Followers

Wednesday, August 21, 2019

'இது நம்ம ஆளு'

'இது நம்ம ஆளு' என்ற பாக்யராஜ் படத்தின் சில காட்சிகளை நேற்று பார்க்க நேர்ந்தது. அதில் வரும் சில வசனங்கள்....
'சாமி.. சாமி.. என்று கூப்பிட்டு விட்டு அதே வாயால் சம்மந்தி என்று கூப்பிட முடியுமா?'
'சாணியும் சந்தனமும் ஒன்றாகுமா?'
'அய்யருக்கு துரோகம் பண்ணினால் அவங்க குடும்பம் விளங்காது'
இது போன்று பல வசனங்கள் படம் முழுக்க வருகிறது.
சோமயாஜூலுவை பார்க்கும் போது மனோரமாவும் அவரது கணவரும் நடுங்கிக் கொண்டு கூழை கும்பிடு போட்டுக் கொண்டு இருப்பதை பார்க்கிறோம். படம் முழுக்க இது போன்று சாதி மேன்மையை காட்டும் காட்சிகள் ஏராளம். சமூகத்தின் யதார்த்தத்தை அழகாக காண்பிக்கிறார் பாக்யராஜ். 3000 ஆண்டுகளாக பார்பனர்கள் உயர்ந்தவர்கள் என்ற எண்ணம் மற்ற சாதி இந்துக்கள் மனதில் ஆழமாக பதிந்து விட்டது. இதன் வெளிப்பாடே இது போன்ற காட்சிகள். இந்து மதம் மாற்றத்தை நோக்கி பயணிக்க வேண்டிய தூரம் மிக அதிகமாக உள்ளதாகவே எனக்குப் படுகிறது.

இங்கு அடிக்கடி பின்னூட்டமிடும் அன்பு ராஜ் என்ற பிற்படுத்தப்பட்ட இந்து எந்த அளவு இந்து மதத்தை தூக்கி பிடிக்கிறார் என்பதை பார்த்து வருகிறோம். ஒரு பார்பனர் இந்து மதத்தை தூக்கி பிடித்தால் ஆச்சரியம் இல்லை. ஏனெனில் பார்பனர்களின் சுக வாழ்வக்காக ஏற்படுத்தப்பட்ட மதம் இந்து மதம். ஆனால் அன்பு ராஜ் போன்ற பிறபடுத்தப்பட்ட மக்கள் பார்பன அடிமைகளாக காலம் தள்ளுவது ஆச்சரியத்தை தரலாம். சிறு வயது முதலே நீ சூத்திரன்: அவன் பார்பனன். இருவரும் ஒன்றாக முடியாது. என்று சிறு வயது முதலே பயிற்றுவிக்கப்படுவதால் முழு நேர பார்பன அடிமையாகவே அன்பு ராஜ் மாறிக் கிடக்கும் பரிதாபத்தைப் பார்க்கிறோம். :-) இங்கு கோபத்தை விட அன்பு ராஜை நினைத்து பரிதாபமே ஏற்படுகிறது.  

இது போன்ற சிக்கல்களிலிருந்தெல்லாம் எங்களை விடுவித்து இஸ்லாமிய மார்க்கத்தை சில நூற்றாண்டுகளுக்கு முன்பு தேர்ந்தெடுத்த எனது முன்னோர்களை இந்நேரம் நன்றியோடு நினைத்துப் பார்க்கிறேன்.


4 comments:

vara vijay said...

In the same movie, Baghyaraj explained about the essence of Hinduism at the climax. Why don't you comment about that. So according yo hou Hinduism is for well being of brahmins. In my view i storngly believe that islam is meant for Muhammad inner wishes and his EGO. Islam(-)Muhammad =000. Can u disagree with this statement.

Dr.Anburaj said...

இந்து மதம் மாற்றத்தை நோக்கி பயணிக்க வேண்டிய தூரம் மிக அதிகமாக உள்ளதாகவே எனக்குப் படுகிறது.
ஆம். உண்மைதான் 1000 ஆண்டுகால அடிமைவாழ்வு.ஹிந்துக்களை அழித்து ஒழிக்க நினைக்கும் வெறியுட்டப்பட்ட அரேபிய முகலாய துருக்கி காடையர்கள் ஆங்கிலேய போர்த்துசீசிய டச்சு ஆட்சி ஹிந்துஸ்தானத்தில் நடந்து வந்தது.கலாச்சாரம் சமயம் கல்வி போன்ற அனைத்து துறைகளிலும் பரிணாமம் நின்று போனது.

1000 ஆண்டுகால அடிமைத்தனத்தால் ஏற்பட்ட தேக்கநிலைக்கு பரிகாரம் காணப்படவில்லைதான்.

ஆகவேதான் நான் இந்துக்களுக்கு முறையான சமய கல்வி அளிக்க வேண்டும் என்ற கருத்தை தொடா்ந்து வலியுருத்தி வருகின்றேன்.

