Followers

Thursday, August 29, 2019

நார்வேயில் நடந்த அழகிய செயலையும் கொச்சைபடுத்தும் பாஸிஸ்டுகள்!



நார்வேயில் நடந்த அழகிய செயலையும் கொச்சைபடுத்தும் பாஸிஸ்டுகள்!
தீவிரவாத தாக்குதல் நடத்த திட்டமிட்டு அது தோல்வியில் முடிந்த நார்வே நாட்டில் உள்ள பேரம் பள்ளிவாசலுக்கு அந்நாட்டு இளவரசர் ஹேகான் நல்லெண்ண அடிப்படையில் வருகை புரிந்தார். அப்போது அங்கு தொழுகைக்கு வந்த இஸ்லாமிய பெண்களோடு கை குலுக்கு முற்பட்டார். ஆனால் அது இஸ்லாமிய பண்பாடு இல்லை என்ற காரணத்தால் தங்கள் நெஞ்சின் மீது கைகளை வைத்து தங்கள் அன்பை வெளிப்படுத்தினர் இஸ்லாமிய பெண்கள். . பிறகு சுதாரித்துக் கொண்ட இளவரசர் இஸ்லாமிய முறைப்படி நெஞ்சில் கை வைத்து அன்பை வெளிப்படுத்தினார். இந்த படங்கள் அந்நாட்டு பத்திரிக்கைகளில் வெளியானது.
உடனே பாஸிஸவாதிகள் தங்கள் இளவரசருக்கு அவமானம் நேர்ந்ததாகவும் இஸ்லாமிய பழக்கங்களை தங்கள் நாட்டில் புகுத்த முயற்சிப்பதாகவும் குரல் எழுப்ப ஆரம்பித்துள்ளனர். ஆணும் பெண்ணும் ஒன்றர கலப்பதால் சமூகத்தில் எத்தகைய பிரச்னைகள், சண்டைகள், விவாகரத்துகள், கொலைகள் நடந்து வருகின்றன என்பதை அறியாதவர்கள் அல்ல நாம். அப்படியிருக்க வலிந்து ஆண்களையும் பெண்களையும் ஒன்றாக்கி சமூகத்தை சீரழிப்பதில்தான் சிலருக்கு எத்தனை கொண்டாட்டம்? ஹெச்.ராஜாக்களும், சுப்ரமணியம் சுவாமிகளும் நார்வேயிலும் உள்ளனர்... 
ஆக்கம் : சுவனப்பிரியன்
சிலரை மற்றும் சிலரை விட இறைவன் மேன்மைபடுத்தியுள்ளதில் பேராசை கொள்ளாதீர்கள். ஆண்களுக்கு அவர்கள் பாடுபட்டதில் பங்குண்டு. பெண்களுக்கு அவர்கள் பாடுபட்டதில் பங்குண்டு.
-குர்ஆன் 4:32
ஆண்களிலோ பெண்களிலோ நம்பிக்கை கொண்டு நல்லறங்கள் செய்தோர் சொர்க்கத்தில் நுழைவார்கள். சிறிதளவும் அவர்கள் அநீதி இழைக்கப்பட மாட்டார்கள்.
-குர்ஆன் 4:124


1 comment:

Dr.Anburaj said...

இந்த பெண்கள் நடந்து கொண்டது சரிதான்.

பிற மனை பெண்களை கட்டி அணைத்து வாயில் முத்தம் கூட கொடுக்கின்றனா். இது பண்பாடான செயல் அல்ல. ஒழுக்கக் கேடானது.
------------------------------------------------------------------------------
ஹெச்.ராஜாக்களும், சுப்ரமணியம் சுவாமிகளும் நார்வேயிலும் உள்ளனர்...
இந்த வரி அநாவசியமானது.