Followers

Sunday, December 08, 2019

பெண்ணின் உறவினரை கொலை செய்துவிடுகிறார்.

Jaya Raman

ஆக்ரா டில்லி தேசிய நெடுஞ்சாலை ஒரு விபத்து ஏற்படுகிறது, அந்த விபத்தில் இரண்டு ஆண்கள் படுகாயமடைந்து விடுகிறார்கள்.

அதில் ஒருவரது மனைவி வயது 22 விபத்தில் சிறு காயங்களுடன் காரில் இருந்து இறங்கி சாலையில் உதவி கேட்கிறார், அப்போது ஒருவர் தனது பரிவாரங்களுடன் வருகிறார்.

காப்பாற்றுகிறேன் என்று கூறி அந்த பெண்ணை அருகில் உள்ள சாலை ஓர உணவு விடுதியில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்துவெளியே கூறினால் கொலை செய்துவிடுவேன் என்று கூறிவிட்டு சென்றுவிடுகிறார்.

இந்த விவகாரம் நீதிமன்றம் செல்கிறது, சொன்ன சொல் தவறாதவர் பெண்ணின் உறவினரை கொலை செய்துவிடுகிறார்.

இந்த வழக்கில் அந்த குற்றவாளிக்கு நீண்ட ஆண்டுகளுக்குப் பிறகு காவல்துறையால் கைதுசெய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்படுகிறார்.

பிறகு பினையில் வெளிவருகிறார். தேர்தலில் நிற்கிறார், நாடாளுமன்ற உறுப்பினராக மத்திய அமைச்சர் ஆகிறார்.
அவர் தான் சாமியார் சாக்‌ஷி என்பவர் இவரை ஊடகங்கள் சாக்‌ஷி மகாராஷ் என்று எழுதுவார்கள்.

இவரும் அதே உன்னாவ் தான், 15 வயது சிறுமியை பாலியல்வன்கொடுமை செய்து அவரது தாயார் மற்றும் உறவினரை லாறி ஏற்றி கொலை செய்த பாஜக சட்டமன்ற உறுப்பினரும் அதே உன்னாவ் தான்,

தன்னை பாலியல் வன்கொடுமை செய்தார் என்று சாட்சி கூறி நீதிமன்றம் சென்ற 25 வயது பெண்ணை உயிரோடு எரித்துகொன்ற வேதியர்களும் அதே உன்னாவ் தான்



No comments: