Followers

Thursday, August 29, 2019

மோடியும் அமீத்ஷாவும் காணத் துடிக்கும் இந்து ராஷ்ட்ரா!

மோடியும் அமீத்ஷாவும் காணத் துடிக்கும் இந்து ராஷ்ட்ரா!
மதுரை திருமங்கலம் தாலுகா பேரையூர் அருகே உள்ள P.சுப்புலாபுரம் பகுதியில் #பட்டியலின_மக்கள் வசித்து வருகின்றனர். இங்கு மரணமடையும் நபர்களின் உடலை #பொது_மயானத்தில் தகனம் செய்ய #மாற்று_சாதியினர்தடைவிதித்துள்ளதாக தெரிகிறது.
இதனால் அவர்கள் மயானத்திற்கு எதிரே உள்ள வெட்ட வெளியில் உடலைகளை தகனம் செய்து வந்தனர். இதனிடையே கடந்த வாரம் பட்டியலினத்தை சேர்ந்த ஒருவர் உயிரிழந்தார்.
அப்போது தொடர் மழை பெய்ததால், அவரின் உடலை வெட்டவெளியில் தகனம் செய்ய முடியவில்லை. இதனால் மயானத்தில் தகனம் செய்ய அனுமதி கேட்டுள்ளனர்.
ஆனால் அதற்கு அனுமதி மறுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் வேறு வழியின்றி #கொட்டும்_மழையில்_உடலை_தார்ப்பாய்_இட்டு_மூடி_வைத்துள்ளனர். பின்னர் இறந்தவரின் உடல் மழையில் நனைந்ததால் #பெட்ரோல்_ஊற்றி வேதனையுடன் இறுதி சடங்கை முடித்து வைத்துள்ளனர்.


2 comments:

Dr.Anburaj said...

இந்தியாவின் -தமிழ்நாட்டின் ஒவ்வொரு பஞ்சாயத்து அளவில் தீண்டாமை மற்றும் சமூக அநீதியை வளா்க்கும் நம்பிக்கைகள் நடைமுறைகள் கலாச்சாரங்கள் எது என்று அடையாளம் கண்டு அதை பட்டியல் இட்டு பஞசாயத்தில் இவைகள் தவறானவை சட்டப்படி அநீயாயமானது எனறு பொது இடங்களில் அறிவிப்பு வைக்க வேண்டும். 3 மாதகாலத்திற்குள் திருந்த வாய்ப்பு அளிக்க வேண்டும். மீறி அதை கடைபிடிக்கும் நபர்கள் மீது மிகக் கடுமையான தண்டனை விதிக்க வேண்டும். சட்டம் பேபாட்டு விட்டு அறை நிறைவேறறும் கடமையை தாழ்த்தப்பட்ட மக்கள் மீது விதிப்பதுதான் தவரானது. அரசு முன்வந்து ஆவன செய்ய வேண்டும்.இந்நேரம் நல்லதுஏதாவது நடந்து இருக்க வேண்டும்.அம்பாசமுத்திரம் என்ற ஊரில் ஆசாரி சமூகத்தை சோ்ந்தநண்பா் இறப்பிற்குச் சென்றேன்.தாமிரபரணி நதிக்கரையோரம் வரிசையாக ஒவ்வொரு சமூகத்திற்கும் தனித்தனியாக ”தகனமேடை” இருந்தது. மனிதர்கள் திருந்தாத நிலை குறித்து நான் மட்டும் அல்ல அங்கு இருந்த பலரும் வருத்தம் தெரிவித்தாா்கள்.அரசே தனித்தனியாக தகனமேடையை கட்டிக் கொடுத்துள்ளது.பொது தகனமேடை என்று ஏதும் இருப்பதாக தெரியவில்லை. அரசு அனைத்து சமூக தகனமேடையை உடைத்து விட்டு பொது தகன மேடையை அமைத்தால் நான் ஆதரிிக்கின்றேன்.

