Followers

Sunday, August 25, 2019

#ஏன்_கோட்டைமேட்டில்_சோதனை ??

வரப்போகிற விநாயகர் சதுர்த்தியை சீர்குலைக்க 6 பயங்கரவாதிகள் தமிழ்நாட்டிற்குள் ஊடுருவியுள்ளதாக மத்திய உளவுத்துறை தகவல் கொடுத்துள்ளதாம் !!
அதனால் கோவையில் உள்ள உக்கடம்,கோட்டைமேடு,கரும்புக்கடை போன்ற இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக வாழும் பகுதியில் சோதனை நடத்துகின்றன்றாம் !!
எவ்வளவு பெரிய அயோக்கியத்தனம் இது ??
நீ விநாயகர் சதுர்த்தி கொண்டாடினால் இஸ்லாமியர்களுக்கு என்ன வந்தது ??
கோவையில் இருந்து பழனிக்கு பாதயாத்திரை செல்லும் பக்தர்கள் அனைவரும் இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக வாழும் உக்கடம்,கோட்டைமேடு,கரும்புக்கடை பகுதிகளை கடந்து தான் செல்கிறோம்,,,இத்தனை ஆண்டுகளில் ஒரு இந்து பக்தர்களை கூட இஸ்லாமியர்கள் சீண்டியதாக கூட வரலாறு இல்லை,,,
மாறாக "எத்தனை நாள் நடப்பீங்க?? எப்ப பழனி போய் சேறுவீங்க??" என விசாரித்த இஸ்லாமியர்கள் தான் உண்டு,,,
அதே இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக வாழும் பகுதியில் தான் கோனியம்மன் கோவிலும் உள்ளது,,,அங்கே நூற்றுக்கணக்கான இந்து பக்தர்கள் இன்றும் சென்று வழிபட்டு தான் வருகின்றனர்,,, அப்படி செல்லும் எந்த இந்து பக்தரும் இது நாள் வரை ஒரு இடஞ்சலையும் சந்தித்ததில்லை,,,
ஆனால் இது ஒரு புறமிருக்க,,இஸ்லாமியர்களை பயங்கரவாதிகளாக சித்தரிக்க ஆர்எஸ்எஸ் கும்பல்கள் தான் பல இடங்களில் வெடிகுண்டுகள் வைத்து,அந்த பழியை இஸ்லாமியர்கள் மீது போட பல கீழ்த்தர வேலைகளை செய்துள்ளது,,,
மாலேகான் குண்டுவெடிப்பு,நந்தோத் குண்டுவெடிப்பு,அஜ்மீர் குண்டுவெடிப்பு போன்றவை சமீபத்திய உதாரணங்கள்,,,
இதே போல ஆர்எஸ்எஸ் பயங்கரவாதிகள் குண்டுவெடிப்புகள் நிகழ்த்த குண்டுகள் தயாரிக்கும் போது,அது வெடித்து மாட்டிக்கொண்ட வரலாறுகளும் ஏராளம் !!
அப்படி இருக்க இந்த உளவுத்துறைக்கும்,காவல்துறைக்கும் உண்மையில் அசம்பாவீதம் நடந்துவிடக் கூடாதென்றால்,,,பழைய நிகழ்வுகளில் அடிப்படையில் சோதனை நடத்த வேண்டியது ஆர்எஸ்எஸ் பயங்கரவாதிகள் அலுவலகங்களிலும்,வீடுகளிலும் தான்,,,
அதை விடுத்து இந்து மக்களை எந்தவிதத்திலும் எதிராக இல்லாத இஸ்லாமிய மக்களை குற்றவாளிகளாக முயல்வது பச்சை அயோக்கியத்தனம் !!
இந்த விநாயகர் சதுர்த்தி வந்துவிட்டால்,,,அப்பாவி இந்து மக்களையும்,வியாபாரிகளையும் மிரட்டி பணம் பறிப்பது,,,பறித்த பணத்தில் பங்கு பிரிக்கும் சிக்கல்களினால் அவர்களுக்குள்ளயே வெட்டிக்கொண்டு சாவது,,,விநாயகர் ஊர்வலத்தை வலுக்கட்டாயமாக மசூதிகள்,தேவாலயங்கள் இருக்கும் பகுதியில் எடுத்துச் சென்று கலவரங்கள் செய்வது என அனைத்து மக்கள் விரோத செயலிலும் ஈடுபடும் காவி பயங்கரவாதிகளை நோக்கி எல்லாம் இவர்களின் முன்னெச்சரிக்கை நடவடிக்கை நீளுவதே இல்லை பாவம் !!
Manoj Kumar



2 comments:

Dr.Anburaj said...

கோவையில் நடந்த படுகொலைகள் குண்டு வெடிப்புகள் பாரதிய ஜனதாக் கட்சி தலைவராக இருந்த திரு.லால்கிருஷ்ண அத்வானியால் நடத்தப்பட்டதா ? அல்உம்மா என்ற அரேபி ய மதவாத காடையர்களால் நடத்தப்பட்டதா ?

Dr.Anburaj said...

அரேபிய மத காடையர்கள் மற்றும் பயங்கரவாதிகளின் அச்சாணி

கோட்டை மேடுதான்.

கிருமிகள் விளையும் வயலில்தான் காவலர்களுக்கு வேலை.தொடரட்டும் காடைதனங்களை பயங்கரவாதத்தை ஒழிக்கும் பணி.