Followers

Sunday, January 26, 2020

ரவி சங்கர் என்ற தமிழனின் உள்ளக் குமுறல்!

ரவி சங்கர் என்ற தமிழனின் உள்ளக் குமுறல்!
உலகிலேயே அதிக இந்தியர்களுக்கு வேலை தரும் வெளிநாடு சவுதி அரேபியா. இந்தியாவுக்கு கிட்டும் அந்நிய செலவாணியில் அதிக சதவீதத்தை தருவதும் சவூதி தான். என் சிறு வயதில் அனுபவித்த வறுமையின் கொடூரத்தை நினைத்தால் இன்னும் அழுகை வருகிறது.
இக்கால இளைஞர்கள் அவற்றை அறிய வாய்ப்பு இல்லை. அணிய பின்புறத்தில் கிழிந்த ஓட்டையுடன் கூடிய ட்ரவுஸர், புதிய துணி இல்லாத தீபாவளிகள். சாப்பிட ஒரு வேளை மட்டும் கிட்டும் கேப்பை கூழ்.
நகர்ப்புறங்களில் வாழ்ந்தவர்களை விட கிராமங்களில் நிலவிய பஞ்சம் பசி இன்றைய இளைஞர்களுக்கு தெரியாது. இதனை மாற்றி இப்போது நாம் அனுபவிக்கிற ஒரளவு வறுமை இல்லாத நிலை உண்டாக அரபு நாடுகள் தந்த வேலை வாய்ப்புகள் தானே பிரதான காரணம்.
அமெரிக்கா, ஐரோப்பா, இஸ்ரேல் போன்றவை டாக்டர், இன்ஜினியர், mca, mba களுக்கு மட்டுமே கைகொடுத்தன. ஆனால் இரண்டாம் கிளாஸ் படித்த என் அப்பா போன்றவர்களுக்கு கை கொடுத்தது அரபு நாடுகளே.
என் அப்பா போன்ற படிக்காத ஏழைகள் பல லட்சம் பேரின் வாழ்க்கையின் வெற்றியின் திருப்பு முனைக்கும் அரபு நாடுகள் தான் காரணம். நானும் லட்சக்கணக்கான ஏழை மாணவர்கள் உயர் படிப்பு படித்ததும் அரபு நாட்டு பணத்தில்தான்.
இன்று கிராமங்களில் கூட பல லட்சம் கொடுத்து மனைகள் வாங்கும் அளவுக்கு மக்களின் வாங்கும் திறன் அதிகரிக்க அரபு நாட்டு காசும் ஒரு முக்கிய காரணம் அல்லவா.. நம் பொருளாதாரத்தின் ஆணிவேராகிய அந்நிய செலவாணி கையிருப்பு பெரும்பாலும் நமக்கு கிட்டியதும் கிட்டுவதும் இந்தியர்கள் அரபுநாட்டிலிருந்து அனுப்பும் பணம் மூலமாகவே.
துலுக்கன் கடையில் சாமான் வாங்காதே என பிரச்சாரம் செய்யும் இயக்கங்களுக்கு அதிக நன்கொடை அனுப்புவது அரபு நாட்டில் வேலை செய்யும் NRE களே.
அரபு நாடுகளை, இஸ்ரேல் பூண்டோடு அழிக்க வேண்டும் என ஸ்டேட்ஸ் போடுவோர் பெரும்பாலோர் அந்த ஸ்டேடஸ் போட உபயோகித்து வரும் கம்ப்யூட்டர் மற்றும் எலக்ட்ரானிக் சாதனங்கள் துலுக்கன் துட்டில் வாங்கப் பட்டவைகளே.
உப்பிட்டவரை உள்ளளவும் நினைக்கத் தூண்டிய என் தமிழ் பண்பாட்டை கொலை செய்து எம் இந்துக்களை செய் நன்றி கொன்ற மக்களாக மாற்றப் பாடுபடும் மதவெறியர்கள் புண்ணியத்தில் பழய பஞ்சம் பசி மீண்டும் வந்து விடுமோ என பயப்படுகிறார்கள் பச்சை ஹிந்துக்கள்.
பரமேஷ்வரா!, உன் பாரதத்தை இந்த பாதகர்களிடமிருந்து பாதுகாத்திடு பரம்பொருளே!.
நன்றி: ரவி சங்கர் - இந்து தமிழன்…முகநூல் பக்கத்திலிருந்து…..
இது போன்ற நல்ல உள்ளங்கள் இருக்கும் வரை எனது பாரத பூமியை ரத்த காடாக மாற்றத் துடிக்கும் இந்துத்வாவாதிகளின் எண்ணங்கள் நிறைவேற வாய்ப்பில்லை.
-----------------------------
சவுதி வேலை வாய்ப்பில் இந்தியர்கள் முதலிடம்!
சவுதி அரேபியாவில் வேலை செய்யும் வெளி நாட்டவர்களில் எட்டு நாடுகளைச் சேர்ந்தவர்கள் 85 சதவீத வேலை வாய்ப்பினை பகிர்ந்து கொள்கின்றனர் என்று அமெரிக்க அய்வு அறிக்கையை மேற்கோள் காட்டி சவுதி கெஜட் செய்தி வெளியிட்டுள்ளது.
இதில் வழக்கம் போல் முதல் இடத்தை நம் இந்தியர்களே பிடித்துள்ளனர். துபாய், பஹ்ரைன், கத்தார், என்று வளைகுடா எங்கு நோக்கினும் இந்திய தலைகளே! எனவே தான் இத்தனை இமாலய ஊழல்களுக்கு மத்தியிலும் நமது இந்திய பொருளாதாரம் தொடர்ந்து ஒரு நிலையான இடத்தைப் பெற்று வருகிறது.
இந்தியர்கள் 1.76 மில்லியன், பாகிஸ்தானிகள் 1.32 மில்லியன், பங்களாதேஷ் 1.31 மில்லியன், பிலிப்பைன்ஸ் 1.03 மில்லியன், இலங்கை 150000 என்று பல நாடுகளையும் பட்டியலிட்டுள்ளது இந்த ஆய்வறிக்கை.
வாழ்க இந்தியா! வளர்க அதன் பொருளாதாரம் வளைகுடா பணத்தால்! ஆனால் பல இந்துத்வாவாதிகளுக்கு இஸ்லாத்தைக் கண்டால் பிடிக்காது. அந்த இஸ்லாமிய நாடுகளில் இருந்து தினம் பெறப்படும் அந்நிய செலாவணியை மட்டும் பிடிக்கும்.
என்ன உலகமடா இது?
தகவல் உதவி
சவுதி கெஜட்
09-09-2014




