Followers

Tuesday, August 27, 2019

அடுக்கடுக்கான கேள்விகளால் வாயடைத்துப் போன ஹரி ஹர சர்மா ராஜா.(H.RAJA)



அடுக்கடுக்கான கேள்விகளால் வாயடைத்துப் போன ஹரி ஹர சர்மா ராஜா.
அருள்மொழி:
ஆதி சங்கரர் புத்த பிட்சுக்களை தீக்கிரையாக்கவில்லையா....
ஹெச்.ராஜா:
இல்லை... இல்லை....
அருள்மொழி:
கொஞ்ச நெரம் என்னை பேச விடுங்க.. ஆதாரம் வேணுமா? உங்க விவேகானந்தர் தனது நூலில் கூறுகிறார். நான் தவறாக சொல்லியிருந்தால் என் மேல் வழக்கு போடுங்க. விவேகானந்தர் சொல்கிறார் 'புத்தரின் அன்பு இதயம் மட்டும் ஆதி சங்கரருக்கு இருந்திருந்தால் இந்தியாவின் வரலாறே வேறு மாதிரி இருந்திருக்கும்.
இரண்டு மாலைகளை போட்டுக் கொள்வார்கள். யார் மாலை வாடுகிறதோ அவர் வாதத்தில் தோற்பர். தனது உடல் குளிர்ச்சியானது. எனவே மாலை வாடாது என்பது ஆதி சங்கரருக்கு தெரியும். அதன்படி தோற்ற புத்த பிட்சுக்களை உங்கள் ஆதி சங்கரர் தீக்கிரையாக்கவில்லையா? இதுதான் அன்பு மதமா? உங்களால் இடிக்கப்பட்ட புத்த விகாரைகளை பட்டியலிடட்டுமா? உங்களால் அடித்து விரட்டப்பட்ட புத்த பிட்சுகள்தான் இன்றும் இலங்கையில் வன்மத்தோடு இந்து மதத்தைப் பார்க்கிறான். அங்குள்ள கோவில்களை இடிக்கிறான். வரலாற்றை மீட்டெடுப்பதென்றால் ஆதியிலிருந்தல்லவா மீட்க வேண்டும்? புத்தர் இந்த நாட்டில் பிறந்தவர் இல்லையா? புத்தர்களை கொன்று போட்டதற்கு எங்கு போய் நியாயம் கேட்பது?
நீங்கள் பிரசாரம் பண்ணுங்கள். இந்து மதம் அன்பான மதம். நீயும் நானும் ஒன்று. தீண்டாமை பாவம். முன்பு நடந்ததெல்லாம் பழைய கதை. உங்க முதுகுக்கும் எங்கள் முதுகுக்கும் எந்த வேறுபாடும் கிடையாது. பூணூல் கிடையாது. படிக்கும் நூலுக்குத்தான் மதிப்பு என்று சொல்லுங்கள். .
வாங்க ட்ரான்ஸ்ஃபர் பண்ணுவோம். முனியாண்டி கோவில் பூசாரியை கபாலீஸ்வரர் கோவிலுக்கு மாற்றுவோம். கபாலீஸ்வரர் கோவிலில் உள்ளவரை முனியாண்டி கோவிலுக்கு மாற்றுவோம். கூட்டிக் கொண்டு வாங்க. நாங்க 10 பேரை கூட்டிக் கொண்டு வருகிறோம். எல்லோரும் இந்துக்கள் என்று கொண்டாடுவோம்.. தயாரா?
அருள்மொழியின் அடுக்கடுக்கான கேள்விகளால் வாயடைத்துப் போன வட மாநிலத்தவரான ஹரி ஹர சர்மா ராஜா. அதாவது ஹெச்.ராஜா. 
-2:09

6 comments:

Dr.Anburaj said...

ஆதிசங்கரரின் பிறந்த நாள் கேரளாவில் அரசு விழாவாக (பொதுவிடுமுறையோடு) கொண்டாடப்படுகின்றது.

கம்யுனிச அரசு கூட அதை புறக்கணிக்கவில்லை.

சமணா் மற்றம் கௌதமரின் போதனைகள் வெகுஜனமக்களுக்கு ஏற்புடையதாகயில்லை.அனைவருக்கும் சைவ உணவு அம்மணமாக வாழ்வது என்பது யாருக்கும் ஏற்படையதல்ல. அந்த பாழான பழக்கத்தை இன்றும் சமணம் வைத்து கொண்டாடுகின்றது.
ஆதி சங்கரா் புத்த பிட்சுக்களின் மரணத்திற்கு காரணம் அல்ல.அவர யாரையும் தீயிட்டுக் கொளுத்தவில்லை.
புத்தபிட்சுக்களை ஏமாற்றி தன்னை புத்த மதத்தவன் போல் காட்டி பௌத்த கருத்துக்களை படித்து வந்த ஆதிசங்கரரின் குரு தனக்கு தண்டனையாக ” உமி குடத்தில் தன்னை முழ்கவைத்து உமியில் தீயிட்டுக் கொண்டாா்”ஆதிசங்கரர்தன் அவரை காப்பாற்றினாா். இப்படிப்பட்ட பண்பாட்டு திலகங்கள் உத்தமர்கள் புத்தர்களை அழித்தாா்கள் சாதி துவேசம் வளா்த்தார்கள் என்பது எவ்வளவு குருட்டுத்தனம்.

பௌத்தம் அழிந்தது ஆதிசங்கரரால் அன்று முகலாள ஆட்சியால் என்று பாபாசகேப் அம்பேத்காா் ஆணித்தரமாக சொல்கின்றாா். இந்த அம்மணி அதைப்படித்தார்களா ?

காசி கோவில் காபாலிகர்கள் என்ற மனிதனை பலி கொடுக்கும் மற்றும் ரகசிய விததைகள் பல பயின்ற ஒரு கூட்டத்தின் கையில் சிக்கியிருந்தது.அதையும் மீட்டவா் ஆதிசங்கரர்தாம். ஆதிசங்கரா் வன்முறையை கனிவில் கூட கருதமுடியாத அஹிம்சைக்கு தங்களை அா்பணித்துக் கொண்டவா்.காட்டுமிராண்டிகளாக வாழ மக்களை தூண்டிய பல (மதங்களை ) கலாச்சார பழக்க வழக்கங்களை மக்களை கைவிட வைத்து அனைவரையும் வைதீக ஆசாரங்களில் ஈடுபட வைத்தாா். ஆதிசங்கரா் 90 மதங்களை அழித்தாா் என்று கூட சிலா் சரியான புரிதல்யின்றி எழுதுகின்றனா். மஹம்மது பிற மத மக்களை காபீர்என்று வேரோடு வேரடி மண்ணோடு அழத்தாரே அதுபோல் ஆதிசங்கரா் ஏதும் செய்யவில்லை. அவரது அறிவு தவ ஆற்றல் கல்வி அறிவு பார்பவர்களை கட்டிப் போட்டது.அப்படி ஒரு காந்த சக்தி பிரமாண்டமான ஆளுமை பெற்றவராக இருந்தாா்.

அவர் ஏற்படுத்திய ஆற்றல் மிக்க ”பரிணாமம்” காட்டுமிராண்டிகளை அந்தணர்களாக பிறாமணா்களாக மாற்றியது.மறந்து விடக் கூடாது.இதுதான் முக்கியமான கருத்து.

அந்த பிறாமணர்கள் பின்னால் ஒரு சாதியாக மாறி உயா்பதவிகளுக்கு ஆதிக்கம் செலுத்த ஆரம்பித்து விட்டாா்கள். காலப்போக்கில் ஆதிசங்கரா் அக்ரகாரத்து சாமியார் பார்ப்பனச் சாமியாகிவிட்டாா். இந்த போக்கிற்கு மனிதர்கள் காரணம்.

இதை்த்தான் ஆதிச்ஙகரருக்கு பிரமாண்டமான அறிவு இருந்தது.ஆனால் இராமானுஜரின் இதயம் இல்லாது போனது என்று குறிப்பிடுகின்றாா் சுவாமி விவேகானந்தா்.