-------------------------------------------------------------------------------
உடன்குடி என்ற ஊரில் 500 க்கும் அதிகமாக அரேபிய மதத்தை பின் பற்றும் மக்கள் வாழந்து வருகின்றாா்கள்.அதில் ஒரு அகமதியா முஸ்லீம் குடும்பம் வாழ்ந்து வந்தது. எனது பள்ளித் தோழா்.அகமதியா குடும்பத்து பெண்களிடம் தான் அவ்வுா் பெண் குழந்தைகள் அரபி பாடம் போன்றவைகளை கற்றுக் கொள்வார்கள். ஆனாலும் அகமதியா இயக்கத்திற்கும் மற்றவர்களுக்கும் சதா சிறு உரசல் வாதங்கள் சவால்கள் சமூக புறக்கணிப்பு என்று நிறையவே நடக்கும். இந்நிலையில் அகமதியா குடும்பத்தில் பைசல் என்ற பையன் சிறுவயது முதல் மூளை வளா்ச்சியின்றி இருந்தவன் இறந்து விட்டான். அவனை அடக்கம் செய்ய பள்ளிவாசல் இடத்தில் இடம் கொடுக்க உள்ளுா் ஜாமாத் மறுத்து விட்டது. அகமதியா குடும்பமும் ” உள்ளுா் பள்ளிவாசலில்தான் அடக்கம் செய்வோம்.வேறு இடம் செல்ல மாட்டோம் என்று உறுதியாக பிணத்தை வைத்து க் கொண்டார்கள். ஒன்றறை நாள் கழிந்து விட்டது. தாசில்தார் விசாரணை நடத்தினாா்.இவரும் முஸ்லீம்தானே .உங்கள் பெண் பிள்ளைகள் அஹமதியா பெண்களிடம்தானே அரேபியமத வேதங்களைப் படிக்கின்றனா்.பின் அவர்களை முஸ்லீம்கள் அல்ல என்று எப்படிச் சொல்லலாம் என்று கேட்டாா். பதில் கூறஇயலாது திகைத்த ஜமாத்கார்கள் எண்ணிக்கை பலத்தை காட்டி தாசில்தாரை மடக்கப் பார்த்தனா். உடனே காவல்துறைக்கு போன் செய்து 3 பெரிய பஸ்களில் துப்பாக்கி எந்திய காவல்களை களத்தில் இறங்கினாா்கள். அடக்கம் இனிதே துப்பாக்கி முனையில் நடைபெற்றது.
முஸ்லீம்கள் எல்லாம் புரண யோக்கியர்கள். சுவனப்பிரியன் வீட்டு கள்ளியில் நெய்யும் பாலும் தேனும் பொங்கி வடிகின்றதாம்.தினசரி 4 அண்டா பிடிக்கின்றாராம்.நம்புங்கள்.

Dr.Anburaj said...

அஹமதியா முஸ்லீம் வாழ்ந்த இடம் தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூா் வட்டம்
உடன்குடி காலன்குடியிருப்பு கிராமம் நெய்னா பிள்ளை தெரு.விசாரித்து அறிந்து கொள்ளலாம்.

இன்று அஹமதியா ஜமாத் எண்ணிக்கை கூடியிருக்கின்றது என்று நம்புகிறேன். கடந்த மாதம்

அஹமதியா மாநாடு ஒன்று நடைபெறறதாக பத்திரிகை செய்தி படித்தேன்.

சதா பயங்கரசாதிகளை ஆதரிக்கும் வாஹாபிய சுன்னி முஸ்லீம் ஆன தாங்கள் அவசரப்பட்டு தூக்கில் தொங்கிவிட மாட்டீர்கள் என்று நம்புகிறேன்.

நான் வணங்கும் உவரி அருள்மிகு சுயம்புலிங்க சுவாமி யான அல்லா தங்களை காக்க வேண்டும்.