Followers

Wednesday, August 21, 2019

ஒரே நாடு: ஒரே மதம்: ஒரே மொழி: ஒரே இனம் - :-)

ஒரே நாடு: ஒரே மதம்: ஒரே மொழி: ஒரே இனம் என்று கூறும் சங்கிகள் இதற்கு என்ன பதிலை வைத்துள்ளார்கள்?
சடங்குகள் முடிந்து அடக்கம் செய்வதற்கு உறவினர்கள் சுடுகாட்டிற்குச் சென்றுள்ளனர். வழக்கமாக சுடுகாட்டிற்குச் செல்லும் பாதையில் உள்ள நிலத்தின் உரிமையாளர் இரும்பு முள் வேலி அமைத்து பாதையை மூடியுள்ளார். இதனால் கிராம மக்களும், உறவினர்களும் வழிவிடுமாறு கோரிக்கை வைத்துள்ளனர்.
ஆனாலும், சாதியைக் காரணம் காட்டி நிலத்தின் உரிமையாளர் வழிவிட மறுத்ததாகக் கூறப்படுகிறது. முன்னதாக நடைபெற்ற பிரச்னையை மனதில் வைத்தும், சாதியைக் காரணம் காட்டியும் வழியை மறைத்ததாகவும் கிராம மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இதனால் திகைத்துப்போன உறவினர்கள் செய்வதறியாது தவித்தனர். பின்னர் சுடுகாட்டிற்குச் செல்ல வேறு வழி இல்லாததால் சடலத்தை பாலத்தில் இருந்து கட்டி கீழே இறக்க முடிவு எடுத்துள்ளனர். 20 அடி பாலத்தில் சடலத்தைக் கயிற்றால் கட்டி கீழே இறக்கியுள்ளனர்.



1 comment:

Dr.Anburaj said...


மாவட்ட ஆட்சியா் அவர்களால் பிரச்சனைக்கு நிரந்தர தீா்வு காணப்பட்டு விட்டது.

வாழ்க பாலிமா் தொலைக்காட்சி நிறுவனம்.