3 comments:

Dr.Anburaj said...


மானம் ரோசம் சுடு சுரணை .... போன்ற அனைத்து சீலங்களை விட்டவன்தான் இப்படி ஒரு கட்டுரையை எழுத முடியும்.அரேபிய அடிமைத்தனம் இவ்வளவு ஆழமாகவா வோ் விட்டு வளா்ந்து வானளாவி வளா்ந்துள்ளது.வேதனைதான்.

சவுதிகாரன் நமக்கு தொண்டு செய்யவில்லை.
சவுதியில் பணம் கொழுத்து கிடக்கின்றது.பிரமாண்டமான வளா்ச்சி ப ணிகள் செய்ய வேண்டும். ஆனால் தேவையான மனித சக்தி உள்நாட்டில் இல்லை.ஆகவே மனித வளத்தை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்கின்றார்கள். பணி முடிந்ததும் ”வெளியே” என்பதில் குறியாக இருக்கின்றார்கள். மதத்திற்கு இந்த விசயத்தில் பங்கு இல்லை.முஸ்லீம்களுக்கு பள்ளி வாசல் கட்ட கலகம் செய்ய தீவிரவாத வாகாபி கருத்துக்களை பிரச்சாரம் செய்ய அவன் நிறைய பணம் செலவு செய்கிறான். இசுலாமிய நாடு என்று அறிவித்த நாடுகளுக்கு -பாக்கிஸ்தான் பங்களாதேஷ் - அதிக பண உதவி செய்கிறான்.

நம்மிடம் ஜனப்பெருக்கம்.அனைவருக்கும் தொழில் ஏற்படுத்தி தர இயலவில்லை.
அவனிடம் பண பெருக்கம். அவனுக்கு தேவையானதை கொடுக்கின்றோம்.

அவன் இந்தியர்களால் வாழ்கின்றான்.

முதலில் அவனும் அரேபிய அடிமை களுக்குதான் முன்உரிமை என்று செயல்பட்டான். இன்றும் முஸ்லீம்களுக்குதான் முன்னுரிமை.ஆனால் குணம் மதத்தால் மாறாது என்பதை பட்டறிவால் அறிந்து தேவையான ஆட்களை தோ்வு செய்கின்றான்.
--------------------------------------------
இதில் நன்றிக் கடன் என்ன வாளுது ????????

Dr.Anburaj said...

யேமனில் சிரியாவில் உள்நாட்டு கலகம் காரணமாக சிறுபடகில் அதிக எண்ணி்ககையில் புறப்பட்டு கடலில் சமாதியான அரேபிய முஸ்லீம்களுக்கு சவுதி செய்தது என்ன ? குவைத் செய்தது என்ன ?
இன்று அமெரிக்கா ஜொ்மனி பிரான்சு இத்தாலி போன்ற நாடுகள் அத்தகைய மக்களை மீட்டு ஆதரித்து வருவது சவுதி அரசுக்கு தெரியம்.

