Followers

Tuesday, August 27, 2019

இந்துத்வா கொலையாளிகளுக்கு மாலை அணிவித்து வரவேற்பு!



இந்துத்வா கொலையாளிகளுக்கு மாலை அணிவித்து வரவேற்பு!
சென்ற டிசம்பரில் உபியில் உள்ள புலேந்தர்ஷரில் பணியில இருந்த காவல் துறை அதிகாரியை ஆறு பேர் கொண்ட இந்துத்வா கும்பல் கொன்று விட்டது. சுபோத் குமார் சிங் என்ற அந்த அதிகாரியை கொன்ற இந்துத்வா தீவிரவாதிகளை தற்போது நீதி மன்றம் பெயிலில் விடுவித்துள்ளது. சிறை தண்டனை முடிந்து வெளி வந்த இந்த தேச விரோதிகளை மாலையிட்டு 'ஜெய் ஸ்ரீராம்' கோஷத்தோடு வரவேற்றுள்ளது இந்துத்வா கும்பல்.
சிகர் அகர்வால் பிஜேபி இளைஞரணி, ஹேமு, உபேந்திரா, சவ்ரவ், ரோஹித் ராகவ், ஜீது என்ற இவர்கள் ஆறு பேரும் பிஜேபியோடு நெருங்கிய தொடர்பில் உள்ளவர்கள். காவல் அதிகாரியை கொலை செய்த தேச விரோதிகளை மாலையிட்டு வரவேற்றால் எந்த வெளி நாட்டு முதலாளி தனது முதலீடை இந்தியாவில் போடுவான்?
இந்த இந்துத்வா கொலைகாரர்கள் இந்து ராஷ்ட்ரம் அமைக்கிறார்களோ இல்லையோ நமது நாட்டை சோமாலியாவாக மாற்றி விட்டுத்தான் ஓய்வார்கள் போல....

1 comment:

Dr.Anburaj said...


அருவருப்பான செயல்.
மு றையான இந்து சமய கல்வி பெறாத நோய்தான் இவர்களை தாக்கியுள்ளது.தீர்வு அரசு கையில். நான் என்ன செய்வது ?