து வேறு என்ன பதிலை எதிர்பார்க்க முடியும்? :-)