இந்தியன் அரேபியனாகிப் போனதால் காந்தாரம் ஆப்கானிஸ்தானமாகிவிட்டது. சில தினங்களுக்கு முன்பு கூட ஒரு திருமண விழாவில் தற்கொலை தாக்குதல் நடத்தி 63 பேர்கள் கொல்லப்பட்டனா். 180பேருக்கு மேல் படுகாயங்களுடன் மருத்துவமனையில்.காரணம் செத்தவர்கள் அனைவரும் ஷியா முஸ்லீம்கள்.தாக்குதலை நடத்தியவன் சுன்னி வாஹாபி ஈஇசுலாமிய தேச அரேபிய மத வல்லாதிக்க காடையர்கள். பல கோத்திரங்கள் கலாச்சார பிரிவுகள் ஆகியவற்றைப்படைத்த அல்லாதான் ஷியாக்களையும் படைத்திருக்கின்றான் என்று முடிவு செய்து அவர்களை மனிதர்காக மதித்து வாழ விடாமல் கொன்று குவிக்கின்றதே.இசுலாமிய மனப்பான்மைதானே காரணம். சாதி பிரச்சனை முறையான சமய கல்வியை அனைத்து சாதி மக்களுக்கும் அளித்தால் தீர்ந்து விடும். தவறு இந்து சமய அறநிலையத்துறையை கையில் வைத்திருக்கும் அரசு மேல்தான்.

Dr.Anburaj said...

ஆனால் அன்பு ராஜ் போன்ற பிறபடுத்தப்பட்ட மக்கள் பார்பன அடிமைகளாக காலம் தள்ளுவது ஆச்சரியத்தை தரலாம். சிறு வயது முதலே நீ சூத்திரன்: அவன் பார்பனன். இருவரும் ஒன்றாக முடியாது. என்று சிறு வயது முதலே பயிற்றுவிக்கப்படுவதால் முழு நேர பார்பன அடிமையாகவே அன்பு ராஜ் மாறிக் கிடக்கும் பரிதாபத்தைப் பார்க்கிறோம்.
--------------------------------------------------------------------------
பதில் சுவாமி விவேகானந்தா் அய்யா வைகுணடசாமி ஸ்ரீநாராயணகுரு அய்யன் காளி போன்ற நவீன இந்து சமயாச்சாரியார்களை வழிகாட்டியாகக் கொண்ட என் மீது மட்டமான ஒரு விமா்சனத்தை தொடுத்த சுவனப்பிரியன் ஒரு முட்டாள்.அரேபிய அடிமை.
நான் என்னை ஒரு நாளும் ஒரு சுத்திரன் என்றோ நான் சாா்ந்த நாடாா் சாதியை பெரிய சாதனையாகவோ கருதவில்லை. பிறப்பினால் என்ன சிறப்பு வந்து விடும்.ஏதும் இல்லை.ஆகவே சாதியை என்றும் நான் முன்நிறுத்தியது கிடையாது.9 சாதி மறுப்பு -இந்து திருமணம் செய்து வைத்திருக்கின்றேன்.அதில் 3 ஜோடிகள் நாடாா்- ஆதிதிராவிடா் மணமக்கள்.சுவாமி விவேகானந்தா் அய்யா வைகுணடசாமி ஸ்ரீநாராயணகுரு அய்யன் காளி போன்ற நவீன இந்து சமயாச்சாரியார்களின் போதனை அனைத்து இந்துக்களையும் அடைய வேண்டும் என்பதுதான் எனது விருப்பம்.

Dr.Anburaj said...

இது போன்ற சிக்கல்களிலிருந்தெல்லாம் எங்களை விடுவித்து இஸ்லாமிய மார்க்கத்தை சில நூற்றாண்டுகளுக்கு முன்பு தேர்ந்தெடுத்த எனது முன்னோர்களை இந்நேரம் நன்றியோடு நினைத்துப் பார்க்கிறேன்.
-------------------------------
கஜனி முஹம்மது கோரி முகம்மது .....ஹெக்மத்யாா் மாலிக்காபுா் போன்ற காடையர்கள் படையெடுப்பால் நீங்கள் முஸ்லீம் ஆக மாறி கோவையில் குண்டு வெடிப்பு மும்பையில் குண்டு வெடிப்பு இந்துக்களின் இரத்த ஆறில் பாக்கிஸ்தான் பிளவு, பின் கிழக்கு பாக்கிஸ்தான் முஸ்லீம் இந்துக்களை கொன்று குவித்து வெறியாட்டம் போட்டு 1 கோடி அகதிகளை இந்துஸ்தானத்திற்கு அனுப்பியது காஷ்மீரைவிட்டு இந்துக்களை விரட்ட திட்டமிட்டு அங்குமண்ணின் மைந்தர்களாக உள்ள 4 லட்சம் இந்துக்களை பயங்கரமாக தாக்குதல் நடத்தி விரட்டியது போன்ற அற்புதமான சாதனைகளை இசுலாம் செய்துள்ளது.