ஆதிசங்கரருக்கு பின் அவரை வழிகாட்டியாகக் கொண்டவா்கள் சாதி துவேசங்களில் ஈடுபட்டு பிற மக்களை ஒடுக்கியதால் பல பிரச்சனைகள் எற்பட்டது.

500..... வருடங்களுக்கு முன்பு சாதியற்று பண்பாட்டு நிலையில் தாழ்நிலையில் இருந்தவர்கள்தான் இன்றைய பார்ப்பனர்கள் என்பதை நாம் மறுக்கக் கூடாது. கலாச்சாரத்தில் தாழ்நிலையில் இருந்தவர்களை பார்ப்பனர்களாக மாற்றினாா் ஆதி சங்கரா்.

விவசாய கூலிகளாக பனை தொழில் மூலம் வருமானம் பெற்ற பனை தொழில் செய்த நாடார்கள், பனையேறும் நாடார்களை இழிவு படுத்தி வாழ்ந்தார்கள். நிலஉடைமை நாடார்கள் பனைஏறம் நாடார்களை பிறப்பின் அடிப்படையில் இழிவு படுத்தினார்கள்.

பனைஏறி பதனீா் இறக்கி கருப்பட்டி காய்த்து தொழில் செய்து பணக்காரா் ஆன ஒருவர் தனது மகளை நிலமைக்காராநாடாா் குடும்பத்து ஆணுக்கு திருமணம் செய்து கொடுத்தாா். நிலைமைக்கார நாடாருக்கு இவா் முன்பு பனை ஏறும் தொழில் செய்தது தெரியாது. திருமணம் முடிந்த பிறகுதான் மருமகளின் தந்தை பனைஏறியவா் என்று தெரிய வந்தது. மிகப் பெரிய சிக்கலை குடும்பத்தில் ஏற்படுத்தியது.விவாகரத்து செய்ய வேண்டும் என்றாா். கொலை செய்வேன் என்றாா் பெண்ணைப் பெற்றவா். மகன் மனைவியை கைவிட மறுத்து விட்டான். சாகும் வரை அந்த மருமகளிடம் பேசவும் இல்லை. இந்த மூத்த மகன் வீட்டை துறந்து வேறு ஒரு மகன் வீட்டில் வாழ்ந்து செத்தாா்.பணம் பதவி அந்தஸ்து கௌரவம் என்றுஅகம்பாவமாக ஆணவமாக வேடிக்கையாக விநோதமாக முட்டாள்தனமாக மனித நேயமின்றி நடப்பது பார்ப்பனர்கள் மட்டும் அல்ல அனைத்து பிரிவிலும் உள்ள கதைதான். முஸ்லீம்களில் இதுபோல் ஆயிரம் உள்ளது.

பார்பனர்களை ஒழிக்க வேண்டும் என்ற ஒரு அம்ச திட்டத்தோடு பேசும் பேச்சு மனித நேயமற்றது.பண்பாடற்றது.பிறரை ஒழிக்க வேண்டும் என்பவா்கள் வாழ்ந்ததாக சரித்திரம் இல்லை. சுவாமி வீவெகானந்தரை தங்களுக்கு சாமா்த்தியமாக துணைக்கு அழைக்கும் இந்த அம்மணி க்கு சுவாமி விவோகந்தரின் அறிவுரையை அளிக்கின்றேன்.

Dr.Anburaj said...

2
பிற்பட்ட மக்களுக்கு நான் ஒன்று சொல்வேன்.தென்னிந்தியாவில் திராவிடா்கள் என்று ஒருஇன மக்கள் வாழ்ந்தார்கள் என்றம் வெளிநாட்டில் இருந்து ஆரியர்கள் என்ற பார்ப்பனர்கள் வந்தார்கள் என்றும் ஆரியர்கள் திராவிடர்களை வென்று ஆதிக்கம் பெற்று விட்டாா்கள் என்று ஒரு கதை பரப்பப்படுகின்றது.இதை நான் அடியோடு மறுக்கின்றேன். 10000 பேர் கொண்ட ஒரு மக்கள் தொகுதியில் யார் பிறாமணர்கள் ஆரியர்கள் யார் திராவிடா்கள் என்று பிரித்துக் காட்ட முடிகின்றவா்கள் முன்வரலாம். பிரித்துக்காட்ட முடியாது. தீணடாமை என்பது அரக்கத்தனம்.காட்டுமிராண்டித்தனமானது. ஆனாலும் பிறாமணர்களை வெல்வதற்கு சிறந்த வழி பிறாமணர்களின் நல்ல பழக்க வழக்கங்களை கை கொண்டு கல்வியிலும் கலாச்சாரத்திலும் ஒழுக்கத்திலும் தங்களை உயா்த்திக்கொண்டால் வேண்டிய முன்னேற்றம் இறைவன் அருளால் தானே வந்து அமையும். ஆக பிறாமண ஆரிய ஒழிப்பு வேண்டவே வேண்டாம்.
சுவாமி விவேகானந்தரை உறுதியாக பின்பற்றி சாதித்துக் காட்டியவா் -ஸ்ரீநாராயணகுரு.

ஸ்ரீநாராயணகுருவை 3 தலைமுறையாக பின்பற்றி முறையான இந்து சமய கல்வி அனுஷ்டானங்கள் கற்று வந்த கேரளத்து புலையன் திருவல்லா என்ற ஊரில் உள்ள பெரிய சிவன் கோவிலில் அர்ச்சகராக பொறுப்பேற்று திறம்பட பணியாற்றி வருகின்றாா். அவரது நியமனம் கேரளஇந்து மக்களின் ஏகோபித்த வரவேற்பை சம்மதத்தை பெற்றது.கேரளத்து பார்ப்பனர்கள் யாரும் இந்த நியமனத்தை எதிாக்கவி்ல்லை.ஆதரித்தார்கள்.பாராட்டினார்கள்.

வழக்கறிஞா் அருள்மொழி வம்பு பேசுகின்றாா்.பிறாமணர்களை ஒழிக்க நினைக்கின்றாா். பார்ப்பனர்கள் அல்லாத மக்கள் வாழும் ஊர்களில் கலாச்சார பரிணாமம் ஏற்பட உதவ வேண்டும். முறையான சம ய கல்வி பெற வேண்டும்.விதையை நட்டு வேலி அமைத்து உரமிட்டு தண்ணீா் பாய்த்தால் மரம் நல்ல முறையில் வளா்ந்து பலன் தரும் ”

அதற்கு அம்மணி தயாராக இல்லை. திராவிடம் பேசும் இயக்கமும் அதன் தலைவார்களும் அதற்கு தயாராகயில்லை.

Dr.Anburaj said...
This comment has been removed by the author.
Dr.Anburaj said...

முற்றிலும் முட்டாள்களிடம் பேசி பயன் ஏதும் யில்லை எனறு கருதி திரு.ராஜா அவர்கள் மௌனம் காத்திருக்கலாம். நானாக இருந்தால் விளாசி இருப்பேன்.

Dr.Anburaj said...

சரவணபெலகோலாவில் இருக்கும் சமண மகாவீராின் பெரிய சிலைக்கு ஒரு நாலு முழம் வேட்டி கட்டி விடலாம் என்பது எனது வேண்டுகோள்.பார்ப்பவர்களுக்கு பெண்களுக்கு சங்கடமாக இருக்கின்றது.

Dr.Anburaj said...

கால்டுவெல் என்ற கேணயன்

தமிழா்கள் உக்ரைன் மற்றும் ஜாா்ஜியா நாட்டில் இருந்து இந்தியாவில் குடியேறியவர்கள் என்றும்

சொல்லியிருக்கின்றான் என்று ஸ்ரீராமகிருஷ்ண விஜயம் செப்.2019 இதழில் ஒரு

கட்டுரைஉள்ளது.


வழக்கிறஞா் அருள்மொழி தமிழ்நாட்டு திராவிட குஞ்சுகள் இதை ஏற்றுக் கொள்கிறார்களா ?