ரோகிகோ முஸ்லீம்கள் படும் வேதனை சவுதிக்கு தெரியும்.

குவைத் மற்றும் சவுதி ஆகிய இரு நாடுகளும் அனைத்து அகதிகளையும் எடுத்து ஆதரித்து ஆளாக்கலாமே ? ஏன் செய்யவில்லை.
மற்றவர்களை ஒரு விரலால் குற்றம் சுமத்தும் போது 4 விரல்கள் நம்மை சுட்டுகின்றன்.மற்க வேண்டாம்.

Dr.Anburaj said...

உள்ளம் சதா குமுறினால் சரியான ஜீரணம் ஆகாது எனவே அன்னாருக்கு சில தகவல்கள்.
சில அடிப்படை விதிகள்

நல்ல ஜீரண சக்தி அடைய சில அடிப்படையான விதிகள் உண்டு. அவையாவன:

நல்ல அமைதியான இடத்தில் உண்ணுதல் வேண்டும்.

உட்கார்ந்து உணவை உண்ண வேண்டும்.

மன அழுத்தம், சோர்வு,கவலையுடன் சாப்பிடக் கூடாது

அதிகமாக உண்ணக் கூடாது

ஃபிரிட்ஜில் வைக்கப்பட்ட குளிர்ந்த உணவை உண்ணக் கூடாது. ஐஸ் போட்ட திரவ வகைகளை உட்கொள்ளக் கூடாது

மென்று உண்ண வேண்டும்; பேசியவாறே சாப்பிடக் கூடாது

நிதானமாக உண்ண வேண்டும்.

உணவு உண்டபின் அது நன்கு ஜீரணமான பின்னரே அடுத்த வேளை உணவு உண்ணல் வேண்டும்.

அவ்வப்பொழுது சமைக்கப்பட்ட உணவு வகைகளை உண்ணுங்கள்.

எளிய நடைமுறைகள் தாம் இவை.

இவற்றைச் சரியாகக் கடைப்பிடிக்கவில்லையெனில் ஜீரண சக்தி குறைந்து சாப்பிட்ட உணவு வகைகள் அப்படியே இரைப்பையில் தங்கும்.

இதன் ஒரு விளைவாக ஏற்படுவது தான் ஆயுர்வேதம் குறிக்கும் ஆமா (Ama)

இதனால் ஏராளமான கோளாறுகள் உடலில் ஏற்படும். வாயில் வெள்ளைப் படலமாகத் தோன்றுவது இதன் ஒரு அறிகுறி.

இந்த அஜீரணக் கோளாறை நீக்க ஒரு எளிய சின்ன வழி உள்ளது.

முதல் வழி வாரத்தில் ஒரு நாள் எளிய கஞ்சி உணவு போன்ற திரவ உணவை மேற்கொள்வது.

அடுத்த இன்னும் ஒரு எளிய வழி.சாப்பிட்ட பின்னர் கொதிக்க வைத்த வெந்நீரை குடிக்கக் கூடிய பொறுக்கும் சூட்டுடன் அவ்வப்பொழுது நாள் முழுவதும் இரண்டு அல்லது மூன்று மடக்கு குடிக்க வேண்டியது தான்.

ஒரு பிளாஸ்கை வாங்கி வைத்துக் கொண்டு அவ்வப்பொழுது இந்த வெந்நீரை அருந்தி வந்தால் ஆமா போய் விடும்.

ஒரு முறை அல்லது இரண்டு முறை இப்படிச் செய்தால் போகாது; பல முறை இந்த வெந்நீர் குடிப்பதை மேற்கொள்ள வேண்டும்.

இதன் விளைவாக முதல் சில வாரங்கள் அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டி வரும். ஏனெனில் உடலில் சேர்ந்துள்ள ‘ஆமாவை’ உடல் சிறுகச் சிறுக வெளியேற்றுவதால் இது ஏற்படும். சில வாரங்களில் பழையபடி சில முறை மட்டுமே சிறுநீர் கழிக்கும் நிலை திரும்பி விடும்.ஆனால் ஜீரணத்திற்கு தீங்கு பயக்கும் ‘ஆமா’ பொயே போய் விடும்.

ஜீரணத்திற்காக ஆயுர்வேதம் பரிந்துரைக்கும் சில மூலிகைகளும் உண்டு. இவற்றை அன்றாடம் உணவில் நாம் சேர்த்துக் கொள்ளலாம்.

நெல்லிக்காய்: இரைப்பையில் தோன்றும் எரிச்சலை நீக்குவது இது. இரத்தத்தில் உள்ள இனிப்பையும் இது சமனப்படுத்தும் (

கொத்துமல்லி : பித்த தோஷத்தை நீக்கும்.

லவங்கம் மற்றும் கிராம்பு : ஜீரணத்தை ஊக்குவிக்கும்.


***